Thursday, January 02, 2020

குந்தியின் சமாதானம்! - ஆஸ்ரமவாஸிகபர்வம் பகுதி – 17

Consolation of Kunti! | Asramavasika-Parva-Section-17 | Mahabharata In Tamil

(ஆஸ்ரமவாஸ பர்வம் - 17)


பதிவின் சுருக்கம் : பாண்டவர்களுக்குச் சமாதானம் கூறிய குந்தி...


குந்தி {யுதிஷ்டிரனிடம்}, "ஓ! வலிமைக்கக் கரங்களைக் கொண்ட பாண்டுவின் மகனே {யுதிஷ்டிரனே}, நீ சொல்வது உண்மைதான். மன்னர்களே, நீங்கள் உற்சாகமற்றிருந்தபோது, அவ்வாறே நான் உங்கள் அனைவரையும் தூண்டினேன்.(1) பகடையாட்டத்தில் உங்கள் நாடு உங்களிடம் இருந்து அபகரிக்கப்பட்டதைக் கண்டும், நீங்கள் மகிழ்ச்சியை இழந்ததைக் கண்டும், உங்கள் உற்றார் உறவினரின் ஆதிக்கத்திற்கு வசப்பட்டவர்களாக உங்களைக் கண்டும், துணிவையும், உயர்ந்த எண்ணங்களையும் நான் உங்கள் மனத்தில் செலுத்தினேன்.(2) மனிதர்களில் முதன்மையானவர்களே, பாண்டுவின் மகன்கள் வீழ்ந்துவிடக்கூடாது என்ற வகையிலும், அவர்கள் புகழை இழந்துவிடக்கூடாது என்ற வகையிலும் நான் உங்களுக்கு ஊக்கமளித்தேன்.(3)


நீங்கள் அனைவரும் இந்திரனுக்கு இணையானவர்கள். நீங்கள் தேவர்களுக்கு ஒப்பான ஆற்றலைக் கொண்டவர்கள். பிறரின் முகங்களை எதிர்பார்த்து நீங்கள் வாழக்கூடாது என்பதற்காகவே நான் அவ்வழியில் செயல்பட்டேன்[1].(4) அறவோர் அனைவரிலும் முதன்மையானவனும், வாசவனுக்கு நிகரானவனுமான நீ மீண்டும் காட்டுக்குச் சென்று துன்பத்தில் வாழக்கூடாது என்பதற்காகவே நான் உன் இதயத்தில் துணிவைச் செலுத்தினேன்.(5) பத்தாயிரம் {10,000} யானைகளின் பலத்தைக் கொண்டவனும், ஆற்றலுக்காகவும், ஆண்மைக்காகவும் பரந்து அறியப்பட்டவனுமான இந்தப் பீமன், சிறப்பின்மை மற்றும் அழிவுக்குள் மூழ்கிவிடக்கூடாது என்பதற்காகவே நான் உங்கள் இதயங்களில் துணிவைச் செலுத்தினேன்.(6)

[1] "பிறரின் முகங்களை எதிர்பார்த்து வாழ்வது என்பது அவர்களைச் சார்ந்து வாழ்தல் என்ற பொருளைக் கொண்டதாகும்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், "நீங்களெல்லாரும் இந்திரனுக்கு ஒப்பானவர்களும், தேவர்களுக்குச் சமமான பராக்கிரமமுள்ளவர்களும், பிறருடைய முகத்தை எதிர்பாராதவர்களுமாக இருக்க வேண்டுமென்று நான் அவ்விதம் செய்தேன்" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், "நீங்கள் அனைவரும் இந்திரனுக்கு நிகரானவர்கள். நீங்கள் தேவர்களுக்கு இணையான ஆற்றலைக் கொண்டவர்கள். நீங்கள் பிறரைச் சார்ந்திருக்கக்கூடாது. அந்தக் காரணத்திற்காகவே நான் அவ்வழியில் செயல்பட்டேன்" என்றிருக்கிறது.

பீமசேனனுக்கு அடுத்துப் பிறந்தவனும், வாசவனுக்கு இணையானவனுமான இந்த விஜயன் {அர்ஜுனன்} உற்சாகமிழந்துவிடக்கூடாது என்பதற்காகவே நான் உங்கள் இதயங்களில் துணிவைச் செலுத்தினேன்.(7) பெரியோரிடம் எப்போதும் அர்ப்பணிப்புடன் இருப்பவர்களான நகுலனும் சகாதேவனும் பலவீனமடைந்து, பசியால் உற்சாகமற்றவர்களாகிவிடக் கூடாது என்பதற்காக நான் உங்கள் இதயங்களில் துணிவைச் செலுத்தினேன்.(8) வாளிப்பானவளும், அகன்ற விழிகளைக் கொண்டவளுமான இந்தப் பெண் {திரௌபதி}, பொதுச் சபையில் தனக்கு இழைக்கப்பட்ட குற்றத்திற்குப் பழிவாங்காமல் இருந்து, அதைப்பொறுத்துக் கொள்ளக்கூடாது என்பதற்காக நான் அவ்வழியில் செயல்பட்டேன்.(9)

