Saturday, December 07, 2019

குரு நீயே! - அஸ்வமேதபர்வம் பகுதி – 71

You are the master! | Aswamedha-Parva-Section-71 | Mahabharata In Tamil

(அநுகீதா பர்வம் - 56)


பதிவின் சுருக்கம் : யுதிஷ்டிரனை எதிர்கொண்டழைத்த கிருஷ்ணன்; அஸ்வமேத யாகம் செய்ய அனுமதித்த வியாசர்; கிருஷ்ணன் செய்யட்டும் என்று சொன்ன யுதிஷ்டிரன்; மறுத்து யுதிஷ்டிரனைச் செய்யச் சொன்ன கிருஷ்ணன்...


வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "பகைவரை அழிப்பவனான வாசுதேவன், பாண்டவர்கள் அருகில் வந்துவிட்டதாகக் கேள்விப்பட்டு, அவர்களைக் காணத் தன் அமைச்சர்களுடன் புறப்பட்டுச் சென்றான்.(1) அப்போது, ஓ! மன்னா, வழக்கமான நடைமுறைகளின்படி விருஷ்ணிகளுடன் சேர்ந்து யானையின் பெயரால் அழைக்கப்பட்ட நகரத்திற்குள் {ஹஸ்தினாபுரத்திற்குள்} பாண்டவர்கள் நுழைந்தனர்.(2) குரல்களின் ஹுங்காரம், பெரும்படையின் தேர்களுடைய சடசடப்பொலி ஆகியவற்றுடன் கூடிய பூமி மற்றும் ஆகாயம் என்ற மொத்த வெளியே அவற்றால் {அவ்வொலிகளால்} மொத்தமாக நிறைந்தது.(3) மகிழ்ச்சிகரமான இதயங்களுடன் கூடிய பாண்டவர்கள், தங்கள் அதிகாரிகள் மற்றும் நண்பர்களின் துணையுடன், செல்வக்கருவூலத்தைத் தங்கள் முன்னணியில் வைத்துக் கொண்டு தலைநகருக்குள் {ஹஸ்தினாபுரத்திற்குள்} நுழைந்தனர்.(4)


வழக்கத்திற்கு ஏற்புடைய வகையில் அவர்கள் முதலில் மன்னன் திருதராஷ்டிரனிடம் சென்று, தங்களுடைய பெயர்களை அறிவித்துக் கொண்டு, அவனது பாதங்களை வழிபட்டனர்.(5) பிறகு, ஓ! மன்னர்களின் தலைவா, பாரதக் குலத்தில் முதன்மையான அவர்கள், சுபலனின் மகளான காந்தாரிக்கும், குந்திக்கும் தங்கள் மதிப்புமிக்க வணக்கங்களைச் செலுத்தினர்.(6) அடுத்ததாக (தங்கள் சிறிய தந்தையான) விதுரரை வழிபட்டு, திருதராஷ்டிரனுடைய வைசிய மனைவியின் மகனான யுயுத்சுவைச் சந்தித்தனர். அப்போது, ஓ! மன்னா, அவர்கள் பிறரால் வழிபடப்பட்டு அழகுடன் பிரகாசித்தனர்.(7) அதன்பிறகு, ஓ! பாரதா, அந்த வீரர்கள், அற்புதம் நிறைந்தவையும், ஆச்சரிகரமானவையும், மகிழ்ச்சியைக் கொண்டு வந்தவையுமான உன் தந்தை {பரிக்ஷித்} குறித்த செய்திகளைக் கேட்டனர்.(8) பெரும் நுண்ணறிவைக் கொண்ட வாசுதேவனின் சாதனையைக் கேட்ட அவர்கள் அனைவரும், தேவகியை மகிழ்ச்சியடையச் செய்பவனும், அனைத்து வகை வழிபாட்டிற்கும் தகுந்தவனுமான கிருஷ்ணனை வழிபட்டனர்.(9)

அதன்பிறகு, சிறிது நாள் கழித்து, பெருஞ்சக்தி கொண்டவரும், சத்தியவதியின் மகனுமான வியாசர், யானையின் பெயரால் அழைக்கப்பட்ட நகரத்திற்கு {ஹஸ்தினாபுரத்திற்கு} வந்தார்.(10) குரு குலத்தைத் தழைக்கச் செய்பவர்கள், வழக்கமான நடைமுறையின்படி அந்தப் பெரும் முனிவரை வழிபட்டனர். உண்மையில், விருஷ்ணி மற்றும் அந்தகக் குலங்களின் முதன்மையான இளவரசர்களான அந்த வீரர்கள், தங்கள் துதிகளை அத்தவசிக்குச் செலுத்தினர்.(11) பல்வேறு காரியங்கள் குறித்துப் பேசிய பிறகு, தர்மனின் மகனான யுதிஷ்டிரன், வியாசரிடம்,(12) "ஓ! புனிதமானவரே, உம் அருளால் இங்கே கொண்டுவரப்பட்ட இந்தப் பொக்கிஷத்தைக் குதிரை வேள்வி {அஸ்வமேதயாகம்} என்ற பெயரால் அழைக்கப்படும் பெரும் வேள்விக்கு அர்ப்பணிக்க நான் விரும்புகிறேன்.(13) ஓ! தவசிகளில் சிறந்தவரே, உமது அனுமதியைப் பெற நான் விரும்புகிறேன். ஓ! முனிவரே, உமக்கும், உயர் ஆன்ம கிருஷ்ணனுக்கும் நாங்கள் அனைவரும் வசப்பட்டவர்கள்" என்றான்.(14)

