Friday, January 03, 2020

குபேரலோகம்! - ஆஸ்ரமவாஸிகபர்வம் பகுதி – 20

The region of Kuvera! | Asramavasika-Parva-Section-20 | Mahabharata In Tamil

(ஆஸ்ரமவாஸ பர்வம் - 20)


பதிவின் சுருக்கம் : திருதராஷ்டிரனைக் காண வந்த நாரதர்; அந்த வனம் ராஜரிஷிகளுக்கு ஸ்வர்க்கம் தந்ததையும், அவர்களுக்கும் அது ஸித்தியைத் தரும் என்பதையும், திருதராஷ்டிரன் அடையப்போகும் கதியையும் சொன்னது...


வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "தவசிகளில் முதன்மையான நாரதர், பர்வதர் மற்றும் கடுந்தவங்களைக் கொண்ட தேவலர் ஆகியோர் மன்னன் திருதராஷ்டிரனைக் காண அங்கே வந்தனர்.(1) சீடர்களுடன் கூடியவரும், தீவில் பிறந்தவருமான வியாசரும், பெரும் ஞானம் கொண்டவர்களும், தவவெற்றியால் மகுடம் சூட்டப்பட்டவர்களான பிறரும், முதிர்ந்த வயதையும், பெரும் புண்ணியங்களையும் கொண்ட அரச முனி சதயூபனும் அங்கே வந்தனர்.(2) ஓ! மன்னா, குந்தி அவர்களை உரிய சடங்குகளுடன் வழிபட்டாள். அந்தத் தவசிகள் அனைவரும் தங்களுக்குச் செய்யப்பட்ட வழிபாட்டில் பெரும் நிறைவை அடைந்தனர்.(3) அந்தப் பெரும் முனிவர்கள், உயர் ஆன்மா கொண்ட திருதராஷ்டிரனிடம் அறம் மற்றும் நீதி குறித்து உரையாடி அவனை மகிழ்வித்தனர்.(4) அவர்களுடைய உரையாடலின் முடிவில் தெய்வீக முனிவரான நாரதர், அனைத்துப் பொருட்களையும் நேரடியாகக் கண்களில் கண்டு, பின்வரும் சொற்களைச் சொன்னார்.(5)


நாரதர், "பெருஞ்செழிப்பைக் கொண்டவனும், முற்றிலும் அச்சமற்றவனுமாகக் கேகயர்களில் ஓர் ஆட்சியாளன் இருந்தான். இந்தச் சதயூபனின் பாட்டனான அவனது பெயர் சஹஸ்ரசித்யன் என்பதாகும்.(6) அந்தச் சஹஸ்ரசித்யன் பேரளவு அறம் கொண்ட தன் மூத்த மகனிடம் தன் நாட்டை ஒப்படைத்துவிட்டு, காட்டிற்கு ஓய்ந்து சென்றான்.(7) பெருங்காந்தியைக் கொண்ட அந்தப் பூமியின் தலைவன் {சஹஸ்ரசித்யன்} சுடர்மிக்கத் தவத்தின் எல்லையைக் கடந்து புரந்தலோகத்தை அடைந்து அங்கே அவனுடைய {புரந்தரனின்} தோழமையில் தொடர்ந்து வாழ்ந்தான்.(8) ஓ! மன்னா, இந்திரலோகத்திற்கு நான் சென்ற பல சந்தர்ப்பங்களில், தவங்களின் மூலம் பாவங்களனைத்தையும் எரித்து இந்திரனின் வசிப்பிடத்தில் வசித்துக் கொண்டிருக்கும் அந்த ஏகாதிபதியை {சஹஸ்ரசித்யனைக்} கண்டிருக்கிறேன்.(9)

அதே போலவே, பகதத்தனின் பாட்டனான மன்னன் சைலாலயனும் தன் தவங்களின் சக்தியை மட்டுமே கொண்டு இந்திரலோகத்தை அடைந்திருக்கிறான்.(10) ஓ! ஏகாதிபதி, அங்கே வஜ்ரதாரிக்கே ஒப்பானவனும், பிருஷத்ரன் என்ற பெயரைக் கொண்டவனுமான மற்றொரு மன்னனும் இருந்தான். அந்த மன்னனும் தன் தவங்களின் மூலம் பூமியில் இருந்து சொர்க்கத்திற்குச் சென்றான்.(11) ஓ! மன்னா, இதே காட்டில், பூமியின் தலைவனும், மாந்தாத்ரியின் {மாந்தாதாவின்} மகனுமான புருகுத்ஸன் உயர்ந்த வெற்றியை அடைந்தான்.(12) ஆறுகளில் முதன்மையான நர்மதை இம்மன்னனின் மனைவியானாள். பூமியின் ஆட்சியாளனான அவன், இதே காட்டில் கடுந்தவங்களைச் செய்து, சொர்க்கத்திற்குச் சென்றான்.(13) உயர்ந்த அறவோனும், சசலோமன் என்ற பெயரைக் கொண்டவனுமான மற்றொரு மன்னனும் இருந்தான். அவனும் இதே காட்டில் கடுந்தவங்களைச் செய்து சொர்க்கத்திற்கு உயர்ந்தான்.(14)

