Wednesday, January 08, 2020

காந்தாரியின் சொல்! - மௌஸலபர்வம் பகுதி – 2

Word of Gandhari! | Mausala-Parva-Section-02 | Mahabharata In Tamil


பதிவின் சுருக்கம் : துவாரகையில் தீய சகுனங்களைக் கண்ட கிருஷ்ணன்; காந்தாரியின் சாபத்தை நினைத்து அதை உண்மையாக்க விரும்பியது; யாதவர்களைத் தீர்த்தயாத்திரை செல்லக் கட்டளையிட்டது...


வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "விருஷ்ணிகளும், அந்தகர்களும் (எக்கணமும் நிகழுமென அச்சுறுத்திக் கொண்டிருக்கும் பேரிடரைத் தவிர்க்க) இவ்வாறு முயற்சித்தபோது, உடல் வடிவம் கொண்ட காலன் ஒவ்வொருநாளும் அவர்களுடைய இல்லங்களில் திரிந்து கொண்டிருந்தான்.(1) பயங்கரமும், கடுமையும் நிறைந்த மனிதனாக அவன் தெரிந்தான். வழுக்கைத் தலை கொண்ட அவன், நிறத்தில் கறுப்பும் பழுப்பும் கொண்டவனாக இருந்தான். சில வேளைகளில் விருஷ்ணிகள் அவனைத் தங்கள் இல்லங்களுக்குள் உற்று நோக்குபவனாகக் கண்டார்கள்.(2) விருஷ்ணிகளுள் வலிமைமிக்க வில்லாளி அவன் மீது நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான கணைகளை ஏவினாலும், அவன் உயிரினங்கள் அனைத்தின் அந்தகனின்றி வேறில்லை என்பதால் எக்கணையும் அவனைத் துளைப்பதில் வெல்லவில்லை.(3)


நாளுக்கு நாள் காற்று பலமாக வீசியது, விருஷ்ணிகள் மற்றும் அந்தகர்களின் அழிவை முன்னறிவிக்கும் பயங்கரமான பல்வேறு தீய சகுனங்கள் எழுந்தன.(4) வீதிகளில் எலிகளும், சுண்டெலிகளும் மொய்த்துக் கொண்டிருந்தன. எந்த வெளிப்படை காரணமும் இன்றி மண்குடங்கள் பிளவுபட்டவையாக, உடைந்தவையாகத் தெரிந்தன. இரவில் தூங்கிக் கொண்டிருக்கும் மனிதர்களின் முடி மற்றும் நகங்களை எலிகளும், சுண்டெலிகளும் தின்றன.(5) சாரிகைகள் {நாகணவாய்ப் பட்சிகள் / பூவைப் பறவைகள்} விருஷ்ணிகளின் வீடுகளுக்குள் அமர்ந்து கொண்டே {சீசீ கூசீ என்ற} குற்றொலிகளை எழுப்பிக் கொண்டிருந்தன. அந்தப் பறவைகளால் உண்டான ஒலி இரவும், பகலும் குறுகிய நேரமும் நிற்கவில்லை.(6)

ஓ! பாரதா {ஜனமேஜயா}, ஸாரஸங்கள், ஆந்தையின் கூவலைப் பின்பற்றுவதும், ஆடுகள் குள்ளநரிகளின் ஊளையைப் பின்பற்றுவதும் கேட்கப்பட்டன.(7) மங்கிய நிறம் கொண்டவையும், சிவந்த நிறக் கால்களைக் கொண்டவையுமான {கபோதங்களெனும்} பறவைகள் பலவும் காலனால் தூண்டப்பட்டு அங்கே தோன்றின. புறாக்கள் எப்போதும் விருஷ்ணிகளின் வீடுகளில் மகிழ்ச்சியாக விளையாடிக் கொண்டிருந்தன.(8) பசுக்களுக்குக் கழுதைகளும், கோவேறு கழுதைகளுக்கு யானைகளும் பிறந்தன. நாய்களுக்குப் பூனைகளும், கீரிப்பிள்ளைக்கு எலியும் பிறந்தன.(9)

பாவச்செயல்களைச் செய்யும் விருஷ்ணிகள் வெக்கமெதையும் உணர்வதாகக் காணப்படவில்லை. அவர்கள் பிராமணர்கள், பித்ருக்கள் மற்றும் தேவர்களிடம் அலட்சியம் காட்டினர்.(10) அவர்கள் தங்கள் ஆசான்களையும், பெரியோர்களையும் அவமதித்துத் தாழ்த்தினர். ராமனும் {பலராமனும்}, ஜனார்த்தனனும் {கிருஷ்ணனும்} மட்டும் வேறு வகையில் செயல்பட்டனர். மனைவியர் கணவர்களை வஞ்சித்தனர், கணவர்கள் மனைவியரை வஞ்சித்தனர்.(11) நெருப்பு மூட்டப்பட்ட போது அதன் தழல்கள் இடப்புறம் நோக்கி எரிந்தன. சில வேளைகளில் அவை நீல மற்றும் சிவப்பு நிற காந்தியுடன் தழல்களைச் செலுத்தின.(12)

