Tuesday, June 18, 2013

மரியாதையுடன் ஏற்றுக் கொள்ளுங்கள்! - ஆதிபர்வம் பகுதி 126

Accept them with reverence! | Adi Parva - Section 126 | Mahabharata In Tamil

(சம்பவ பர்வம் - 62)

பதிவின் சுருக்கம் : பாண்டவர்களை ஹஸ்தினாபுரத்திற்கு அழைத்துச் சென்ற முனிவர்கள்; பாண்டுவின் மரணச் செய்தியைச் சொல்லிவிட்டு, பாண்டவர்களைக் கௌரவர்களிடம் ஒப்படைத்துவிட்டு அங்கிருந்து சென்ற முனிவர்கள்...

வைசம்பாயனர் சொன்னார், "பாண்டுவின் இறப்பைக் கண்டவர்களும், தேவர்களைப் போன்றவர்களுமான ஞானமுள்ள முனிவர்கள், ஒருவரோடு ஒருவர் ஆலோசனை செய்து,(1) "நன்கறியப்பட்ட அறம்சார்ந்த மன்னன் பாண்டு, ஆட்சி உரிமையையும், அரசாங்கத்தையும் துறந்து வந்து, இங்கே தவ துறவுகளைச் செய்து, இந்த மலைவாழ் துறவிகளிடம் தன்னை அர்ப்பணித்துக் கொண்டான்.(2) அவன் இப்போது தனது மனைவியையும், மகன்களையும் நம்பிக்கையுடன் நம் கைகளில் ஒப்படைத்துவிட்டுச் சொர்க்கத்திற்கு உயர்ந்திருக்கிறான்.(3) இப்போதே அவனது நாட்டிற்குச் சென்று, அவனது பிள்ளைகளையும், மனைவியையும் {பாண்டு மற்றும் மாத்ரியின் எரிபடாத உடற்பகுதிகளையும்} ஒப்படைப்பது நமது கடமையாகும்" என்றனர்".(4)



வைசம்பாயனர் தொடர்ந்தார், "பின்பு ஆன்ம வெற்றியடைந்தவர்களும், பரந்த இதயம் கொண்டவர்களுமான அந்தத் தெய்வீக முனிவர்கள், ஒருவரை ஒருவர் அழைத்து ஆலோசித்து, ஹஸ்தினாபுரம் செல்வதற்கு முடிவெடுத்தனர்.(5) பாண்டுவின் பிள்ளைகளை முன்னணியில் கொண்டு, பீஷ்மர் மற்றும் திருதராஷ்டிரன் கைகளில் அவர்களை ஒப்படைக்க விரும்பினர்.(6) உடனே அந்த நொடியிலேயே அந்தத் துறவிகள் தங்களுடன் பிள்ளைகளையும் குந்தியையும் அழைத்துக் கொண்டு, இரண்டு சடலங்களையும்[1] எடுத்துக் கொண்டு பயணத்தைத் தொடங்கினர்.(7) இதுவரை வாழ்வின் கடினங்களே எதையும் அனுபவித்திராதவள் என்றாலும், மிகுந்த அன்பு கொண்டவளான குந்தி, தான் மேற்கொண்டிருந்த அந்த நெடும் பயணத் தொலைவை மிகக் குறைவானதாகவே கருதினாள்.(8) குறைந்த காலத்திற்குள் குருஜாங்கலத்தை {குருஜாங்கல நாட்டிற்கு ஹஸ்தினாபுரம் தலைநகரம்} அடைந்த, அந்தச் சிறப்பு மிகுந்த குந்தி, முக்கிய வாயிலில் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டாள்.(9) துறவிகள் அங்கே இருந்த பணியாளர்களிடம், தங்கள் வருகையை மன்னருக்குத் தெரியப்படுத்தச் சொன்னார்கள். அந்த மனிதர்கள் அந்தச் செய்தியைச் சபைக்கு மிக விரைவாக எடுத்துச் சென்றனர்.(10)

[1] சடலங்கள் என்றுதான் சொல்லப்பட்டுள்ளது. அஸ்தி என்றோ, சாம்பல் என்றோ அல்ல. 

