Wednesday, March 20, 2013

மஹாபாரதம் ஆரம்பம்! | ஆதிபர்வம் - பகுதி 60

Mahabharatham Begins! | Adi Parva - Section 60 | Mahabharata In Tamil

(ஆதிவம்சாவதரணப் பர்வம் - 2)

பதிவின் சுருக்கம் : ஜனமேஜயன் யாகத்திற்கு வியாசர் வருவது; வியாசரின் பெருமை; பாண்டவர் வரலாற்றை ஜனமேஜயன் வியாசரிடம் கேட்பது; அக்கதையைச் சொல்லும்படி வைசம்பாயனரைப் பணித்த வியாசர்...

சௌதி சொன்னார், "ஜனமேஜயன் நாக வேள்வியில் அமர்ந்திருக்கிறான், என்று கேள்விப்பட்ட கிருஷ்ண துவைபாயனர் {வியாசர்} அங்கே சென்றார்.(1) அந்தப் பாண்டவர்களின் பாட்டன் {வியாசர்}, கன்னிகையான கலிக்கும் {சத்தியவதிக்கும்}, சக்தியின்[1] மைந்தன் பராசரருக்கும், யமுனையின் தீவு ஒன்றில் பிறந்தவராவார்.(2) அந்தச் சிறப்பு வாய்ந்தவர் {வியாசர்}, பிறந்தவுடன் தனது விருப்பத்தினால் மட்டுமே {விருப்பிய உடனே தன் சுய சங்கல்பத்தாலேயே} தன் உடலை வளர்த்து, வேதங்களையும் அதன் கிளைகளையும், வரலாறுகள் அனைத்தையும் கற்றார்.(3)


[1] இங்குச் சக்தி {சக்திரி} என்று சொல்லப்படுபவர், வசிஷ்டரின் புதல்வராவார்.

தவங்களாலும், முயற்சியுடன் கூடிய கல்வியாலும், {அத்யாயனத்தினாலும்}, விரதங்களாலும், உண்ணாநோன்புகளாலும், குலத்தினாலும், யாகத்தினாலும் மற்றவர் அடைய முடியாதவற்றை {வேதங்களின் முழுமையான அறிவை} அவர் எளிதாக அடைந்தார்.(4) வேதங்களை அறிந்தவர்களில் முதன்மையான அவர் {வியாசர்}, வேதங்களை நான்கு பகுதிகளாகப் பிரித்தார். அந்த பிராமண முனிவர் {வியாசர்} பிரம்மனைக் குறித்த ஞானத்துடன் இருந்தார். கடந்ததை {இறந்த காலத்தை} மனத்தால் அறிந்தார். அவர் {வியாசர்} தெய்வீகத்தன்மையுடன், உண்மையைப் போற்றி வாழ்ந்தார்.(5) புனிதமான செயல்களையும், பெரும் புகழையும் கொண்ட அவர் {வியாசர்}, சந்தனுவின் பரம்பரை தொடர்ச்சிக்காகப் பாண்டு, திருதராஷ்டிரன், விதுரன் ஆகியோரை பெற்றெடுத்தார்.(6)

அந்த உயரான்ம முனிவர் {வியாசர்}, வேதங்களையும் அதன் கிளைகளையும் நன்கறிந்த தனது சீடர்களுடன் {சீடர் வைசம்பாயனர் போன்றோருடன்}, ஜனமேஜயன் அமர்ந்திருந்த வேள்விச்சாலைக்கு வந்தார்.(7) மன்னன் ஜனமேஜயன், சதயஸ்யர்களும், பட்டாபிஷேகம் செய்துகொண்ட பலநாட்டு மன்னர்களும், பிரம்மனுக்கு ஒப்பான ரித்விக்குகளும் சூழ அந்த வேள்வியில் இந்திரனைப் போல அமர்ந்திருப்பதைக் கண்டார்.(8,9) பாரதக் குலத்தின் முதன்மையானவனும், அரசமுனியுமான அந்த ஜனமேஜயன், முனிவர் {வியாசர்} வருவதைக் கண்டு, தன்னைச் சேர்ந்தவர்கள் மற்றும் உறவினர்களுடன் பெருமகிழ்வோடு வேகமாக முன்வந்து அவரை வரவேற்றான்.(10) அந்த மன்னன் {ஜனமேஜயன்} சதஸ்யர்களின் அனுமதியோடு, இந்திரன் பிருஹஸ்பதிக்குக் கொடுத்ததைப் போல, அந்த முனிவருக்கு {வியாசருக்கு} ஒரு பொன் ஆசனத்தைக் கொடுத்தான்.(11)

