Tuesday, December 10, 2019

மீண்டும் நழுவிய காண்டீவம்! - அஸ்வமேதபர்வம் பகுதி – 77

Gandiva fell down again! | Aswamedha-Parva-Section-77 | Mahabharata In Tamil

(அநுகீதா பர்வம் - 62)


பதிவின் சுருக்கம் : சைந்தவர்களுடன் போர்புரிகையில் மீண்டும் காண்டீவம் நழுவியது; தெய்வீக முனிவர்களின் ஜபத்தால் புதிய பலம் பெற்றுக் கடும் போர்புரிந்த அர்ஜுனன்...


வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "(குருக்ஷேத்திரப் போர்க்களத்தில்) தங்கள் குலம் கொல்லப்பட்டும், நூற்றுக்கணக்கில் எஞ்சி வாழ்ந்த சைந்தவர்களுக்கும், கிரீடம் தரித்தவனான அர்ஜுனனுக்கும் இடையில் ஒரு பெரும்போர் நேர்ந்தது[1]. வெண்குதிரைகளைக் கொண்டவன் தங்கள் ஆட்சிப்பகுதிக்குள் நுழைந்திருக்கிறான் என்பதைக் கேள்விப்பட்ட அந்த க்ஷத்திரியர்கள் {சைந்தவர்கள்}, பாண்டுகுலத்தின் முதன்மையான அவனைப் பொறுத்துக் கொள்ள முடியாமல் அவனை எதிர்த்து வெளியே வந்தனர்.(2) கடும் நஞ்சைப் போன்ற அந்தப் பயங்கரப் போர்வீரர்கள், அந்தக் குதிரையைத் தங்கள் நாட்டுக்குள் கண்டு, பீமசேனனின் தம்பியான பார்த்தனிடம் எந்த அச்சமும் கொள்ளாமல் அதைக் கைப்பற்றினர்.(3) கையில் வில்லுடன் தரையில் நின்று குதிரையைக் காத்துக் கொண்டிருந்த பீபத்சுவை {அர்ஜுனனை} எதிர்த்த அவர்கள் அருகில் சென்று அவனைத் தாக்கினர்.(4)


[1] இதற்கு முன் கும்பகோணம் பதிப்பில், "அப்போது பகதத்தகுமாரனான அரசனை ஜயித்து ஸமாதானம் செய்தபின், குதிரை விடுபட்டு ஸிந்துதேசம் சென்றது" என்றிருக்கிறது. கங்குலியிலும், பிபேக்திப்ராயின் பதிப்பிலும் இந்த வரி இல்லை.

ஏற்கனவே போரில் வீழ்த்தப்பட்டவர்களும், வலிமையும், சக்தியும் கொண்டவர்களுமான அந்த க்ஷத்திரியர்கள், வெற்றியடையும் ஆசையால் உந்தப்பட்டு, அந்த மனிதர்களில் முதன்மையானவனைச் சூழ்ந்து கொண்டனர்.(5) தங்கள் பெயர்கள், குடும்பங்களின் பெயர்கள் மற்றும் பல்வேறு சாதனைகளை அறிவித்துக் கொண்ட அவர்கள், பார்த்தன் மீது தங்கள் கணைகளைப் பொழிந்தனர்.(6) பகை யானைகளையும் தடுக்கவல்ல கடுஞ்சக்தி கொண்ட கணைமாரியைப் பொழிந்த அந்த வீரர்கள், குந்தியின் மகனைப் போரில் வெல்ல விரும்பி அவனைச் சூழ்ந்து கொண்டனர்.(7) கடுஞ்சாதனைகளைச் செய்த அர்ஜுனன் தரையில் நிற்க, தேரில் அமர்ந்திருந்த அவர்கள் அவனோடு போரிட்டனர்.(8)

