Sunday, April 21, 2013

தேவயானியின் அடிமையானாள் சர்மிஷ்டை! | ஆதிபர்வம் - பகுதி 80

Sarmishtha became the slave of Devayani! | Adi Parva - Section 80 | Mahabharata In Tamil

(சம்பவ பர்வம் - 16)

பதிவின் சுருக்கம் : விருஷபர்வனை விட்டு விலகிக் கொள்வதாக சுக்கிராச்சாரியர் சொல்வது; சுக்கிராச்சாரியாரை வேண்டிய விருஷபர்வன்; தேவயானியை வேண்டிய விருஷபர்வன்; சர்மிஷ்டையை அடிமையாகக் கொண்ட தேவயானி...

வைசம்பாயனர் சொன்னார், "பிருகு குலத்தில் வந்த காவியர் மிகுந்த கோபம் கொண்டு, அவனது மண்டபத்தில் அமர்ந்திருந்த விருஷபர்வனை அணுகிக் கடினமான வார்த்தைகளால் பேசினார்.(1) அவர், "இந்தப் பூமியைப் போலவே, பாவகரக் காரியங்கள் உடனே பலனளிக்காது! ஆனால் படிப்படியாகவும், இரகசியமாகவும் அதைச் செய்தவனை அஃது அழிக்கும்.(2) அந்தக் கனி {பலன்} தன்னையோ அல்லது தனது மகனையோ அல்லது தனது பேரனையோ கண்டிப்பாக அணுகும். பாவங்கள் அதன் கனியைக் கொடுத்தே தீரும். ஆடம்பர உணவுகளைப் போல, அது செரிக்கவே செரிக்காது.(3) தனது கடமைகளில் அக்கறையோடும், அறம் சார்ந்த தனது ஆன்மிகக் கட்டளைகளை நிறைவேற்றிக் கொண்டும், எனது இல்லத்தில் தங்கியிருந்த அங்கீரஸின் பேரனைக் கொன்றீர்கள்.(4) பிராமணனான அந்தக் கசனைக் கொன்ற பாவத்தின் காரணமாகவும், எனது மகளை நீங்கள் நடத்திய விதத்தின் காரணமாகவும், என்னால் உங்களுடன் இனியும் இருக்க முடியாது.(5) ஓ அசுரர் தலைவனே! {விருஷபர்வா}, பிதற்றல் பேச்சு பேசும் பொய்யனாக என்னை நினைக்காதே? உங்களுடைய குற்றங்களையெல்லாம் திருத்திக் கொள்ளாமல் அதை நீங்கள் எளிதாகக் கருதிக் கொண்டிருக்கிறீர்கள்" என்றார்.(6)

அதற்கு விருஷபர்வன், "ஓ பிருகுவின் மைந்தரே! நீர் ஒழுக்கத்தில் குறைந்தவர் என்றோ, பொய்யர் என்றோ நான் ஒருபோதும் கருதியதில்லை. நிச்சயமாக அறமும், உண்மையும் உம்முள்ளேயே வசிக்கின்றன. ஓ பார்கவரே! என்னிடம் கருணையோடு இருப்பீராக.(7) எங்களைத் துறந்து நீர் செல்வதாயிருந்தால், நாங்கள் மறுபடியும் ஆழ்கடலுக்குள் செல்ல வேண்டியதுதான். நிச்சயமாக நாங்கள் வேறு எதுவும் செய்ய முடியாது" என்றான்.(8)

சுக்ரன், "அசுரர்களே, நீங்கள் பெருங்கடலின் ஆழத்திற்குச் செல்வீர்களோ, திசைகளெங்கும் தப்பி ஓடுவீர்களோ, அது குறித்து நான் கொஞ்சமும் கவலைப்படவில்லை. என் மகளின் துயரை தாங்கிக் கொள்ள முடியாதவனாக இருக்கிறேன்.(9) என் மகளே எனக்கு எப்போதும் அன்புக்குரியவள். என் வாழ்வு அவளைச் சார்ந்தே இருக்கிறது. நீங்கள் அவளிடம் வேண்டி கேட்பீர்களாக" என்றார்.(10)

அதற்கு விருஷபர்வன், "ஓ பார்கவரே! இவ்வுலகில் அசுரர் தலைவர்கள் கொண்டிருக்கும் யானைகள், பசுக்கள், குதிரைகள் ஆகியவற்றுக்கும், ஏன் எனக்கே கூட தாங்களே முற்றான தலைவராவீர்" என்றான்.(11)

சுக்ரன், "ஓ பெரும் அசுரனே! நானே அசுரர்களின் செல்வத்திற்குத் தலைவன் என்பது உண்மையாக இருப்பின், எனது மகள் தேவயானியிடம் சென்று அவளை மனநிறைவு கொள்ளச் செய்வாயாக" என்றார்."(12)

வைசம்பாயனர் தொடர்ந்தார், "காவியர் {சுக்கிராச்சாரியார்}, விருஷபர்வனிடம் இப்படிச் சொல்லிவிட்டுத் தேவயானியிடம் சென்று, நடந்தது அனைத்தையும் சொன்னார். அதற்குத் தேவயானி விரைவாகப் பதிலளித்தாள்,(13)

