Tuesday, December 10, 2019

வீழ்ந்தான் வஜ்ரதத்தன்! - அஸ்வமேதபர்வம் பகுதி – 76

Vajradatta defeated! | Aswamedha-Parva-Section-76 | Mahabharata In Tamil

(அநுகீதா பர்வம் - 61)


பதிவின் சுருக்கம் : பகதத்தன் மகனான வஜ்ரதத்தனை வென்ற அர்ஜுனன்...


வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "ஓ! பாரதர்களின் தலைவா, நூறு வேள்வி செய்தவனுக்கும் {இந்திரனுக்கும்}, விருத்திரனுக்கும் இடையில் நடந்த போரைப் போல அர்ஜுனனுக்கும், அந்த இளவரசனுக்கும் {வஜ்ரதத்தனுக்கும்} இடையில் நடந்த போர் இவ்வாறே மூன்று நாள் நீடித்தது.(1)


நான்காம் நாளில், பெரும் வலிமை கொண்ட வஜ்ரதத்தன் உரக்கச் சிரித்துக் கொண்டே அர்ஜுனனிடம், "ஓ! அர்ஜுனா, நில், நிற்பாயாக. உன்னால் உயிருடன் தப்ப இயலாது. உன்னைக் கொன்று என் தந்தைக்கு {பகதத்தருக்குச்} செய்ய வேண்டிய நீர்ச்சடங்கை {தர்ப்பணத்தை} முறையாக நான் செய்யப் போகிறேன்.(3) உன் தந்தையின் நண்பரும், வயது முதிர்ந்தவருமான என் தந்தை பகதத்தர், அவருடைய முதுமையின் விளைவால் உன்னால் கொல்லப்பட்டார். எனினும், சிறுவனான என்னுடன் நீ போரிடுவாயாக[1]" என்றான்.(4)

[1] "பகதத்தன், அர்ஜுனனின் தந்தையான இந்திரனின் நண்பனாவான்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், "நீ வயது சென்றவரும், என்னுடைய தந்தையுமான பகத்தராஜரையும், என் பிதாவினுடைய பிராயமுதிர்ந்தவரான நண்பரையும் துன்பப்படுத்திக் கொன்றாய். இப்போது பாலனான என்னுடன் போர் புரி" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், "வயது முதிர்ந்த என் தந்தை பகதத்தர் உன் தந்தையின் நண்பராவார். வயது முதிர்ந்தவரான அவர் கொல்லப்பட்டார். வயது வராத சிறுவனாக இருப்பினும் நீ இப்போது என்னுடன் போரிடுவாயாக" என்றிருக்கிறது. அதன் அடிக்குறிப்பில், "குருக்ஷேத்திரப் போரில் பகதத்தன், அர்ஜுனனால் கொல்லப்பட்டான். பகதத்தன் இந்திரனின் நண்பனாவான். அவ்வாறே, அவன் அர்ஜுனனுடைய தந்தையின் நண்பனாவான்" என்றிருக்கிறது.

ஓ! குரு குலத்தோனே {ஜனமேஜயனே}, இவ்வார்த்தைகளைச் சொன்ன மன்னன் வஜ்ரதத்தன், சினத்தில் நிறைந்தவனாகப் பாண்டுவின் மகனை {அர்ஜுனனை} நோக்கித் தன் யானையைத் தூண்டினான்.(5) பெரும் நுண்ணறிவுமிக்க வஜ்ரதத்தனால் தூண்டப்பட்ட அந்த யானைகளின் இளவரசன், ஆகாயத்தையே வெட்ட விரும்பி செல்வதைப் போலத் தனஞ்சயனை நோக்கி விரைந்தது.(6) அந்த யானைகளின் இளவரசன், மழையால் ஒரு மலையை நனைக்கும் நீல மேகத் திரளைப் போலத் தன் துதிக்கையின் முனையில் வெளிப்பட்ட நீரைப் பொழிந்து {ஜலத்திவலையால்} அர்ஜுனனை நனைத்தது.(7) உண்மையில் அம்மன்னனால் தூண்டப்பட்ட அந்த யானை, ஒரு மேகத்தைப் போல மீண்டும் மீண்டும் முழங்கிக் கொண்டே, தன் வாயில் வெளிப்பட்ட ஆழ்ந்த ஒலியுடன் பல்குனனை நோக்கி விரைந்தது.(8)

உண்மையில் வஜ்ரதத்தனால் தூண்டப்பட்ட அந்த யானைகளின் இளவரசன், வலிமைமிக்கக் குருக்களின் தேர்வீரனை நோக்கி விரைவாக நகர்ந்து, தன் நடையால் மகிழ்ச்சியில் ஆடுவதைப் போலத் தெரிந்தது.(9) வஜ்ரதத்தனின் அந்த விலங்கு தன்னை நோக்கி வருவதைக் கண்டவனும், பகைவர்களைக் கொல்பவனும், வலிமைமிக்கவனுமான தனஞ்சயன், தன் காண்டீவத்தைச் சார்ந்து, அச்சத்தால் நடுங்காமல் தன் நிலையில் நின்றான்.(10) தன் பணியை நிறைவேற்றத் தடையாக இருக்கும் வஜ்ரதத்தனை நினைத்து, (பாண்டவர்களிடம் பிராக்ஜோதிஷ) வீடு கொண்ட பழைய பகையையும் நினைத்துப் பார்த்த பாண்டுவின் மகன், கோபத்தால் பெரிதும் தூண்டப்பட்டவனாக அந்த மன்னனை எதிர்த்தான்.(11) சினத்தால் நிறைந்தவனான தனஞ்சயன், பொங்கும் கடலைத் தடுக்கும் கரையைப் போலத் தன் கணைப்பொழிவின் மூலம் அந்த விலங்கின் முன்னேற்றத்தைத் தடுத்தான்.(12)