சாரணர்களும், முனிவர்களும் ஆயிரக்கணக்கில் வந்திருப்பதைக் கேள்விப்பட்ட ஹஸ்தினாபுரவாசிகள் ஆச்சரியமடைந்தனர்.(11) சூரியன் உதித்த சிறிது நேரத்திற்குள் அவர்கள் தங்கள் மனைவியருடனும், பிள்ளைகளுடனும் கணக்கிலடங்காத எண்ணிக்கையில் துறவிகளைக் காண வந்தனர்.(12) எண்ணிக்கையில் அதிகமான க்ஷத்திரியர்களும், பிராமணர்களும், அனைத்துவகையான தேர்களிலும், வாகனங்களிலும் அமர்ந்து கொண்டு, தங்கள் மனைவியருடன் அங்கே வந்தனர்.(13) இந்நிகழ்ச்சியின் போது, வைசியர்கள் மற்றும் சூத்திரர்களின் வருகையும் மிக அதிக அளவில் இருந்தது. அங்கிருந்த ஒவ்வொரு இதயமும் பக்தியில் முன்னேறியிருந்ததால் அந்தப் பெரும் கூட்டம் அமைதியாக இருந்தது.(14)

சந்தனுவின் மைந்தனான பீஷ்மர், சோமதத்தன் அல்லது பாஹ்லீகன், ஞானப் பார்வை கொண்ட அரசமுனி {திருதராஷ்டிரன்}, விதுரன்,(15) மதிப்பிற்குரிய சத்தியவதி, சிறப்பு மிகுந்த கோசல இளவரசி, காந்தாரி மற்றும் அந்த அரசகுடும்பங்களைச் சார்ந்த பல பெண்கள் அக்கூட்டத்தில் இருந்தனர் {அரசவாயிலை விட்டு வெளியே வந்தனர்}.(16) பல்வேறு ஆபரணங்களைப் பூண்டவர்களான திருதராஷ்டிரனின் நூறு மைந்தர்களும் {துரியோதனன் தலைமையில்} வெளியே வந்தனர்.(17) தங்கள் புரோகிதர்களுடன் வந்த கௌரவர்கள், தங்கள் சிரம்தாழ்த்தி அம்முனிவர்களை வணங்கி, அவர்கள் முன்னிலையில் அமர்ந்தனர்.(18) குடிமக்களும் {தங்கள் தலையால்} பூமியைத் தொட்டபடியே அந்தத் துறவிகளைச் சிரம்தாழ்த்தி வணங்கி {பூமியில்} அமர்ந்தனர்.(19)

ஓ மன்னா! பீஷ்மர் அந்தப் பெரும் கூட்டத்தை அசையாமல் இருப்பதைக் கண்டு, சம்பிரதாயச் சடங்காக ஆர்க்கியம் கொடுத்து அத்துறவிகளுக்குக் கால்களைக் கழுவ தண்ணீர் கொடுத்தார். பிறகு, அவர்களிடம் ஆட்சி குறித்தும், அரசு குறித்தும் பேசினார். தலையில் முடியை கட்டிமுடித்து, உடலை விலங்கின் தோலால் மூடியிருந்த அத்துறவிகளில் மூத்தவர் ஒருவர் மற்ற முனிவர்களின் முன்னிலையில் எழுந்து நின்று,(20,21) பிற முனிவர்களின் இசைவுடன் இவ்வாறு பேசினார், "குருக்களின் அரசுரிமைபெற்றிருந்தும், உலக இன்பங்களைத் துறந்து, நூறு சிகரங்கள் கொண்ட {சதஸ்ருங்க} மலையில் வாழ முடிவு செய்தான் மன்னன் பாண்டு என்பதை நீங்கள் அனைவரும் அறிவீர்கள்.(22) அங்கே அவன் பிரம்மச்சரிய வாழ்வு முறையை ஏற்றான். ஆனால் கடவுளின் அறிவுக்கெட்டாத சில நோக்கங்களினால், அவனது மூத்த மகனான இந்த யுதிஷ்டிரன் தர்மதேவன் மூலம் அங்கே பிறந்தான்.(23) பிறகு அந்தச் சிறப்புமிகுந்த மன்னன், வாயுவிடம் இருந்து இந்த அடுத்த மகனைப் பெற்றான். பலம் பொருந்திய மனிதர்களின் முதன்மையான இவன் பீமன் என்று அழைக்கப்படுகிறான்.(24) இந்திரனால் குந்தியிடம் பெறப்பட்ட அடுத்த மகனான இந்தத் தனஞ்சயன் {அர்ஜுனன்}, தனது சாதனைகளால் உலகின் வில்லாளிகளையெல்லாம் அடக்கிவிடக் கூடியவனாவான்.(25) மறுபடியும் இவர்களை இங்கே பாருங்கள், வில்லைப் பயன்படுத்துவதில் பெரும் பலம் வாய்ந்த இந்த இரட்டையர்கள் மாத்ரியிடம் அசுவினி இரட்டையர்களால் பெறப்பட்டவர்கள்.(26)

