Tuesday, February 04, 2020

மனம் நிறைந்த நிறைவு விழா


முழுமஹாபாரதம் மொழிபெயர்ப்புப் பணி இந்தப் பொங்கல் நாளுக்கு முன்பு (14.1.2020) நிறைவடைந்தது. இரண்டே நாட்களில் எழுத்தாளர் திரு.ஜெயமோகன் அவர்கள் தொலைபேசியில் அழைத்துப் பேசினார். விழாவுக்கு நிச்சயம் நண்பர் ஜெயவேலன் அவர்களையும் அழைத்து வருமாறு சொன்னார். நாங்கள் சென்று திரும்புவதற்கான ஏற்பாடுகள் அனைத்தையும் விஷ்ணுபுரம் இலக்கிய வட்டத்தினர் செய்திருந்தனர்.



நானும், ஜெயவேலன் அவர்களும் 31.1.2020 அன்று மாலை புறப்பட்டு அன்று இரவே கோவையை அடைந்தோம். உடன் திரு.ஜா.ராஜகோபால் அவர்களும் வந்திருந்தார். பொதுவாகவே விஷ்ணுபுரம் இலக்கிய வட்டத்தைச் சார்ந்தவர்கள் உலக இலக்கியங்களை அறிந்தவர்களாக இருப்பார்கள். இவர் அவர்களில் முதன்மையானவர். ரயிலில் ஜாஜா அவர்களுடன் மஹாபாரதம் குறித்தும், பல்வேறு கருத்துகள் குறித்தும் உரையாடி வந்தது மனத்துக்கு உற்சாகமாக இருந்தது. எங்களை வரவேற்று அழைத்துச் செல்ல திரு.செந்தில் அவர்கள் ரயில் நிலையத்திற்கு வந்திருந்தார். நாங்கள் தங்குவதற்கு விஜய் பார்க் இன் விடுதியில் அறை ஒதுக்கியிருந்தார்கள். ஜாஜா திரு.செந்தில் அவர்களுடன் சென்றார்.

அடுத்த நாள் 1.2.2020 காலை முதல் மாலை வரை நல்ல ஓய்வு. மாலை 4.30 மணிக்கு வந்து விழா அரங்கிற்கு அழைத்துச் செல்வதாகச் சொல்லியிருந்தார்கள். சொன்ன நேரத்திற்குச் சரியாக வாசலில் அழைப்பு மணி கேட்டது. எழுந்து சென்று கதவைத் திறந்தால் எதிரே ஜெயமோகன் அவர்களே நின்று கொண்டிருக்கிறார். சற்றும் எதிர்பாராத இன்ப அதிர்ச்சியை அது தந்தது. ஜெயமோகன் அவர்களுடன் திரு. டைனமிக் நடராஜன் அவர்களும் எங்களை விழா நடைபெறும் அரங்கிற்கு அழைத்துச் செல்ல வந்திருந்தார். கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் விடுதியிலேயே இருந்து என்னுடனும், ஜெயவேலன் அவர்களுடனும் உரையாடிக் கொண்டிருந்தார். ஜெயவேலன் கிட்டத்தட்ட ஜெயமோகன் அவர்களின் படைப்புகள் பெரும்பான்மையானவற்றைப்  படித்தவர். இருப்பினும் அது குறித்து அவருடன் ஒன்றும் பேசாமல் தன்னடக்கத்துடன் அமர்ந்திருந்தார்.

என் மனைவி லட்சுமி, சித்தி மற்றும்  நண்பர்கள் மூவர் ஆகியோர் காலையில் புறப்பட்டு மதிய வேளையில் கோவையை வந்தடைந்து ரயில் நிலையம் அருகிலேயே ஒரு விடுதியில் அறைகளெடுத்துத் தங்கியிருந்தனர். உண்மையில் அவர்களை அழைத்து வரும் எண்ணம் எனக்கு இல்லை. என் சித்தி சிறு வயது முதல் என்னை வளர்த்தவர். இந்தப் பாராட்டு விழாவை நிச்சயம் பார்க்க வேண்டுமென விரும்பினார். அதை அப்போதுதான் அந்தத் தகவலை ஜெயமோகன் அவர்களிடம் சொன்னேன். முன்பே சொல்லியிருக்கக்கூடாதா? என்று அவர் கடிந்து கொண்டார்.