சூரியன் அந்த நகரத்தில் எழும்போதோ, மறையும்போது, மனித வடிவிலான தலைற்ற முண்டங்களால் அது சூழப்பட்டதாகக் காணப்பட்டது.(13) சமையலறைகளில் நன்கு சமைக்கப்பட்ட தூய்மையான உணவை உண்பதற்காகப் படைக்கும்போது அதில் பல்வேறு வகையான எண்ணற்ற புழுக்கள் காணப்பட்டன.(14) கொடைகளைப் பெறும் பிராமணர்கள் அந்த நாளுக்கு அல்லது (அந்த நிகழ்வு நடக்கும்) அந்த நேரத்திற்கு ஆசி கூறும்போது, அல்லது உயர் ஆன்ம மனிதர்கள் அமைதியான ஜபத்தில் ஈடுபடும்போது, எண்ணற்ற மனிதர்கள் ஓடும் ஒலி கேட்கப்படுகிறது.(15) நட்சத்திரக்கூட்டங்கள் மீண்டும் மீண்டும் கோள்களால் தாக்கப்பட்டன. எனினும் யாதவர்களில் ஒருவரும் தன் பிறவிக்கான நட்சத்திரக்கூட்டத்தின் காட்சியைப் பெற முடியவில்லை[1].(16) அவர்களுடைய வீடுகளில் பாஞ்சஜன்யம் முழக்கப்படும்போது, கழுதைகளின் முரண்பட்ட பயங்கரக் குரல் அனைத்துப் பக்கங்களில் இருந்தும் உரக்கக் கனைத்தது[2].(17)

[1] கும்பகோணம் பதிப்பில், "புண்யாஹ மந்திரம் சொல்லும்படி செய்து மஹாத்மாக்கள் ஜபம் செய்து கொண்டிருக்கும்போது, ஜனங்கள் ஓடும் ஒலிகள் கேட்கப்பட்டன; ஒருவனும் காணப்படவில்லை. அவர்களெல்லாரும் க்ரஹங்களால் அடிக்கடி ஹிம்ஸிக்கப்படும் ஒருவர் மற்றவருடைய நக்ஷத்திரத்தைப் பார்த்தார்கள். எவ்விதத்திலுல் தம் நக்ஷத்திரத்தைப் பார்க்கவில்லை" என்றிருக்கிறது.

[2] "சங்கொலி நல்ல நிமித்தமாகக் கருதப்படுகிறது. எனினும், யாதவர்களின் வீடுகளில் சங்கு முழக்கப்படும்போது, அதைச் சுற்றிலும் கழுதைகள் கனைக்கின்றன. இது தீய நிமித்தமாகும்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.

காலத்தின் விபரீதப் போக்கைக் குறிக்கும் அடையாளங்களைக் கண்டு, புதுநிலவு நாள் {அமாவாசை} பதிமூன்றாவது (மற்றும் பதினான்காவது) சந்திர நாளுடன் இணங்குவதைக் கண்டும் யாதவர்களை அழைத்த ரிஷிகேசன் {கிருஷ்ணன்} அவர்களிடம்,(18) "பதினான்காவது சந்திர நாள் {திதி} மீண்டும் ஒருமுறை ராஹுவினால் பதினைந்தாவதாகச் செய்யப்பட்டது. அத்தகைய ஒரு நாள் பாரதர்களின் பெரும்போர் நடந்த காலத்தில் தோன்றியது. அது மீண்டும் நமது அழிவுக்காகத் தோன்றுகிறது" என்றான்.(19). கேசியைக் கொன்றவனான ஜனார்த்தனன் {கிருஷ்ணன்}, காலம் காட்டும் நிமித்தங்களை நினைத்து முப்பத்தாறாம் ஆண்டு வந்ததெனவும், காந்தாரி தன் பிள்ளைகளின் மரணத்திலும், தன் உற்றார் உறவினர் அனைவரையும் இழந்ததிலும் ஏற்பட்ட துயரில் எரிந்து சொன்னது நடக்கப் போகிறது என்பதையும் புரிந்து கொண்டான்.(20,21)

{கிருஷ்ணன், தனக்குள்ளேயே}, 'போருக்காக இருபடைகளும் அணிவகுக்கப்பட்ட காலத்தில், யுதிஷ்டிரர் கண்ட மிகக் கொடிய தீச்சகுனங்களைப் போலவே தற்போதும் நேர்கிறது' {என்று நினைத்தான்}. இவ்வாறு சொன்ன வாசுதேவன் {கிருஷ்ணன்}, காந்தாரியின் சொற்களை உண்மையாக்கக் கூடிய நிகழ்வுகளை உண்டாக்க முயற்சி செய்தான். பகைவரைத் தண்டிப்பவனான அவன் ஏதாவது புனித நீர்நிலைக்குப் புனிதப் பயணம் {தீர்த்தயாத்திரை} மேற்கொள்ளுமாறு விருஷ்ணிகளுக்கு ஆணையிட்டான்.(23) பெருங்கடலின் புனித நீரில் நீராட விருஷ்ணிகள் கடற்கரைக்குப் பயணம் மேற்கொள்ள வேண்டும் என்ற கேசவனின் ஆணையைத் தூதர்கள் அறிவித்தனர்" {என்றார் வைசம்பாயனர்}.(24)

மௌஸலபர்வம் பகுதி – 2ல் உள்ள சுலோகங்கள் : 24

ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன்