Monday, December 09, 2019

யாகக் குதிரை! - அஸ்வமேதபர்வம் பகுதி – 72

The horse for sacrifice! | Aswamedha-Parva-Section-72 | Mahabharata In Tamil

(அநுகீதா பர்வம் - 57)


பதிவின் சுருக்கம் : யாகக் குதிரையைச் சுற்றவிடும்படி யுதிஷ்டிரனிடம் சொன்ன வியாசர்; குதிரையைக் காக்க அர்ஜுனனை நியமித்த யுதிஷ்டிரன்...


வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "கிருஷ்ணனால் இவ்வாறு சொல்லப்பட்டவனும், பெரும் நுண்ணறிவுமிக்கவனும், தர்மனின் மகனுமான யுதிஷ்டிரன், வியாசரை வணங்கி இச்சொற்களைச் சொன்னான்:(1) "நீர் உண்மையில் அறிந்தவாறு சடங்குக்கு உரிய நேரத்தில் என்னைத் தொடங்கச் செய்வீராக. என்னுடைய இவ்வேள்வி முழுமையாக உம்மைச் சார்ந்தது" {என்றான்}.(2)


வியாசர் {யுதிஷ்டிரனிடம்}, "ஓ! குந்தியின் மகனே, நான், பைலன், யாஜ்ஞவல்கியன் ஆகியோர் ஒவ்வொரு சடங்கையும் அதனதனுக்குரிய நேரத்தில் நிச்சயம் செய்வோம்.(3) {வேள்வியைச் செய்வதற்குரிய} உனக்கான தொடக்கச் சடங்கு, சைத்ர மாதத்தின் முழுநிலவு நாளில் {சித்ராபௌர்ணமியில்} செய்யப்படும்[1]. ஓ! மனிதர்களில் முதன்மையானவனே, வேள்விக்குத் தேவையான அனைத்தையும் தயாராக இருக்கட்டும்.(4) குதிரை அறிவியலை நன்கறிந்த சூதர்கள், அதை அறிந்த பிராமணர்கள் ஆகியோர், ஆய்வு செய்த பிறகு, உன் வேள்வி நிறைவடைவதற்குரிய தகுந்த குதிரையைத் தேர்வு செய்யட்டும்.(5) ஓ! மன்னா, சாத்திரத் தீர்மானங்களின்படி அவிழ்த்துவிடப்படும் அவ்விலங்கு, சுடர்மிக்க உன் மகிமையை வெளிப்படுத்தும் வகையில் கடல்களையே கச்சையாகக் கொண்ட மொத்த பூமியில் அது சுற்றித் திரியட்டும்" என்றார் {வியாசர்}".(7)

[1] கும்பகோணம் பதிப்பில், "சித்திராபூர்ணிமைத் தினத்தில் உனக்குத் தீக்ஷை நடக்கும்" என்றிருக்கிறது.

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், "(அம்முனிவரால்) இவ்வாறு சொல்லப்பட்டவனும், பாண்டுவின் மகனும், பூமியின் தலைவனுமான யுதிஷ்டிரன், "அவ்வாறே ஆகட்டும்" என்று சொல்லிவிட்டு, அந்தப் பிரம்மம் ஓதுபவர் சொன்ன அனைத்தையும் செய்தான்.(7) ஓ! மன்னா, வேள்விக்குத் தேவையான அனைத்துப் பொருட்களும் முறையாகத் திரட்டப்பட்டன.(8) அளவற்ற ஆன்மா கொண்ட தர்மனின் அரச மகன் {யுதிஷ்டிரன்}, தேவையானவை அனைத்தையும் திரட்டிவிட்டு, தீவில் பிறந்த கிருஷ்ணரிடம் {வியாசரிடம்} அது குறித்துச்ச ஒன்னான்.(9)

அப்போது பெரும் சக்தி கொண்டவரான வியாசர், தர்மனின் அரச மகனிடம் {யுதிஷ்டிரனிடம்}, "எங்களைப் பொறுத்தவரையில், வேள்வியின் நோக்கில் உன்னைத் தொடங்கச் செய்ய நாங்கள் அனைவரும் ஆயத்தமாகவுள்ளோம். ஓ! குரு குலத்தோனே, ஸ்பியம் {கத்தி}, கூர்ச்சம் ஆகியனவும், உன் வேள்விக்குத் தேவையான வேறு பொருட்கள் அனைத்தும் பொன்னால் செயப்படட்டும்[2].(11) சாத்திர விதிகளுக்கு ஏற்ப இன்று அந்தக் குதிரை பூமியில் சுற்றித்திரிய அவிழ்த்து விடப்படட்டும். அந்த விலங்கு, முறையாகப் பாதுகாக்கப்பட்டுப் பூமியில் திரியட்டும்" என்றார் {வியாசர்}.(12)

[2] "ஸ்ப்யம் என்பது வேள்வி விலங்கைக் கொல்வதற்குப் பயன்படும் மரக் கத்தியாகும். கூர்ச்சம் என்பது கைப்பிடியளவு குசப்புல்லாகும். இவை அனைத்தும் பொன்னால் செய்யப்பட வேண்டும் என வியாசர் சொல்கிறார்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.

