Monday, January 06, 2020

சமரசம்! - ஆஸ்ரமவாஸிகபர்வம் பகுதி – 33

Reconcilation! | Asramavasika-Parva-Section-33 | Mahabharata In Tamil

(புத்ரதர்சன பர்வம் - 5)


பதிவின் சுருக்கம் : போரில் இறந்தவர்களும், உயிரோடு இருந்தவர்களும் ஒருவரையொருவர் சந்தித்து அந்த இரவு முழுவதையும் விளையாட்டாகக் கழித்தது; இந்தப் பர்வத்தைக் கேட்பதாலும், சொல்வதாலும் உண்டாகும் பலன்கள்...


வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "அப்போது மனிதர்களில் முதன்மையானவர்களும், கோபமும், பொறாமையும் அற்றவர்களும், பாவங்கள் அனைத்தில் இருந்தும் தூய்மையடைந்தவர்களுமான அவர்கள், மறுபிறப்பாள முனிவர்களால் விதிக்கப்பட்ட உயர்ந்த, மங்கல விதிகளுக்கு இணக்கமான வகையில் ஒருவரையொருவர் சந்தித்துக் கொண்டனர். மகிழ்ச்சி நிறைந்த இதயங்களுடன் இருந்த அவர்கள் அனைவரும் சொர்க்கத்தில் திரியும் தேவர்களைப் போலத் தெரிந்தனர்.(1,2) ஓ! மன்னா {ஜனமேஜயா}, மகன் தன் தந்தையையோ, தாயையோ சந்தித்தான், மனைவிமார் தங்கள் கணவர்களையும், சகோதரன், தன் சகோதரனையும், நண்பன் தன் நண்பனையும் சந்தித்தனர்.(3) மகிழ்ச்சியில் நிறைந்திருந்த பாண்டவர்கள், பெரும் வில்லாளியான கர்ணனையும், சுபத்திரையின் மகனையும் {அபிமன்யுவையும்}, திரௌபதியின் மகன்களையும் சந்தித்தனர்.(4) ஓ! ஏகாதிபதி, பாண்டுவின் மகன்கள் மகிழ்ச்சிமிக்க இதயங்களுடன் கர்ணனை அணுகி, அவனோடு இணக்கம் கொண்டனர் {சமரசமாகினர்}.(5)


ஓ! பாரதக் குலத்தின் தலைவா {ஜனமேஜயா}, அந்தப் போர்வீரர்கள் அனைவரும் அந்தப் பெருந்தவசியின் அருளால் ஒருவரையொருவர் சந்தித்துத் தங்களுக்குள் இணக்கமாகினர்.(6) பகைமை அனைத்தையும் கைவிட்ட அவர்கள் நட்பு மற்றும் அமைதியை நிறுவினர். இவ்வாறே மனிதர்களில் முதன்மையானவர்களான அந்தக் கௌரவர்கள் அனைவரும், பிற மன்னர்களும், குருக்களுடனும், பிள்ளைகளுடன் கூடிய தங்கள் உற்றார் உறவினருடனும் சேர்ந்தனர். அந்த இரவு முழுவதையும் பெரும் மகிழ்ச்சியில் கடத்தினர்.(7,8) உண்மையில், அந்த க்ஷத்திரிய வீரர்கள் தாங்கள் உணர்ந்த மகிழ்ச்சியின் விளைவால் அந்த இடத்தைச் சொர்க்கமாகவே கருதினர். ஓ! ஏகாதிபதி, அந்தப் போர் வீரர்கள் ஒருவரையொருவர் சந்தித்துக் கொண்ட அந்த இரவில் துன்பமோ, அச்சமோ, ஐயவுணர்வோ, நிறைவின்மையோ அங்கே இல்லை. தந்தைமார், சகோதரர்கள், கணவர்கள், மகன்கள் ஆகியோரைச் சந்தித்த(9,10) பெண்கள் தங்கள் துயர் அனைத்தையும் கைவிட்டு, மகிழ்ச்சியாரவாரத்தை அடைந்தனர்.

