Monday, April 29, 2013

யயாதியின் முதுமையை ஏற்ற பூரு! | ஆதிபர்வம் - பகுதி 84

Puru took the decrepitude of Yayati! | Adi Parva - Section 84 | Mahabharata In Tamil

(சம்பவ பர்வம் - 20)

பதிவின் சுருக்கம் : யயாதியின் மூப்பைப் பெற்றுக் கொள்ள மறுத்த முதல் நான்கு மகன்கள்; அந்த மகன்கள் நால்வரையும் சபித்த யயாதி; முதுமையை ஏற்றுக் கொண்ட பூரு...

வைசம்பாயனர் சொன்னார், "யயாதி முதுமையால் பலவீனமடைந்து தனது தலைநகருக்குச் சென்று, தனது மூத்த மகன் யதுவை அழைத்து,(1) "அன்புக் குழந்தாய்! உசானஸ் என்று அழைக்கப்படும் காவியரின் சாபத்தால், பலவீனமடைந்து, தோல் சுருக்கம் ஏற்பட்டு, தலை மயிர் வெண்மையாகி முதுமை என்னை ஆட்கொண்டது. ஆனால், நான் இன்னும் எனது இளமையின் இனிமையில் மனநிறைவுகொள்ளவில்லை.(2) எனவே, ஓ யதுவே! எனது பலவீனத்துடன் கூடிய முதுமையை நீ ஏற்றுக் கொள்வாயாக. உனது இளமையைக் கொண்டு நான் இன்பம் அனுபவிப்பேன்.(3) ஆயிரம் வருடங்கள் கடந்ததும், உனது இளமையை உனக்குத் திருப்பி அளித்து, எனது முதுமையையும் பலவீனத்தையும் பெற்றுக் கொள்கிறேன்" என்றான்.(4)



யது, "பலவீனம் கொள்வதால் உண்பதிலும், குடிப்பதிலும் எண்ணற்றத் தொல்லைகள் இருக்கின்றன. எனவே, ஓ மன்னா, நான் உமது பலவீனத்தை ஏற்க மாட்டேன். இஃது எனது உறுதியானத் தீர்மானம்.(5) தலையில் வெண்மயிர் தாங்கி, மகிழ்ச்சியற்று, நரம்புகள் தளர்ந்து, உடலெங்கும் தோல் சுருக்கம் ஏற்பட்டு, உருக்குலைந்து, உறுப்புகளின் வலிமை குன்றி, நலிவடைந்து, எந்த வேலையையும் செய்ய இயலாத நிலை ஏற்பட்டு, நண்பர்களிடமும், தோழர்களிடமும் தோல்வியுற்று வாழ்வதே பலவீன நிலையாகும்.(6) எனவே, ஓ மன்னா! நான் அஃதை ஏற்க விரும்பவில்லை. ஓ மன்னா! உமக்கு நிறைய மகன்கள் இருக்கிறார்கள். அவர்கள் உமக்கு மிகவும் அன்பானவர்கள் ஆயிற்றே. நீர் அறத்தின் கட்டளைகளை அறிந்தவர். உமது மற்ற மகன்களிடம் உமது பலவீனத்தை ஏற்கச் சொல்லுங்கள்" என்றான்.(7)

யயாதி, "ஓ மகனே! நீ எனது இதயத்திலிருந்து உற்பத்தியானாய், ஆனால் எனக்கு உனது இளமையைத் தர மறுக்கிறாய். எனவே, உனது மகன்கள் மன்னர்களாக இருக்க மாட்டார்கள்" என்று சொல்லி, அடுத்த மகனான துர்வசுவிடம்,(8) "ஓ துர்வசு! எனது பலவீனத்துடன் கூடிய முதுமையை நீ ஏற்றுக் கொள்வாயாக. உனது இளமையைக் கொண்டு நான் இன்பம் அனுபவிப்பேன்.(9) ஆயிரம் வருடங்கள் கடந்ததும், உனது இளமையைத் திருப்பி அளித்து, எனது முதுமையையும் பலவீனத்தையும் பெற்றுக் கொள்கிறேன்" என்றான்.(10)

