Monday, December 09, 2019

காண்டீவம் நழுவியது! - அஸ்வமேதபர்வம் பகுதி – 74

Gandiva felldown! | Aswamedha-Parva-Section-74 | Mahabharata In Tamil

(அநுகீதா பர்வம் - 59)


பதிவின் சுருக்கம் : திரிகர்த்தர்களுக்கும் அர்ஜுனனுக்கும் இடையில் மூண்ட போர்; இளைஞனான திருதவர்மனின் போர்த்திறனைக் கண்டு வியந்த அர்ஜுனன்; காண்டீவம் நுழுவியது; மூர்க்கத்துடன் போரிட்ட அர்ஜுனன்; அடிபணிந்த திரிகர்த்தர்கள்...


வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "ஏற்கனவே பாண்டவர்களுடன் பகை பூண்டவர்களும், வலிமைமிக்கத் தேர்வீரர்களாக நன்கறியப்பட்டவர்களுமான திரிகர்த்தர்களின் மகன்கள், பேரப்பிள்ளைகள் ஆகியோருக்கும் கிரீடம் தரித்தவனுக்கும் (அர்ஜுனனுக்கும்) இடையில் ஒரு போர் நடந்தது.(1) வேள்விக்காக அனுப்பப்பட்ட முதன்மையான குதிரை தங்கள் ஆட்சிப்பகுதிக்குள் வந்ததை அறிந்த அவ்வீரர்கள் {திரிகர்த்தர்கள்}, கவசம்பூண்டவர்களாக அர்ஜுனனைச் சூழ்ந்து கொண்டனர்.(2) ஓ! மன்னா, நன்கு அலங்கரிக்கப்பட்ட சிறந்த குதிரைகள் பூட்டப்பட்ட தேர்களில் ஏறி, தங்கள் முதுகுகளில் அம்பறாத்தூணியுடன் கூடிய அவர்கள் அந்தக் குதிரையைச் சூழ்ந்து கொண்டு, அதைக் கைப்பற்ற முயற்சித்தனர்.(3) ஓ! பகைவரைத் தண்டிப்பவனே, கிரீடம் தரித்தவனான அர்ஜுனன், அவர்களுடைய முயற்சிகளை எண்ணிப் பார்த்து, சமாதானப் பேச்சுகளின் மூலம் அந்த வீரர்களைத் தடுத்தான்.(4) அர்ஜுனனின் செய்தியை அலட்சியம் செய்த அவர்கள் தங்கள் கணைகளைக் கொண்டு அவனைத் தாக்கினர். கிரீடம் தரித்தவனான அர்ஜுனன், இருள் மற்றும் ஆசையின் {தமஸ் மற்றும் ரஜஸ் குணங்களின்) ஆதிக்கத்தில் இருந்த அந்தப் போர்வீரர்களைத் தடுத்தான்.(5)


ஜிஷ்ணு {அர்ஜுனன்} புன்னகைத்தபடியே, "அறமற்றவர்களே, விலகுவீராக. உயிரானது (வீசியெறியப்படக்கூடாத) நன்மையான ஒன்றாகும்" என்றான். அவன் புறப்பட்ட வேளையில், நீதிமானான மன்னன் யுதிஷ்டிரன், குருக்ஷேத்திரப் போர்க்களத்தில் ஏற்கனவே உறவினர்கள் கொல்லப்பட்டவர்களான க்ஷத்திரியர்களைக் கொல்ல வேண்டாம் எனத் தடையாணை விதித்திருந்தான்.(7) பெரும் நுண்ணறிவைக் கொண்டவனும், நீதிமானுமான மன்னன் யுதிஷ்டிரனுடைய இந்த ஆணைகளை நினைவுகூர்ந்த அர்ஜுனன், திரிகர்த்தர்களைத் திரும்புமாறு கேட்டான். ஆனால் அவர்கள் அர்ஜுனனின் தடையாணையை அலட்சியம் செய்தனர்.(8) அதன்பிறகு அர்ஜுனன், அலட்சியமாகச் சிரித்துக் கொண்டே திரிகர்த்த மன்னன் சூரியவர்மன் மீது எண்ணற்ற கணைகளை ஏவி அவனை வென்றான்.(9) எனினும், தேர்கள் மற்றும் தேர்ச்சக்கரங்களின் சடசடப்பொலியால் பத்து புள்ளிகளையும் நிறைத்தபடியே தனஞ்சயனை நோக்கித் திரிகர்த்தப் போர்வீரர்கள் விரைந்தனர்.(10)

