Sunday, March 03, 2013

தந்தையின் கண்டிப்பு! | ஆதிபர்வம் - பகுதி 41

Father rebuked the son! | Adi Parva - Section 41 | Mahabharata In Tamil

(ஆஸ்தீக பர்வம் - 29)

பதிவின் சுருக்கம் : சிருங்கியின் கோபம்; பரீக்ஷித்தைச் சபித்த சிருங்கி; தன் சாபத்தைக் குறித்துத் தனது தந்தையிடம் தெரிவித்த சிருங்கி; தன் மகனைக் கண்டித்த சமீகர்...

சௌதி சொன்னார், "இப்படிச் {கிருசனால்} சொல்லப்பட்டதையும், தன் தந்தை {சமீகர்} இறந்த பாம்பைச் சுமந்து கொண்டிருக்கிறார் என்பதையும் அறிந்த சிருங்கி கோபத்தால் எரிந்தான்.(1) கிருசனைப் பார்த்து, மென்மையாக, "வேண்டிக் கேட்கிறேன், இன்று ஏன் எனது தந்தை {சமீகர்} இறந்த பாம்பைச் சுமக்கிறார்?" என்று கேட்டான்.(2) அதற்குக் கிருசன், "ஓ அன்புக்குரியவனே, மன்னன் பரீக்ஷித்வேட்டைக்காகத் திரிந்து கொண்டிருக்கும்போது, அவன் அந்தச் இறந்த பாம்பை உனது தந்தையின் {சமீகரின்} தோளில் போட்டுச் சென்றான்" என்றான்.(3) சிருங்கி, "அந்தத் தீய ஏகாதிபதிக்கு {பரீக்ஷித்} எனது தந்தை {சமீகர்} என்ன தீங்கு செய்தார்? ஓ கி்ருசா, இதைச் சொல்லி, எனது ஆன்ம பலத்தைக் காண்பாயாக" என்றான்.(4)



கிருசன், "அபிமன்யுவின் மைந்தனான மன்னன் பரீக்ஷித் வேட்டையாடிக் கொண்டிருக்கும்போது, ஒரு வேகமான மானைத் தனது கணையால் துளைத்து, அதைத் தனியாகத் துரத்திக் கொண்டு வந்தான்.(5) கானகம் அடர்ந்திருந்ததால் மன்னன் {பரீக்ஷித்தின்} பார்வை அந்த மானில் மேல் இருந்து தப்பியது. அப்போது அவன் உன் தந்தையைக் {சமீகரைக்} கண்டதும், அது குறித்து உடனே வினவினான்.(6) உனது தந்தை அப்போது பேசா நோன்பில் இருந்தார். அசைவற்று அமர்ந்திருந்த உனது தந்தையிடம், பசியுடனும், தாகத்துடனும், மிகுந்த சோர்வுடனும் இருந்த மன்னன் {பரீக்ஷித்} காணாமல் போன மானைப் பற்றித் திரும்பத் திரும்பக் கேட்டான்.(7) உனது தந்தை {சமீகர்} பேசா நோன்பு இருந்ததால், பதிலேதும் கூறவில்லை. அதன்பிறகு அந்த மன்னன் {பரீக்ஷித்}, தனது வில்லின் நுனியால் இறந்த பாம்பு ஒன்றை எடுத்து, உனது தந்தையின் தோளில் போட்டான்.(8) ஓ சிருங்கி, வழிபாட்டில் ஈடுபட்டுக்கொண்டிருந்ததால் உனது தந்தை {சமீகர்} அப்படியே அசைவற்று அமர்ந்திருந்தார். அந்த மன்னன் {பரீக்ஷித்}, யானையின் பெயரைக் கொண்ட தனது தலைநகரத்திற்குச் {ஹஸ்தினாபுரத்திற்குச்} சென்றுவிட்டான்" என்றான் {கிருசன்}."(9)

சௌதி தொடர்ந்தார், "{தன் தந்தையின்} தோள்களில் இறந்த பாம்பைப் போட்டதைக் கேட்ட அந்த முனி மைந்தன் {சிருங்கின்}, ஆத்திரத்தால் கண்கள் சிவந்து, எரியும் தழலெனக் கோபம் கொண்டான்.(10) அந்த வலிமைவாய்ந்த முனிவன் {சிருங்கின்} கோபத்தால் பீடிக்கப்பட்டும் உந்தப்பட்டும், நீரைத் தொட்டு, மன்னனைச் {பரீக்ஷித்தைச்} சபித்தான்.(11)

சிருங்கின், "மெலிந்தவரும், வயதானவருமான என் தந்தையின் {சமீகரின்} தோளில் இறந்த பாம்பைக் கிடத்திய அந்தப் பாவியும், பிராமணர்களை அவமதிப்பவனும், குருப்பரம்பரையின் புகழை மங்கச் செய்பவனுமான அந்த ஏகாதிபதி {பரீக்ஷித்}, இன்றிலிருந்து ஏழு இரவுகளுக்குள், எனது வார்த்தைகளின் பலத்தால் தூண்டப்பட்டவனும், பாம்புகளின் வலிமையான மன்னனுமான தக்ஷகனால் {கடியுண்டு}, யமனின் உலகிற்குச் செல்வான்" என்றான் {சிருங்கி}."(12-14)

