Thursday, January 09, 2020

கிருஷ்ணனின் சொற்கள்! - மௌஸலபர்வம் பகுதி – 6

The words of Krishna! | Mausala-Parva-Section-6 | Mahabharata In Tamil


பதிவின் சுருக்கம் : யாதவ அழிவுக்கான காரணத்தை அர்ஜுனனிடம் சொல்லிப் புலம்பிய வசுதேவர்; கிருஷ்ணன் சொன்னதை அர்ஜுனனிடம் சொன்னது; நாட்டையும் ஒப்படைத்துவிட்டு உயிர்விட நிச்சயித்த வசுதேவர்...


வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "தமது மகன்கள் குறித்த சோகத்தினால் எரிந்து தரையில் கிடந்தவரும், வீரரும், உயர் ஆன்மாவுமான அனகதுந்துபியை {வசுதேவரை} அந்தக் குரு இளவரசன் {அர்ஜுனன்} கண்டான்.(1) ஓ! பாரதா {ஜனமேஜயா}, அகன்ற மார்பையும், வலி கரங்களையும் கொண்ட பிருதையின் மகன் {அர்ஜுனன்}, தன் மாமனைவிட அதிகம் பீடிக்கப்பட்டுக் கண்ணீரில் குளித்த கண்களுடன், தன் மாமனின் பாதங்களைத் தீண்டினான்.(2) ஓ! பகைவரைக் கொல்பவனே {ஜனமேஜயனே}, வலிய கரங்களைக் கொண்ட அனகதுந்துபி, தமது தங்கை மகனின் தலையை முகர விரும்பினாலும் அதைச் செய்யத் தவறினார்.(3) வலிய கரங்களைக் கொண்டவரும், ஆழமாகப் பீடிக்கப்பட்டவருமான அந்த முதிய மனிதன் {வசுதேவர்}, தமது கரங்களால் பார்த்தனை {அர்ஜுனனை} ஆரத்தழுவிக் கொண்டு, தமது மகன்கள், சகோதரர்கள், பேரப்பிள்ளைகள், மகள்களின் மகன்கள் மற்றும் நண்பர்களை நினைத்து உரக்க அழுதார்.(4)


வசுதேவர், "ஓ! அர்ஜுனா, பூமியின் மன்னர்கள் அனைவரையும், தைத்தியர்களை நூறுமுறையும் அடிபணியச்செய்த அந்த வீரர்களைக் காணாமல் நான் இன்னும் உயிருடன் இருக்கிறேன். நான் இறப்பது கடினம் என்பதை நான் காண்கிறேன்.(5) ஐயோ, ஓ! பார்த்தா, அர்ஜுனனின் அன்புக்குரிய சீடர்களும், அவனால் பெரிதும் மதிக்கப்பட்டவர்களுமான அந்த இரு வீரர்களின் {சாத்யகி மற்றும் பிருத்யும்னன் ஆகியோரின்} குற்றத்தால் விருஷ்ணிகள் அழிந்தனர்.(6) விருஷ்ணிகளில் முதன்மையான அதிரதர்களாக எந்த இருவர் கருதப்பட்டனரோ, உரையாடல்களின் போது யாவரின் பெயரைக் குறிப்பிட்டால் நீ பெருமைப்படுவாயோ,(7) ஓ! குரு குலத்தின் தலைவா, கிருஷ்ணனின் அன்புக்குரியவர்களாக யாவர் இருந்தனரோ, ஓ! தனஞ்சயா, அந்த இருவரே {சாத்யகி மற்றும் கிருதவர்மன் ஆகியோரே} விருஷ்ணிகளின் அழிவுக்கு முக்கியக் காரணங்களாக இருந்தனர்.(8)

ஓ! அர்ஜுனா நான் சிநியின் மகனையோ {சாத்யகியையோ}, ஹிருதிகளின் மகனையோ {கிருதவர்மனையோ} நான் நிந்திக்கவில்லை. அக்ரூரனையோ, ருக்மிணியின் மகனையோ {பிரத்யும்னனையோ} நான் நிந்திக்கவில்லை. (முனிவர்களின்) சாபமே ஒரே காரணம் என்பதில் ஐயமில்லை.(9) கேசி, கம்சன், செருக்கில் பெருகிய சைத்யன் {சேதி நாட்டு சிசுபாலன்}, நிஷாதர்களின் ஆட்சியாளனுடைய மகனான ஏகலவ்யன், கலிங்கர்கள், மகதர்கள், கந்தாரர்கள், காசியின் மன்னன், பாலைவனத்திற்கு மத்தியில் ஒன்று கூடியிருந்த பல ஆட்சியாளர்கள், கிழக்குக்கும், தெற்குக்கும் உரிய பல வீரர்கள், மலைசார்ந்த பகுதிகளைச் சேர்ந்த பல மன்னர்கள் ஆகியோரை அழிப்பதற்குத் தன் ஆற்றலை வெளிப்படுத்திய அண்டத்தின் தலைவனான மதுசூதனன், ஐயோ, முனிவர்கள் இட்ட சாபத்தின் மூலம் எழும் பேரிடரில் எவ்வாறு அலட்சியமாக இருந்தான்?(10-12)