ஓ! பீமா, பகடையில் வெல்லப்பட்டதும், தன் மாதவிடாய் காலத்தில் வாழை மரத்தைப் போல நடுங்கிக் கொண்டிருந்த இவளை {திரௌபதியை} நீங்கள் அனைவரும் பார்த்துக் கொண்டிருக்கும்போதே(10) ஓர் அடிமையை {இழுத்துச் செல்வதைப்} போலத் தன் மடமையின் மூலம் இழுத்துச் சென்றான் துச்சாசனன். இவை யாவற்றையும் நான் அறிவேன். உண்மையில், பாண்டுவின் குலம் (பகைவர்களால்) அடக்கப்பட்டது.(11) பாதுகாப்பை விரும்பும் பெண் அன்றிலைப் போல அவள் உரக்கக் கதறியபோது, என் மாமனார் {பீஷ்மர்} மற்றும் பிறர் உள்ளிட்ட குருக்கள் உற்சாகமற்றவர்களாக இருந்தனர்.(12)

ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, அற்ப புத்தி கொண்ட பாவியான துச்சாசனனால் கூந்தல் பற்றப்பட்டு இவள் {திரௌபதி} இழுத்துச் செல்லப்பட்ட போது, நான் என் புலனுணர்வுகளை இழந்தேன் {மூர்ச்சையடைந்தேன்}.(13) ஓ! என் மகன்களே, உங்கள் சக்தியைப் பெருக்கவே விதுலையின் சொற்களைச் சொல்லி உங்கள் இதயங்களில் துணிவைச் செலுத்தினேன்.(14) ஓ! என் மகன்களே, என் பிள்ளைகளால் பிரதிபலிக்கப்படும் பாண்டுவின் குலம் அழிந்துபோகக்கூடாது என்பதற்காகவே நான் உங்கள் இதயங்களில் துணிவைச் செலுத்தினேன்.(15)

ஒரு குலத்திற்குப் புகழ்க்கேட்டைக் கொண்டுவரும் மனிதனின் மகன்களும், பேரர்களும் ஒருபோதும் நல்லுலகங்களை அடைவதில் வெல்லமாட்டார்கள். உண்மையில், கௌரவக் குலத்தின் மூதாதையர்கள், தங்களுடையவையாக இருந்த இன்பலோகங்களை இழக்கும் ஆபத்தில் இருந்தனர்.(16) ஓ! என் மகன்களே, என்னைப் பொறுத்தவரையில், இதற்கு முன்பே நான் என் கணவரால் அடையப்பட்ட அரசுரிமையின் பெருங்கனிகளை அனுபவித்திருக்கிறேன். நான் பெருங்கொடைகளை அளித்திருக்கிறேன். நான் வேள்வியில் முறையாகச் சோமச்சாற்றைப் பருகியிருக்கிறேன்[2].(17) நான் எனக்காக வாசுதேவனிடம் {கிருஷ்ணனிடம்} கிளர்ந்தெழச் செய்யும் விதுலையின் சொற்களைச் சொல்லித் தூண்டவில்லை. அந்த ஆலோசனையைப் பின்பற்றுமாறு உங்களுக்காகவே நான் உங்களை தூண்டினேன்.(18)

[2] "மஹாதானம் {பெருங்கொடை} என்பது யானைகள், குதிரைகள், தேர்கள், வாகனங்கள், படகுகள் முதலிய பொருட்களைக் கொடையளிப்பது என்பது முன்பே சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. கொடையளிப்பதன் மூலம் கொடையாளி பெரும் புண்ணியத்தை வென்றெடுக்கிறான், ஆனால் அவற்றை ஏற்பதன் மூலம் அக்கொடையைப் பெறுபவன், தனித்தன்மைவாய்ந்த மீத்திற ஆற்றலைக் கொண்டவனாக இருந்தால் தவிரப் பாவத்தையே ஈட்டுகிறான். இந்த நாள்வரை, அத்தகையைக் கொடைகளைப் பெறுபவர்கள், வீழ்ந்த மனிதர்களாகவே பார்க்கப்படுகிறார்கள்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், "புத்திரர்களே, முன்பு நான் பர்த்தாவினுடைய விஸ்தாரமான ராஜ்யத்தின் பயனை அனுபவித்தேன். மஹாதானங்களைக் கொடுத்தேன். விதிப்படி ஸோம்பானம் செய்தேன்" என்றிருக்கிறது.

ஓ! என் மகன்களே, என் பிள்ளைகளால் வெல்லப்பட்ட அரசுரிமையின் கனிகளில் எனக்கு விருப்பமில்லை. ஓ! பெரும்பலம் கொண்டவனே. என் கணவரால் அடையப்பட்ட இன்பலோகங்களை நான் என் தவங்களின் மூலம் அடைய விரும்புகிறேன்.(19) ஓ! யுதிஷ்டிரா, காடுகளையே தங்கள் வசிப்பிடமாக்கிக் கொள்ள விரும்பும் என் மாமனார் மற்றும் மாமியார் ஆகிய இருவருக்கும் கீழ்ப்படிந்து தொண்டாற்றுவதன் மூலமும், எனத் தவங்களின் மூலமும் நான் என் உடலை உலர்த்த {உடலைவிட்டு விடுபட} விரும்புகிறேன்.(20) ஓ! குரு குலத்தில் முதன்மையானவனே, நீயும், பீமனும், பிறரும் என்னைப் பின்தொடர்வதை நிறுத்துவீராக. உன் புத்தி எப்போதும் அறத்திலேயே அர்ப்பணிப்புடன் இருக்கட்டும். உன் மனம் எப்போதும் பெரியதாகவே இருக்கட்டும்" என்றாள் {குந்தி}".(21)

ஆஸ்ரமவாஸிகபர்வம் பகுதி – 17ல் உள்ள சுலோகங்கள் : 21

ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்