Saturday, March 02, 2013

பரீக்ஷித் செய்த பிழை! | ஆதிபர்வம் - பகுதி 40

The wrong done by Parikshit! | Adi Parva - Section 40 | Mahabharata In Tamil

(ஆஸ்தீக பர்வம் - 28)

பதிவின் சுருக்கம் : ஜரத்காருவின் பெயர்க்காரணம்; பரிக்ஷித் அடித்த மான்; பேசாத சமீகர்; சமீகரை அவமதித்த பரிக்ஷித்; கிருசனும் சிருங்கியும் பேசிக் கொண்டது; சிருங்கியை கோபமடைய வைத்த கிருசன் ...

சமீகரை அவமதித்த பரிக்ஷித்
சௌனகர், "ஓ சூத மைந்தா! {சௌதியே}, அந்தச் சிறப்புமிக்க முனிவர் ஜரத்காரு, இந்த உலகத்தில் அந்தப் பெயரால் ஏன் அழைக்கப்பட்டார். ஜரத்காரு என்ற பெயருக்கான காரணத்தை எங்களுக்குச் சொல்வதே உனக்குத் தகும்" என்று கேட்டார்.(1,2)

சௌதி சொன்னார், "`ஜரை’, என்றால் உதவாதது என்றும், காரு என்றால் பெரியது என்று பொருள் எனச் சொல்லப்படுகிறது. இந்த முனிவர் {ஜரத்காரு} பெரும் உடலுடையவராக இருந்தார்[1]. ஆனால் அதைத் தனது கடுமையான தவத் துறவுகளால் படிப்படியாகக் குறைத்தார். ஓ பிராமணர்களே, அதே காரணத்துக்காகவே, வாசுகியின் சகோதரியும் ஜரத்காரு {பெரியதைக் குறைத்தவள்} என்று அழைக்கப்பட்டாள்" {என்றார் சௌதி}.(3,4)



[1] கும்பகோணம் பதிப்பில் பெயர் காரணம் இன்னொரு விதமாகச் சொல்லப்பட்டுள்ளது. ஜரை என்றால் கெடுவது என்றும், காரு என்றால் துன்பத்தைத் தருவது என்றும், சிறந்த ஞானமுள்ள முனிவருக்கு வைராக்கியத்தின் காரணமாக இந்த உடலானது துன்பத்தைத் தருவதாகத் தோன்றியதால் இந்தப் பெயர் அமைந்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. மன்மதநாததத்தரின் பதிப்பிலும், பிபேக்திப்ராயின் பதிப்பிலும் கங்குலியில் உள்ளதைப் போலவே இருக்கிறது. மூல ஸ்லோகத்தில் கும்பகோணத்துப் பதிப்பில் உள்ளது போலவே ஜரை என்றால் ஷயம் அதாவது கெடுவது என்றும், காரு என்றால் துன்பம் தருவது என்றுமே சொல்லப்பட்டிருக்கிறது.

நற்குணம் பொருந்திய சௌனகர், இதைக்கேட்டுப் புன்னகைத்து உக்ரச்ரவனிடம் {சௌதியிடம்}, "இதுவும் அப்படியா?" என்று சொன்னார்.(5) பிறகு சௌனகர் "இதற்கு முன் நீ சொன்னதையெல்லாம் கேட்டேன். ஆஸ்தீகர் எப்படிப் பிறந்தார் என்பதை நான் அறிய விரும்புகிறேன்" என்றார்.(6)

இந்த வார்த்தைகளைக் கேட்ட சௌதி, சாத்திரங்களில் {புராணங்களில்} எப்படி எழுதப்பட்டுள்ளதோ அப்படியே சொல்லத் தொடங்கினார். சௌதி சொன்னார், "வாசுகி {பாம்பு மன்னன்}, முனிவர் ஜரத்காருவுக்குத் தனது சகோதரியை {ஜரத்காருவை} அளிக்க விருப்பங்கொண்டு, பாம்புகளுக்கு (தேவையான) உத்தரவுகளை இட்டிருந்தான்.(7) ஆனால் நாட்கள் கழிந்தன, முனிவர் {ஜரத்காரு} கடுந்தவங்களிலும், துறவுகளிலும் ஈடுபட்டாரே தவிர, மனைவியைத் தேடவில்லை.(8) அந்த உயர் ஆன்ம முனிவர் {ஜரத்காரு}, கல்வியிலும், தவத்திலும் ஆழ்ந்து ஈடுபட்டுத் தனது உயிர்வித்தைத் தனது முழுக் கட்டுப்பாட்டில் வைத்து, மனைவியைப் பெறுவதில் விருப்பமில்லாமல், முழு உலகையும் அச்சமில்லாமல் சுற்றித் திரிந்தார்.(9)

