Thursday, January 02, 2020

குந்தியைத் தடுத்த திருதராஷ்டிரன்! - ஆஸ்ரமவாஸிகபர்வம் பகுதி – 18

Dhritarashtra dissuades Kunti! | Asramavasika-Parva-Section-18 | Mahabharata In Tamil

(ஆஸ்ரமவாஸ பர்வம் - 18)


பதிவின் சுருக்கம் : பாண்டவர்கள் வருத்தத்துடன் திரும்பியது; திருதராஷ்டிரன் முதலியோர் கங்கைக் கரையில் மாலைக் கடன்களைச் செய்து இரவைக் கழித்தது...


வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "ஓ! மன்னர்களில் சிறந்தவனே, பாவமற்ற பாண்டவர்கள், குந்தியின் இந்த வார்த்தைகளைக் கேட்டு வெட்கமடைந்தனர். எனவே, அவர்களும், பாஞ்சால இளவரசியும் {திரௌபதியும்} அவளைப் பின்தொடர்வதை நிறுத்தினர்[1].(1) குந்தி காட்டுக்குச் செல்வதில் உறுதியாக இருப்பதைக் கண்ட பாண்டவ குடும்பத்தைச் சேர்ந்த பெண்கள் உரக்கக் கதறினர்.(2) பிறகு, பாண்டவர்கள் மன்னனை {திருதராஷ்டிரனை} வலம் வந்து அவனை முறையாக வணங்கினர். அதன்பிறகு, திரும்பி வருவதற்குப் பிருதையை {குந்தியைச்} சம்மதிக்க வைக்கத் தவறிய அவர்கள் மேலும் பின்தொடர்வதை நிறுத்திக் கொண்டனர்.(3)


[1] "குந்தி சொன்ன சொற்கள் நீதிமிக்கவையாக இருந்தன. அவளுடைய மகன்களின் தரப்பால் அறிவுக்குப் பொருத்தமான எதிர் கருத்துகளை வைக்க முடியவில்லை. எனவே, வெட்கமடைந்தனர்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.

அப்போது, பெரும் சக்தி கொண்டவனும், அம்பிகையின் மகனும், காந்தாரி மற்றும் விதுரனால் தாங்கப்பட்டவனுமான திருதராஷ்டிரன், அவர்களிடம்,(4) "யுதிஷ்டிரனின் அரசத்தாய் நம்மோடு வர வேண்டாம். யுதிஷ்டிரன் சொன்ன அனைத்தும் உண்மையே.(5) மகன்களின் பெருஞ்செழிப்பைக் கைவிட்டு, தன்னுடையவையாகக்கூடிய உயர்ந்த பயன்களையும் கைவிட்டு, புத்தியற்ற ஒருத்தியைப் போலத் தன் பிள்ளைகளை விட்டுவிட்டு அடைதற்கரிதான காட்டுக்குள் இவள் ஏன் செல்ல வேண்டும்?(6) இவள் அரசுரிமையை அனுபவித்துக் கொண்டே, தவங்களைப் பயின்று, கொடைகளின் உயர்ந்த நோன்புகளை நோற்று வாழ இயன்றவளே.(7) ஓ! காந்தாரி, என்னுடைய மருமகளான இவளுடைய {குந்தியினுடைய} தொண்டில் நான் மிகவும் நிறைவடைந்திருக்கிறேன். கடமைகள் அனைத்தையும் அறிந்தவளான உனக்கு அவளைத் திரும்பிச் செல்லுமாறு ஆணையிடுவதே தகும்" என்றான்.(8)

இவ்வாறு தன் தலைவனால் சொல்லப்பட்ட சுபலனின் மகள் {காந்தாரி}, ஆழ்ந்த பொருளுள்ள தன் சொற்களையும் சேர்த்து முதிர்ந்த மன்னனின் அந்தச் சொற்கள் அனைத்தையும் குந்தியிடம் மீண்டும் சொன்னாள்.(9) எனினும், அறத்திற்குத் தன்னை அர்ப்பணித்திருந்தவளும், கற்புடைய பெண்ணுமான குந்தி காட்டைத் தன் வசிப்பிடமாகக் கொள்வதில் உறுதியாகத் தன் இதயத்தை நிலைக்கச் செய்திருந்ததால் அவளைத் தடுப்பதில் அவள் தவறினாள்.(10) காட்டுக்கு ஓய்ந்து செல்வதில் உறுதியான தீர்மானத்தைக் கொண்டிருந்த அவளைப் புரிந்து கொண்ட குரு பெண்மணிகள், குரு குலத்தின் முதன்மையானவர்கள் (தங்கள் கணவர்கள்) அவளைப் பின்தொடர்ந்து செல்வதை நிறுத்திவிட்டதைக் கண்டு, உரக்க ஓலமிட்டு அழுதனர்.(11) பிருதையின் {குந்தியின்} மகன்கள் அனைவரும், பெண்மணிகள் அனைவரும் தங்கள் சுவடுகளைப் பின்பற்றிச் சென்ற பிறகும் பெரும் ஞானம் கொண்ட மன்னன் யுதிஷ்டிரன் காடுகளை நோக்கித் தன் பயணத்தைத் தொடர்ந்தான்.(12)

