Thursday, January 09, 2020

யாதவர்களின் அழிவு! - மௌஸலபர்வம் பகுதி – 3

The destruction of Yadhavas! | Mausala-Parva-Section-3 | Mahabharata In Tamil


பதிவின் சுருக்கம் : துவாரகை மக்கள் கண்ட தீய கனவுகள்; கிருஷ்ணனின் ஆணைப்படி பிரபாஸம் சென்றது; கிருதவர்மனைக் கொன்ற ஸாத்யகி; பலரால் கொல்லப்பட்ட சாத்யகியும், பிரத்யும்னனும்; கிருஷ்ணன் செய்த படுகொலை; உலக்கைப் பொடிகளால் உண்டான புற்களால் இரு தரப்பினரும் ஒருவரையொருவர் கொன்றது...


வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "அந்தக் காலத்தில், விருஷ்ணி பெண்கள், கரிய நிறத்தவளும், வெண்பற்கள் கொண்டவளுமான ஒரு மங்கை, தங்கள் வசிப்பிடத்திற்குள் நுழைந்து, உரக்க நகைத்து, தங்கள் மணிக்கட்டுகளிலிருந்து மங்கலக் கயிறுகளைப் பறித்துக் கொண்டு துவாரகை முழுவதும் ஓடுவதைப் போல ஒவ்வொரு நாள் இரவும் கனவு கண்டனர்.(1) ஆண்களோ, பயங்கரக் கழுகுகள் தங்கள் இல்லங்களுக்கும், நெருப்பறைகளுக்குள்ளும் நுழைந்து தங்களை எடுத்து அவற்றின் கழுத்தில் அணிந்து கொள்வதைப் போலக் கனவு கண்டனர்.(2) ஆபரணங்கள், குடைகள், கொடிமரங்கள், கவசங்கள் ஆகியவற்றைக் கொடிய ராட்சசர்கள் எடுத்துக் கொள்வதும் காணப்பட்டது.(3) அக்னியால் கொடுக்கப்பட்டதும், இரும்பாலானதும், கடினமான வஜ்ரத்தால் அமைந்த குழிசியை {நடு குழியைக்} கொண்டதுமான கிருஷ்ணனின் சக்கரமானது, விருஷ்ணிகள் பார்த்துக் கொண்டிருக்கும்போதே ஆகாயத்தில் உயர்ந்தது.(4)



சூரியப் பிரகாசம் கொண்டதும், முறையாக ஆயத்தம் செய்யப்பட்டதுமான வாசுதேவனின் சிறந்த தேரானது, தாருகன் பார்த்துக் கொண்டிருக்கும்போதே, தன்னுடன் பூட்டப்பட்டிருந்த குதிரைகளால் இழுத்துச் செல்லப்பட்டது. (சைப்யம், சுக்ரீவம், மேகபுஷ்பம், வலாகம் என்ற பெயர்களையுடையவையும்) எண்ணிக்கையில் நான்கானவையும், எண்ணத்தின் வேகம் கொண்டவையுமான அந்த முதன்மையான குதிரைகள், பெருங்கடலின் பரப்பின் வழியே தேரை இழுத்துச் சென்று தப்பி ஓடின[1].(5) கருட சின்னத்தையும், பனைமரச் சின்னத்தையும் கொண்டவையான கிருஷ்ணன் மற்றும் பலதேவனுடைய தேர்களில் உள்ளவையும், அவ்விரு வீரர்களால் மதிப்புடன் வழிபடப்படுவையுமான இரு பெரும் கொடிமரங்களும், புனித நீர்நிலைக்குப் புனிதப்பயணம் மேற்கொள்ள இருந்த விருஷ்ணிகளையும், அந்தகர்களையும் இரவும் பகலும் அழைத்துக் கொண்டிருந்த அப்சரஸ்களால் இழுத்துச் செல்லப்பட்டன.(6) இந்தச் சகுனங்கள் காணப்படவும், கேட்கப்படவும் நேரிட்டப்போது, மனிதர்களில் முதன்மையானவர்களும், வலிமைமிக்கத் தேர்வீரர்களுமான விருஷ்ணிகளும், அந்தகர்களும் தங்கள் மொத்த குடும்பங்களுடன் ஏதோவொரு நீர்நிலைக்குப் புனிதப் பயணம் புறப்பட விரும்பினர்.(7) அவர்கள் பல்வேறு வகை உணவுவகைகளையும், பானவகைகளையும், பல்வேறு வகை மது மற்றும் இறைச்சிகளையும் தயாரித்தனர்.(8) அழகில் சுடர்விட்டவையும், கடுஞ்சக்தி கொண்டவையுமான விருஷ்ணிகள் மற்றும் அந்தகர்களின் துருப்புகள், அந்த நகரத்திலிருந்து தேர்கள், குதிரைகள் மற்றும் யானைகளில் வெளியே புறப்பட்டன.(9) அப்போது தங்கள் மனைவியருடன் பிரபாஸத்திற்குச் சென்ற யாதவர்களில் ஒவ்வொருவரும், தங்களுக்கென ஒதுக்கப்பட்டதும், உணவு மற்றும் பான வகைகள் அபரிமிதமாக இருந்ததுமான (தற்காலிக) வசிப்பிடத்தை அமைத்துக் கொண்டனர்.(10)