வியாசர் {யுதிஷ்டிரனிடம்}, "ஓ! மன்னா, நான் உனக்கு அனுமதியளிக்கிறேன். எது முதலில் செய்யப்பட வேண்டுமோ, அதைச் செய்வாயாக. அபரிமிதமான கொடைகளுடன் கூடிய குதிரைவேள்வியைச் செய்வதன் மூலம் நீ முறையாகத் தேவர்களை வழிபடுவாயாக.(15) ஓ! மன்னா, குதிரை வேள்வி அனைத்துப் பாவங்களையும் தூய்மைப்படுத்தும். அந்த வேள்வியின் மூலம்தேவர்களை வழிபடுவதால் அனைத்துப் பாவங்களும் நிச்சயம் தூய்மையடையும் என்பதில் ஐயமில்லை" என்றார்".(16)

வைசம்பாயனர் {ஜனமேஜயனிட} தொடர்ந்தார், "ஓ! ஏகாதிபதி, இவ்வாறு சொல்லப்பட்டவனும், நீதிமிக்க ஆன்மா கொண்டவனுமான குரு மன்னன் யுதிஷ்டிரன், குதிரை வேள்விக்கு {அஸ்வமேத யாகத்துக்குத்} தேவையான ஆயத்தங்களைச் செய்வதில் தன் இதயத்தை நிலைநிறுத்தினான்.(17) பெரும் நாநயமிக்க அம்மன்னன் {யுதிஷ்டிரன்}, இவை யாவற்றையும் தீவில் பிறந்த கிருஷ்ணரிடம் {வியாசரிடம்} சொல்லிவிட்டு, வாசுதேவனை {கிருஷ்ணனை} அணுகி,(18) "ஓ! அனைத்திலும் முதன்மையானவனே, உன்னால் தேவகிதேவி, தாய்மார்களில் பெரும் பேறு பெற்றவளெனக் கருதப்படுகிறாள். ஓ! மங்கா மகிமை கொண்டவனே, ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனே, நான் உனக்குச் சொல்லப் போவதைச் செய்வாயாக.(19) ஓ! குருக்களைத் திளைக்கச் செய்பவனே, நாங்கள் அனுபவிக்கும் பல்வேறு இன்பங்கள் யாவும் உன் பலத்தின் மூலமே அடையப்பட்டன. உன் ஆற்றல் மற்றும் புத்தியின் மூலமே மொத்த பூமியும் வெல்லப்பட்டது.(20) எனவே, தொடக்கச் சடங்குகளை நீயே செய்வாயாக {உன்னை தீக்ஷையுள்ளவனாகச் செய்வாயாக}. எங்களது உயர்ந்த ஆசானும், குருவும் நீயே. ஓ! தசார்ஹ குலத்தோனே, இவ்வேள்வியை நீ செய்தால், நான் அனைத்துப் பாவங்களில் இருந்தும் தூய்மையடைவேன்.(21) வேள்வியானவன் நீயே. அழிவற்றவன் நீயே. இவை யாவுமாக இருப்பவன் நீயே. அறம் நீயே. பிரஜாபதி நீயே. அனைத்து உயிரினங்களின் இலக்கும் {கதியும்} நீயே. இதுவே என் நிச்சயத் தீர்மானமாகும்" என்றான்.(22)

வாசுதேவன் {கிருஷ்ணன்}, "ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவரே, ஓ! பகைவரைத் தண்டிப்பவரே, இவ்வாறு சொல்ல {செய்ய} நீரே தகுந்தவர். நீரே அனைத்து உயிரினங்களின் இலக்காயிருக்கிறீர் {அறமெனும் கதியாயிருக்கிறீர்}. இதுவே என் நிச்சயத் தீர்மானமாகும்.(23) குரு குல வீரர்களுக்கு மத்தியில், உமது அறத்தின் விளைவால் நீர் இன்று பெரும் மகிமையில் ஒளிர்கிறீர். ஓ! மன்னா, அவர்கள் யாவரின் மீதும் நீர் உமது நிழலை விழச் செய்தீர். நீரே எங்கள் மன்னன், நீரே எங்களுக்குப் பெரியவர்.(24) தாராளமாக வழங்கப்படும் என் அனுமதியுடன், இவ்வேள்வி பரிந்துரைக்கும் தேவர்களைத் வணங்குவீராக. ஓ! பாரதரே, நீர் விரும்பும் பணிகளில் எங்களை நியமிப்பீராக. உண்மையில், ஓ! பாவமற்றவரே, நிறைவேற்றச் சொல்லி நீர் இடும் ஆணைகள் அனைத்தையும் நிறைவேற்றுவேன் என நான் உறுதியளிக்கிறேன்.(25) இவ்வேள்வியை நீர் செய்யும்போதே, பீமசேனர், அர்ஜுனன் மற்றும் மாத்ரியின் மகன்கள் {நகுல சகாதேவன்} இருவரும் செய்தவர்களாவார்கள்" என்றான் {கிருஷ்ணன்}".(26)

அஸ்வமேதபர்வம் பகுதி – 71ல் உள்ள சுலோகங்கள் : 26

ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்