Wednesday, May 01, 2013

தந்தைக்குக் கீழ்ப்படியும் மகனே வாரிசு! | ஆதிபர்வம் - பகுதி 85

The Son who obeys the father, shall be his heir! | Adi Parva - Section 85 | Mahabharata In Tamil

(சம்பவ பர்வம் - 21)

பதிவின் சுருக்கம் : பூருவிடம் இருந்து மீண்டும் முதுமையைப் பெற்றுக் கொண்ட யயாதி; பூருவை அரியணையில் அமர்த்த விரும்பிய யயாதி; பூருவின் பட்டமேற்பை ஏற்றுக் கொண்ட பிராமணர்களும் பிற வர்ணத்தாரும்...

வைசம்பாயனர் சொன்னார், "அந்தச் சிறந்த ஏகாதிபதியான நகுஷ மைந்தன் யயாதி, பூருவின் இளமையைப் பெற்றுக் கொண்டு, பெரும் மனநிறைவு கொண்டான். அதன்பிறகு அவன் தனது சக்திக்கு உட்பட்ட இன்பங்களைக் காலத்திற்குத் தகுந்தவாறு அனுபவித்தான்.(1) எனவே, அவன் பெரும் இன்பத்தைப் பெற்றான். ஓ மன்னா {ஜனமேஜயா}! அறத்திற்கெதிரான எந்தச் செயலையும் அவன் செய்யவில்லை.(2) தேவர்களை வேள்விகளாலும், பித்ருக்களை தனது சிரார்தங்களாலும் மகிழ்வித்தான். ஏழ்மையானவர்களுக்கு உணவு கொடுத்து மகிழ்வித்தான், வைசியர்களைக் காத்து மகிழ்வித்தான், சூத்திரர்களை அன்பால் மகிழ்வித்தான். எல்லாக் குற்றவாளிகளுக்கும் தகுந்த தண்டனைகளைக் கொடுத்தான்.(3,4) யயாதி, குடிமக்களின் எல்லாப் பகுதிகளையும் மனநிறைவு கொள்ளச் செய்து அவர்களைக் காத்து மற்றுமொரு இந்திரனைப் போல இருந்தான்.(5)



சிங்கத்தின் வீரத்தைக் கொண்ட அந்த ஏகாதிபதி, தனது இளமையைக் கொண்டு தனது கட்டுக்குள் இருக்கும் எல்லா இன்பங்களையும் அனுபவித்தான், அறம் சார்ந்து எல்லையற்ற மகிழ்வை அடைந்தான்.(6) தனது விருப்பத்துக்குட்பட்ட அனைத்தையும் அவன் அனுபவித்தான். அவன் எப்போது தனது ஆயிரம் வருட நிறைவு வரப்போகிறது என்று நினைத்தானோ அப்போதே துன்பப்பட்டான்.(7) காலத்தின் மர்மங்களை அறிந்த அந்த மன்னன், தகுந்த காலங்களையும், கஷ்தங்களையும்[1] கவனித்து வைத்து,(8) சில நேரங்களில் (தேவ நடனமாது) விஸ்வாசியுடன் இந்திரனின் அழகிய நந்தவனத்திலும், சில நேரங்களில் அளகையிலும் (குபேரனின் நகரத்திலும்), சில நேரங்களில் வடக்கே இருக்கும் மேரு மலையின் உச்சியிலும் விளையாடினான்.(9)

[1] கஷ்தம் என்பது கண் சிமிட்டுவதற்கு ஆகக்கூடிய நேரமாகும். 13 கஷ்தங்கள் = 1 காலம், 30 காலங்கள் = 1 முகூர்த்தம்.  கண்சிமிட்டுவதற்கு ஆகும் காலத்தை இந்து புராணங்கள் நிமிஷங்கள் என்றன. இஷ்வாகுவின் மகன்  நிமி ஆவான். அவன் வசிஷ்டரின் கட்டளையை மீறி தகாத இடத்தில் யாகம் செய்ததால் தேகமின்றிப் போகச் சபிக்கப்பட்டான். அவன் இருக்க இடம் கேட்டபொழுது கண் இமையை இடமாக அளித்தார் வசிஷ்டர். அதனால் கண் சிமிட்டும் ஆகும் காலம் அந்த காலத்தில் நிமிஷம் ஆனது. மேற்கத்திய காலக்கணிப்பில் நிமிடம் வேறு விதமாக அளக்கப்படுகிறது. இந்த நிமி ஆகிய விதேகன் உண்டாக்கிய தேசமே விதேக தேசம். அவன் வழி வந்தவர்களே ஜனகர்கள்.கண்சிமிட்டும் நேரம் - 1 நிமிஷம்(106.7 மில்லி செகண்ட்) ; 30 நிமிஷம்  -  1 காஷ்டை (3.2 செகண்டுகள்);   30 காஷ்டை   -     1 காலம் (1.6 மினிட்டுகள்); 30 காலங்கள்  -     1 முகூர்த்தம் (48 மினிட்டுகள்)