துர்வசு, "ஓ தந்தையே! நான் பலவீனத்தை விரும்பவில்லை. அது பசி, இன்பம், பலம், அழகு, அறிவு ஆகியவற்றையும், ஏன் உயிரையே கூட ஒரு மனிதனிடம் இருந்து எடுத்துவிடுகிறது" என்றான்.(11)

யயாதி அவனிடம், "நீ எனது இதயத்திலிருந்து உற்பத்தியானாய், ஆனால் எனக்கு உனது இளமையைத் தர மறுக்கிறாய். எனவே, உனது குலம் அருகிப் போகும்.(12) இழிந்தவனான நீ, அரச இரத்தம் கொண்ட மங்கையரிடம் பிள்ளைகளைப் பெறும் தாழ்ந்த குருதியுடையவர்களுக்கு மத்தியில் இருப்பாயாக. தூய்மையற்ற நீதிகள் மற்றும் நடைமுறைகளைப் பின்பற்றுபவர்களும், இறைச்சியில் வாழ்பவர்களும், குறுகிய புத்தி கொண்டவர்களும், தங்களுக்கு மேலானாவர்களுடைய மனைவியரை அடையத் தயங்காதவர்களும், பறவைகள் மற்றும் விலங்குகளின் நடைமுறைகளைக் கொண்டவர்களும், பாவிகளும், ஆரியரல்லாதவர்களும் {உன்னதர் அல்லாதவர்கான} ஆன மனிதர்களின் மன்னனாவாய்" என்றான்[1].(13-15)

[1] கும்பகோணம் பதிப்பில், "துர்வஸுவே! என் ஹ்ருதயத்திலிருந்து பிறந்த நீ உன் வயஸை எனக்குக் கொடாமையால் உன் ஸந்ததி நாசத்தையடையும். மூடனே! ஆசாரங்களிலும், தர்மங்களிலும் வ்யவஸ்தை தப்பினவர்களும், சாஸ்திரத்துக்கு மாறான நடையுள்ளவர்களும், மாம்ஸம் தின்பவர்களும், எல்லா வருணங்களுக்கும் தாழ்ந்தவர்களும், குருபத்தினிகளிடம் சேருகிறவர்களும், திர்யக்ஜாதியின் நடையுள்ளவர்களும், மிருகத்தன்மையுள்ளவர்களும், பாபிஷ்டர்களுமாகிய மிலேச்சர்களுக்கு நீ ராஜாவாவாய்" என்றிருக்கிறது.

வைசம்பாயனர் சொன்னார், "யயாதி, தனது மகன் துர்வசுவை இப்படிச் சபித்துவிட்டு, சர்மிஷ்டையின் மகன் திருஹ்யுவிடம்,(16) "ஓ திருஹ்யு! நிறத்தையும், அழகையும் அழிக்கும் எனது பலவீனத்தை ஆயிரம் வருடங்களுக்கு ஏற்றுக் கொண்டு, உனது இளமையை எனக்குத் தா.(17) ஆயிரம் வருடங்கள் கடந்ததும், உனது இளமையைத் திருப்பிக் கொடுத்து எனது பலவீனத்தையும் முதுமையையும் ஏற்றுக் கொள்கிறேன்" என்றான்.(18)

அதற்குத் திரஹ்யு, "ஓ மன்னா! பலவீனமடைந்தவன் யானைகளில் செல்வதையும், தேர்களில் செல்வதையும், குதிரைகளில் செல்வதையும், பெண்களையும் அனுபவிக்க முடியாது. அவனது குரல் கூடக் கரகரப்பாகிவிடும். எனவே, நான் உமது பலவீனத்தை ஏற்க விரும்பவில்லை" என்றான்.(19)

யயாதி, "நீ எனது இதயத்திலிருந்து உற்பத்தியானாய், ஆனால் நீ எனக்கு உனது இளமையைத் தர மறுக்கிறாய். எனவே, உனக்குப் பெரும் மகிழ்ச்சியைக் கொடுக்கும் விருப்பம் எதுவோ அது நிறைவேறாது.(20) குதிரைகளும், தேர்களும், யானைகளும், நல்ல வாகனங்களும், கழுதைகளும், காளைகளும், பல்லக்குகளும் செல்வதற்கான சாலைகளே இல்லாத, தெப்பங்களிலும், ஓடங்களிலும் மட்டுமே செல்லக்கூடிய களிமண்ணால் நிறைந்த தேசத்திற்கு பெயரளவுக்கே நீ மன்னனாக இருப்பாய்" என்று சபித்தான்.(21,22)

