Sunday, December 15, 2019

சகுனியின் வாரிசு! - அஸ்வமேதபர்வம் பகுதி – 84

The heir of Shakuni! | Aswamedha-Parva-Section-84 | Mahabharata In Tamil

(அநுகீதா பர்வம் - 69)


பதிவின் சுருக்கம் : அர்ஜுனனுடன் போரிட்ட சகுனியின் மகன்; அவனைத் தடுத்து அறிவுறுத்திய அர்ஜுனன்; தன் மகனைக் காக்க வந்த சகுனியின் மனைவி; சகுனியின் மகனைக் கொல்லாமல் விட்ட அர்ஜுனன்...


வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "காந்தாரர்களில் வலிமைமிக்கத் தேர்வீரனான சகுனியின் வீர மகன்[1], ஒரு பெரும்படையின் துணையுடன் சுருள் முடி கொண்ட குரு வீரனை {அர்ஜுனனை} எதிர்த்துச் சென்றான். அந்தப் படையில் யானைகளும், குதிரைகளும், தேர்களும் முறையாக ஆயத்தம் செய்யப்பட்டிருந்தன. மேலும் அப்படை கொடிகள் மற்றும் பதாகைகள் பலவற்றால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.(1) தங்கள் மன்னனான சகுனி கொல்லப்பட்டதைப் பொறுத்துக் கொள்ள முடியாதவர்களும், அதற்குப் பழிதீர்க்கும் வஞ்சத்தில் எரிந்து கொண்டிருந்தவர்களும், விற்களுடன் கூடியவர்களுமான அந்தப் போர்வீரர்கள் ஒன்றுசேர்ந்தவர்களாகப் பார்த்தனை நோக்கி விரைந்தனர்.(2) அற ஆன்மா கொண்டவனும், வெல்லப்பட முடியாதவனுமான பீபத்சு {அர்ஜுனன்}, அவர்களிடம் அமைதியாகப் பேசினாலும், (அர்ஜுனன் மூலமாகச் சொல்லப்பட்ட) யுதிஷ்டிரனின் நல்ல வார்த்தைகளை அவர்கள் ஏற்க விரும்பவில்லை.(3) இனிய சொற்களைக் கொண்டு பார்த்தனால் தடுக்கப்பட்டாலும், அவர்கள் கோபவசப்பட்டவர்களாக அந்த வேள்விக் குதிரையைச் சூழ்ந்தனர். இதனால் பாண்டுவின் மகன் கோபத்தில் நிறைந்தான்.(4)


[1] சகுனியின் மகன்கள் உலூகன் மற்றும் விருகாசுரன் ஆகிய இருவராவர். உலூகன் பதினெட்டாம் நாள் போரில் {சல்லிய பர்வம் 28ம் பகுதியில்} சகாதேவனால் கொல்லப்படுகிறான். விருகாசுரன் பதினேழாம் நாள் போரில் நகுலனால் கொல்லப்படுவதாகச் சொல்லப்படுகிறது. கங்குலியின் பதிப்பில் இதற்கு ஆதாரம் திரட்ட முடியவில்லை. இங்கே சொல்லப்படும் சகுனியின் மகன் யார் என்பது தெரியவில்லை. ஒருவேளை விருகாசுரனாக இருக்கலாம். கங்குலியிலும், கும்பகோணம் பதிப்பிலும், பிபேக்திப்ராயின் பதிப்பிலும் இதற்கான அடிக்குறிப்போ, விளக்கமோ காணக்கிடைக்கவில்லை. மத்ஸ்ய புராணத்தில் கரபி என்ற பெயரில் சகுனியின் மகன் ஒருவன் சொல்லப்படுகிறான் என புராணிக் என்சைக்லோபீடியா பக்கம் 389ல் தகவல் இருக்கிறது.

