Accept them with reverence! | Adi Parva - Section 126 | Mahabharata In Tamil
(சம்பவ பர்வம் - 62)
பதிவின் சுருக்கம் : பாண்டவர்களை ஹஸ்தினாபுரத்திற்கு அழைத்துச் சென்ற முனிவர்கள்; பாண்டுவின் மரணச் செய்தியைச் சொல்லிவிட்டு, பாண்டவர்களைக் கௌரவர்களிடம் ஒப்படைத்துவிட்டு அங்கிருந்து சென்ற முனிவர்கள்...
வைசம்பாயனர் சொன்னார், "பாண்டுவின் இறப்பைக் கண்டவர்களும், தேவர்களைப் போன்றவர்களுமான ஞானமுள்ள முனிவர்கள், ஒருவரோடு ஒருவர் ஆலோசனை செய்து,(1) "நன்கறியப்பட்ட அறம்சார்ந்த மன்னன் பாண்டு, ஆட்சி உரிமையையும், அரசாங்கத்தையும் துறந்து வந்து, இங்கே தவ துறவுகளைச் செய்து, இந்த மலைவாழ் துறவிகளிடம் தன்னை அர்ப்பணித்துக் கொண்டான்.(2) அவன் இப்போது தனது மனைவியையும், மகன்களையும் நம்பிக்கையுடன் நம் கைகளில் ஒப்படைத்துவிட்டுச் சொர்க்கத்திற்கு உயர்ந்திருக்கிறான்.(3) இப்போதே அவனது நாட்டிற்குச் சென்று, அவனது பிள்ளைகளையும், மனைவியையும் {பாண்டு மற்றும் மாத்ரியின் எரிபடாத உடற்பகுதிகளையும்} ஒப்படைப்பது நமது கடமையாகும்" என்றனர்".(4)