பெரிதும் உற்சாகமற்றிருந்த பாண்டவர்கள், துயரிலும், கவலையிலும் பீடிக்கப்பட்டவர்களாகத் தங்கள் மனைவியருடன் தங்கள் தேர்களில் நகரத்திற்குத் திரும்பிச் சென்றனர்.(13) முதியவர்கள், இளைஞர்கள், பெண்கள் உள்ளிட்ட மொத்த மக்களுடன் கூடிய ஹஸ்தினாபுர நகரம் அந்நேரத்தில் உற்சாகமற்றதாகவும், கவலையில் மூழ்கியதாகவும் இருந்தது.(14) துயரால் பீடிக்கப்பட்டிருந்த பாண்டவர்கள் சக்தியேதுமற்றவர்களாக இருந்தனர். குந்தியால் கைவிடப்பட்ட அவர்கள் தாயற்ற கன்றுகளைப் போல ஆழ்ந்த துயரில் பீடிக்கப்பட்டிருந்தனர்.(15)

அதே நாளில் திருதராஷ்டிரன் அந்நகரத்தில் இருந்து அகன்று ஓரிடத்தை அடைந்தான். பலமிக்கவனான அந்த ஏகாதிபதி இறுதியாகப் பாகீரதி ஆற்றின் கரையை அடைந்து இரவில் அங்கேயே ஓய்ந்திருந்தான்.(16) வேதங்களை அறிந்த பிராமணர்கள், அந்தத் தவசிகளின் ஆசிரமத்தில் புனித நெருப்புகளை மூட்டினர். அந்த முதன்மையான பிராமணர்களால் சூழப்பட்டிருந்த அந்தப் புனித நெருப்புகள் அழகில் சுடர்விட்டெரிந்தன. அந்த முதிய மன்னனின் {திருதராஷ்டிரனின்} புனித நெருப்பும் மூட்டப்பட்டது.(17) தன்னுடைய நெருப்பின் அருகில் அமர்ந்த அவன், உரிய சடங்குகளின் படி அதில் ஆகுதிகளை ஊற்றி, ஆயிரங்கதிர்களைக் கொண்ட சூரியன் மறையும் வேளையில் அவனை வழிபட்டான்.(18)

விதுரனும், சஞ்சயனும் குசப்புற்கள் சிலவற்றைப் பரப்பி மன்னனுக்குப் படுக்கையை அமைத்தனர். அந்தக் குரு வீரனின் படுக்கைக்கு அருகிலேயே காந்தாரிக்கும் மற்றொன்றை அமைத்தனர்.(19) சிறந்த நோன்புகளை நோற்பவளும், யுதிஷ்டிரனின் தாயுமான குந்தி, காந்தாரிக்கு மிக அருகிலேயே மகிழ்ச்சியாகப் படுத்துக் கொண்டாள்.(20) கேட்கும் தொலைவில் விதுரனும், பிறரும் உறங்கினர். யாஜக பிராமணர்களும், மன்னனைப் பின்தொடர்ந்து வந்த பிறரும், தங்கள் தங்களுக்குரிய படுக்கைகளில் தங்களைக் கிடத்திக் கொண்டனர்.(21)

அங்கே இருந்த முதன்மையான பிராமணர்கள் பலர் புனித மந்திரங்களை உரக்கச் சொன்னார்கள். வேள்வி நெருப்புகள் சுற்றிலும் சுடர்விட்டுக் கொண்டிருந்தன. எனவே, அந்த இரவு பிராம்மீ இரவைப் போல அவர்களுக்கு இனிமையாகத் தெரிந்தது[2].(22) அந்த இரவு கடந்ததும், அவர்கள் அனைவரும் தங்கள் படுக்கைகளில் இருந்து எழுந்து, தங்களுக்குரிய காலைச் செயல்பாடுகளில் ஈடுபட்டனர். அதன் பிறகு புனித நெருப்பில் ஆகுதிகளை ஊற்றி தங்கள் பயணத்தைத் தொடர்ந்தனர்.(23) குரு நாட்டின் மாகாணங்களிலும், நகரங்களிலும் வசிப்பவர்களால் வருத்தமடைந்தவர்களும், துக்கமடைந்த இதயங்களைக் கொண்டவர்களுமான அவர்களுக்கு, காட்டில் முதல் நாள் அனுபவம் துன்பம் நிறைந்ததாக இருந்தது" {என்றார் வைசம்பாயனர்}.(24)

[2] "பிராம்மி இரவு என்பது புனித மந்திரங்கள் பாடப்படும் இரவைக் குறிப்பதாகும்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், ப்ராம்மீ என்பதன் அடிக்குறிப்பில், "வேதகோஷம் செய்யப்படுகிற ஓர் இரவு என்பது இங்கிலீஷ் மொழிபெயர்ப்பிலுள்ள குறிப்பு" என்றிருக்கிறது.

ஆஸ்ரமவாஸிகபர்வம் பகுதி – 18ல் உள்ள சுலோகங்கள் : 24

ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்