பின்னர், ஒரு காலத்தில், ஓ பிராமணரே {சௌனகரே}, கௌரவக் குலத்தில் பிறந்த பரீக்ஷித் என்ற பெயர் கொண்ட மன்னன் ஒருவன் இருந்தான்.(10) அவன் {பரீக்ஷித்}, தனது முப்பாட்டன் பாண்டுவைப் போலப் பலம் கொண்ட கைகளுடனும், போரில் வில்லேந்தியவர்களில் முதன்மையானவனாகவும், வேட்டையில் விருப்பம் கொண்டவனாகவும் இருந்தான்.(11) அந்த ஏகாதிபதி {பரீக்ஷித்}, மான்கள், காட்டுப்பன்றிகள், ஓநாய்கள், எருமைகள் மற்றும் பல்வேறு காட்டு விலங்குகளை வேட்டையாடித் திரிந்து கொண்டிருந்தான்.(12) ஒரு நாள் {வேட்டை ஆடும்போது} கூரிய அம்பொன்றினால் ஒரு மானை அதன் முதுகில் தைத்தான்.(13) அப்படித் தைத்தபிறகு, முற்காலத்தில் சிறப்புமிக்க ருத்ரன் கையில் வில்லேந்தி, மானாக உருவெடுத்த வேள்வியைத் {வேள்விப்புருஷனை}[2] தேவலோகத்தில் துரத்தியது போல, வில்லைத் தன் முதுகில் மாட்டிக்கொண்டு, அந்த மானை இங்கேயும், அங்கேயும் தேடிக்கொண்டு காட்டுக்குள்ளே ஊடுருவினான்.(14) பரீக்ஷித்தினால் துளைக்கப்பட்ட எந்த மானும் இதுவரை இப்படி உயிருடன் காட்டுக்குள் தப்பியதில்லை. எனினும், இந்த மானோ ஏற்கனவே காயம்பட்டிருந்தாலும், மன்னன் {பரீக்ஷித்} சொர்க்கத்தை அடைவதற்கு (நெருங்கிய) காரணமாக வேகமாகத் தப்பியோடியது.(15)

[2] தக்ஷன் சிவனை அவமதித்து நடத்திய வேள்வியைச் சிவன் அழித்தான். அப்போது யாகப்புருஷன் மான் வடிவெடுத்துத் தப்பிக்கப் பார்க்க சிவன் அவனை அம்பால் அடித்ததாகப் புராணக் கதை உண்டு.

மனிதர்களின் மன்னனான பரீக்ஷித்தால் துளைக்கப்பட்ட அந்த மான், அவனைக் கானகத்திற்குள் வெகு தொலைவிற்கு அழைத்து வந்து, அவனது பார்வையில் இருந்து மறைந்து விட்டது.(16) களைப்பும், தாகமும் கொண்ட அவன் {பரீக்ஷித்}, அந்தக் கானகத்தில் மாட்டு மந்தையில் அமர்ந்து, தாயிடம் பாலருந்தும் கன்றுகளின் வாயிலிருந்து உமிழப்படும் நுரையை (பால் நுரை) உறிஞ்சி {வயிறு} நிரம்பக் குடித்துக் கொண்டிருந்த ஒரு முனிவரிடம் {முனிவரின் பெயர் சமீகர்} வந்தடைந்தான். பசியும் சோர்வுமாய் இருந்த அந்த ஏகாதிபதி {பரீக்ஷித்} விரைவாக அவரை அடைந்து, தனது வில்லை உயர்த்தி, அந்தக் கடும் நோன்புகள் கொண்ட முனிவரிடம் {முனிவர் சமீகரிடம்}, "ஓ பிராமணரே, நான் அபிமன்யுவின் மகன், மன்னன் பரீக்ஷித் ஆவேன்.(17-19) என்னால் துளைக்கப்பட்ட மான் ஒன்றைக் காணவில்லை. அதை நீர் கண்டீரா?" என்று கேட்டான். ஆனால், அப்போது பேசா நோன்பு நோற்றுக் கொண்டிருந்த அந்த முனிவர் {சமீகர்} அவனிடம் ஒரு வார்த்தையும் பேசவில்லை.(20)

