Showing posts with label மோக்ஷதர்மம். Show all posts
Showing posts with label மோக்ஷதர்மம். Show all posts

Saturday, December 15, 2018

நாகப் பிராமண வரலாறு! - சாந்திபர்வம் பகுதி – 366

The history of Naga and Brahmana! | Shanti-Parva-Section-366 | Mahabharata In Tamil

(மோக்ஷதர்மம் - 193)


பதிவின் சுருக்கம் : தர்மாரண்யருக்கும் நாகன் பத்மநாபனுக்கும் இடையில் நடைபெற்ற உரையாடல் உலகில் வரலாறான கதையை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்...


பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, "ஓ! மன்னா, இவ்வழியில் அந்த முதன்மையான நாகனை வணங்கிய (தர்மாரண்யர் என்ற பெயரைக் கொண்ட) அந்தப் பிராமணர், உஞ்ச வகை வாழ்வுமுறையைப் பின்பற்றுவதில் உறுதியான தீர்மானதைத அடைந்து, அந்த நோன்பை முறையாகக் கற்கவும், தொடங்கவும் பிருகு குலத்தின் சியவனரிடம் சென்றார்.(1)

விடைபெற்றுக்கொண்ட பிராமணர்! - சாந்திபர்வம் பகுதி – 365

The Brahmana departed! | Shanti-Parva-Section-365 | Mahabharata In Tamil

(மோக்ஷதர்மம் - 192)


பதிவின் சுருக்கம் : தாம் வந்த நோக்கத்திற்கான விடையை நாகனின் பதில் இருந்து அடைந்த பிராமணர்; பத்மநாபனிடம் விடைபெற்றுச் சென்ற தர்மாரண்யர்...


பிராமணர் {தர்மாரண்யர் நாகன் பத்மநாபனிடம்}, "ஓ! நாகா, உண்மையில் இது மிகுந்த அற்புதம் நிறைந்ததாகும். நீ சொன்னதைக் கேட்டதால் நான் உயர்வான நிறைவை அடைந்திருக்கிறேன். நுட்பமான பொருள் நிறைந்த உன் வார்த்தைகள், நான் பின்பற்ற வேண்டிய வழியை எனக்குக் காட்டுகின்றன.(1) ஓ !நாகர்களில் சிறந்தவனே, நீ அருளப்பட்டிருப்பாயாக, நான் இங்கிருந்து செல்ல விரும்புகிறேன். என்னைக் குறித்து விசாரிக்க உன் பணியாட்களை அனுப்பி, இப்போதும், எப்போதும் என்னை நீ நினைவுகூற வேண்டும்" என்றார்[1].(2)

உஞ்ச விருத்தி! - சாந்திபர்வம் பகுதி – 364

Unccha vow! | Shanti-Parva-Section-364 | Mahabharata In Tamil

(மோக்ஷதர்மம் - 191)


பதிவின் சுருக்கம் : தன்னுள் நுழைந்த ஒளியின் வரலாற்றைச் சொன்ன சூரியன்...


சூரியன் {நாகன் பத்மநாபனிடம்}, "இவன் அக்னி தேவனல்ல, இவன் அசுரனல்ல. இவன் நாகனுமல்ல. உஞ்சம் {உஞ்சவிருத்தி} என்றழைக்கப்படும் நோன்பை நோற்பதில் வெற்றி மகுடம் சூட்டப்பட்டதன் விளைவால், சொர்க்கத்தை அடைந்த பிராமணன் இவன்[1].(1)

சூரிய அற்புதங்கள்! - சாந்திபர்வம் பகுதி – 363

Wonderful Surya! | Shanti-Parva-Section-363 | Mahabharata In Tamil

(மோக்ஷதர்மம் - 190)


பதிவின் சுருக்கம் : சூரியனிலுள்ள அதிசயங்களை தர்மாரண்யர் என்ற பிராமணருக்குச் சொன்ன நாகன் பத்மநாபன்...