[1] கும்பகோணம் பதிப்பில், "மனம்போன்ற வேகமுள்ளவைகளும், குதிரைகளுள் சிறந்தவைகளுமான அந்த நான்கு குதிரைகளும், தாருகன் பார்த்துக் கொண்டிருக்கும்பொழுதே, ஆயத்தமாக இருப்பதும், திவ்யமானதும், சூரியன் போல விளங்குகின்றதுமான ரதத்தை இழுத்துக் கொண்டு ஸமுத்திரத்துக்கு மேலே சென்றன" என்றிருக்கிறது.

கடற்கரையில் அவர்கள் தங்கள் வசிப்பிடத்தை அமைத்திருப்பதைக் கேள்விப்பட்டவரும், யோகத்தை நன்கறிந்தவரும், மனிதர்களில் ஞானியுமான உத்தவர், அங்கே சென்று அவர்களிடம் (புறப்படுவதற்கான) அனுமதியை பெற்றுக் கொண்டார்.(11) உத்தவர் (உலகில் இருந்து) செல்ல விரும்புவதைக் கண்டும், விருஷ்ணிகளின் அழிவு மிக நெருக்கத்தில் இருப்பதை அறிந்தும் கிருஷ்ணன், அவரைத் தடுக்கும் மனநிலை கொள்ளாமல் அவரை வணங்கினான்.(12) அப்போது விருஷ்ணிகள் மற்றும் அந்தகர்களில் வலிமைமிக்கவர்களும், தங்களுக்கான வேளை வந்தவர்களுமான அந்தத் தேர்வீரர்கள், மொத்த ஆகாயத்தையும் தன் காந்தியால் நிறைத்தபடி பெரும்பயணம் செல்லும் உத்தவரைக் கண்டனர்.(13) விருஷ்ணிகள், உயர் ஆன்ம பிராமணர்களுக்காகச் சமைக்கப்பட்ட உணவை மதுவுடன் கலந்து குரங்குகளுக்குக் கொடுத்தனர்.(14) கடுஞ்சக்தி கொண்ட அந்த வீரர்கள், குடிப்பதையே முக்கிய அம்சமாகக் கொண்ட தங்கள் உயர்ந்த விழாவை பிரபாஸத்தில் தொடங்கினர். நூற்றுக்கணக்கான எக்காளங்களின் முழக்கம் மொத்த களத்திலும் எதிரொலித்தது, தங்கள் தொழிலைச் செய்வதற்காக வந்திருந்தவர்களான நடிகர்கள் மற்றும் நடனக் கலைஞர்களால் அது நிறைந்திருந்தது.(15)