நிவாதகவசர்களைக் கொன்றவனும், சம்சப்தகர்களை அழித்தவனும், சிந்துக்களின் மன்னனை {ஜெயத்ரதனைக்} கொன்றவனுமான அந்த வீரனை {அர்ஜுனனை} அனைத்துப் பக்கங்களில் இருந்தும் அவர்கள் தாக்கத் தொடங்கினர்.(9) ஆயிரம் தேர்கள் மற்றும் பத்தாயிரம் குதிரைகளுடன் கூட்டுக்குள் அடைத்ததைப் போல அனைத்துப் பக்கங்களிலும் அவனைச் சூழ்ந்து கொண்ட அந்தத் துணிவுமிக்க வீரர்கள், தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.(10) ஓ! குரு குலத்தவனே, போரில் தனஞ்சயனால் ஜெயத்ரதன் கொல்லப்பட்டதை நினைவுகூர்ந்த அவர்கள், கடும் மழை பொழியும் மேகத் திரளைப் போல அந்த வீரன் மீது கடும் கணை மாரியைப் பொழிந்தனர். அந்தக் கணைமாரியில் மறைந்த அர்ஜுனன், மேகத்தால் மறைக்கப்பட்ட சூரியனைப் போலத் தெரிந்தான்.(11,12)

ஓ! பாரதா, இரும்புக்கூட்டுக்கு மத்தியில் இருக்கும் ஒரு பறவைக்கு ஒப்பாக அந்தப் பாண்டுவின் முதன்மையான மகன் {அர்ஜுனன்}, கணை மேகங்களுக்கு மத்தியில் இருந்தான்.(13) குந்தியின் மகன் இவ்வாறு கணைகளால் பீடிக்கப்பட்டிருப்பதைக் கண்டு, ஓ! என்றும் ஐயோ என்றும் கதறல்கள் மூவுலகங்களிலும் கேட்டன, சூரியன் தன் காந்தியை இழந்தான்.(14) அப்போது, ஓ! மன்னா, கடுங்காற்று வீசத் தொடங்கியது, அதே வேளையில் சூரியன், சந்திரன் இருவரையும் ராஹு விழுங்கினான்.(15) எரிகொள்ளிகள் பல சூரிய வட்டிலைத் தாக்கி பல்வேறு திசைகளில் விழுந்தன. மலைகளின் இளவரசனான கைலாஸம் நடுங்கத் தொடங்கிற்று.(16)

ஏழு (தெய்வீக) முனிவர்களும், சொர்க்கத்தின் வேறு முனிவர்களும், அச்சமடைந்தவர்களாக, துன்பம் மற்றும் கவலையால் பீடிக்கப்பட்டு வெப்பப் பெருமூச்சுகளை விட்டனர்.(17) அந்த எரிகொள்ளிகள் ஆகாயத்தைத் துளைத்துக் கொண்டு சந்திர வட்டிலிலும் விழுந்தன. திசைப்புள்ளிகள் அனைத்தும் புகையால் நிறைந்து விசித்திரமான தன்மையை ஏற்றன.(18) தங்களுக்கு மத்தியில் விளையாடிக் கொண்டிருந்த மின்னல் கீற்றுகளுடன் கூடியவையும், பக்கத்துக்குப் பக்கம் எல்லையாக இந்திரவில்லைக் கொண்டவையுமான சிவந்த மேகங்கள், திடீரென ஆகாயத்தை மறைத்துக் கொண்டு, பூமியில் இறைச்சியையும், குருதியையும் பொழிந்தன.(19) அந்த வீரன் {அர்ஜுனன்}, கணைமாரியில் மூழ்கிய போது இயற்கை இத்தன்மையையே அடைந்தது. உண்மையில், பாரதர்களில் முதன்மையான பல்குனன் {அர்ஜுனன்}, இவ்வாறு பீடிக்கப்பட்ட போது இந்த அதிசயங்கள் தோன்றின.(20)