பிராமணர் {தர்மாரண்யர் நாகன் பத்மநாபனிடம்}, "ஒரே சக்கரமுடைய விவஸ்வானின் தேரை உன் முறைப்படி இழுக்கச் சென்று வந்தாய். நீ பயணம் செய்த உலகங்களில் ஆச்சரிக்கரமாக நீ கவனித்த எதையும் எனக்கு விளக்கிச் சொல்வதே உனக்குத் தகும்" என்றார்.(1)

Friday, December 14, 2018

தர்மாரண்யர்! - சாந்திபர்வம் பகுதி – 362

Dharmaranya! | Shanti-Parva-Section-362 | Mahabharata In Tamil

(மோக்ஷதர்மம் - 189)


பதிவின் சுருக்கம் : பிராமணரைக் கண்ட நாகன்; பிராமணர் தன் பெயரைச் சொல்லி தன் விருப்பத்தையும் சொன்னது...


பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, "அந்த நாகர்களின் தலைவன் {பத்மநாபன்} தன் அன்புக்குரிய மனைவியிடம் இவ்வார்த்தைகளைச் சொல்லிவிட்டு, அந்தப் பிராமணர் தன்னை எதிர்பார்த்துக் காத்திருந்த இடத்திற்குச் சென்றான். அவ்வாறு செல்லும் போதே அந்தப் பிராமணரைக் குறித்துச் சிந்தித்த அவன், அவர் நாக நகரத்திற்கு வந்த காரணம் எது என ஆச்சரியமடைந்தான்.(1) ஓ!மனிதர்களின் தலைவா, அந்த முதன்மையான நாகன், தன்னுடைய இயல்பான அற அர்ப்பணிப்பால் அவர் முன்பு சென்று, தன் விருந்தாளியான அவரிடம் இனிய வார்த்தைகளில்,(2) "ஓ! பிராமணரே, கோபவசப்படாதீர். நான் உம்மிடம் அமைதியாகப் பேசுகிறேன். கோபம் கொள்ளாதீர். யாரை எதிர்பார்த்து நீர் இங்கு வந்தீர்? உமது நோக்கம் என்ன?(3) கோமதி ஆற்றங்கரையின் இந்தத் தனிமையான இடத்தில் நீர் யாரைத் துதித்துக் கொண்டிருக்கிறீர்?" என்று கேட்டான்.(4)

கோபமடைந்த நாகன்! - சாந்திபர்வம் பகுதி – 361

Nagas wrath! | Shanti-Parva-Section-361 | Mahabharata In Tamil

(மோக்ஷதர்மம் - 188)


பதிவின் சுருக்கம் : மனிதன் நாகனை அழைப்பதா என மனைவியிடம் கோபித்துக் கொண்ட நாகன்; தன் கணவனை அமைதிப்படுத்தி பிராமணரிடம் செல்லச் சொன்ன அவனது மனைவி...


நாகன் {பத்மநாபன் தன் மனைவியிடம்}, "ஓ! இனிய புன்னகை கொண்டவளே, அந்தப் பிராமணன் யாரென நினைக்கிறாய்? அவர் உண்மையில் மனிதன்தானா? அல்லது பிராமணரின் வடிவில் வந்த தேவனா?(1) ஓ! பெரும்புகழைக் கொண்டவளே, நோக்கத்திற்குத் தக்க என்னைக் காணவிரும்பும் மனிதர்கள் யார் இருக்கிறார்கள்? என்னைக் காண விரும்பும் மனிதனால், அவன் வசிக்கும் இடத்திற்கு வந்து தன்னைப் பார்க்குமாறு இவ்வாறு எனக்கு ஆணையிடமுடியுமா?(2) ஓ! இனிய பெண்ணே, தேவர்கள், அசுரர்கள் மற்றும் தெய்வீக முனிவர்களுக்கு மத்தியில் நாகர்கள் பெருஞ்சக்தி படைத்தவர்களாக இருக்கிறார்கள். பெரும் வேகம் கொண்ட அவர்கள் சிறந்த நறுமணத்தையும் கொண்டிருக்கிறார்கள்.(3) அவர்கள் {மனிதர்களால்} வழிபடத்தக்கவர்கள். அவர்கள் வரம் அருளவல்லவர்கள். உண்மையில், நாமும் பிறரால் பின்பற்றப்படத் தகுந்தவர்கள். ஓ! பெண்ணே, நாம் மனிதர்களால் காண இயலாதவர்களாக இருக்கிறோம்" என்றான்.(4)

