Saturday, December 14, 2019

சிசுபாலன் மற்றும் ஏகலவ்யனின் வாரிசுகள்! - அஸ்வமேதபர்வம் பகுதி – 83

The heirs of Sishupala & Ekalavya! | Aswamedha-Parva-Section-83 | Mahabharata In Tamil

(அநுகீதா பர்வம் - 68)


பதிவின் சுருக்கம் : அர்ஜுனனை வரவேற்ற சிசுபாலனின் மகன் சரபன்; காசி, அந்தகம், கோசலம், கிராதம், தங்கணம் ஆகிய நாடுகளில் வரவேற்பைப் பெற்ற அர்ஜுனன்; தசார்ண மன்னன் சித்ராங்கதனை, நிஷாத மன்னனான ஏகலவ்யன் மகனை வென்றது; திராவிடம், ஆந்திரம், மாஹிஷம் மற்றும் கோல்வ மலை ஆகியவற்றில் அர்ஜுனன் பெற்ற வெற்றி; துவாரகையில் வசுதேவர் மற்றும் உக்ரசேனரால் வரவேற்கப்பட்ட அர்ஜுனன்; பஞ்சநதம் சென்று அங்கிருந்து காந்தாரம் சென்றது...


வைசம்பாயனர் {ஜனமேயனிடம்} சொன்னார், "மகத ஆட்சியாளனால் {மேகசந்தியால்} வழிபடப்பட்டவனும், தேரில் வெண்குதிரைகளைப் பூட்டியவனுமான பாண்டுவின் மகன் {அர்ஜுனன்}, அந்த (வேள்விக்) குதிரையைப் பின்தொடர்ந்து தெற்கு நோக்கிச் சென்றான்.(1) விருப்பப்படி திரிந்து கொண்டிருந்த அது {வேள்விக் குதிரை}, கிளிஞ்சல்களின் {சிப்பியின்} பெயரால் அழைக்கப்படுவதும், சேதிகளுக்கு உரியதுமான அழகிய நகரத்தை {சுக்திமதியை}[1] நோக்கித் திரும்பி வந்தது. பெரும்பலம் கொண்டவனும், சிசுபாலனின் மகனுமான சரபன், முதலில் அர்ஜுனனுடன் போரிட்டு அதன் பிறகு, உரிய மதிப்புடன் அவனை வழிபட்டான்.(3) ஓ! மன்னா, அவனால் வழிபடப்பட்டு அந்தச் சிறந்த குதிரை, அதன் பிறகு, காசிகள், அங்கர்கள், கோசலர்கள், கிராதர்கள் மற்றும் தங்கணர்களின் நாடுகளுக்குச் சென்றது.(4)


[1] "இந்த நகரத்தின் பெயர் சுக்திமதி" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். பிபேக்திப்ராய் பதிப்பின் அடிக்குறிப்பில், "சுக்தி என்பது ஒரு முத்தாகும். அந்தத் தலைநகரம் சுக்திமதி என்று பொதுவாக அறியப்பட்டது" என்றிருக்கிறது. சுக்திமதி நகரம் இன்றைய உத்தரப்பிரதேசத்தின் பந்தா நகரத்தின் அருகிலோ, மத்தியப்பிரதேசத்தின் ரெய்வா நகரத்தின் புறநகரத்திலோ இருந்திருக்க வேண்டுமென ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். https://en.wikipedia.org/wiki/Suktimati

அந்த நாடுகள் அனைத்திலும் உரிய மதிப்புடன் வரவேற்கப்பட்ட தனஞ்சயன் தன் வழியில் சென்று கொண்டிருந்தான். உண்மையில் அந்தக் குந்தியின் மகன், அடுத்ததாகத் தசார்ணர்களின் நாட்டுக்குச் சென்றான்.(5) பெரும் பலம் கொண்டவனும், பகைவரை நொறுக்குபவனுமான சித்ராங்கதன் அம்மக்களின் ஆட்சியாளனாக இருந்தான். அவனுக்கும், விஜயனுக்கும் இடையில் மிகப் பயங்கரமான போர் ஒன்று நேர்ந்தது.(6) அவனைத் தன் ஆளுகையின் கீழ் கொண்டு வந்தவனும், மனிதர்களில் முதன்மையானவனும், கிரீடத்தால் அலங்கரிக்கப்பட்டவனுமான அர்ஜுனன், ஏகலவ்யனின் மகனான நிஷாத மன்னனின் நாட்டிற்குச் சென்றான்.(7) ஏகலவ்யன் மகன் போரில் அர்ஜுனனை வரவேற்றான். அந்தக் குரு வீரனுக்கும், நிஷாதர்களுக்கும் இடையில் நடந்த மோதல் மயிர்ச் சிலிர்க்கும் வகையில் சீற்றமிக்கதாக இருந்தது.(8)