கிருஷ்ணன் பார்த்துக் கொண்டிருக்கும்போதே, ராமன் {பலராமன்} கிருதவர்மனுடன் சேர்ந்து குடிக்கத் தொடங்கினான், யுயுதானன் {சாத்யகி}, கதன், பப்ரு ஆகியோரும் அதையே செய்தனர்.(16) அப்போது மதுவால் ஊக்கமடைந்திருந்த யுயுதானன், அந்தச் சபையின் நடுவில் வைத்துக் கிருதவர்மனை கேலி செய்யும் வகையில் அவமதித்து,(17) "ஆயுதந்தரித்த எந்த க்ஷத்திரியன், உறக்கத்தின் அரவணைப்பில் கட்டுண்டவர்களும், அதனால் ஏற்கனவே இறந்தவர்களைப் போன்றவர்களுமான மனிதர்களைக் கொல்வான்? எனவே, ஓ! ஹிருதிகன் மகனே {கிருதவர்மனே}, நீ செய்ததை யாதவர்கள் ஒருபோதும் பொறுத்துக் கொள்ள மாட்டார்கள்" என்றான்.(18) யுயுதானன் {சாத்யகி} இந்தச் சொற்களைச் சொன்னதும், தேர்வீரர்களில் முதன்மையான பிரத்யும்னன், ஹிருதிகன் மகனிடம் {கிருதவர்மனிடம்} தான் கொண்ட மதிப்பின்மையை வெளிப்படுத்தும் வகையில் அவற்றை {சாத்யகியின் சொற்களை} மெச்சினான்.(19) இதனால் கோபம் மூண்ட கிருதவர்மன், இடது கையால் சாத்யகியைச் சுட்டிக் காட்டியதன் மூலம் அவனை வன்மையாக அவமதித்துச் செய்து, இந்தச் சொற்களைச் சொன்னான்.(20)

{கிருதவர்மன்}, "தன்னைத் தானே வீரன் என்று சொல்லிக் கொள்பவனான நீ, போர்க்களத்தில் (பகை எண்ணங்கள் அனைத்தையும் கைவிட்டு) பிராயத்தில் அமர்ந்திருந்தவனும், கரங்களற்றவனுமான பூரிஸ்ரவஸை கொடூரமாகக் கொன்றதெவ்வாறு?" என்று கேட்டான்.(21)

பகைவீரர்களைக் கொல்பவனான கேசவன் {கிருஷ்ணன்}, அவனுடைய சொற்களைக் கேட்டு, கோபவசப்பட்டவனாக, கிருதவர்மன் மீது தன் கோபப்பார்வையைச் செலுத்தினான்.(22) அப்போது சாத்யகி, மதுசூதனனிடம் {கிருஷ்ணனிடம்}, கொண்டாடப்படும் சியமந்தகம் என்ற ரத்தினத்தை {சியமந்தக மணியை} சத்ரஜித்திடம் இருந்து அபகரிப்பதற்காக, கிருதவர்மன் எவ்வாறு நடந்து கொண்டான் என்பதைத் தெரிவித்தான்.(23) இந்தக் கதையைக் கேட்ட சத்தியபாமை, கோபவசப்பட்டவளாகக் கேசவனை அணுகி, அவனது மடியில் அமர்ந்து கொண்டு கண்ணீர் சிந்தியபடியே (கிருதவர்மன் மீது) அவனது கோபத்தை அதிகரித்தாள்.(24)

அப்போது சினத்துடன் எழுந்த சாத்யகி, "உறங்கிக் கொண்டிருந்தவர்களான திரௌபதியின் ஐந்து மகன்கள், திருஷ்டத்யும்னன், சிகண்டி ஆகியோரைத் துரோணரின் மகனுடைய {அஸ்வத்தாமனின்} துணையுடன் கொன்ற இவனை {கிருதவர்மனை}}அவர்களைப் பின்பற்றிச் செல்லச் செய்வேன் என வாய்மையின் பேரில் நான் ஆணையிடுகிறேன். ஓ! கொடியிடையாளே {சத்யபாமையே}, கிருதவர்மனின் வாழ்வு மற்றும் புகழுக்கான காலம் முடிவுக்கு வந்துவிட்டது" என்றான்.(25-27)