அப்போது அர்ஜுனன், காந்தியில் சுடர்விடுபவையும், காண்டீவத்தில் இருந்து அலட்சியமாக {அதிக முயற்சியின்றி} ஏவப்பட்டவையும், கத்தியைப் போன்ற தலைகளைக் கொண்டவையுமான கணைகளால் {க்ஷுரங்களால்} காந்தாரப் போர்வீரர்கள் பலரின் தலைகளைக் கொய்தான்.(5) ஓ! மன்னா, பார்த்தனால் இவ்வாறு காந்தாரர்கள் கொல்லப்பட்ட போது, பெரிதும் துன்பமடைந்த அவர்கள் குதிரையை விடுவித்து விட்டு, அச்சத்தால் போரை விட்டு விலகிச் சென்றனர்.(6) எனினும், அதற்கு மேலும் அனைத்துப் பக்கங்களிலும் தன்னைச் சூழ்ந்திருந்த காந்தாரப் போராளிகளால் தடுக்கப்பட்டாலும், பெரும் சக்தி கொண்டவனான அந்தப் பாண்டுவின் மகன் {அர்ஜுனன்}, அவர்களில் பலரின் பெயர்களை முன்பே சொல்லிவிட்டு அவர்களின் தலைகளைக் கொய்தான்.(7) அந்தப் போரில் அவனைச் சுற்றிலும் இருந்த காந்தாரப் போர் வீரர்கள் இவ்வாறு கொல்லப்பட்ட போது, சகுனியின் அரசமகன், அந்தப் பாண்டுவின் மகனைத் தடுக்க முன்வந்தான்.(8)

க்ஷத்திரியக் கடமையால் உந்தப்பட்ட அர்ஜுனன், தன்னுடன் போரிட்டுக் கொண்டிருந்த காந்தார மன்னனிடம், "யுதிஷ்டிரரின் ஆணைகளின் விளைவாக, நான் என்னுடன் போரிடும் மன்னர்களைக் கொல்ல நினைப்பதில்லை. ஓ! வீரா, என்னுடன் போரிடுவதை நிறுத்துவாயாக. தோல்வி உனதாக வேண்டாம்" என்றான்.(9,10) இவ்வாறு சொல்லப்பட்ட சகுனியின் மகன், அறியாமையில் மதிமயங்கி, அந்த ஆலோசனையை அலட்சியம் செய்து, போர்ச்சாதனைகளில் சக்ரனுக்கு {இந்திரனுக்கு} ஒப்பானவனான அந்தக் குரு வீரனை வேகமாகச் செல்லும் கணைகள் பலவற்றால் மறைத்தான்.(11) அப்போது பார்த்தன், பிறைவடிவக் கணையொன்றால் {ஒரு அர்த்தச்சந்திர பாணத்தால்} தன் பகைவனின் தலைப்பாகையை வெட்டி வீழ்த்தினான். அளவிலா ஆன்மாகக் கொண்ட அவன் {அர்ஜுனன்}, (குருக்ஷேத்திரப் போர்க்களத்தில் தான் வெட்டி வீழ்த்திய) ஜெயத்ரதன் தலையைப் போலவே அந்தத் தலைப்பாகையையும் நெடுந்தொலைவு தள்ளி விழச் செய்தான்.(12)

இந்த அருஞ்செயலைக் கண்ட காந்தாரப் போர்வீரர்கள் அனைவரும் ஆச்சரியத்தால் நிறைந்தனர். அர்ஜுனன் தானாகவே தங்கள் மன்னனை உயிருடன் விட்டான் என்பதை அவர்கள் நன்கு புரிந்து கொண்டனர்.(13) அப்போது, அந்தக் காந்தாரர்களின் இளவரசன், அச்சமடைந்த மான் கூட்டத்திற்கு ஒப்பான தன் போர்வீரர்கள் அனைவருடன் சேர்ந்து களத்தைவிட்டுத் தப்பி ஓடத் தொடங்கினான்.(14) அச்சத்தால் உணர்விழந்த காந்தாரர்கள், தப்ப இயலாதவர்களாகக் களத்திலேயே திரிந்து கொண்டிருந்தனர். அர்ஜுனன், அகன்ற தலைக் கணைகளை {பல்லங்களைக்} கொண்டு அவர்களில் பலரின் தலைகளை வெட்டி வீழ்த்தினான்.(15) அர்ஜுனனுடைய கணைகளின் விளைவால் பலர் தங்கள் கைகளை இழந்திருந்தாலும், அந்த உறுப்பை இழந்ததைக் கூட அறியாத வண்ணம் அவர்கள் அச்சத்தால் திகைத்திருந்தனர். உண்மையில், காண்டீவத்தில் இருந்து ஏவப்பட்ட பார்த்தனின் நெடுங்கணைகளால் அந்தக் காந்தாரப் படை பெரிதும் பீடிக்கப்பட்டது.(16)

அச்சமடைந்த மனிதர்கள், யானைகள் மற்றும் குதிரைகளைக் கொண்டதும், போர்வீரர்கள் பலரையும் விலங்குகள் பலவற்றையும் இழந்திருந்ததும், கற்கட்டாகக் குறைக்கப்பட்டதும், முறியடிக்கப்பட்டதுமான அந்தப் படை, மீண்டும் மீண்டும் களத்திற்குள்ளேயே சுழன்று திரியத் தொடங்கியது.(17) இவ்வாறு கொல்லப்பட்ட அந்தப் பகைவருக்கு மத்தியில், அருஞ்சாதனைகளுக்காப் புகழ்பெற்றவனான அந்தக் குருவீரனுக்கு எதிரில் எவனும் நிற்பது காணப்படவில்லை. தனஞ்சயனின் ஆற்றலையைத் தாங்கக்கூடிய எவரும் அங்கே காணப்படவில்லை.(18) அப்போது, காந்தாரர்களின் ஆட்சியாளனுடைய தாயானாவள் {சகுனியின் மனைவி}, அச்சத்தால் நிறைந்தவளாக, தன் நாட்டின் முதிர்ந்த அமைச்சருகளுடன் சேர்ந்து, அர்ஜுனனுக்காகச் சிறந்த அர்க்கியத்துடன் தன் நகரத்தைவிட்டு வெளியே வந்தாள்.(19) உறுதியான இதயம் கொண்டவனும், துணிவுமிக்கவனுமான தன் மகனை மேலும் போரிடுவதில் இருந்து தடுத்து, உழைப்பால் ஒருபோதும் களைப்படையாதவனான ஜிஷ்ணுவை {அர்ஜுனனை} நிறைவடையச் செய்தாள்.(20)

பலமிக்கவனான பீபத்சு {அர்ஜுனன்}, காந்தாரர்களுக்குக் கருணை காட்ட விரும்பி அவளை வழிபட்டான். சகுனியின் மகனைத் தேற்றும் வகையில் அவன்,(21) "ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட வீரா, உன் இதயத்தில் இவ்வளவு வெறுப்பை நிறுவியிருப்பதன் மூலம் நீ எனக்கு ஏற்புடையதைச் செய்யவில்லை. ஓ! வீரர்களைக் கொல்பவனே, ஓ! பாவமற்றவனே, நீ என் மைத்துனனாவாய்[2].(22) என் தாயான காந்தாரியை நினைத்தும், திருதராஷ்டிரரின் நிமித்தமாகவும் நான் உன் உயிரை எடுக்கவில்லை. ஓ! மன்னா {சகுனியின் மகனே}, அதன் காரணமாகவே நீ இன்னும் உயிருடன் வாழ்கிறாய். எனினும், உன் தொண்டர்கள் பலர் என்னால் கொல்லப்பட்டிருக்கின்றனர்.(23) இனிமேலும் இவ்வாறு நிகழ வேண்டாம். பகைமைகள் தொடர வேண்டாம். உன் புத்தி மீண்டும் இவ்விதமாகச் செல்ல வேண்டாம். சைத்ர மாதத்தின் முழுநிலவு நாளில் நடைபெற இருக்கும் எங்கள் மன்னரின் குதிரை வேள்விக்கு நீ நிச்சயம் வர வேண்டும்" என்றான் {அர்ஜுனன்}".(24)

[2] "சகுனி, துரியோதனனின் தாய்மாமனாவான், எனவே, அர்ஜுனனுக்கும் அவன் அவ்வாறே ஆவன். சகுனியின் மகனும், அர்ஜுனனும் மாமன் மகன் மற்றும் அத்தை மகன்களாவர் {மைத்துனர்களாவர்}" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.

அஸ்வமேதபர்வம் பகுதி – 84ல் உள்ள சுலோகங்கள் : 24

ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்