Thursday, January 09, 2020

பரமெய்திய நாயகன்! - மௌஸலபர்வம் பகுதி – 4

Krishna ascended to heaven! | Mausala-Parva-Section-4 | Mahabharata In Tamil


பதிவின் சுருக்கம் : பலராமனைக் கண்டடைந்த கிருஷ்ணன்; தாருகனைப் பாண்டவரிடம் அனுப்பியது; சேஷனாகிக் கடலிற் சென்ற பலராமன்; உடலைக் கைவிட யோகத்தில் கிடந்த கிருஷ்ணன்; கிருஷ்ணனின் பாதங்களைத் தாக்கிய ஜரன்; அவனுக்கு முக்தியளித்துப் பரம்பதமெய்திய கிருஷ்ணன்...


வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "தாருகன், கேசவன், பப்ரு ஆகியோர் அந்த இடத்தைவிட்டு அகன்று, ராமன் {பலராமன்} இருக்கும் இடத்தைத் தேடிச் சென்றனர். அளவற்ற சக்தி கொண்ட அந்த வீரன், பூமியில் தனிமையான ஓர் இடத்தில் மரமொன்றில் சாய்ந்தவாறு சிந்தனையுடன் அமர்ந்திருப்பதை அவர்கள் கண்டனர்.(1) பேரான்மா கொண்ட ராமனைக் கொண்ட கிருஷ்ணன், தாருகனுக்கு ஆணையிடும் வகையில், "குருக்களிடம் சென்று யாதவர்களுடைய படுகொலையைப் பார்த்தனுக்கு அறிவிப்பாயாக. பிராமணர்களின் சாபத்தின் மூலம் யாதவர்களுக்கு நேர்ந்த இந்த முடிவைக் கேட்டு அர்ஜுனன் இங்கே விரைவாக வரட்டும்" என்றான். இவ்வாறு சொல்லப்பட்ட தாருகன், துயரில் புலனுணர்வை இழந்தவனாகக் குருக்களின் (தலைநகரை நோக்கி) தேரில் சென்றான்.(3)


தாருகன் சென்ற பிறகு, தன்னிடம் காத்திருக்கும் பப்ருவைக் கண்ட கேசவன் {கிருஷ்ணன்} அவனிடம் இந்தச் சொற்களில், "பெண்களைப் பாதுகாப்பதற்கு நீ விரைந்து செல்வாயாக. (அவர்களிடம் உள்ள) செல்வத்தால் ஈர்க்கப்படும் கள்வர்கள் அவர்களுக்குத் தீங்கேதும் செய்யாதிருக்கட்டும்" என்றான்.(4)

கேசவனால் இவ்வாறு சொல்லப்பட்ட பப்ரு, மதுவால் இன்னும் கதியற்றவனாகவும், தன் உற்றார் உறவினர்கள் கொல்லப்பட்டதால் மகிழ்ச்சியற்றவனாகவும் அங்கிருந்து சென்றான். அவன் கேசவனின் அருகில் சிறிது நேரம் ஓய்ந்திருந்து, அங்கிருந்து புறப்பட்டபோது, வேடனின் கைகளின் மூலம் ஒரு மரச்சம்மட்டியில் இணைக்கப்பட்டிருந்த இரும்பு உலக்கையானது {முசலமானது}, யாதவக் குலத்தில் எஞ்சியிருந்த ஒரேயொருவனும், பிராமணர்களால் சபிக்கப்பட்டவனுமான அவன் {பப்ரு} மீது திடீரெனப் பாய்ந்து அவனைக் கொன்றது[1].(5) பெருஞ்சக்தி கொண்ட கேசவன், பப்ரு கொல்லப்பட்டதைக் கண்டு தன் அண்ணனிடம், "ஓ! ராமரே {பலராமரே}, பெண்களை உற்றார் உறவினர்களிடம் ஒப்படைக்கும் வரை எனக்காக இங்கே காத்திருப்பீராக" என்றான்.(6)

