Saturday, January 04, 2020

சகாதேவன் புலம்பல்! - ஆஸ்ரமவாஸிகபர்வம் பகுதி – 22

The lamentation of Sahadeva! | Asramavasika-Parva-Section-22 | Mahabharata In Tamil

(ஆஸ்ரமவாஸ பர்வம் - 22)


பதிவின் சுருக்கம் : குந்தியைக் காண்பதற்காகப் புலம்பிய சகாதேவன் மற்றும் திரௌபதி; திருதராஷ்டிரன் முதலியோரைக் காண தம்பிமாருடனும், நகரமக்களுடனும் காட்டுக்குச் சென்ற யுதிஷ்டிரன்...


வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "மனிதர்களில் முதன்மையானவர்களும், தங்கள் தாயை மகிழ்ச்சியடையச் செய்பவர்களுமான வீரப் பாண்டவர்கள் துன்பத்தால் பெரிதும் பீடிக்கப்பட்டிருந்தனர்.(1) முன்பு எப்போதும் அரச அலுவல்களில் ஈடுபட்டுக் கொண்டிருந்த அவர்கள், அந்நேரத்தில் தங்கள் தலைநகரத்தில் எந்தச் செயல்களையும் கவனிக்காமல் இருந்தனர்.(2) துன்பத்தால் பெரிதும் பீடிக்கப்பட்டிருந்த அவர்கள், எதனிலிருந்தும் இன்பத்தை ஈட்டத் தவறினார்கள். அவர்களிடம் யாரும் எதுவும் கேட்டாலும் எந்தப் பதிலையும் அவர்கள் சொல்லவில்லை.(3) தடுக்கப்பட முடியாதவர்களான அந்த வீரர்கள் பெருங்கடலைப் போன்ற ஆழமான ஈர்ப்பைக் கொண்டவர்களாக இருந்தாலும், துன்பத்தால் தாங்கள் தங்கள் ஞானத்தையும், புலன் உணர்வுகளையும் இழந்துவிட்டதாக அவர்கள் உணர்ந்தார்கள்.(4)


பாண்டுவின் மகன்கள், தங்கள் தாய் அந்த முதிர்ந்த தம்பதியருக்குத் தொண்டாற்றி எவ்வளவு மெலிந்திருப்பாள் என்பதை நினைத்துக் கவலையில் நிறைந்தார்கள்.(5) {அவர்கள்}, "உண்மையில், மகன்கள் அனைவரும் கொல்லப்பட்டவரும், எந்தப் புகலிடமும் இல்லாதவருமான அந்த மன்னர் {திருதராஷ்டிரர்}, இரைதேடும் விலங்குகள் நடமாடும் காட்டுக்குள், தமது மனைவியுடன் மட்டும் எவ்வாறு தனியாக வாழ்கிறார்?(6) ஐயோ, உயர்வாக அருளப்பட்டவளும், தன் அன்புக்குரிய அனைவரும் கொல்லப்பட்டவளுமான ராணி காந்தாரி அந்தத் தனிமையான காட்டில் எவ்வாறு தன் குருட்டுத் தலைவனைப் பின்தொடர்ந்து செல்வாள்?" {என்று கேட்டனர்}.(7) பாண்டவர்கள் தங்களுக்குள் பேசிக்கொள்ளும்போது வெளிப்பட்ட கவலைகள் இவ்வாறே இருந்தன. பிறகு அவர்கள், மன்னனை {திருதராஷ்டிரனை} அவனுடைய காட்டு ஆசிரமத்தில் காண்பதில் தங்கள் இதயங்களை நிலைக்கச் செய்தனர்.(8)

அப்போது, சகாதேவன் மன்னனை {யுதிஷ்டிரனை} வணங்கி, "நம் தந்தையை {பெரியப்பாவான திருதராஷ்டிரரைக்} காண்பதில் உமது இதயம் நிலைத்திருக்கிறது என்பதை நான் அறிவேன்.(9) எனினும், நான் உம்மீது கொண்டிருக்கும் மதிப்பின் காரணமாக, நாம் காட்டுக்குப் புறப்படும் காரியத்தில் என்னால் விரைவாக வாயைத் திறக்க முடியவில்லை. அந்தப் பயணத்திற்கான காலம் இப்போது வந்துவிட்டது.(10) குச {தர்ப்பை} மற்றும் காச {நாணல்} புற்களில் உறங்கி மெலிந்தவளும், கடுந்தவங்களைப் பயில்பவளும், தலையில் சடாமுடி தரித்தவளும், தவங்களை நோற்று வாழ்பவளுமான குந்தியை நற்பேற்றினால் நான் காணப் போகிறேன்.(11) அரண்மனைகளிலும், மாளிகைகளிலும் வளர்க்கப்பட்ட அவள், அனைத்து வகை வசதிகள் மற்றும் ஆடம்பரத்துடன் பராமரிக்கப்பட்டவளாவாள். ஐயோ, களைத்தவளும், பெரும் துயரில் மூழ்கியவளுமான என் அன்னையை நான் எப்போது காணப் போகிறேன்?(12) ஓ! பாரதக் குலத்தின் தலைவா {யுதிஷ்டிரரே}, பிறப்பால் இளவரசியான குந்தி, இப்போது காட்டில் துன்பத்தில் வாழ்ந்து வருவதால், மனிதர்களில் கதி பெரிதும் நிலையற்றதென்பதில் ஐயமில்லை" என்றான் {சகாதேவன்}.(13)

சகாதேவனின் இந்தச் சொற்களைக் கேட்டவளும், பெண்கள் அனைவரிலும் முதன்மையானவளுமான ராணி திரௌபதி, உரிய முறையில் மன்னனை வணங்கி மதித்து,(14) "ஐயோ, ராணி பிருதையை {குந்தியை} நான் எப்போது காணப் போகிறேன்? உண்மையில், அவள் இன்னும் உயிரோடு இருப்பாளா? ஓ! மன்னா {யுதிஷ்டிரரே}, இன்னும் ஒருமுறை அவளைக் காண்பதில் நான் வென்றால் என் வாழ்வு வீணாகக் கழிக்கப்படவில்லை என்று நான் கருதிக் கொள்வேன்.(15) இந்த வகையிலான புத்தி எப்போதும் உம்மில் நிலைத்திருக்கட்டும். ஓ! மன்னர்களின் மன்னா, எங்களுக்கு உயர்ந்த வரத்தை அளிக்க விரும்பும் இத்தகைய அறம் செய்வதில் உம்முடைய மனம் எப்போதும் இன்புறட்டும்.(16) ஓ! மன்னா, உமது இல்லத்துப் பெண்மணிகளான இவர்கள் அனைவரும், குந்தி, காந்தாரி மற்றும் என் மாமனாரை {திருதராஷ்டிரரைக்} காண விரும்பி செல்லும் பயணத்திற்காகத் தங்கள் பாதங்களை உயர்த்திக் காத்திருக்கின்றனர் என்று அறிவீராக" என்றாள்.(17)

ஓ! பாரதக் குலத்தின் தலைவா {ஜனமேஜயா}, "ராணியான திரௌபதியால் இவ்வாறு சொல்லப்பட்ட மன்னன் {யுதிஷ்சிரன்}, தன் படைத்தலைவர்கள் அனைவரையும் தன் முன்னிலைக்கு அழைத்து அவர்களிடம்,(18) "தேர்களும், யானைகளும் நிறைந்த என் படையை அணிவகுக்கச் செய்யுங்கள். இப்போது காட்டில் வாழ்ந்துவரும் மன்னர் திருதராஷ்டிரரை நான் காணப் போகிறேன்" என்றான் {யுதிஷ்டிரன்}.(19)

மேலும் அந்த மன்னன் {யுதிஷ்டிரன்}, பெண்களின் காரியங்களைக் கண்காணிப்போரிடம் {அந்தப்புரக் காவலர்களிடம்}, "பல்வேறு வகை வாகனங்களும், ஆயிரக்கணக்கில் இருக்கும் என்னுடைய பல்லக்குகளும் ஆயதம் செய்யப்படட்டும்.(20) வண்டிகள், பொருள் களஞ்சியங்கள், உடையலமாரிகள், கருவூலங்கள் ஆகியவையும், கைவினைசர்களும் ஆயத்தமாகி, வெளியே வரட்டும், கைவினைஞர்களும் வெளியே வரட்டும். கருவூல அதிகாரிகள், குருக்ஷேத்திரத்தில் உள்ள தவசியின் {சதயூபனின்} ஆசிரமத்திற்குச் செல்லும் பாதையில் செல்லட்டும்.(21) குடிமக்களில் மன்னனைக் காண விரும்பும் எவரும் எத்தடையும் இன்றி அனுமதிக்கப்படுவார்கள். அவன் {அத்தகையவன்} முறையான பாதுகாப்புடன் செல்லட்டும்.(22) சமையற்காரர்கள், சமையலறை கண்காணிப்பாளர்கள் {பௌரோகவர்கள்} ஆகியோரும், சமையலுக்கான மொத்த அமைப்பு, பல்வேறு வகை உணவு மற்றும் பான வகைகள் ஆகியவையும் வண்டிகள் மற்றும் வாகனங்களில் கொண்டு செல்லப்படட்டும்.(23) நாம் நாளை புறப்படுகிறோம் என்பது அறிவிக்கப்படட்டும். உண்மையில், (இந்த ஏற்பாடுகளைச் செய்வதில்) காலதாமதமேதும் நேரவேண்டாம். வழியில் பல்வேறு வகை அரங்குகளும், ஓய்வில்லங்களும் அமைக்கப்படட்டும்" என்று ஆணையிட்டான் {யுதிஷ்டிரன்}.(24)

தம்பிகளுடன் கூடியவனான பாண்டுவின் மூத்த மகன் இட்ட ஆணைகள் இவையே. ஓ! ஏகாதிபதி, காலை வந்ததும், மன்னன் {யுதிஷ்டிரன்} பெண்கள் மற்றும் முதியவர்கள் அடங்கிய பெரிய பரிவாரத்துடன் புறப்பட்டான்.(25) தன் நகரைவிட்டு வெளியே வந்த மன்னன் யுதிஷ்டிரன், குடிமக்கள் தன்னோடு வருவதற்கு ஏதுவாக ஐந்து நாட்கள் காத்திருந்து, அதன் பிறகு காட்டை நோக்கிச் சென்றான்" {என்றார் வைசம்பாயனர்}.(26)

ஆஸ்ரமவாஸிகபர்வம் பகுதி – 22ல் உள்ள சுலோகங்கள் : 26

ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்