திரும்பி வந்த நாகன்! - சாந்திபர்வம் பகுதி – 360

Nagas return! | Shanti-Parva-Section-360 | Mahabharata In Tamil

(மோக்ஷதர்மம் - 187)


பதிவின் சுருக்கம் : திரும்பி வந்த நாகன்; அவனது மனைவி அவனைப் பிராமணரிடம் போகச் சொன்னது...


பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, "முழுமையாகப் பதினைந்து நாள் நிறைவடைந்ததும், சூரியனின் தேரை இழுக்கும் பணியை முடித்து, அவனது {சூரியனின்} அனுமதியைப் பெற்றுக்கொண்டு அந்த நாகத் தலைவன் (பத்மநாபன்) தன் வீட்டுக்குத் திரும்பினான்.(1)

பிராமணரின் உண்ணாநோன்பு! - சாந்திபர்வம் பகுதி – 359

The fast of the Brahmana! | Shanti-Parva-Section-359 | Mahabharata In Tamil

(மோக்ஷதர்மம் - 186)


பதிவின் சுருக்கம் : உணவு உண்ணும்படி பிராமணரிடம் கேட்டுக் கொண்ட நாகர்கள்; நாகர்களின் கோரிக்கையை மறுத்த பிராமணர்...


பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, "அந்த நகரத்தைச் சார்ந்த நாகர்கள், தவப்பயிற்சியில் அர்ப்பணிப்பு மிக்க அந்தப் பிராமணர், நாகத்தலைவனின் வரவை எதிர்பார்த்து, உணவை முற்றிலும் துறந்து காட்டில் தொடர்ந்து வசித்து வருவதைக் கண்டு மிகவும் துன்புற்றனர்.(1)

நாகனின் மனைவி! - சாந்திபர்வம் பகுதி – 358

Naga's wife! | Shanti-Parva-Section-358 | Mahabharata In Tamil

(மோக்ஷதர்மம் - 185)


பதிவின் சுருக்கம் : வழிவிசாரித்து நைமிஷவனத்தில் உள்ள நாகப்பட்டணத்தை அடைந்த பிராமணர்; நாகனின் மனைவியைக் கண்டது; நாகன் அங்கில்லாதது; நாகன் வரும் வரை கோமதி ஆற்றங்கரையில் காத்திருந்த பிராமணர்...


பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, "இனிய காடுகள், தடாகங்கள் மற்றும் புனித நீர்நிலைகளைக் கடந்து சென்ற அந்தப் பிராமணர் இறுதியாக ஒரு குறிப்பிட்ட தவசியின் ஆசிரமத்தை வந்தடைந்தார்.(1)

பிராமணரின் புறப்பாடு! - சாந்திபர்வம் பகுதி – 357

The Brahmana set out! | Shanti-Parva-Section-357 | Mahabharata In Tamil

(மோக்ஷதர்மம் - 184)


பதிவின் சுருக்கம் : சரியான பாதை காட்டியதற்காகத் தமது விருந்தினரை மெச்சிய பிராமணர்; இரவு முழுவதும் தமது விருந்தினருடன் உரையாடி, காலையில் நாகன் இருக்கும் நகரம் நோக்கிப் புறப்பட்டது...


விருந்தளிப்பவர் தம் மறுமொழியாக, "ஆறுதலளிக்கும் உமது இந்த வார்த்தைகளைக் கேட்டு, கனமான சுமையைத் தூக்கிக் கொண்டிருக்கும் ஒருவனது தலையில் இருந்தோ, தோள்களில் இருந்து அந்தச் சுமை எடுக்கப்பட்டால் அவனுக்கு உண்டாகும் அந்த அளவு நிறைவை நானும் அடைகிறேன்.(1)

Thursday, December 13, 2018

நாகன் பத்மநாபன்! - சாந்திபர்வம் பகுதி – 356

Naga Padmanabha! | Shanti-Parva-Section-356 | Mahabharata In Tamil

(மோக்ஷதர்மம் - 183)


பதிவின் சுருக்கம் : நாகன் பத்மனிடம் செல்லும்படி விருந்தளிப்பவரிடம் சொன்ன விருந்தினர்...