அவள், "ஓ பார்கவரே! நீரே அசுர மன்னனின் தலைவராகவும், அவனது செல்வங்களுக்கெல்லாம் அதிபதியாகவும் இருப்பின், மன்னனே இங்கு வந்து என்னிடம் அப்படிச் சொல்லட்டுமே" என்றாள்.(14)

அதன்பிறகு விருஷபர்வன் தேவயானியிடம் வந்து, "ஓ இனிமையான புன்னகையுடைய தேவயானி! நீ எதை விரும்பினாலும், அஃது எவ்வளவு கடினமாக இருப்பினும், அதை உனக்குக் கொடுப்பேன்" என்றான்.(15)


தேவயானி, "சர்மிஷ்டையுடன் கூடிய ஆயிரம் மங்கையர் எனக்குப் பணியாட்களாக வேண்டும் என்று நான் விரும்புகிறேன்! எனது தந்தை என்னை எங்கு அளிக்கிறாரோ (திருமணம் செய்து கொடுக்கிறாரோ) அங்கும் அவள் என்னைப் பின் தொடர வேண்டும்" என்று பதிலுரைத்தாள்.(16)

விருஷபர்வன் தனது பணிப்பெண் ஒருத்தியிடம், "நீ சென்று, உடனே சர்மிஷ்டையை இங்கு அழைத்து வா. அவள் தேவயானியின் விருப்பத்தை நிறைவேற்றட்டும்" என்று கட்டளையிட்டான்."(17)

வைசம்பாயனர் தொடர்ந்தார், "அந்தப் பெண் பணியாள் சர்மிஷ்டையிடம் சென்று, "ஓ இனிமையான சர்மிஷ்டா! உனது உறவினர்களுக்கு நன்மையைச் செய்ய, உடனே எழுந்து என்னைத் தொடர்ந்து வருவாயாக.(18) தேவயானியின் தூண்டுதலால், அந்த பிராமணர் (சுக்ரன்) தனது சீடர்களை (அசுரர்கள்) விட்டு அகலப் போகிறார். ஓ பாவமற்றவளே! நீ தேவயானி விரும்பியதைச் செய்ய வேண்டும்" என்றாள்.(19)

சர்மிஷ்டை, "தேவயானி விரும்பியதை நான் மகிழ்வுடன் செய்வேன். தேவயானியின் தூண்டுதலாலேயே சுக்ரன் என்னை அழைக்கிறார். எனது தவறால், சுக்ரன், தேவயானி ஆகிய இருவரும் அசுரர்களை விட்டு அகலக்கூடாது" என்றாள்."(20)

வைசம்பாயனர் தொடர்ந்தார், "தனது தந்தையால் கட்டளையிடப்பட்ட சர்மிஷ்டை, தனது தந்தையின் மண்டபத்தை விட்டு, ஆயிரம் மங்கையருடன் விரைவாக ஒரு பல்லக்கில் வந்தாள்.(21)

அவள் தேவயானியை அணுகி, "ஆயிரம் மங்கையருடன், நான் உனது பணியாளாக இருக்கிறேன். உன்னை உனது தந்தை எங்கு அளிக்கிறாரோ அங்கும் உன்னைப் பின்தொடர்வேன்" என்றாள்.(22)

தேவயானி, "நான், உனது தந்தையின் புகழைப் பாடிக் கொண்டு, பிச்சையெடுத்து, இரந்துண்டு வாழும் ஒருவரின் மகள் ஆயிற்றே. நீயோ புகழப்படுபவள். நீ எவ்வாறு எனக்குப் பணிப்பெண்ணாக முடியும்?" என்றாள்.(23)

சர்மிஷ்டை, "துன்பத்தில் உழலும் உறவினர்களுக்கு ஒருவன் அவனாலான எல்லா உதவிகளையும் செய்ய வேண்டும். எனவே, நான் உனது தந்தை உன்னை எங்குக் கொடுக்கிறாரோ அங்கும் தொடர்வேன்" என்றாள்."(24)

வைசம்பாயனர் தொடர்ந்தார், "ஓ மன்னா, சர்மிஷ்டை இப்படித் தேவயானியிடம் பணியாளாக இருப்பதாக உறுதியளித்ததும், தேவயானி தனது தந்தையிடம்,(25) "ஓ பிராமணர்களில் சிறந்தவரே! நான் மனநிறைவடைந்தேன். இனி நான் அசுரர் தலைநகருக்குள் நுழைவேன்! உமது அறிவியலும், ஞானத்தின் சக்தியும் பலனற்றவையல்ல என்பதை நான் இப்போது உணர்ந்தேன்!" என்றாள்."(26)

வைசம்பாயனர் தொடர்ந்தார், "அந்தப் பெரும் நற்பெயர் பெற்ற பிராமணர்களில் சிறந்தவர், தனது மகளால் இப்படிச் சொல்லப்பட்டதும், அசுரர் தலைநகருக்குள் இதயம் நிறைந்த மகிழ்ச்சியுடன் நுழைந்தார். அவரைத் தானவர்கள் பெருமதிப்புடன் வழிபட்டனர்."(27)


ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்