இந்தச் சொற்களைச் சொன்ன சாத்யகி, கிருதவர்மனை நோக்கி விரைந்து, கேசவன் {கிருஷ்ணன்} பார்த்துக் கொண்டிருக்கும்போதே வாளால் அவனது தலையைத் துண்டித்தான்.(28) அந்த அருஞ்செயலைச் செய்த யுயுதானன் {சாத்யகி}, அங்கே இருந்த பிறரையும் தாக்கத் தொடங்கினான். மேலும் தீங்கு செய்வதில் இருந்து அவனைத் தடுப்பதற்காக ரிஷிகேசன் {கிருஷ்ணன்} ஓடினான்.(29) எனினும், ஓ! ஏகாதிபதி, அந்த நேரத்தில் வந்திருந்த கால முரணால் தூண்டப்பட்ட போஜர்கள், அந்தகர்களில் அனைவரும் கூடி சிநியின் மகனை {சாத்யகியைச்} சூழ்ந்து கொண்டனர்.(30) வலிமையும், சக்தியும் கொண்ட ஜனார்த்தனன், அனைத்துப் பக்கங்களில் இருந்தும் கோபத்துடன் சாத்யகியை நோக்கி விரையும் வீரர்களைக் கண்டும், காலத்தின் தன்மையை அறிந்தும் கோபவசப்படாமல் அசையாமல் அப்படியே நின்றான்.(31) விதியால் தூண்டப்பட்டவர்களும், மதுவால் ஊக்கமடைந்தவர்களுமான அவர்கள், தாங்கள் உண்டு கொண்டிருந்த பானைகளால், யுயுதானனை {சாத்யகியைத்} தாக்கத் தொடங்கினர்.(32)

சிநியின் மகன் {சாத்யகி} இவ்வாறு தாக்கப்பட்ட போது, ருக்மிணியின் மகன் {பிரத்யும்னன்} பெருஞ்சினம் கொண்டான். போஜர்களுடனும், அந்தகர்களுடனும் போரிட்டுக் கொண்டிருந்த சாத்யகியை மீட்பதற்காக அவன் விரைந்து ஓடினான்.(33) வலிமைமிக்கக் கரங்களையும், செல்வசக்தியையும் கொண்ட அந்த வீரர்கள் இருவரும் பெருந்துணிவுடன் போரிட்டனர். ஆனால் முரண்பட்டவர்கள் அதிகம் பெருகியிருந்ததால் கிருஷ்ணன் பார்த்துக் கொண்டிருக்கும்போதே அவர்கள் இருவரும் கொல்லப்பட்டனர்.(34) யதுக்களைத் திளைக்கச் செய்பவன் {கிருஷ்ணன்}, தன் மகனும் {பிரத்யும்னனும்}, சிநியின் மகனும் {சாத்யகியும்} கொல்லப்பட்டதைக் கண்டு கோபமடைந்தவனாக அங்கே வளர்ந்திருந்த ஏரகப்புற்களை[2] கைநிறையப் பிடுங்கி எடுத்தான்.(35) கைநிறைந்தவையாக இருந்த அந்தப் புற்கள், வஜ்ரத்தின் சக்தியோடு கூடியதும், பயங்கரமானதுமான ஓர் இரும்பு உலக்கையாக {முசலமாக} மாறியது. கிருஷ்ணன் அதைக் கொண்டு தன் முன் வந்த அனைவரையும் கொன்றான்.(36)

[2] கும்பகோணம் பதிப்பில் இதற்கான அடிக்குறிப்பில் "ஒருவகைக் கோரை" என்று விளக்கப்பட்டிருக்கிறது.