விருந்தினர் தொடர்ந்தார், "ஓ! பிராமணரே, இவை யாவற்றையும் உமக்கு முறையாக விளக்க முயற்சிக்கிறேன். நான் என் ஆசானிடமிருந்து கேட்டதை உமக்குச் சொல்கிறேன் கேட்பீராக.(1)

சொர்க்கத்தின் கதவுகள்! - சாந்திபர்வம் பகுதி – 355

The doors to heaven! | Shanti-Parva-Section-355 | Mahabharata In Tamil

(மோக்ஷதர்மம் - 182)


பதிவின் சுருக்கம் : பிராமணர் தன் விருந்தினரிடம் முக்திக்கான வழிமுறை குறித்துக் கேட்டது; தமக்கும் அதில் ஐயமிருப்பதாக விருந்தினர் சொன்னது...


பிராமணர் {தன் இல்லத்திற்கு விருந்தினராக வந்த பிராமணரிடம்}, "ஓ! பாவமற்றவரே, உமது இனிய உரையாடலின் விளைவால் நான் உம்மிடம் மிகுந்த பற்றைக் கொண்டிருக்கிறேன். நீர் என் நண்பராகிவிட்டீர். நான் உம்மிடம் ஒன்று சொல்ல விரும்புகிறேன்; கேட்பீராக.(1) ஓ! பிராமணர்களில் முதன்மையானவரே, ஓர் இல்லறத்தானாக {கிருஹஸ்தாஸ்ரமத்தைச் சேர்ந்தவனாக} என் மகனிடம் கடமைகளை ஒப்படைத்துவிட்டு, மனிதனின் உயர்ந்த கடமைகளைச் செய்ய விரும்புகிறேன். ஓ! மறுபிறப்பாளரே, என் பாதை எதுவாக இருக்க வேண்டும்?(2) ஆன்மாவைச் சார்ந்திருந்து ஒரே ஆன்மாவின் இருப்பை அடைய விரும்புகிறேன். ஐயோ, பற்றுகளில் கட்டப்பட்டிருக்கும் என்னால் அந்தப் பணியை நிறைவேற்றுவதில் என்னை நிறுவிக் கொள்ளும் இதயம் உண்மையில் வாய்க்கவில்லை[1].(3) இல்லற நோற்பில் என் வாழ்வின் சிறந்த பகுதி கடந்து விட்டதால், வரப்போகும் காலத்தில் எஞ்சியுள்ள என் வாழ்நாளில் என் {வாழ்வெனும்} பயணத்திற்கான செலவுகளைக் கொடுப்பதற்கான {பரலோகம் செல்வதற்கான} வழிமுறைகளை ஈட்ட விரும்புகிறேன்.(4) உலகமெனும் பெருங்கடலைக கடக்கும் விருப்பம் என் மனத்தில் எழுந்துள்ளது. ஐயோ, (என் நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்ளும்) அறமெனும் தெப்பத்தை எப்போது அடையப் போகிறேன்?(5) தேவர்களே கூடத் தங்கள் செயல்களின் கனிகளைப் பொறுத்துக் கொள்ளவும், தண்டிக்கப்படவும் செய்கிறார்கள் என்பதைக் கேட்டும், அனைத்து உயிரினங்களின் தலைக்கு மேலும் யமனின் கொடிக்கம்ப வரிசைகளையும், பறக்கும் கொடிகளையும் கண்டும்,(6) நான் சந்திக்கும் இன்பத்திற்குரிய பல்வேறு பொருட்களில் என் இதயம் இன்பத்தை அடையத் தவறுகிறது. பிச்சையெடுத்துத் திரிந்து கிடைக்கும் பிச்சையில் தங்கள் வாழ்வாதாரத்தைச் சார்ந்திருக்கும் யதிகளைக் கண்டு, யதிகளின் அறத்தில் எனக்கு மதிப்பேதும் உண்டாகவில்லை. ஓ! மதிப்புமிக்க விருந்தினரே, புத்தியின் மற்றும் காரணத்தின் அடிப்படையிலான அறத்தின் துணை கொண்டு, குறிப்பிட்ட கடமைகளின் நடைமுறையில் {அறத்தில்} என்னை நீர் நிறுவுவீராக" என்றார் {முதல் பிராமணர்}".(7)