போரில் வெல்லப்பட இயலாதவனான குந்தியின் வீரமிக்க மகன், வேள்விக்குத் தடையாக இருந்த அந்த நிஷாத மன்னனை வீழ்த்தினான் ஓ! மன்னா {ஜனமேஜயா}, ஏகலவ்யனின் மகனை அடக்கி இந்திரனின் மகன், நிஷாதர்களால் முறையாக வழிபடப்பட்டு, தெற்குக் கடலை நோக்கி முன்னேறிச் சென்றான்.(10) அந்தப் பகுதிகளில் திராவிடர்கள், ஆந்திரர்கள், மாஹிஷகர்கள், கோல்வ மலையில் {கோல்லகிரியில்} உள்ள மனிதர்கள் ஆகியோருக்கும் கிரீடம் தரித்த வீரனுக்கும் {அர்ஜுனனுக்கும்} இடையில் போர்கள் நடைபெற்றன.(11) அருஞ்செயல் ஏதும் செய்யாமல் அந்த இனக்குழுக்களை அடக்கிய அர்ஜுனன், குதிரையால் வழிநடத்தப்பட்டுக் கால்நடையாகவே ஸுராஷ்ட்டிரர்களின் {சௌராஷ்டிரர்களின்} நாட்டுக்குச் சென்றான்.(12)

கோகர்ணத்தை அடைந்த அவன், அங்கிருந்து பிரபாஸத்திற்குச் சென்றான். அடுத்ததாக விருஷ்ணிகுல வீரர்களால் பாதுகாக்கப்படும் அழகிய துவாராவதி நகரத்திற்குச் சென்றான்.(13) குரு மன்னனின் அழகிய வேள்விக் குதிரை துவாராவதியை அடைந்தபோது, யாதவ இளைஞர்கள் அந்தக் குதிரைக்கு எதிராகத் தங்கள் பலத்தைப் பயன்படுத்தினர்.(14) எனினும், மன்னர் உக்ரசேனர் புறப்பட்டுச் சென்று அக்காரியத்தைச் செய்வதில் இருந்து அந்த இளைஞர்களைத் தடுத்தான். அதன்பிறகு, அந்த விருஷ்ணிகள் மற்றும் அந்தகர்களின் ஆட்சியாளர் {உக்ரசேனர்}, தன் அரண்மனையில் இருந்து வெளியே வந்து,(15) அர்ஜுனனின் தாய்மாமனான வசுதேவரின் துணையுடன் உற்சாகமாக அந்தக் குரு வீரனைச் சந்தித்து, உரிய சடங்குகளுடன் அவனை வரவேற்றார்.(16)

வயது முதிர்ந்தவர்களான அந்தத் தலைவர்கள் இருவரும், அர்ஜுனனை முறையாகக் கௌரவித்தனர். அந்தக் குரு இளவரசன் அவர்களின் அனுமதியைப் பெற்றுக் கொண்டு தான் பின்பற்றிச் சென்ற குதிரை வகுத்த வழியில் சென்றான்.(17) அந்த வேள்விக் குதிரை மேற்குக் கடலின் கரையோரமாகச் சென்று இறுதியாக ஐந்து நீர்நிலைகளைக் கொண்டதும், மக்கள் தொகையிலும், செழிப்பிலும் பெருகி இருந்ததுமான நாட்டை அடைந்தது.(18) அங்கிருந்து, ஓ! மன்னா {ஜனமேஜயா}, அந்தக் குதிரை காந்தாரர்களின் நாட்டுக்குச் சென்றது. அங்கே சென்று அது, குந்தியின் மகனால் பின்தொடரப்பட்டு விருப்பப்படி சுற்றித் திரிந்தது.(19) சகுனியின் மகனும், பாண்டவர்களிடம் தன் தந்தை கொண்டிருந்த கடும் வெறுப்பை நினைவில் கொண்டிருந்தவனுமான காந்தார ஆட்சியாளனுக்கும், கிரீடத்தால் அலங்கரிக்கப்பட்ட வீரனுக்கும் {அர்ஜுனனுக்கும்}  இடையில் கடும்போர் ஒன்று நேர்ந்தது" {என்றார் வைசம்பாயனர்}.(20)

அஸ்வமேதபர்வம் பகுதி – 83ல் உள்ள சுலோகங்கள் : 20

ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்