நீயும், நாரதரும், முனிவர்களும், அவனை மங்கா மகிமை கொண்ட, பாவமற்ற நித்திய தேவன் கோவிந்தனாக அறிவீர்கள்.(13) ஐயோ, பலமிக்க விஷ்ணுவேயான அவன், எதிலும் தலையிடாமல், தன் உற்றார் உறவினரின் அழிவைக் கண்டிருக்கிறான். என் மகனே {கிருஷ்ணனே} இவையனைத்தையும் நடக்க அனுமதித்திருக்க வேண்டும்.(14) அவனே அண்டத்தின் தலைவனாக இருந்தான். எனினும், ஓ! பகைவரை எரிப்பவனே, காந்தாரி மற்றும் முனிவர்களின் சொற்களை அவன் பொய்யாக்க விரும்பவில்லை.(15) ஓ! வீரா, அஸ்வத்தாமனால் கொல்லப்பட்ட உன் பேரனை நீ பார்த்துக் கொண்டிருக்கும்போதே தன் சக்தியின் மூலம் அவன் உயிர்மீட்டான்.(16) எனினும், உன்னுடைய நண்பனான அவன் {கிருஷ்ணன்}, தன் உற்றார் உறவினரைக் காக்க விரும்பவில்லை.

ஓ! பாரதக் குலத்தின் தலைவா {அர்ஜுனா}, தன் மகன்கள், பேரப்பிள்ளைகள், சகோதரர்கள், நண்பர்கள் ஆகியோர் இறந்து கிடப்பதைக் கண்டு, அவன் என்னிடம் இந்தச் சொற்களைச் சொன்னான், "இறுதியில் நம் குலத்திற்கும் அழிவு வந்தது.(17,18) துவாராவதி நகருக்கு பீபத்சு {அர்ஜுனன்} வருவான். விருஷ்ணிகளுக்கு நேரிட்ட பேரழிவை அவனுக்குச் சொல்வீராக.(19) யதுக்களின் அழிவைக் கேட்ட உடனேயே, வலிமையும், சக்தியுமிக்க அந்த வீரன் நிச்சயம் காலந்தாழ்த்தாமல் இங்கே வருவான்.(20) ஓ! தந்தையே, நானே அர்ஜுனன், அர்ஜுனனே நான் என்பதை அறிவீராக. நீர் செய்ய வேண்டியதை அவன் சொல்வான்.(21) பெண்களுக்கும், பிள்ளைகளுக்கும் எது சிறந்ததோ அதைப் பாண்டுவின் மகன் {அர்ஜுனன்} செய்வான். அவனே உமது ஈமச் சடங்குகளையும் செய்வான்.(22) அர்ஜுனன் சென்றதும், எந்தத் தாமதமும் இல்லாமல், சுவர்கள் {பிரகாரங்கள்}, மாடமாளிகைகளுடன் கூடிய இந்தத் துவாராவதி நகரம், பெருங்கடலால் விழுங்கப்படும்.(23) என்னைப் பொறுத்தவரையில், புனிதமான ஏதோவோரிடத்தில் ஓய்ந்திருந்து, நுண்ணறிவுமிக்க ராமரின் {பலராமரின்} துணையுடன், கடும் நோன்புகளை நோற்றுக் கொண்டு என் காலத்திற்காகக் காத்திருக்கப் போகிறேன்" என்றான்.(24)

நினைத்துப் பார்க்கமுடியாத ஆற்றலைக் கொண்ட ரிஷிகேசன் {கிருஷ்ணன்}, இந்தச் சொற்களைச் சொல்லிவிட்டு, பிள்ளைகளுடன் என்னை விட்டுவிட்டு, நான் அறியாத ஏதோவோரிடத்திற்குச் சென்றுவிட்டான்.(25) உன்னுடைய மைத்துனர்களான அந்த உயர் ஆன்மாக்கள் {பலராமன் மற்றும் கிருஷ்ணன் ஆகிய} இருவரையும், என் உற்றார் உறவினருக்கு நேர்ந்திருக்கும் இந்தப் பயங்கரப் பேரழிவையும் நினைத்து உணவனைத்தையும் கைவிட்டு, துன்பத்தால் மெலிந்திருக்கிறேன்.(26) நான் உண்ணவும் மாட்டேன், வாழவும் மாட்டேன். ஓ! பாண்டுவின் மகனே நீ என்னைச் சந்தித்தது நற்பேற்றாலேயே. ஓ! பார்த்தா, கிருஷ்ணன் சொன்ன அனைத்தையும் நீ நிறைவேற்றுவாயாக.(27) ஓ! பிருதையின் மகனே {அர்ஜுனா}, இந்தப் பெண்கள் அனைவருடனும், இங்கே இருக்கும் இந்தச் செல்வம் அனைத்துடனும் கூடிய இந்த நாடு இப்போது உனதாகும். என்னைப் பொறுத்தவரையில், ஓ! பகைவரைக் கொல்பவனே, எனது அன்புக்குரியதாக இருந்தாலும் என் உயிர்மூச்சைக் கைவிடுவேன்" என்றார் {வசுதேவர்}.(28)

மௌஸலபர்வம் பகுதி – 6ல் உள்ள சுலோகங்கள் : 28

ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்