மூவகை கடமைகள்! - சாந்திபர்வம் பகுதி – 354

Three kinds of duty! | Shanti-Parva-Section-354 | Mahabharata In Tamil

(மோக்ஷதர்மம் - 181)


பதிவின் சுருக்கம் : ஒரு பிராமணரின் கதையைச் சொல்லத் தொடங்கிய பீஷ்மர்; மூவகை கடமைகளைக் குறித்துச் சிந்தித்துக் கொண்டிருந்த பிராமணர்; அந்தப் பிராமணரின் இல்லத்திற்கு விருந்தினராக வந்த மற்றொரு பிராமணர்...


{இந்திரனிடம் நாரதர் சொல்வதாக} பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, "ஓ! மனிதர்களில் சிறந்தவனே, கங்கையாற்றின் தென்கரையில் அமைந்திருந்ததும், மஹாபத்மம் என்ற பெயரில் அழைக்கப்படுவதுமான ஒரு சிறந்த நகரத்தில் குவிந்த ஆன்மாவுடன் கூடிய ஒரு பிராமணர் வாழ்ந்து வந்தார்.(1)

மேன்மையான ஆசிரமம் எது? - சாந்திபர்வம் பகுதி – 353

Which is the superior mode of life! | Shanti-Parva-Section-353 | Mahabharata In Tamil

(மோக்ஷதர்மம் - 180)


பதிவின் சுருக்கம் : மேன்மையான ஆசிரமம் குறித்து பீஷ்மரிடம் கேட்ட யுதிஷ்டிரன்; நாரதருக்கும் இந்திரனுக்கும் இடையில் நடந்த உரையாடலைச் சொல்லத் தொடங்கிய பீஷ்மர்; இந்திரனுக்குக் கதை சொல்லத் தொடங்கிய நாரதர்...


சௌதி {சௌனகரிடம்}, "வைசம்பாயனர், நாராயணனின் மகிமையை ஜனமேஜயனுக்கு இவ்வகையில் விளக்கிய பிறகு அவர், மற்றொரு காரியம் குறித்து யுதிஷ்டிரன் கேட்ட கேள்வியையும், கிருஷ்ணன், முனிவர்கள் மற்றும் பாண்டவர்கள் அனைவரின் முன்னிலையிலும் பீஷ்மர் அவற்றுக்கு அளித்த பதில்களையும் சொல்லத் தொடங்கினார். உண்மையில் வைசம்பாயனர் பின்வருமாறு சொல்லத் தொடங்கினார்[1].

மஹாபுருஷன்! - சாந்திபர்வம் பகுதி – 352

Mahapurusha! | Shanti-Parva-Section-352 | Mahabharata In Tamil

(மோக்ஷதர்மம் - 179)


பதிவின் சுருக்கம் : பரமாத்மாவின் மகிமை குறித்துப் பிரம்மனுக்கும் சிவனுக்கும் இடையில் நடந்த உரையாடலின் தொடர்ச்சி...