சௌதி தொடர்ந்தார், "இப்படி (மன்னனைச்) சபித்துவிட்டுச் சிருங்கி தனது தந்தையிடம் {சமீகரிடம்} சென்றான். அங்கே மாட்டு மந்தைக்கிடையில், அந்த முனிவர், இறந்த பாம்பைத் தனது தோளில் தாங்கி அமர்ந்திருப்பதைக் கண்டான்.(15) தன்னைப் பெற்றவரை {தந்தையை} அந்தக் கோலத்தில் கண்ட அவன் {சிருங்கி} மீண்டும் கோபத்தால் கொதித்தான்.(16) அந்தத் துயரால் ஏற்பட்ட கண்ணீருடன் தனது தந்தையிடம் {சமீகரிடம்}, "தந்தையே, உங்களுக்கு நேர்ந்த இந்த அவமதிப்பைக் கேள்விப்பட்டு, நான் அந்தத் தீய மன்னன் பரீக்ஷித்தைச் சபித்துவிட்டேன். குரு பரம்பரையில் வந்த அந்த இழிந்தவனுக்கு {பரீக்ஷித்துக்கு} எனது சக்தியுள்ள சாபம் நன்றாகத்தகும். இன்னும் ஏழு நாட்களில், பாம்புகளின் தலைவன் தக்ஷகன், அந்தப் பாவம் நிறைந்த மன்னனை {பரீக்ஷித்தை}, பயங்கரமான காலனின் இல்லத்திற்கு அனுப்புவான்" என்றான் {சிருங்கி}.(17-19)

கோபத்துடன் இருந்த தனது மகனிடம் {சிருங்கியிடம்} அந்தத் தந்தை {சமீகர்}, "குழந்தாய், உனது இந்தச் செயலை நான் விரும்பவில்லை. துறவிகள் இப்படி நடந்து கொள்ளக் கூடாது. நாம் அந்தப் பேரரசனின் {பரீக்ஷித்தின்} ஆளுகைக்குட்பட்ட இடத்திலேயே வாழ்கிறோம்.(20) நாம் அவனால் நீதியுடன் பாதுகாக்கப்படுகிறோம். நம்மை ஆள்பவனான அவன் என்ன செய்திருந்தாலும், நம்மைப் போன்றவர்களால் மன்னிக்கப்பட வேண்டும்.(21) நீ அறத்தை {தர்மத்தை} அழித்தால், அந்த அறமே {தர்மமே} உன்னைக் கண்டிப்பாக அழிக்கும். மன்னன் {பரீக்ஷித்} நம்மைச் சரியாகப் பாதுகாக்கவில்லையென்றால், நமது நிலை மோசமாகும்.(22) நம்மால், நமது விருப்பத்தின்படி ஆன்மீகச் சடங்குகளைச் செய்ய இயலாது. ஆனால், நீதியுள்ள மன்னர்களால் நாம் பாதுகாக்கப்படும்போது,(23) மிக உயர்ந்த தகுதிகளை அடைகிறோம். அதில் {நற்பேறில்} அவர்களுக்கும் பங்கு உண்டு. எனவே, ஆதிக்கம் செலுத்தும் மன்னன் அனைத்து வகையிலும் மன்னிக்கப்பட வேண்டியவன்.(24) அதிலும் அந்தப் பரீக்ஷித் தனது முப்பாட்டனைப்போல ஒரு மன்னன் எப்படிப் பாதுகாக்க வேண்டுமோ, அப்படியே தனது குடிகளைப் பாதுகாக்கிறான்.(25) நோன்புகள் நோற்கும் அந்த ஏகாதிபதி {பரீக்ஷித்}, சோர்வாலும், பசியின் கொடுமையாலும், எனது (பேசா) நோன்பு குறித்த அறியாமையாலுமே அப்படிச் செய்தான்.(26)

மன்னனற்ற நாடு தீங்கையே எப்போதும் சந்திக்கும். அத்துமீறுபவர்களை மன்னன் தண்டிப்பதால்{மட்டுமே} மக்கள் தங்கள் சடங்குகளையும், கடமைகளையும் தடையின்றிச் செய்ய முடியும். தண்டனைகளின் நிமித்தம் அமைதியுண்டாகும்.(27,28) அறத்தை நிலைநிறுத்தும் மன்னன், அங்கே {அந்த இடத்தில்} சொர்க்கத்தையே நிலைநிறுத்துகிறான். மன்னன், வேள்விகளைத் தடைகளில் இருந்து பாதுகாக்கிறான். வேள்வி, தேவர்களை மனநிறைவு கொள்ளச் செய்கிறது.(29) தேவர்கள் மழையைப் பொழிகின்றனர். மழையால், மனிதனுக்கு எப்போதும் பயன்படும் தானியங்களும், மூலிகைகளும் விளைகின்றன.(30) மனு, “மக்களின் விதியை ஆள்பவன், வேதம் படிக்கும் பத்து ஆசான்களுக்கு {சுரோத்தியர்களுக்கு} (மரியாதையில்) சமம்” என்று கூறுகிறார்.(31) அந்த நோன்புகளைக் கடைப்பிடிக்கும் இளவரசன் {பரீக்ஷித்}, சோர்வாலும், பசியின் கொடுமையாலும், எனது நோன்பைக் குறித்து அறியாததாலுமே இந்தக் காரியத்தைச் செய்தான்.(32) உனது குழந்தைத்தனத்தால் ஏன் இப்படி நீதியற்ற ஒரு காரியத்தைச் செய்தாய்? ஓ மகனே {சிருங்கியே}, எவ்வகையிலும் அந்த மன்னன் சாபத்திற்குத் தகுந்தவன் அல்லன்" என்றார் {சமீகர்}."(33)


ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்