கோபம் கொண்ட மன்னன் {பரீஷித்}, அங்குக் கிடந்த ஓர் இறந்த பாம்பைத் தனது வில்லின் நுனியால் எடுத்து அவரது {சமீகரின்} தோளில் போட்டான். முனிவர் {சமீகர்} எந்த எதிர்ப்பும் தெரிவிக்காமல் {அமைதியாக} வேதனையைத் {அவமானத்தைத்} தாங்கிக் கொண்டார்.(21) நன்மையாகவோ, தீமையாகவோ யாதொரு வார்த்தையும் கூறவில்லை. அவரை {சமீகரை} அந்நிலையில் கண்ட மன்னன் {பரீக்ஷித்} தன் கோபத்தை விட்டு {தன் செயலை உணர்ந்து} வருத்தமடைந்தான். அவன் {பரீக்ஷித்} தன்னுடைய தலைநகரத்துக்குத் {ஹஸ்தினாபுரத்திற்குத்} திரும்பினாலும், அந்த முனிவர் {சமீகர்} அதே நிலையிலேயே தொடர்ந்தார். மன்னிக்கத் தெரிந்த {பொறுமையுள்ள} அந்த முனிவர் {சமீகர்}, மன்னர்களில் புலியான அந்த ஏகாதிபதி தன் வகையின் கடமைகளுக்கு உண்மையாக இருப்பவன் என்றும் அறிந்து,(22,23) தான் அவமதிக்கப்பட்டிருந்தாலும், அவனைச் {பரீக்ஷித்தை} சபிக்காதிருந்தார். ஏகாதிபதிகளில் புலியான அந்தப் பரதகுலத்தில் முதன்மையானவனும் {பரீக்ஷித்தும்}, தான் அவமதித்த அந்த மனிதர் ஓர் அறம் சார்ந்த முனிவர் என்பதை அறியவில்லை. இதன் காரணமாகவே அவன், அவரை இப்படி அவமதித்துவிட்டான்.

பெரும் சக்தியைக் கொடையாகக் கொண்டவனும், ஆழ்ந்த தவம் கொண்டவனும், கடுமையான நோன்புகள் கொண்டவனும்,(24,25) அமைதிப்படுத்த முடியாத கடும் கோபக்காரனும், சிருங்கி என்ற பெயரைக் கொண்டவனும், இளவயதுடையவனுமான மகன் ஒருவன் அந்த முனிவருக்கு {சமீகருக்கு} இருந்தான். அவ்வப்போது அவன் {சிருங்கி}, உயிர்கள் அனைத்திற்கும் நன்மை செய்வதில் எப்போதும் ஈடுபடுபவரும், தன் இருக்கையில் சுகமாக வீற்றிருப்பவருமான தன் {குருவிடம் சென்று} குருவை கவனத்துடனும், மரியாதையுடனும் வழிபட்டு வந்தான். ஓ பிராமணர்களில் சிறந்தவரே {சௌனகரே}, {அப்படிச் செய்துவிட்டுத்} தனது குருவின் உத்தரவின் பேரில் அவன் {சிருங்கி} வீட்டுக்குத் திரும்பி வருகையில்,(26,27) கிருசன் என்ற பெயரைக் கொண்டவனும், ஒரு முனிவரின் மகனுமான அவனது தோழன் ஒருவன், அவனுடன் {சிருங்கியுடன்} விளையாட்டுத்தனமாகச் சிரித்துப் பேசிக்கொண்டு வந்தான். {அப்போது} நஞ்சைப் போன்ற கோபம் நிறைந்தவனான சிருங்கி, தன் தந்தையைக் குறித்த இந்த வார்த்தைகளைக் கேட்டு சினத்தால் எரிந்தான்.(28,29)

கிருசன், "செருக்காயிராதே, ஓ சிருங்கி, உன்னைப்போன்ற தவசியும், சக்தி கொண்டவருமான உன் தந்தை {சமீகர்}, இறந்த பாம்பொன்றைத் தன் தோள்களில் தாங்கிக் கொண்டிருக்கிறார்.(30) ஆகையால், எங்களைப் போன்ற உண்மை அறிவும், ஆழ்ந்த ஆன்மிகத் தவமும் கொண்டு, அவற்றில் வெற்றியும் கண்ட முனி மைந்தர்களிடம் ஒரு வார்த்தையும் பேசாதே.(31) உன் தந்தை {சமீகர்} இறந்த பாம்பைத் தாங்கிக் கொண்டிருப்பதைப் பார்க்கப் போகிறாயே, உன் ஆண்மை எங்கே? செருக்கினால் நீ உதிர்க்கும் அந்த உயர்ந்த வார்த்தைகள் எங்கே?(32) ஓ முனிவர்கள் அனைவரிலும் சிறந்தவனே {சிருங்கியே}, உனது தந்தை {சமீகர்} இந்த நிலையை அடைய, அவர் ஒரு குற்றமும் செய்யவில்லை. இதன் காரணமாகவே நானே தண்டிக்கப்பட்டது போல உணர்ந்து வருத்தப்படுகிறேன்" என்றான் {கிருசன்}.(33)


ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்