யுதிஷ்டிரன் {வியாசரிடம்}, "ஓ! மறுபிறப்பாளரே, இந்தக் குதிரையை அதன் விருப்பப்படி பூமியின் மீது அலைந்து திரிவதற்கு ஏதுவாக இதை அவிழ்த்துவிடுவதற்குரிய ஏற்பாடுகள் உம்மால் செய்யப்படட்டும்.(13) ஓ! தவசியே, இந்தக் குதிரை பூமியில் தன் விருப்பப்படி சுதந்திரமாகத் திரியும்போது அதை எவன் பாதுகாக்க வேண்டும் என்பதைச் சொல்வதே உமக்குத் தகும்" என்றான்".(14)

வைசம்பாயனர் தொடர்ந்தார், "ஓ! ஏகாதிபதி {ஜனமேஜயா}, (மன்னன் யுதிஷ்டிரனால்) இவ்வாறு சொல்லப்பட்ட தீவில் பிறந்த கிருஷ்ணர் {வியாசர்}, "பீமசேனனுக்குப் பின் பிறந்தவனும், வில்லாளிகள் அனைவரிலும் முதன்மையானவனும்,(15) ஜிஷ்ணு என்றழைக்கப்படுபவனும், பெரும்பொறுமை கொண்டவனும், தடைகள் அனைத்தையும் கடக்கவல்லவனும் எவனோ, அவனே இந்தக் குதிரையைப் பாதுகாப்பான். நிவாதகவசர்களை அழிந்தவனான அவனே மொத்த பூமியையும் வெல்லத்தகுந்தவன் ஆவான்.(16) தெய்வீக ஆயுதங்கள் அனைத்தும் அவனிடம் உள்ளன. அவனுடைய உடல், தாங்கும் சக்தியில் ஒரு தேவனுடைய உடலைப் போன்றதாகும். அவனுடைய வில்லும், அம்பறாதூணியும் தெய்வீகமானவை. அவனே இந்தக் குதிரையைப் பின்தொடரட்டும்.(17) அறம், பொருள் ஆகிய இரண்டையும் அவன் நன்கறிந்தவன். அறிவியல்கள் அனைத்திலும் அவன் தேர்ச்சிபெற்றவன். ஓ! மன்னர்களில் முதன்மையானவனே, அவன் சாத்திரங்களுக்கு ஏற்புடைய வகையில், அந்தக் குதிரையைச் சுதந்திரமாக மேயவும், திரியவும் வைக்கட்டும்.(18) 

கரிய நிறம் மற்றும் வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட இந்த இளவரசன் {அர்ஜுனன்}, தாமரை இதழ்களுக்கு ஒப்பான கண்களைக் கொண்டவனாக இருக்கிறான். அபிமன்யுவின் தந்தையான இந்த வீரன் குதிரையைப் பாதுகாப்பான்.(19) பீமசேனனும் பெருஞ்சக்தி கொண்டவனே. குந்தியின் மைந்தனான அவன் அளவற்ற வலிமையைக் கொண்டவனாவான். ஓ! ஏகாதிபதி, நகுலனின் துணையுடன் அவன் {பீமன்} நாட்டைப் பாதுகாக்கத் தகுந்தவனாவான்.(20) ஓ! குரு குலத்தோனே, பெரும் நுண்ணறிவையும், புகழையும் கொண்ட சகாதேவன், உன் தலைநகருக்கு அழைக்கப்பட்டிருக்கும் உறவினர்கள் அனைவரையும் முறையாகக் கவனிப்பான்" என்றார் {வியாசர்}.(21) அந்த முனிவரால் இவ்வாறு சொல்லப்பட்டவனும், குரு குலத்தைத் தழைக்கச் செய்பவனுமான யுதிஷ்டிரன், ஒவ்வொரு ஆணையையும் முறையாக நிறைவேற்றி, குதிரையைக் கவனிக்கப் பல்குனனை {அர்ஜுனனை} நியமித்தான்.(22)

யுதிஷ்டிரன், "ஓ! அர்ஜுனா, ஓ! வீரா, வருவாயாக, இந்தக் குதிரை உன்னால் பாதுகாக்கப்படட்டும். இதைப் பாதுகாக்க நீ மட்டுமே தகுந்தவன்; வேறு எவனும் அல்ல.(23) ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட வீரா, ஓ! பாவமற்றவனே, உன்னுடன் மோத முன் வரும் மன்னர்களிடம் போரைத் தவிர்க்க உன்னால் முடிந்தவரை முயற்சிப்பாயாக.(24) மேலும் நீ அவர்களை என்னுடைய வேள்விக்கு அழைக்கவும் வேண்டும். உண்மையில், ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனே, அவர்களுடன் நட்புறவை நிறுவ முயற்சிப்பாயாக[3]" என்றான்".(25)

[3] கும்பகோணம் பதிப்பில், "உன்னை எதிர்த்து வரும் மன்னர்களுடன் யுத்தமுண்டாகாமலிருக்கும்படி நீ செய்ய வேண்டும். சிறந்த கைகளுள்ளவனே, நீ என்னுடைய இந்த யாகத்தை எல்லா மன்னர்களுக்கும் தெரிவித்து "காலத்தில் வரவேண்டும்" என்று சொல்" என்றிருக்கிறது.

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், "நீதிமிக்க ஆன்மா கொண்ட மன்னன் யுதிஷ்டிரன், தன் தம்பியான சவ்யசாச்சினிடம் {அர்ஜுனனிடம்} இவ்வாறு சொல்லிவிட்டு, பீமன் மற்றும் நகுலனிடம் நகரத்தைப் பாதுகாக்க ஆணையிட்டான்.(26) மன்னன் திருதராஷ்டிரனின் அனுமதியுடன் அவன், போர்வீரர்களில் முதன்மையான சகாதேவனை, அழைக்கப்பட்ட விருந்தினர்கள் அனைவரையும் கவனிக்கும் காரியத்தில் நிறுவினான்" {என்றார் வைசம்பாயனர்}.(27)


அஸ்வமேதபர்வம் பகுதி – 72ல் உள்ள சுலோகங்கள் : 27
ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்