பிரம்மன் {தன் மகனான சிவனிடம்}, "ஓ! மகனே, அந்தப் புருஷன் எவ்வாறு குறிப்பிடப்படுகிறான் என்பதைக் கேட்பாயாக. அவன் நித்தியமானவனாகவும், மாற்றமில்லாதவனாகவும் இருக்கிறான். அவன் சிதைவற்றவனாகவும், அளவிடமுடியாதவனாகவும் இருக்கிறான். அவன் அனைத்துப் பொருட்களிலும் நீக்கமற நிறைந்திருக்கிறான்[1].(1) ஓ! அனைத்து உயிரினங்களிலும் சிறந்தவனே, அந்தப் புருஷனை உன்னாலோ, என்னாலோ, பிறராலோ காண முடியாது. புத்தியையும், புலன்களையும் கொண்டிருந்தாலும், தற்கட்டுப்பாடும், ஆன்ம அமைதியும் இல்லாது இருப்பவர்களால் ஒருபோதும் அவனைக் காண முடியாது. பரமபுருஷன் ஞானத்தின் துணையால் மட்டுமே காணப்படக்கூடியவனாகச் சொல்லப்படுகிறது.(2) உடலற்றவனாக இருந்தாலும் அவன் அனைத்து உடல்களிலும் வசிக்கிறான். உடல்களில் வசித்தாலும் அவன் அவ்வுடல்களால் செய்யப்படும் செயல்களால் ஒருபோதும் தீண்டப்படாதவனாக இருக்கிறான்.(3) அவன் உடல்கொண்ட அனைத்து உயிரினங்களுக்குள்ளும் அனைத்தையும் காணும் சாட்சியாக வசித்து அவற்றின் செயல்களைக் குறித்துக் கொள்வதில் ஈடுபடுகிறான். எப்போதும் எவராலும் அவனைப் புரிந்து கொள்ள முடியாது.(4)

Wednesday, December 12, 2018

வைஜயந்த மலை! - சாந்திபர்வம் பகுதி – 351

Mountain Vaijayanta! | Shanti-Parva-Section-351 | Mahabharata In Tamil

(மோக்ஷதர்மம் - 178)


பதிவின் சுருக்கம் : பரமாத்மாவின் மகிமை குறித்துப் பிரம்மனுக்கும் சிவனுக்கும் இடையில் நடந்த உரையாடல்...


ஜனமேஜயன் {வைசம்பாயனரிடம்}, "ஓ! மறுபிறப்பாளரே, புருஷர்கள் பலரா? அல்லது ஒரே ஒருவரா? அண்டத்தில் புருஷர்களில் முதன்மையாவன் எவன்? அனைத்துப் பொருட்களின் மூல காரணம் எனச் சொல்லப்படுவது எது?" என்று கேட்டான்.(1)

வியாசரின் முற்பிறவி - அபாந்தரதமஸ்! - சாந்திபர்வம் பகுதி – 350

The former life of Vyasa - Apantaratamas! | Shanti-Parva-Section-350 | Mahabharata In Tamil

(மோக்ஷதர்மம் - 177)


பதிவின் சுருக்கம் : வியாசர் விஷ்ணுவுக்கு மகனாகப் பிறந்த பழங்கதை; பல்வேறு வழிபாட்டு மரபுகளும்; அவை சுட்டும் இறுதி கதியும்...


ஜனமேஜயன் {வைசம்பாயனரிடம்}, "ஓ! மறுபிறப்பாள முனிவரே, சாங்கிய அமைப்பு, பஞ்சராத்திர சாத்திரங்கள், வேத ஆரண்யகங்கள் ஆகிய பல்வேறு ஞான அமைப்புகள் அல்லது அற அமைப்புகளே தற்போது உலகில் இருக்கின்றன.(1) இந்த அமைப்புகள் அனைத்தும் ஒரே போன்ற கடமை நடைமுறைகளைப் போதிக்கின்றனவா? அல்லது ஓ! தவசியே, அவற்றால் போதிக்கப்படும் கடமைகளின் நடைமுறைகள் ஒன்றுக்கொன்று வேறுபாடு கொண்டவையா? என்னால் கேட்கப்படும் நீர், பிரவிருத்தி குறித்து முறையான வகையில் உரைப்பீராக" என்று கேட்டான்.(2)

Tuesday, December 11, 2018

பக்தி அறம் - ஏகாந்தம்! - சாந்திபர்வம் பகுதி – 349

Religion of devotion - Ekanta! | Shanti-Parva-Section-349 | Mahabharata In Tamil

(மோக்ஷதர்மம் - 176)


பதிவின் சுருக்கம் : பக்தி அறத்தை முதலில் தொடங்கியவர்; தொடக்க காலத்தில் இருந்து வழிவழியாக வந்த அறத்தின் வரலாறு; பக்திஅறத்தை ஏன் அனைத்து மனிதர்களும் பின்பற்றுவதில்லை; இந்த ஏகாந்த அறத்தின் மூலம் பிரம்மத்தை அடையும் வகையை ஜனமேஜயனுக்குச் சொன்ன வைசம்பாயனர்...