அப்போது, அந்தகர்கள், போஜர்கள், சைனேயர்கள், விருஷ்ணிகள் ஆகியோர் காலத்தால் தூண்டப்பட்டவர்களாக அந்தப் பயங்கரக் கைக்கலப்பில் ஒருவரையொருவர் தாக்கினர்.(37) உண்மையில், ஓ! மன்னா, ஓ! பலமிக்கவனே, அவர்களில் எவர் அந்த ஏரகப் புற்களைக் கோபத்துடன் பிடுங்கி எடுத்தாலும், உடனே அவை அவன் கரங்களில் ஒரு வஜ்ரமாக மாறின.(38) அங்கே காணப்பட்ட ஒவ்வொரு புல்லும் பயங்கரமான இரும்பு உலக்கையாக {முசலங்களாக} மாறின. ஓ! மன்னா {ஜனமேஜயா}, இவை அனைத்தும் பிராமணர்கள் கொடுத்தச் சாபத்தினால் உண்டானவை என்பதை அறிவாயாக.(39) புல்லை ஏவிய எவனும், முற்றிலும் துளைக்கப்பட முடியாத பொருட்களை அஃது எளிதாகத் துளைத்துச் செல்வதைக் கண்டான். உண்மையில் அங்கே இருந்த ஒவ்வொரு புல்லும் வஜ்ரத்தின், சக்தியைக் கொண்ட ஒரு பயங்கரமான உலக்கையானது {முசலமானது}.(40)

ஓ! பாரதா {ஜனமேஜயா}, மகன் தந்தையைக் கொன்றான், தந்தை மகனைக் கொன்றான். மதுவினால் ஊக்கமடைந்திருந்த அவர்கள் விரைந்து சென்று ஒருவர்மீது ஒருவர் பாய்ந்தனர்.(41) குகுரர்களும், அந்தகர்களும், சுடர்மிக்க நெருப்பிடம் விரைந்து செல்லும் விட்டில்பூச்சிகளைப் போல அழிவை அடைந்தனர். இவ்வாறு அவர்கள் கொல்லப்பட்டபோது, அவர்களில் எவனும் தப்பிச்செல்ல நினைத்தானில்லை.(42) அழிவுக்கான காலம் வந்துவிட்டதை அறிந்தவனும், வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனுமான கேசவன் {கிருஷ்ணன்}, அனைத்தையும் கண்டபடியே அங்கே நின்றான். உண்மையில் அந்த மதுசூதனன், புல்லாலான ஓர் இரும்பு உலக்கையை உயர்த்தியபடியே அங்கே நின்றான்.(43) ஸாம்பன், சாருதேஷ்ணன், பிரத்யும்னன், அநிருத்தன் ஆகியோர் கொல்லப்பட்டதைக் கண்ட மாதவன் {கிருஷ்ணன்} சினத்தால் நிறைந்தான்.(44)

கொல்லப்பட்டுத் தரையில் கிடக்கும் கதனைக் கண்டதும், அவனது கோபம் பெருகுகிறது, சாரங்கம், சக்கரம் மற்றும் கதாயுதத்தைத் தரிப்பவனான அவன் அப்போது விருஷ்ணிகளையும், அந்தகர்களையும் முற்றாக அழித்தான்.(45) ஓ! மன்னா, அப்போது, பகை நகரங்களை வெல்பவனும், வலிமையும், சக்தியும் கொண்டவனுமான பப்ருவும், தாருகனும் கிருஷ்ணனிடம் சொன்னதைக் கேட்பாயாக.(46) {பப்ருவும், தாருகனும்}, "ஓ! புனிதமானவரே, உம்மால் பெரும் எண்ணிக்கையிலான மனிதர்கள் கொல்லப்பட்டனர். ராமர் {பலராமர்} இருக்கும் இடத்திற்குத் திரும்புவீராக. அவர் எங்கே சென்றாரோ அங்கேயே நாங்கள் செல்ல விரும்புகிறோம்" என்றனர்".(47)

மௌஸலபர்வம் பகுதி – 3ல் உள்ள சுலோகங்கள் :47

ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்