இவ்வாறு ஓரிரவு ஒருவரோடு ஒருவர் விளையாடிய அந்த வீரர்கள், பெண்கள்,(11) ஒருவரையொருவர் ஆரத்தழுவிக் கொண்டு, ஒருவரிடமொருவர் விடைபெற்றுக் கொண்டு தங்கள் தங்களுக்குரிய இடங்களுக்குத் திரும்பிச் சென்றனர். உண்மையில் அந்த முதன்மையான தவசி {வியாசர்} போர்வீரர்களின் அந்தக் கூட்டத்திற்கு விடைகொடுத்தனுப்பினார்.(12) (உயிரோடு இருந்த) அவர்கள் அனைவரும் பார்த்துக் கொண்டிருக்கும்போதே கண்ணிமைக்கும் காலத்திற்குள் அந்தப் பெருங்கூட்டம் மறைந்து போனது. அந்த உயர் ஆன்ம மனிதர்கள், தங்கள் தேர்களுடனும், கொடிமரங்களுடனும் புனித ஆறான பாகீரதிக்குள் மூழ்கி, தங்கள் தங்களுக்குரிய வசிப்பிடங்களுக்குச் சென்றனர். சிலர் தேவலோகத்திற்கும், சிலர் பிரம்மலோகத்திற்கும்,(13,14) சிலர் வருண லோகத்திற்கும், சிலர் குபேரலோகத்திற்கும் சென்றனர். அந்த மன்னர்களில் சிலர் சூரியலோகத்திற்குச் சென்றனர்.(15)

ராட்சசர்கள் மற்றும் பிசாசங்களுக்கு மத்தியில் சிலர் உத்தரக் குருக்களின் நாட்டுக்குச் சென்றனர். இனிமை நிறைந்த மனத்துடன் திரிந்த வேறு சிலர் தேவர்களின் தோழமையை அடைந்தனர்.(16) இவ்வாறே அந்த உயர் ஆன்ம மனிதர்கள் அனைவரும் தங்கள் வாகனங்கள், விலங்குகள் மற்றும் தங்கள் தொண்டர்களுடன் மறைந்தனர். அவர்கள் அனைவரும் சென்ற பிறகு, அந்தப் புனித ஓடையின் நீருக்குள் நின்றிருந்தவரும், பேரறமும், சக்தியும் கொண்டவரும், குருக்களுக்கு நன்மை செய்பவரும், பெருந்தவசியுமான வியாசர், விதவைகளாக இருந்த க்ஷத்திரியப் பெண்மணிகளிடம் இந்தச் சொற்களில்,(17,18) "இந்த முதன்மையான பெண்களில், தங்கள் கணவர்கள் அடைந்த உலகத்தை அடைய விரும்புகிறவர்கள், சோம்பலனைத்தையும் கைவிட்டு, புனிதமான பாகீரதிக்குள் விரைவாக மூழ்குவீராக" என்றார்.(19)