அடர்த்தியான கணை மேகத்தில் மூழ்கிய அர்ஜுனன் திகைப்படைந்தான். அவனது வில்லான காண்டீவம், அவனது உறுதியான பிடியில் இருந்து தளர்ந்து விழுந்தது, அவனது தோலுறையும் நழுவியது.(21) தனஞ்சயன் மயக்கமடைந்தபோது, சைந்தவ வீரர்கள் சற்றும் தாமதிக்காமல், உணர்வற்ற அந்தப் போர்வீரன் மீது எண்ணற்ற வேறு கணைகளை மீண்டும் ஏவினர்.(22) பிருதையின் மகன் {அர்ஜுனன்} நினைவிழந்ததை அறிந்த தேவர்களின் இதயமும் அச்சத்தால் பீடிக்கப்பட்டதால், அவர்கள் பல்வேறு ஆசிகளைக் கூறி அவனது நலத்தை நாடத் தொடங்கினர்.(23) அப்போது தெய்வீகமான ஏழு முனிவர்களும், மறுபிறப்பாள முனிவர்களும், பெரும் நுண்ணறிவைக் கொண்ட பிருதையின் மகனுக்கு வெற்றியைக் கொடுக்க விரும்பி அமைதியான ஜபத்தில் ஈடுபட்டனர்.(24)

இறுதியாக, சொர்க்கவாசிகளின் அந்தச் செயல்களின் மூலம் பார்த்தனின் சக்தி சுடர்ந்தெழுந்தபோது, உயர்திறன் தெய்வீக ஆயுதங்களை அறிந்த அந்த வீரன் {அர்ஜுனன்} ஒரு மலையைப் போல அசையாமல் நின்றான்.(25) பிறகு, குருக்களைத் திளைக்கச் செய்பவனான அவன் தன் தெய்வீக வில்லை இழுத்தான். அவன் மீண்டும் மீண்டும் நாண்கயிற்றை இழுத்த போது, அதனைப் பின்தொடர்ந்து எழுந்தவொலி ஏதோவொரு பெரும் இயந்திரத்தின் உரத்த ஒலிக்கு ஒப்பானதாக இருந்தது[2].(26) மழையைப் பொழியும் புரந்தரனைப் போல அந்தப் பலமிக்க அர்ஜுனன் தன் வில்லில் இருந்து இடையறாத கணைமாரியைத் தன் பகைவரின் மீது பொழிந்தான்.(27) அக்கணைகளால் துளைக்கப்பட்ட சைந்தவப் போர்வீரர்கள், வெட்டுக்கிளிகளால் மறைக்கப்பட்ட மரங்களைப் போல மறைந்துபோனார்கள்.(28)

[2] கும்பகோணம் பதிப்பில், "அர்ஜுனன் திவ்யமான வில்லை நாணொலியிடும்படி செய்தான். அதனுடைய பெரிய ஒலியானது இவ்வுலகில் யந்திரத்தினுடைய ஒலி போல அடிக்கடி உண்டாயிற்று" என்றிருக்கிறது.

அவர்கள் காண்டீவத்தின் ஒலியினாலேயே அச்சமடைந்தனர். அச்சத்தால் பீடிக்கப்பட்ட அவர்கள் அங்கிருந்து தப்பி ஓடினார்கள். இதயத் துயரினால் அவர்க்ள கண்ணீர் உதிர்த்து, பேரொலியுடன் புலம்பினார்கள்.(29) வலிமைமிக்கவனான அந்தப் போர்வீரன், ஒரு நெருப்புச் சக்கரத்தைப் போன்ற வேகத்துடன் பகைவரின் கூட்டத்திற்கு மத்தியில் திரிந்து, எப்போதும் தன் கணைகளால் அந்தப் போர்வீரர்களைத் துளைத்தான்.(30) வஜ்ரதாரியான பெரும் இந்திரனைப் போலப் பகைவர்களைக் கொல்பவனான அர்ஜுனன், தன் வில்லில் இருந்து அனைத்துத் திசைகளிலும் ஏவிய கணைமாரியானது (மனித வகையைச் சாராத) மாயக் காட்சிக்கு ஒப்பாக இருந்தது.(31) அந்தக் கௌரவ வீரன், பலமிக்கக் கதிர்களால் மேகங்களை விலக்கும் கூதிர் காலச் சூரியனைப் போல, பிரகாசமாகத் தெரிந்த கணை மாரியால், பகைவரின் கூட்டத்தைத் துளைத்தான்" {என்றார் வைசம்பாயனர்}.(32)

அஸ்வமேதபர்வம் பகுதி – 77ல் உள்ள சுலோகங்கள் : 32

ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்