பிறகு என்னையும், ஜெயவேலனையும் ஜெயமோகனும், டைனமிக் நடராஜனும் அவர்கள் வந்த மகிழுந்திலேயே விழா நடைபெறும் அரங்கிற்கு அழைத்துச் சென்றனர். விழா தொடங்குவதற்குச் சிறிது நேரத்திற்கு முன்பே அரங்கை அடைந்தோம்.

என்னுடைய சித்தி, மனைவி லட்சுமி மற்றும் நண்பர்களும் அரங்கிற்கு வந்துவிட்டனர். ஜெயமோகன் அவர்களிடம் அவர்களை அறிமுகம் செய்து வைத்தேன். நண்பர் திரு.தாமரைச்செல்வன் அவர்களும் வந்திருந்தார். விழாவுக்கு வந்தவர்களுக்கெனச் சிற்றுண்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்து. ஏற்கனவே விஷ்ணுபுரம் விழாக்களில் கலந்து கொண்டிருக்கிறேன் என்பதால் அங்குக் கடைப்பிடிக்கப்படும் படைமுகாமுக்குரிய ஒழுங்கை அறிவேன். விழா சரியான நேரத்திற்குப் பாரதியின் பாடலுடன் தொடங்கியது. திரு.செல்வேந்திரன் அவர்கள் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார். மற்ற மஹாபாரதங்களுக்கும், முழுமஹாபாரதத்திற்கும் இடையிலுள்ள வேறுபாடுகளையும், இதற்கு முன்பு செய்யப்பட்ட முழுமையான மஹாபாரத மொழிபெயர்ப்புகளுக்கு ஆன செலவுகளையும், அவற்றுக்குக் கிடைத்த பொருளாதார ஆதரவுகளையும், அதற்கு அவர்கள் அடைந்த துன்பத்தையும் அரங்கிலுள்ளோர் அனைவருக்கும் அறிமுகம் செய்தார்.

கோவை நன்னெறிக் கழகத்தின் தலைவர் இயாகாகோ திரு.சுப்ரமணியம் அவர்கள் தமது அனுபவத்தில் இந்தியா முழுவதும் மஹாபாரதம் எவ்வாறு உணரப்படுகிறது என்பதைச் சொல்லி தலைமையுரை வழங்கினார். தொழிலதிபர் திரு.டி.பாலசுந்தரம் அவர்கள் கும்பகோணம் மஹாபாரத மொழிபெயர்ப்பு குறித்தும், நமது முழுமஹாபாரதம் குறித்தும் தகவல்கள் பலவற்றையும் சுவைபட எடுத்துரைத்தார். எழுத்தாளர் திரு.பி.ஏ.கிருஷ்ணன் அவர்கள் 2013 முதலே முழுமஹாபாரதத்தைத் தொடர்ந்து பாராட்டி வருபவர். நமது முழுமஹாபாரதத்தில் இருந்து யக்ஷப்ரஸ்னம், நகுஷன் கேள்வி பதில் ஆகிய பகுதிகளை எடுத்து வாசித்து அந்த மொழியின் எளிமையையும், மூலத்தோடு நெருங்கிய அதன் மொழிபெயர்ப்பையும் எடுத்துரைத்தார். அவருடைய அருகாமையும், ஆசிகளும் பெரும் ஊக்கமளித்தன. அடுத்து எழுத்தாளர் திரு.ஜா.ராஜகோபாலன் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார். திருவாசகத்திற்கு உருகாதார் ஒரு வாசகத்திற்கும் உருகார் என்பது போல இவரது இனிமையான உரையில் ஈர்க்கப்படாதவர்கள் வேறு எதனிலும் ஈர்ப்படையமாட்டார்கள். முழுமஹாபாரத மொழிபெயர்ப்பு மட்டுமன்றி அதையொட்டி நம் தளத்தில் இருக்கும் சில ஆய்வுகளையும், முக்கியச் சுட்டிகளையும் அறிமுகம் செய்தார். எழுத்தாளர் திரு.ஜெயமோகன் அவர்கள் இந்த மொழிபெயர்ப்பின் முக்கியத்துவத்தைக் குறித்தும், இந்த வலைத்தளம் எவ்வாறெல்லாமல் பிற்காலத்தில் மேலதிக தகவல்களுக்குக் களஞ்சியமாக விளங்கும் என்பதையும் தன் இயல்பான ஆழத்துடன் சொன்னார். அனைவரும் நண்பர் திரு.ஜெயவேலன் அவர்களையும் பாராட்டிப் பேசினர்.