அழுகுடன் கூடிய (வடிவம் கொண்ட) அந்த யானைகளின் இளவரசன், அர்ஜுனனால் இவ்வாறு தடுக்கப்பட்டு, முள் சிலிர்த்த முள்ளம்பன்றியைப் போலப் பல கணைகளால் உடல் துளைக்கப்பட்டுத் தன் முன்னேற்றத்தை நிறுத்தியது.(13) தன் யானையின் முன்னேற்றம் தடைபட்டதைக் கண்ட பகதத்தனின் அரச மகன் {வஜ்ரதத்தன்}, சினத்தால் மதியிழந்தவனாகக் கூர் முனை கணைகள் பலவற்றை அர்ஜுனன் மீது ஏவினான்.(14) வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட அர்ஜுனன், பகைவரைக் கொல்லும் தன் கணைகள் பலவற்றால் அந்தக் கணைகள் அனைத்தையும் கலங்கடித்தான். இந்த அருஞ்செயல் அற்புதம் நிறைந்ததாகத் தெரிந்தது.(15)

கடுஞ்சினத்தால் தூண்டப்பட்ட பிராக்ஜோதிஷர்களின் மன்னன் {வஜ்ரதத்தன்}, ஒரு மலைக்கு ஒப்பான தன் யானையை மீண்டும் அர்ஜுனனுக்கு எதிராக வலுக்கட்டாயமாகத் தூண்டினான்.(16) மீண்டும் தன்னை நோக்கி முன்னேறிவரும் அவ்விலங்கைக் கண்ட அர்ஜுனன், நெருப்பின் தழலுக்கு ஒப்பானதும், பெருஞ்சக்தி கொண்டதுமான ஒரு கணையைப் பெரும்பலத்துடன் ஏவினான்.(17) ஓ! மன்னா, பாண்டுவின் மகனால் முக்கிய அங்கங்கள் ஆழமாகத் தாக்கப்பட்ட அந்த விலங்கு, வஜ்ரத்தால் தளர்ந்த மலைச் சிகரத்தைப் போலத் திடீரெனப் பூமியில் விழுந்தது.(18) தனஞ்சயனின் கணையால் தாக்கப்பட்ட அந்த யானை பூமியில் கிடந்த போது, இந்தரின் வஜ்ரத்தால் {இடியால்} தளர்ந்து பூமியில் விழுந்து கிடக்கும் ஒரு பெரும் மலைப் பாறையைப் போலத் தெரிந்தது.(19)

வஜ்ரதத்தனின் யானை பூமியில் நெடுஞ்சாண் கிடையாகக் கிடந்த போது, பாண்டுவின் மகன் {அர்ஜுனன்}, யானையுடன் சேர்ந்து விழுந்து கிடந்த அந்த மன்னனிடம், "அஞ்சாதே.(20) உண்மையில், வலிமையும், சக்தியும் கொண்ட யுதிஷ்டிரர், என்னை இந்தப் பணியில் நிறுவும்போது இந்தச் சொற்களையே சொன்னார், "ஓ! தனஞ்சயா, (உன்னுடன் போரில் ஈடுபடும்) மன்னர்களை நீ கொல்லாதே.(21) ஓ! மனிதர்களில் புலியே, பகை மன்னர்களை முடக்கிவிட்டாலே உன் பணி நிறைவடைந்ததாக நீ கருத வேண்டும். ஓ! தனஞ்சயா, உன்னுடன் போரிட வரும் அந்த மன்னர்களின் போர்வீரர்களையும் நீ கொல்லாதே.(22) உற்றார் உறவினர் மற்றும் நண்பர்கள் அனைவருடன் யுதிஷ்டிரனின் குதிரை வேள்விக்கு வருமாறு அவர்களை அழைப்பாயாக" {என்றார்}.(23)

ஓ! மன்னா, என் அண்ணனின் இந்த ஆணைகளைக் கேட்டிருக்கும் நான் உன்னைக் கொல்ல மாட்டேன். எழுவாயாக; அச்சம் உனதாக வேண்டாம்; ஓ! பூமியின் தலைவா, பாதுகாப்பாகவும், நலமாகவும் உன் நகரத்திற்குத் திரும்புவாயாக.(24) ஓ! பெரும் மன்னா, சைத்ர மாதத்தின் முழு நிலவு நாளில் {சித்ரா பௌர்ணமியில்} நடைபெறும் நீதிமானான மன்னர் யுதிஷ்டிரரின் அவ்வேள்விக்கு நீ வருவாயாக" என்றான்.(25)

இவ்வாறு அர்ஜுனனால் சொல்லப்பட்டவனும், பாண்டுவின் மகனால் {அர்ஜுனனால்} வீழ்த்தப்பட்டவனுமான அந்தப் பகதத்தனின் அரச மகன் {வஜ்ரதத்தன்}, "அவ்வாறே ஆகட்டும்" என்றான்" {என்றார் வைசம்பாயனர்}.(26)

அஸ்வமேதபர்வம் பகுதி – 76ல் உள்ள சுலோகங்கள் : 26

ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்