[1] "இந்த ஸ்லோகம் அமைந்திருக்கும் இலக்கணத்தை நீலகண்டரின் விளக்கத்தின்படி பொருள் கொண்டால், 'வேடனின் கரங்களால் ஒரு மரச்சம்மட்டியில் இணைக்கப்பட்ட இரும்பு உலக்கையானது, சாபம் பெற்றிருந்த பப்ருவிடம் தானே சென்று கொன்றது' என்று வரும்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், "கேசவரால் உத்தரவு செய்யப்படவனும், மதத்தால் கவரப்பட்டவனும், ஞாதிகளுடைய வதத்தினால் வருத்தமுற்றவனுமான அவன் புறப்பட்டான். ஒருவனாக விரைந்து செல்லுகின்றவனும், பிராம்மணனால் சபிக்கப்பட்டவனுமான அந்தப் பப்ருவைக் கிருஷ்ணருக்கருகிலேயே யந்திரத்தில் கட்டப்பட்டிருந்ததும், பெரிதுமான வேடனுடைய உலக்கையானது வேகமாக (விழுந்து) கொன்றது" என்றிருக்கிறது.

துவாராவதி நகரத்திற்குள் நுழைந்த ஜனார்த்தனன் {கிருஷ்ணன்}, தன் தந்தையிடம் {வசுதேவரிடம்}, "தனஞ்சயன் {அர்ஜுனன்} வரும்வரை நம் வீட்டுப் பெண்கள் அனைவரையும் பாதுகாப்பீராக.(7) காட்டின் எல்லைப்புறத்தில் ராமர் {பரசுராமர்} எனக்காகக் காத்திருக்கிறார். நான் அவரை இன்று சந்திக்கப் போகிறேன். குரு குலத்தில் முதன்மையான க்ஷத்ரியர்களுக்கு நேர்ந்த பேரழிவை நான் ஏற்கனவே கண்டதைப் போலவே யதுக்களின் பேரழிவையும் கண்டேன்.(8) என்னருகில் யதுக்கள் இல்லாமல் யாதவர்களின் நகரத்தை என்னால் காண இயலாது[2]. காட்டுக்குச் சென்று, ராமரின் {பலராமரின்} துணையுடன் நான் தவம்பயிலப் போகிறேன் என்பதை அறிவீராக" என்றான் {கிருஷ்ணன்}.(9)

[2] "அந்த வீரர்கள் இல்லாத யதுக்களின் நகரத்தைக் காண்பதற்கு என்னால் முடியாது என்ற பொருள்படும்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.

இந்தச் சொற்களைச் சொல்லிவிட்டு, தன் தந்தையின் பாதத்தைத் தலையால் தீண்டி, விரைவாக அவரது முன்னிலையைவிட்டு அகன்றான். அப்போது அந்த வீட்டில் இருந்த பெண்கள் மற்றும் பிள்ளைகளிடம் இருந்து கவலையால் உரத்த ஓலம் எழுந்தது.(10) உரக்க ஓலமிட்டு அழுத அந்தப் பெண்மணிகளின் ஒலியைக் கேட்டு, தன் பாதச் சுவடுகளை மீண்டும் பின்பற்றிச் சென்று, அவர்களிடம், "அர்ஜுனன் இங்கே வருவான். மனிதர்களில் முதன்மையான அவன் உங்களைத் துயரில் இருந்து விடுவிப்பான்" என்றான்.(11)