நான் ஏற்புரை வழங்கினேன். ஏற்புரையின் முடிவில் அரங்கமே எழுந்து நின்று கரகோஷம் செய்தது மெய்ச்சிலிர்ப்பை ஏற்படுத்தியது.

வானவராயர், நாஞ்சில்நாடன், கிருஷ்ணா ஸ்வீட்ஸ் கிருஷ்ணன், மேனாள் மேகாலயா ஆளுநர் வி.ஷண்முகநாதன், கோவை கொடிஷியா புத்தகக் கண்காட்சி அமைப்பாளர் சௌந்தரராஜன், காலப்பிரதீப் சுப்ரமணியன் [லயம்] என முதன்மையான பலர் அரங்கில் இருந்தனர். சென்னையிலிருந்து கல்கி உதவியாசிரியர் அமிர்தம் சூரியா உள்ளிட்ட பலர் வந்திருந்தார்கள். ஜெயமோகன் அவர்கள் புத்தர் சிலையொன்றை நினைவுப்பரிசாக அளித்தார்.

பாண்டிச்சேரி விஷ்ணுபுரம் வாசகர் வட்டத்தைச் சார்ந்தவர்கள் வெள்ளிப்பதக்கம் பொறிக்கப்பட்ட வாழ்த்துப்பலகையை நினைவுப்பரிசாக அளித்தனர். என்னைத்தூக்கி வளர்த்த சித்தி அருகில் இருந்தது நெகிழ்வாக இருந்தது. சொற்களால் சொல்லமுடியாத இன்பம் அஃது. எங்கள் வீட்டில் இப்படிப்பட்ட பாராட்டு விழாக்களைக் கண்டவர்கள் யாரும் இல்லை. சித்திக்கு அப்படி ஒரு மகிழ்ச்சி. கண்களில் கண்ணீர் துளிர்க்கும் அளவுக்கு. நண்பர் ஜெயவேலன் அவர்களுக்கும் மட்டற்ற மகிழ்ச்சி. இறுதி நிகழ்வாக திரு. டைனமிக் நடராஜன் அவர்கள் நன்றியுரை வழங்கி விழாவை நிறைவு செய்தார்.

விழா நிறைவடைந்ததும், இரவு உணவு தயாராக இருந்தது. இரவு 10.30க்கு ரயில். மீண்டும் சென்னையை அடைந்தோம். எங்கள் அனைவரின் மனங்களும் நிறைந்திருந்தன.

நிறைவுவிழா புகைப்படங்கள்

‘அரசன் பாரதம்’ பாராட்டுவிழா - ஜெயமோகன் 

‘அரசன் பாரதம்’ நிறைவுவிழா உரைகள்

 




*********

அருட்செல்வப் பேரரசன் – நிறைவில்…


அருட்செல்வப் பேரரசன் பேட்டி- கல்கி


அரசன் பாரதம் -குங்குமம் பேட்டி


அருட்செல்வப்பேரரசன் அந்திமழை பேட்டி


 *********


மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்