வானப் பிரஸ்த வாழ்க்கை முறையைக் கானகத்தில் நேர்மையாக வாழ்ந்த சிறப்பு மிகுந்த பாண்டு, தனது பாட்டனின் அருகிப் போன பரம்பரையை இவ்வாறு மீட்டெடுத்தான்.(27) பாண்டு மைந்தர்களின் பிறப்பு, வளர்ப்பு மற்றும் வேத கல்வி ஆகியவை ஐயமில்லாமல் உங்களுக்குப் பெரும் மகிழ்வையே தரும்.(28) அறம் மற்றும் ஞானமுள்ளோரின் பாதையை உறுதியாகப் பற்றிக் கொண்டு, பிள்ளைகளை விட்டுவிட்டு, பதினேழு நாட்களுக்கு முன்பு பாண்டு இறந்துவிட்டான்.(29) எரியப்போகும் ஈமச்சிதையில் அவனை கண்ட அவனது மனைவி மாத்ரி, அச்சிதையில் தானே ஏறி உயிரைத் துறந்து, தனது தலைவனுடன், கற்புள்ள மனைவியர் வாழும் வானுலகப் பகுதிக்குச் சென்றுவிட்டாள். அவர்களின் நன்மைக்காகச் செய்ய வேண்டிய அனைத்துச் சடங்குகளையும் நிறைவேற்றுவீராக.(30,31) இவையே அவர்களது உடல்கள்[2] (அவர்களது உடலின் எரிக்கப்படாத பகுதிகள்). இதோ எதிரிகளை ஒடுக்குபவர்களான அவர்களது பிள்ளைகள் தங்கள் தாயுடன் இருக்கின்றனர். இப்போது இவர்கள் அனைவரும் தக்க மரியாதையுடன் ஏற்றுக்கொள்ளப்படட்டும்.(32) நீத்தார் கடனின் முதல் சடங்கு முடிந்ததும், குருக்களின் மதிப்பை என்றும் பேணிக்காத்த அறம்சார்ந்த பாண்டுவைப் பித்ருக்களின் வரிசையில் நிறுவ முதலாண்டுச் சிராத்தம் (சபிந்தகரணா) நடைபெறட்டும்" என்றார் {அந்த முதியவர்}".(33)

[2] உடல்கள் என்றுதான் சொல்லப்பட்டுள்ளது. அஸ்தி என்றோ, சாம்பல் என்றோ அல்ல.

வைசம்பாயனர் தொடர்ந்தார், "குஹ்யர்களுடன் இருந்த அந்தத் துறவிகள், குருக்களிடம் இவ்வாறு சொல்லிவிட்டு, மக்கள் பார்த்துக் கொண்டிருந்த அந்நொடியே, அவர்கள் பார்த்துக்கொண்டிருக்கும் போதே மறைந்து போனார்கள்.(34) முனிவர்களும், சித்தர்களும் இப்படித் தங்கள் பார்வையிலேயே திடீரென ஆவியாகி வானத்தில் மறைந்து போனதைக் கண்ட குடிமக்கள் அதிசயம் அடைந்து தங்கள் இல்லங்களுக்குத் திரும்பிச் சென்றனர்" {என்றார் வைசம்பாயனர்}.(35)


ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்