ஜனமேஜயன் {வைசம்பாயனரிடம்}, "சிறப்புமிக்கவனாக ஹரி, தன்னிடம் முழு ஆன்மாக்களோடு தங்களை அர்ப்பணிப்போரிடம் அருள் நிறைந்தவனாகிறான். விதிக்கு ஏற்புடைய வகையில் அவனுக்கு அளிக்கப்படும் வழிபாடுகள் அனைத்தையும் அவன் ஏற்கிறான்.(1) தங்கள் விறகை எரித்தவர்களும், தகுதி மற்றும் தகுதியின்மை {புண்ணியப் பாவங்கள்} ஆகிய இரண்டும் இல்லாதவர்களுமான மனிதர்கள் ஆசானிலிருந்து ஆசான் மூலமாக வழிவழியாக அடையும் ஞானத்தையும், இறுதியில் அவர்கள் அடையும் வெற்றியைக் குறித்தும் சொன்னீர்[1].(2) அத்தகைய மனிதர்கள், வேறு மூன்றின் மூலமாக நான்காவதான புருஷர்களில் முதன்மையான சாரத்தை, அல்லது வாசுதேவனையே எப்போதும் அடைகிறார்கள்[2]. எனினும், தங்கள் முழு ஆன்மாக்களுடன் நாராயணனிடம் அர்ப்பணிப்புக் கொள்ளும் மனிதர்கள் {ஏகாந்திகள்} உடனே உயர்ந்த கதியை {பரமபதத்தை} அடைகிறார்கள்[3].(3) பக்தி அறமே (ஞானத்தை விட) மேன்மையானதாகவும், நாராயணனின் விருப்பத்திற்குரியதாகவும் தெரிகிறது என்பதில் ஐயமில்லை. இவர்கள் (அநிருத்தன், பிரத்யும்னன் மற்றும் சங்கர்ஷணன் என்ற) அடுத்தடுத்த மூன்று நிலைகளைக் கடக்காமல் மாற்றமில்லாத ஹரியை உடனே அடைகிறார்கள்.(4) முறையான நோன்புகள், ஒழுங்கமைக்கப்பட்ட விதிகளின்படியான உபநிஷத்துகளுடன் கூடிய வேத கல்வி ஆகியவற்றால் பிராமணர்களாலும், யதிகளின் அறத்தைப் பின்பற்றுவோராலும் அடையப்படும் கதியானது,(5) முழு ஆன்மாக்களுடன் ஹரியிடம் அர்ப்பணிப்புக் கொள்ளும் மனிதர்களால் அடையப்படும் கதியைவிடக் குறைந்ததாக நான் நினைக்கிறேன். பக்தி அறத்தை முதலில் தொடங்கியது யார்? அஃதை அறிவித்தது தேவனா? முனிவரா?(6) முழு ஆன்மாக்களோடு அர்ப்பணிப்பில் ஈடுபடுபவர்களால் பயிலப்படும் நடைமுறைகள் என்னென்ன? அந்த நடைமுறைகள் எப்போது தொடங்கின? இவற்றில் எனக்கு ஐயங்கள் இருக்கின்றன. இவ்வையங்களை நீர் விலக்குவீராக. நீர் விளக்கப் போகும் பல்வேறு கூறுகளைக் கேட்க நான் பேராவலுடன் இருக்கிறேன்" என்றான் {ஜனமேஜயன்}.(7)

Monday, December 10, 2018

ஹயக்ரீவனும் மதுகைடபர்களும்! - சாந்திபர்வம் பகுதி – 348

Hayagriva and Madhukaitabhas! | Shanti-Parva-Section-348 | Mahabharata In Tamil

(மோக்ஷதர்மம் - 175)


பதிவின் சுருக்கம் : பிரம்மனைப் படைத்த நாராயணன்; ஹயக்ரீவ வடிவத்தை ஏற்றது; மது கைடபர்கள் என்ற அசுரர்களைக் கொன்று வேதத்தை மீட்ட வரலாறு...