ஓ! ஏகாதிபதி, இந்தக் காட்டிற்கு வந்திருக்கும் நீயும், தீவில் பிறந்தவரின் {வியாசரின்} அருளால், உயர்ந்ததும், அடைதற்கரிதானதுமான ஓர் இலக்கை அடைவாயாக.(15) ஓ! மன்னர்களில் முதன்மையானவனே, காந்தாரியின் துணையுடன் கூடிய நீயும் உன் தவங்களின் முடிவில், பெருஞ்செழிப்பை அடைந்து, அந்த உயர் ஆன்மாக்கள் அடைந்த இலக்கை அடைவாயாக.(16) பகனைக் கொன்றவனின் முன்னிலையில் வசிக்கும் பாண்டு எப்போதும் உன்னைக் குறித்தே சிந்தித்துக் கொண்டிருக்கிறான். ஓ! ஏகாதிபதி, நீ செழிப்பை அடைவதற்கு அவன் நிச்சயம் உனக்குத் துணை புரிவான்.(17) பெரும் புகழைக் கொண்டவளும், உன் மருமகளுமான இவள் {குந்தி}, உனக்கும், காந்தாரிக்கும் தொண்டு செய்வதன் மூலம் மறுமையில் தன் கணவனுடன் வசிக்கும் இடத்தை அடைவாள்.(18) இவள் நித்திய தர்மமான யுதிஷ்டிரனின் தாயாவாள். ஓ! மன்னா, இவை யாவற்றையும் நாங்கள் எங்கள் ஆன்மப் பார்வையில் கண்டோம்.(19) விதுரன் உயர் ஆன்ம யுதிஷ்டிரனுக்குள் நுழைவான். சஞ்சயனும் தியானத்தின் மூலம் இந்த உலகத்தில் இருந்து சொர்க்கத்திற்கு உயர்வான்" என்றார் {நாரதர்}".(20)

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், "உயர் ஆன்மா கொண்டவனும், கல்வி கற்றவனுமான அந்தக் குருகுலத் தலைவன் {திருதராஷ்டிரன்}, தன் மனைவியுடன் சேர்ந்து நாரதரின் சொற்களைக் கேட்டு, அவற்றைப் புகழ்ந்து, இதற்கு முன் இல்லாத கௌரவங்களால் நாரதரை வழிபட்டான்.(21) ஓ! ஏகாதிபதி, அங்கே இருந்த பிராமணர்களின் கூட்டம் பெரும் மகிழ்ச்சியால் நிறைந்து மன்னன் திருதராஷ்டிரனை மகிழ்வடையச் செய்ய விரும்பி அளவிடற்கரிய வெகுமதிகளால் நாரதரை வழிபட்டனர்.(22) மறுபிறப்பாளர்களில் முதன்மையான அவர்கள் நாரதரின் சொற்களையும் புகழ்ந்தனர்.

அப்போது அரசமுனியான சதயூபன் நாரதரிடம்,(23) "ஓ! பெரும் காந்தியைக் கொண்டவரே {நாரதரே}, புனிதமானவரான நீர் இந்தக் குரு மன்னன் மற்றும் இங்கிருக்கும் மக்கள் மற்றும் நான் என அனைவரின் பக்தியையும் அதிகரித்திருக்கிறீர்.(24) எனினும், நான் உம்மை ஒன்று கேட்க விரும்புகிறேன். நான் கேட்கிறேன் நீர் சொல்வீராக. ஓ! தெய்வீக முனிவரே, அஃது உலகங்கள் அனைத்தாலும் வழிபடப்படும் மன்னன் திருதராஷ்டிரன் தொடர்புடையது.(25) நீர் அனைத்துக் காரியங்களின் உண்மையையும் அறிந்தவராவீர். ஓ! மறுபிறப்பாள முனிவரே, தெய்வீகப் பார்வையுடன் நீர் மனிதர்கள் அடையும் பல்வேறு கதிகளைக் காண்கிறீர்.(26) நீர் சொன்னவர்களும், தேவர்களுடைய தலைவனின் தோழமையைக் கொண்டவர்களுமான மன்னர்களின் கதி என்னவென்பதை நீர் சொன்னீர். எனினும், ஓ! பெரும் முனிவரே, இந்த மன்னனால் எந்தந்தெந்த உலகங்கள் அடையப்படும் என்பதை நீர் சொல்லவில்லை.(27) ஓ! பலமிக்கவரே, அரசன் திருதராஷ்டிரனால் எந்த உலகம் அடையப்படும் என்பதை நான் கேட்க விரும்புகிறேன்" என்று கேட்டான் சதயூபன்.(28)

அவனால் இவ்வாறு கேட்கப்பட்டதும், தெய்வீகப் பார்வையையும், கடுந்தவங்களையும் கொண்ட நாரதர், அந்தச் சபைக்கு மத்தியில் அனைவரின் மனங்களுக்கும் உயர்வானவையும், ஏற்புடையவையுமான இந்தச் சொற்களைச் சொன்னார்.(29) நாரதர், "நான் என் விருப்பத்தின் பேரில் சக்ரனின் மாளிகைக்குச் சென்று, ஓ! அரசமுனியே, அங்கே சச்சியின் தலைவனான சக்ரனைக் கண்டேன், மேலும் அங்கே நான் மன்னன் பாண்டுவையும் கண்டேன்.(30) ஓ! ஏகாதிபதி, இந்தத் திருதராஷ்டிரனையும், இவன் செய்து வரும் கடுந்தவங்களையும் குறித்த பேச்சு அங்கே எழுந்தது.(31) அங்கே சக்ரனின் உதடுகளின் மூலமே நான் இந்த மன்னனுக்கு {திருதராஷ்டிரனுக்கு} ஒதுக்கப்பட்டிருக்கும் வாழ்நாள் காலம் இன்னும் மூன்று வருடங்கள் என்பதைக் கேட்டறிந்தேன்.(32) அதன் பிறகு, மன்னன் திருதராஷ்டிரன், தன் மனைவி காந்தாரியின் துணையுடன் குபேரலோகத்திற்குச் சென்று அங்கே அந்த மன்னர்களின் மன்னனால் {குபேரனால்} உயர்வாகக் கௌரவிக்கப்படுவான். இவன் தன் மேனியெங்கும் தெய்வீக ஆபரணங்களால் அலங்கரித்துக் கொண்டு தன் விருப்பத்தின் பேரில் நகரும் தேரில் அங்கே செல்வான்.(33) இவன் ஒரு முனிவரின் மகனாவான்; இவன் உயர்வான அருளைக் கொண்டவனாவான்; இவன் தன் தவங்களின் மூலம் தன் பாவங்கள் அனைத்தையும் எரித்திருக்கிறான். அற ஆன்மா கொண்ட இவன் தான் விரும்பியவாறு தேவ, கந்தர்வ, ராட்சச உலகங்களில் திரிந்து வருவான். நீ எதைக் குறித்துக் கேட்டாயோ அது தேவர்களிடம் உள்ள ஒரு புதிராகும் {ரகசியமாகும்}. உங்களிடம் கொண்ட அன்பினால் நான் இந்த உயர்ந்த உண்மையை {உங்களுக்கு} அறிவித்தேன்.(34,35) நீங்கள் அனைவரும் ஸ்ருதிகளைச் செல்வமாகக் கொண்டவர்களாகவும், தவங்களின் மூலம் உங்கள் பாவங்கள் அனைத்தையும் எரித்தவர்களாகவும் இருக்கிறீர்கள்" என்றார் {நாரதர்}".(36)

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், "அங்கே கூடியிருந்த அனைவரும், மன்னன் திருதராஷ்டிரனும், அந்தத் தெய்வீக முனிவரின் இந்த இனிய சொற்களைக் கேட்டு, பெரிதும் உற்சாகமடைந்தவர்களாகவும், உயர்ந்த நிறைவை அடைந்தவர்களாகவும் இருந்தனர்.(37) பெரும் ஞானம் கொண்ட திருதராஷ்டிரனை இத்தகைய பேச்சின் மூலம் உற்சாகமடையச் செய்த அவர்கள், வெற்றியால் மகுடம் சூட்டப்பட்டோருக்கு உரிய பாதையின் வழியே அந்த இடத்தைவிட்டு அகன்று சென்றனர்" {என்றார் வைசம்பாயனர்}.(38)

ஆஸ்ரமவாஸிகபர்வம் பகுதி – 20ல் உள்ள சுலோகங்கள் : 38

ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்