அப்போது, பெரும் கரநளினத்தை வெளிப்படுத்திய சூரியவர்மன், ஓ! ஏகாதிபதி {ஜனமேஜயா}, நூற்றுக்கணக்கான நேரான கணைகளால் தனஞ்சயனைத் துளைத்தான்.(11) மன்னனைப் பின்தொடர்ந்து வந்தவர்களும், தனஞ்சயனுக்கு அழிவை ஏற்படுத்த விரும்பியவர்களுமான பிற பெரிய வில்லாளிகள் அனைவரும் அவன் மீது கணைமாரியைப் பொழிந்தனர்.(12) ஓ! மன்னா, பாண்டுவின் மகன் {அர்ஜுனன்}, தன் வில்லின் நாணிலிருந்து எண்ணற்ற கணைகளை ஏவி அந்தக் கணைமேகத்தை வெட்டி வீழ்த்தினான்.(13) சூரியவர்மனின் தம்பியும், இளமையின் சீற்றத்தைக் கொண்டவனும், பெரும் சக்தி கொண்டவனுமான கேதுவர்மன், பெரும் புகழ் கொண்ட பாண்டு மகனை {அர்ஜுனனைத்} தன் அண்ணனுக்காக எதிர்த்தான்.(14) போரில் தன்னை நோக்கி வரும் கேதுவர்மனைக் கண்டவனும், பகைவீரர்களைக் கொல்பவனுமான பீபத்சு {அர்ஜுனன்}, கூர்முனை கொண்ட கணைகள் பலவற்றால் அவனைக் {கேதுவர்மனைக்} கொன்றான்.(15)

கேதுவர்மன் வீழ்ந்தபிறகு, வலிமைமிக்கத் தேர்வீரனான திருதவர்மன், தன் தேரில் ஏறி அர்ஜுனனை நோக்கி வரைந்து சென்று, அவன் மீது சரியாகக் கணைமாரியைப் பொழிந்தான்.(16) இளைஞனான திருதவர்மனின் கரநளினத்தைக் கண்டவனும், வலிமை, சக்தி மற்றும் பேராற்றலைக் கொண்டவனுமான குடாகேசன் {அர்ஜுனன்}, அவனிடம் பெரும் நிறைவையடைந்தான்.(17) அந்த இளம் போர்வீரன் எப்போது தன் கணைகளை எடுத்தான், எப்போது வில்லின் நாணில் அவற்றைப் பொருத்தித் தன் மீது குறி பார்த்தான் என்பதை இந்திரனின் மகனால் {அர்ஜுனனால்} காண முடியவில்லை. அவன் காற்றில் பறந்து வரும் கணைமாரியை மட்டுமே கண்டான்.(18) குறுகிய காலம் வரை {ஒரு முகூர்த்த காலம்} அர்ஜுனன் தன் எதிரிக்கு மகிழ்ச்சியை அளித்து, அவனுடைய வீரத்தையும் திறனையும் கண்டு வியந்தான்.(19) சிரித்துக் கொண்டே இருந்த அந்தக் குருவீரன் {அர்ஜுனன்}, கோபம்நிறைந்த பாம்புக்கு ஒப்பான அந்த இளைஞனுடன் போரிட்டுக் கொண்டிருந்தான். வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட தனஞ்சயன் {அர்ஜுனன்} திருதவர்மனின் வீரத்தைக் கண்டு மகிழ்ந்ததால் அவனது உயிரை எடுக்காதிருந்தான்.(20)

எனினும், அளவற்ற சக்தியைக் கொண்ட பார்த்தன் {அர்ஜுனன்}, திருதவர்மனின் உயிரை எடுக்க விரும்பாது அவனுடன் மென்மையாகப் போரிட்டுக் கொண்டிருக்கும்போதே அவன் சுடர் மிக்கக் கணையொன்றை அவன் மீது ஏவினான்.(21) அக்கணையால் ஆழத்துளைக்கப்பட்ட விஜயன் {அர்ஜுனன்} திகைப்படைந்தான், அவனது வில்லான காண்டீவம் திடமான பிடியில் இருந்து நழுவி பூமியில் விழுந்தது.(22) ஓ! மன்னா, அர்ஜுனனின் பிடியில் இருந்து விழுந்த போது அந்த வில்லின் வடிவம் (மழைக்குப் பின் ஆகாயத்தில் தோன்றும்} இந்திரனின் வில்லுக்கு {வானவில்லுக்கு} ஒப்பானதாகத் தெரிந்தது.(23) ஓ! ஏகாதிபதி, தெய்வீகமானதும், பெரியதுமான அந்த வீல் போரில் கீழே விழுந்தபோது திருதவர்மன் உரக்க நகைத்தான்.(24) இதனால் சினம் தூண்டப்பட்டவனான ஜிஷ்ணு {அர்ஜுனன்}, தன் கரத்தில் இருந்த குருதியைத் துடைத்துவிட்டு, மீண்டும் தன் வில்லை எடுத்துக் கொண்டு சரியான கணைமாரியைப் பொழிந்தான்.(25)