அவருடைய இந்தச் சொற்களைக் கேட்ட முதன்மையான பெண்கள், அவற்றில் நம்பிக்கை கொண்டு, தங்கள் மாமனாரிடம் அனுமதி பெற்றுக் கொண்டு பாகீரதியின் நீருக்குள் மூழ்கினர்.(20) மனித உடல்களில் இருந்து விடுபட்ட அந்தக் கற்புடைய பெண்கள், ஓ! மன்னா, தங்கள் கணவர்களால் அடையப்பட்ட உலகங்களுக்குத் தங்கள் கணவர்களுடன் சென்றனர்.(21) இவ்வாறே அறவொழுக்கம் கொண்டவர்களும், கணவர்களிடம் அர்ப்பணிப்பு கொண்டவர்களுமான பெண்கள், பாகீரதியின் நீருக்குள் நுழைந்து, மனிதக்குடியிருப்பில் இருந்து விடுபட்டு, தங்கள் கணவர்களால் அடையப்பட்ட உலகங்களுக்குச் சென்று தங்கள் கணவர்களின் துணையை அடைந்தனர்.(22) தெய்வீக வடிவங்களுடன் கூடியவர்களாக, தெய்வீக ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டவர்களாக, தெய்வீக உடுப்புகளையும், மலர்மாலைகளையும் அணிந்து கொண்டு, தங்கள் கணவர்கள் அடைந்த வசிப்பிடங்களான அந்த உலகங்களுக்குச் சென்றனர்.(23) சிறந்த ஒழுக்கத்தையும், பல நற்குணங்களையும் கொண்ட அவர்களது கவலைகள் அனைத்தும் களையப்பட்டு, தங்களுக்கு உரிமையானவையும், அனைத்தையும் கொண்டவையுமான அந்த இன்பலோகங்களுக்குச் சிறந்த தேர்களில் செல்பவர்களாக அவர்கள் காணப்பட்டனர்.(24) பக்திக்கடமைகளில் அர்ப்பணிப்புடைய வியாசர், அந்நேரத்தில் வரங்களை அளிப்பவராக மாறி, அங்கே கூடியிருந்த மனிதர்கள் அனைவரின் விருப்பங்களும் கனியும் வரத்தை அளித்தார்.(25) பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மக்கள், இறந்தவர்களான புனிதர்களுக்கும், உயிருடன் கூடிய மனிதர்களுக்கும் இடையில் நடந்த இந்தச் சந்திப்பைக் கேள்விப் பட்டு பெரிதும் மகிழ்ச்சியடைந்தனர்.(26)

இந்தக் கதையை முறையாகக் கேட்கும் மனிதன், தனக்குப் பிடித்தமான அனைத்தையும் அடைவான். உண்மையில், இம்மையிலும், மறுமையிலும் உள்ள ஏற்புடைய பொருட்கள் அனைத்தையும் அவன் அடைவான்.(27) கல்வி கற்றவனும், அறிவியல் அறிந்தவனும், அறவோரில் முதன்மையானவனுமான எந்த மனிதன், பிறர் கேட்கும்படி இந்தக் கதையைச் சொல்வானோ அவன் இம்மையில் பெரும்புகழையும், மறுமையில் மங்கல கதியையும், உற்றார் உறவினர் சேர்க்கையையும், விரும்பத்தக்க பொருட்கள் அனைத்தையும் அடைவான். அத்தகைய மனிதன் தன் வாழ்வாதாரத்திற்காகத் துன்பம் நிறைந்த செயல்களில் ஈடுபடாமல், வாழ்வில் அனைத்து வகை மங்கலப் பொருட்களையும் அடைவான். வேத கல்வி மற்றும் தவங்களில் அர்ப்பணிப்புள்ளவனும், பிறர் கேட்க இந்தக் கதையைச் சொல்பவனுமான மனிதன், அறுவடை செய்யப்போகும் வெகுமதிகள் இவையே.(28,29) நல்லொழுக்கம் கொண்டவர்களும், தற்கட்டுப்பாட்டில் அர்ப்பணிப்புள்ளவர்களும், தாங்கள் அளிக்கும் கொடைகளின் மூலம் பாவங்கள் அனைத்தில் இருந்தும் தூய்மை அடைந்தவர்களும், நேர்மை கொண்டவர்களும், அமைதியான ஆன்மாவைக் கொண்டவர்களும், பொய்மையில் இருந்தும், பிறருக்கும் தீங்கிழைக்கும் விருப்பத்தில் இருந்தும் விடுபட்டவர்களும், நம்பிக்கையுடன் கூடியவர்களும், சாத்திரங்களையும், நுண்ணறிவையும் நம்புகிறவர்களுமான மனிதர்கள், அற்புதம் நிறைந்த இந்தப் பர்வத்தைக் கேட்டு மறுமையில் நிச்சயம் உயர்ந்த கதியை அடைவார்கள்" {என்றார் வைசம்பாயனர்}".(30,31)

ஆஸ்ரமவாஸிகபர்வம் பகுதி – 33ல் உள்ள சுலோகங்கள் : 31

ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்