பிறகு, காட்டுக்குச் சென்ற கேசவன் {கிருஷ்ணன்}, அங்கே தனிமையான இடத்தில் அமர்ந்திருக்கும் ராமனைக் கண்டான். ராமன் யோகத்தில் நிலைத்திருப்பதையும், அவன் வாயில் இருந்து ஒரு பெரும்பாம்பு வெளியே வந்ததையும் அவன் கண்டான்.(12) அந்தப் பாம்பு வெண் நிறத்தில் இருந்தது. ஆயிரம் தலைகளைக் கொண்டவனும், மலையைப் போன்ற பெருவடிவம் கொண்டவனும், சிவந்த கண்களைக் கொண்டவனுமான அந்த உயர் ஆன்ம நாகன் {பலராமன்}, (இவ்வளவு காலம் தான் வசித்த அந்த) மனித உடலை விட்டகன்று கடலுக்கு வழிவகுக்கும் பாதையில் சென்றான்.(13) சமுத்திரனும், தெய்வீகப் பாம்புகள் பலரும், புனித ஆறுகள் பலவும் அவனைக் கௌரவமாக வரவேற்பதற்காக அங்கே இருந்தனர். அங்கே கார்க்கோடகன், வாசுகி, தக்ஷகன், பிருதுசிரவஸ், வருணன் {அருணன்}, குஞ்சரன்,(14) மிச்ரி, சங்கன், குமுதன், புண்டரீகன், உயர் ஆன்ம திருதராஷ்டிரன், ஹிராதன், கிராதன், கடுஞ்சக்தி கொண்ட சிதிகந்தன் {சிதிப்ருஷ்டன்}, {நிகேது}, சக்ரமந்தன், அதிஷண்டன்,(15) முதன்மையான நாகர்களாக அழைக்கப்படும் துர்முகன், அம்பரீஷன், மற்றும் மன்னன் வருணன் ஆகியோர் அங்கே இருந்தனர். முன் சென்று வரவேற்று, அவனுக்கு அர்க்கியமும், கால் கழுவ நீரும் பல்வேறு சடங்குகளுடன் அளித்து, அந்த வலிமைமிக்க நாகனை வழிபட்டு வணங்கிய அவர்கள் அனைவரும் அவனிடம் வழக்கமான விசாரிப்புகளைச் செய்தனர்.(16)

அண்ணன் {பலதேவன்/ பலராமன்} இவ்வாறு (மனிதர்களின்) உலகில் இருந்து சென்றதும், தெய்வீகப் பார்வையைக் கொண்டவனும், அனைத்தின் கதியையும் முழுமையாக அறிந்தவனுமான வாசுதேவன் சிந்தனையிலேயே சில காலம் காட்டில் தனியாகத் திரிந்து கொண்டிருந்தான். பெருஞ்சக்தி கொண்ட அவன் வெறும் பூமியில் அமர்ந்தான்.(17) அதற்கு முன்பு, முற்காலத்தில் காந்தாரி முன்னறிவிக்கும் வகையில் சொன்ன சொற்கள் அனைத்தையும் நினைத்துப் பார்த்தான். (கிருஷ்ணனின் வீட்டில் விருந்தினராக வந்திருந்த) துர்வாசர் உண்டு எஞ்சிய பாயஸத்தை அவனுடைய உடலில் பூசிய போது சொன்ன சொற்களையும் அவன் நினைவுகூர்ந்தான்.(18) விருஷ்ணிகள் மற்றும் அந்தகர்களின் அழிவையும், அதற்கு முன்பு நடந்த குருக்களின் படுகொலையையும் நினைத்துப் பார்த்த அந்த உயர் ஆன்மா {கிருஷ்ணன்}, (உலகை விட்டு தான் செல்ல வேண்டிய) நேரம் வந்துவிட்டதெனத் தீர்மானித்தான். அப்போது அவன் தன் புலன்களை (யோகத்தில்) அடக்கினான்.(19) அனைத்தையும் குறித்த உண்மையை அறிந்தவனான வாசுதேவனே, பரம தேவனென்றாலும், அனைத்து ஐயங்களையும் விலக்குவதற்காகவும், (மனித இருப்பின் காரியத்தில்) குறிப்பிட்ட விளைவுகளை நிறுவுவதற்காகவும், மூவுலகங்களை ஆதரித்து அத்ரி மகனின் {துர்வாசரின்} சொற்களை உண்மையாக்குவதற்காகவும் அவன் இறக்க விரும்பினான்[3].(20)

[3] "பாயஸம் பூசப்பட்டபோது கிருஷ்ணனின் உடலில் அனைத்துப் பகுதிகளிலும் பூசப்பட்டாலும், அவனுடைய பாதத்தில் பூசப்படவில்லை. அத்ரியின் மகன் துர்வாசர், கிருஷ்ணனின் பாதங்களைத் தவிர்த்து அனைத்தையும் காயப்படுத்த இயலாததாகச் செய்திருந்தான். அந்த முனிவரின் சொற்களை உண்மையாக்கும் வகையில் கிருஷ்ணன் இறக்க விரும்பினான்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், "எல்லாப் பொருள்களின் தத்வத்தையும் உணர்ந்தவரான அவர் தாம் தேவராக இருந்தும் மூவுலகங்களையும் பரிபாலிப்பதற்காகவும், துர்வாஸருடைய சாபத்தைக் காப்பதற்காகவும் சரீரத்தை விட வேண்டிய நிமித்த காரணத்தை விரும்பினார்" என்றிருக்கிறது.