அடுத்தவனான அனுவிடம் யயாதி, "ஓ அனுவே! எனது பலவீனத்தையும், முதுமையையும் ஏற்றுக் கொள்வாயாக. நான் உனது இளமையைக் கொண்டு ஆயிரம் வருடங்களுக்கு இன்பங்களை அனுபவிக்கிறேன்" என்றான்.(23)

அதற்கு அனு, "பலவீனமானவர்கள் குழந்தைகளைப் போல உண்டு எப்போதும் அசுத்தமாக இருப்பர். அவர்களால் வேள்வித்தீயில் நெய்யைக் கூட ஊற்றமுடியாது. எனவே, நான் உமது முதுமையை ஏற்க விரும்பவில்லை" என்றான்.(24)

யயாதி அவனிடம், "நீ எனது இதயத்திலிருந்து உற்பத்தியானாய், ஆனால் எனக்கு உனது இளமையைத் தர மறுக்கிறாய். நீ பலவீனத்தில் பெரும் குறைகளைக் கண்டுபிடிக்கிறாய். எனவே, பலவீனம் உன்னை வந்தடையட்டும்.(25) ஓ அனுவே! உனது சந்ததியினரும் இளமையை அடையும் போது மரணத்தை அடைவர். நீ நெருப்பின் முன்பு அமர்ந்து வேள்விகளைச் செய்ய முடியாது" என்று சபித்தான்.(26)

இறுதியாக யயாதி, தனது இளைய மகன் பூருவிடம் சென்று, "ஓ பூரு! நீ எனது இளைய மகனாவாய்! ஆனால் நீ எல்லோருக்கும் முதல்வனாவாய்! உசானஸ் என்று அழைக்கப்படும் காவியரின் {சுக்ரனின்} சாபத்தால் பலவீனம், தோல் சுருக்கம், வெண் முடி ஆகியன என்னை ஆட்கொண்டன. இருப்பினும் எனது இளமையை நான் முழுமையாக அனுபவிக்கவில்லையே. ஆகவே, ஓ பூரு, எனது பலவீனத்தையும், முதுமையையும் ஏற்றுக் கொள்! உனது இந்த இளமையைக் கொண்டு நான் சில வருடங்களுக்கு இன்பத்தை அனுபவித்துக் கொள்கிறேன்.(27,28) ஆயிரம் வருடங்கள் கடந்ததும், நான் உனது இளமையை உனக்குத் திருப்பித் தந்து, எனது முதுமையை ஏற்றுக் கொள்கிறேன்" என்றான்."(29)

வைசம்பாயனர் சொன்னார், "இப்படி மன்னனால் கேட்கப்பட்ட பூரு பணிவுடன், "ஓ ஏகாதிபதியே! நீர் சொல்வதை நான் செய்கிறேன். ஓ மன்னா, உமது பலவீனத்தையும், முதுமையையும் நான் ஏற்றுக் கொள்கிறேன்.(30) எனது இளமையை ஏற்றுக் கொண்டு வாழ்வின் இனிமையை அனுபவித்துக் கொள்வீராக.(31) உமது கட்டளைப்படி பலவீனத்தாலும், முதுமையாலும் ஆட்கொள்ளப்பட்டு, எனது இளமையை உமக்குக் கொடுத்து நான் வாழ்ந்து வருகிறேன்" என்றான்.(32)

யயாதி, "ஓ பூரு! உன்னிடம் நான் மனநிறைவு கொண்டேன். அப்படி நிறைவடைந்ததால் சொல்கிறேன். உனது அரசாங்கத்தில் வாழும் மக்கள் அவர்கள் விருப்பங்கள் முழுவதும் ஈடேறி மகிழ்ச்சியாக இருப்பர்" என்றான்.(33)

இப்படிச் சொன்ன அந்தப் பெரும் துறவி யயாதி, காவியரை {சுக்ராச்சாரியரை} நினைத்துத் தனது பலவீனத்தையும், முதுமையையும் அந்த உயர் ஆன்மாவான பூருவுக்கு அளித்தான்" {என்றார் வைசம்பாயனர்}.(34)


ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்