வரங்களை அருளவல்லவரும், தெய்வீக முனிவர்களாலும் போற்றபடுபவருமான, அந்த முனிவர் {வியாசர்} அமர்ந்தபோது, அந்த மன்னர்மன்னன் {ஜனமேஜயன்} சாத்திரங்களில் சொல்லப்பட்ட உரிய மரியாதைகளுடன் வணங்கினான்.(12) மன்னன் {ஜனமேஜயன்}, முற்றிலும் தகுதிவாய்ந்த தனது பாட்டன் கிருஷ்ணருக்கு {கிருஷ்ண துவைபாயனர்=வியாசருக்கு} கால்கள் மற்றும் வாயைக் கழுவ நீரும், அர்க்கியமும், பசுக்களையும் கொடுத்தான்.(13) அந்தப் பாண்டவ ஜனமேஜயனின் காணிக்கைகளை ஏற்று, பசுக்களைக் கொல்லக்கூடாது என்று சொல்லி, வியாசர் பெரும் மனநிறைவு கொண்டார்.(14)

அந்த மரியாதைகளுக்குப் பிறகு மன்னன் {ஜனமேஜயன்} தனது முப்பாட்டனை {வியாசரை} வணங்கி, மகிழ்ச்சியுடன் அமர்ந்து அவரது நலத்தைக் கேட்டறிந்தான்.(15) அந்தச் சிறப்புமிக்க முனிவர் {வியாசர்} அவன் {ஜனமேஜயன்} மீது தனது பார்வையைச் செலுத்தி அவனின் {ஜனமேஜயனின்} நலத்தைப் பற்றிக் கேட்டார். சதஸ்யர்களால் வணங்கப்பட்ட அவர் {வியாசர்}, பதிலுக்கு அவர்களை வணங்கினார்.(16) அதன்பிறகு, மன்னன் {ஜனமேஜயன்} தனது சதஸ்யர்களுடன் கரங்கள் கூப்பி, பிராமணர்களில் முதன்மையானவரிடம் {வியாசரிடம்} கேள்விகளைக் கேட்கத் தொடங்கினான்.(17)

{ஜனமேஜயன்}, "ஓ பிராமணரே {வியாசரே}, கௌரவர்கள் மற்றும் பாண்டவர்களின் செயல்களைத் தங்கள் கண்ணாலேயே கண்டிருக்கிறீர். நீங்கள் உரைக்க அந்த வரலாற்றை நான் கேட்க விரும்புகிறேன்.(18) அவர்களை {கௌரவர்கள் மற்றும் பாண்டவர்களை} செயற்கரிய காரியங்களைச் செய்ய வைத்த அந்தச் சச்சரவுக்குக் காரணம் என்ன? எண்ணற்ற உயிர்கள் மடியக் காரணமான அந்தப் பெரும்போர் எனது பாட்டன்களுக்குள் ஏன் நடந்தது? அவர்கள் தெளிந்த அறிவும் விதியால் மூடப்பட்டதோ? ஓ பிராமணர்களில் சிறந்தவரே {வியாசரே}, அதை எனக்கு முழுமையாக, எவை எவ்வாறு நடந்தனவோ அவற்றை அவ்வாறே சொல்வீராக" என்றான் {ஜனமேஜயன்}.(19,20)

ஜனமேஜயனின் இந்த வார்த்தைகளைக் கேட்ட கிருஷ்ண துவைபாயனர் {வியாசர்}, தனது அருகில் அமர்ந்திருந்த தமது சீடரான வைசம்பாயனரிடம்,(21) "பழங்காலத்தில் கௌரவர்களுக்கும், பாண்டவர்களுக்கும் இடையில் நடந்த பிணக்குகளை, நீ என்னிடம் கேட்டறிந்தவாறே இந்த மன்னனுக்கு {ஜனமேஜயனுக்கு} முழுமையாகச் சொல்வாயாக" என்றார் {வியாசர்}.(22)

அதன்பிறகு அருள்நிறைந்த அந்த பிராமணர் {வைசம்பாயனர்}, தனது ஆசானின் {வியாசரின்} கட்டளைப்படி மன்னனுக்கும் {ஜனமேஜயனுக்கும்}, சதஸ்யர்களுக்கும் மற்றும் அங்குக் கூடியிருந்த பிற மன்னர்களுக்கும் அந்த முழு வரலாற்றையும் கூறினார். கௌரவர்களுக்கும், பாண்டவர்களுக்கும் இடையில் ஏற்பட்ட பகைமையையும், அவர்கள் முழுமையாக அழிந்ததையும் முழுமையாகச் சொன்னார்" {என்றார் சௌதி}[2].(23,24)

[2] இப்படி வியாசரின் சீடர் வைசம்பாயனர், ஜனமேஜயன் நடத்திய நாக வேள்வியில் சொல்லப்பட்டதே மகாபாரதம்.


ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்