கிருஷ்ணன், தன்னுடைய புலன்கள், வாக்கு, மனம் ஆகியவை அனைத்தையும் கட்டுப்படுத்தி உயர்ந்த யோகத்தில் {படுத்துக்} கிடந்தான். ஜரன் என்ற பெயரைக் கொண்ட ஒரு கடும் வேடன், மான்களை விரும்பி அங்கே வந்தான்.(21) உயர்ந்த யோகத்தில் பூமியில் நீண்டு கிடந்த கேசவனை மானாக நினைத்து, ஒரு கணையைக் கொண்டு அவனது குதிங்காலில் துளைத்து, தன் இரையைக் கைப்பற்றுவதற்காக அந்த இடத்திற்கு விரைந்து வந்தான்.(22) அங்கே வந்த {வேடன்} ஜரன், யோகத்தில் குவிந்தவனும், பல கைகளைக் கொண்டவனும், மஞ்சள் ஆடை {பீதாம்பரம்} உடுத்தியிருந்தவனுமான ஒரு மனிதனைக் கண்டான். தன்னைக் குற்றவாளியாக நினைத்து அச்சத்தில் நிறைந்த அவன் கேசவனின் பாதங்களைப் பற்றினான்.(23) அந்த உயர் ஆன்மா அவனுக்கு {ஜரனுக்கு} ஆறுதலளித்த பிறகு, தன் காந்தியால் மொத்த ஆகாயத்தையும் நிறைத்தபடியே மேல்நோக்கி உயர்ந்தான்.(24)

அவன் {கிருஷ்ணன்} சொர்க்கத்தை அடைந்தபோது, வாசவன், அஸ்வினி இரட்டையர்கள், ருத்ரன், ஆதித்யர்கள், வசுக்கள், விஸ்வேதேவர்கள், முனிவர்கள், சித்தர்கள், முதன்மையான கந்தர்வர்கள் மற்றும் அப்சரஸ்கள் ஆகியோர் முன் வந்து அவனை வரவேற்றனர்.(25) அப்போது, ஓ! மன்னா, சிறப்புமிக்கவனும், கடுஞ்சக்தி கொண்டவனும், அனைத்தையும் படைத்து அழிப்பவனும், யோக ஆசானுமான நாராயனன், தன் காந்தியால் சொர்க்கத்தை நிறைத்தபடியே, நினைத்தற்கரியதான தன்னுலகை {வைகுண்டத்தை} அடைந்தான்.(26) அப்போது, தேவர்கள், (தெய்வீக) முனிவர்கள், சாரணர்கள், கந்தர்வர்களில் முதன்மையானவர்கள், அழகிய அப்சரஸ்கள், சித்தர்கள் மற்றும் சாத்யர்கள் பலரையும் கிருஷ்ணன் சந்தித்தான். அவர்கள் அனைவரும் பணிவுடன் குனிந்து அவனை வழிபட்டனர்.(27) ஓ! ஏகாதிபதி, தேவர்கள் அனைவரும் அவனை வணங்கினர், முனிவர்களில் முதன்மையானோர் பலரும், அனைவரின் தலைவனான அவனை வழிபட்டனர். கந்தவர்கள் அவனது புகழைப் பாடிக் கொண்டிருந்தனர், இந்திரனும் இன்பமாக அவனைத் துதித்தான்" {என்றார் வைசம்பாயனர்}.(28)

மௌஸலபர்வம் பகுதி – 4ல் உள்ள சுலோகங்கள் : 28

ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்