ஜனமேஜயன் {அல்லது சௌனகர்}, "தெய்வீகமான பரமாத்மாவின் மகிமையை நான் உம்மிடம் இருந்து கேட்டேன். தர்மனின் இல்லத்தில், நரன் மற்றும் நாராயணரின் வடிவத்தில் பரமதேவன் பிறந்ததையும் கேட்டேன்.(1) (மூழ்கிப் போன பூமியை உயர்த்துவதற்காகப் பரமதேவன் ஏற்ற வடிவமான) வலிமைமிக்கப் பன்றியில் இருந்து பிண்டம் தோன்றியதையும் கேட்டேன். பிரவிருத்தி அறம் மற்றும் நிவிருத்தி அறம் ஆகியவற்றுக்காக விதிக்கப்பட்ட தேவர்கள் மற்றும் முனிவர்களைக் குறித்தும் நான் உம்மிடம் இருந்து கேட்டேன்.(2) ஓ! மறுபிறப்பாளரே {வைசம்பாயனரே}, நீர் எங்களுக்கு வேறு கதைகளையும் சொல்லியிருக்கிறீர். பெருங்கடலின் வடகிழக்கில் தோன்றிய வடிவமும், வேள்விக் காணிக்கைகள் மற்றும் ஆகுதிகளை உண்பவனும், குதிரைத் தலை கொண்டவனும், பெருவடிவம் கொண்டவனுமான விஷ்ணுவைக் குறித்தும் நீர் எங்களுக்குச் சொன்னீர். பரமேஷ்டி என்ற பெயரில் அறியப்படும் சிறப்புமிக்கப் பிரம்மனால் அந்த வடிவம் காணப்பட்டது.(3,4)

Sunday, December 09, 2018

நாராயண மகிமை! - சாந்திபர்வம் பகுதி – 347

The glory of Narayana! | Shanti-Parva-Section-347 | Mahabharata In Tamil

(மோக்ஷதர்மம் - 174)


பதிவின் சுருக்கம் : தமது ஆசிரமத்திற்குத் திரும்பிச் சென்ற நாரதர்; ஜனமேஜயனுக்கு நாராயணனின் மகிமையைச் சொன்ன வைசம்பாயனர்...


வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "நரனும், நாராயணனும் சொன்ன இந்த வார்த்தைகளைக்கேட்ட முனிவர் நாரதர், பரம்பொருளிடம் அர்ப்பணிப்பில் {பக்தியில்} நிறைந்தார்.(1) நரநாராயணர்களின் ஆசிரமத்தில் முழுமையாக ஆயிரம் வருடங்கள் வசித்து, மாற்றமில்லாதவனான ஹரியைக் கண்டு, நாராயாணனைக் குறித்த சிறந்த உரையாடல்களைக் கேட்ட பிறகு அந்தத் தெய்வீக முனிவர், இமயச் சாரலில் உள்ள தன் சொந்த ஆசிரமத்திற்குத் திரும்பினார்.(2) எனினும், முதன்மையான தவசிகளான நரனும், நாராயணனும், கடுந்தவப் பயிற்சிகளில் ஈடுபட்டபடியே இனிமை நிறைந்த தங்கள் பதரி ஆசிரமத்தில் தொடர்ந்து வசித்தனர்.(3) நீ பாண்டவ குலத்தில் பிறந்தவனாவாய். நீ அளவிலா சக்தி கொண்டவனாவாய். ஓ! பாண்டவ குலத்தைத் தழைக்கச் செய்பவனே {ஜனமேஜயா}, நாராயணனைக் குறித்த இந்த உரையைத் தொடக்கம் முதல் கேட்ட உனது பாவங்கள் அனைத்தும் நிச்சயம் கழுவப்பட்டு, ஆன்ம புனிதம் அடைந்தவனாக நீ இருக்கிறாய்.(4)

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்