அப்போது, தனஞ்சயனின் அந்தச் சாதனையை மெச்சிய பல்வேறு உயிரினங்களின் குழப்பான {கல கலவென்ற} உரத்த ஒலி, ஆகாயத்தை நிறைத்து, சொர்க்கங்களையே தொட்டது.(26) சினத்தில் தூண்டப்பட்டு, யுகத்தின் முடிவில் தோன்றும் யமனைப் போலத் தெரிந்த ஜிஷ்ணுவைக் கண்ட திரிகர்த்த போர்வீரர்கள், திருதவர்மனைக் காக்கும் விருப்பத்தில் தங்கள் நிலைகளில் இருந்து விரைந்த வந்து வேகமாக அவனை {அர்ஜுனனைச்} சூழ்ந்து கொண்டனர். தன் பகைவர்களால் சூழப்பட்டவனாகத் தன்னைக் கண்ட அர்ஜுனன் முன்பைவிட அதிகக் கோபம் கொண்டான்.(27,28) அவன் விரைவில், பெரும் இந்திரனின் கணைகளுக்கு ஒப்பானவையும், வாரப்பிரும்பாலானவையுமான கணைகள் பலவற்றால் அவர்களில் முதன்மையான போர்வீரர்களான பதினெட்டு பேரை விரைவாகக் கொன்றான்.(29) அப்போது திரிகர்த்தப் போர்வீரர்கள் தப்பி ஓடத் தொடங்கினர். அவர்கள் பின்வாங்குவதைக் கண்ட தனஞ்சயன், கடும் நஞ்சுமிக்கக் கோபக்காரப் பாம்புகளுக்கு ஒப்பான கணைகள் பலவற்றைப் பெரு வேகத்துடன் அவர்கள் மீது ஏவி உரக்கச் சிரித்தான்.(30)

தனஞ்சயனின் கணைகளால் பெரிதும் பீடிக்கப்பட்ட திரிகர்த்தர்களில் வலிமைமிக்கத் தேர்வீரர்கள், உற்சாகமிழந்த இதயத்துடன் திசைகள் அனைத்திலும் தப்பி ஓடினர்.(31) அப்போது அவர்கள், (குருக்ஷேத்ரப் போர்க்களத்தில்) சம்சப்தகக் கூட்டத்தைக் கொன்ற அந்த மனிதர்களில் புலியிடம் {அர்ஜுனனிடம்}, "நாங்கள் உமது அடிமைகள். நாங்கள் உமது வசப்படுகிறோம்[1].(32) ஓ! பார்த்தரே, எங்களுக்கு ஆணையிடுவீராக. மிக அடக்கமான உமது பணியாட்களைப் போல நாங்கள் இங்கே காத்திருக்கிறோம் பாரும். ஓ! குருக்களைத் திளைக்கச் செய்பவரே, நாங்கள் உமது ஆணைகள் அனைத்தையும் நிறைவேற்றுவோம்" என்றனர்.(33) அடிபணிவதை வெளிப்படுத்தும் இச்சொற்களைக் கேட்ட தனஞ்சயன், அவர்களிடம், "ஓ! மன்னர்களே, உங்கள் உயிரைக் காத்துக் கொண்டு, என் ஆட்சிப்பகுதியை ஏற்றுக் கொள்வீராக" என்றான்".(34)

[1] "குருக்ஷேத்திரப் போர்க்களத்தில் அர்ஜுனனுடன் பலநாட்கள் போரிட்ட சம்சப்தகக் கூட்டம், மன்னன் சுசர்மன் தலைமையிலான திரிகர்த்த வீரர்களை உள்ளடக்கியதாகும் என்பது இங்கே நினைவுகூரத்தக்கது. சம்சப்தகர் என்றால் உறுதிமொழியேற்றவர் என்று பொருள். வெற்றி அல்லது மரணம் என்ற உறுதிமொழியை ஏற்ற போர்வீரர்கள் அப்பெயரில் அழைக்கப்பட்டனர்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.

அஸ்வமேதபர்வம் பகுதி – 74ல் உள்ள சுலோகங்கள் : 34

ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்