அந்த அறம் சார்ந்த மன்னன் எப்போது ஆயிரம் வருடங்கள் நிறைந்தது என்று நினைத்தானோ அப்போது பூருவை வரவழைத்து அவனிடம்,(10) "ஓ எதிரிகளை அடக்குபவனே! ஓ மகனே! உனது இளமையைக் கொண்டு, எனது சக்திக்குட்பட்டு, வாழ்வின் இன்பங்களை அதனதன் காலத்தில் எனது முழு விருப்பம் ஈடேற அனுபவித்தேன்.(11) இருப்பினும், நம் விருப்பங்கள் எப்போதும் அதை அனுபவித்துவிடுவதனால் நிறைவடைவதில்லை. ஆனால், அதை அனுபவிப்பதனால், நெருப்பில் நெய் ஊற்றப்பட்டால் வளர்வது போலவே அதுவும் வளர்கிறது.(12) ஒரு தனி மனிதன் நெல், கோதுமை, வெள்ளி, தங்கம், ரத்தினங்கள், விலங்குகள், பெண்கள் என அனைத்தும் கொண்ட இந்த முழு உலகத்துக்கே தனித் தலைவனாக இருந்தாலும், அவன் மனநிறைவு கொள்ள மாட்டான். எனவே, இன்பதாகம் என்பது கைவிடப்பட வேண்டியது.(13) உண்மையான மகிழ்ச்சி என்பது, எவரொருவர் இந்த உலகப்பொருட்களின் மீதிருக்கும் தாகத்தைக் கைவிடுகிறார்களோ அவர்களுக்கே கிடைக்கும். அந்தத் தாகம் என்பதைத் தீயவர்களாலும், பாவிகளாலும் கைவிட முடியாது.  நாம் வாழ்வில் தோல்வியுறும்போதும் அந்தத் தாகம் தோல்வியுறுவதில்லை. அந்தத் தாகம் என்பது மனிதனின் மரணத்திற்கான நோயாகும்.(14) இந்த ஆயிரம் வருடமும் எனது இதயம் எனது விருப்பங்களை நிறைவேற்றுவதிலேயே நிலைத்திருந்தது. இருப்பினும், அவற்றின் மீது எனக்கிருந்த தாகம், ஒவ்வொரு நாளும் அதிகரித்தே வந்தது.(15) எனவே, வருங்காலங்களில் கானகத்திற்குச் சென்று அங்கு இருக்கும் மானின் மருட்சியுடன் அமைதியாக உலகப் பொருட்களின் மீது எனது இதயத்தைச் செலுத்தாமல் பிரம்மனின் மீது செலுத்தி அந்தத் தாகத்தைக் கைவிடப்போகிறேன்.(16) ஓ பூரு! உன்னிடம் நான் பெரும் மனநிறைவுகொண்டேன்! வளமை உனதாகட்டும்! இந்த உனது இளமையைத் திரும்பப் பெற்றுக் கொள்! எனது அரசாங்கத்தையும் பெற்றுக் கொள்வாயாக. நிச்சயமாக நீயே எனக்குப் பெரும் சேவையைச் செய்த எனது மகனாவாய்" என்றான்.(17)

வைசம்பாயனர் தொடர்ந்தார், "பிறகு, நகுஷ மைந்தனான யயாதி, தனது பலவீனத்தைத் திரும்பப் பெற்றுக் கொண்டான். அவனது மகன் பூரு தனது இளமையைத் திரும்பப் பெற்றுக் கொண்டான்.(18) யயாதி தனது இளைய மகனான பூருவை அரியணையில் அமர்த்த விருப்பங்கொண்டான். ஆனால் பிராமணர்களைத் தலைமையாகக் கொண்ட நான்கு வகையினரும் {வர்ணத்தாரும்} மன்னனிடம்,(19) "ஓ மன்னா! தேவயானியின் மூலம் உனக்குப் பிறந்த மூத்த மகனும், பெரும் சுக்ரனின் பேரனுமான யது இருக்கும்போது, நீர் எப்படி உமது அரசாங்கத்தைப் பூருவுக்குக் கொடுப்பீர்?(20) நிச்சயமாக யதுவே உமது மூத்த மைந்தன்; அவனுக்குப் பிறகு துர்வசுவும், அதற்குப் பிறகு சர்மிஷ்டைக்குப் பிறந்த மைந்தர்கள் திருஹ்யுவும், அனுவும் இருக்கிறார்கள். அதன்பிறகே பூரு வருகிறான்.(21) மூத்தவர்கள் இருக்கும்போது இளையவன் எப்படி அரியணைக்கு அருகதையாவான்? இதை நாங்கள் உமக்குச் சொல்லிக் கொள்கிறோம். நீர் தர்மம் எதுவோ அதைச் செய்யும்" என்றனர்.(22)

யயாதி, "பிராமணர்களை முதன்மையாகக் கொண்ட நால்வகை மக்களே! நான் என் அரசாங்கத்தை எனது மூத்த மகன் யதுவுக்கு ஏன் கொடுக்கக்கூடாது என்பதைக் கேட்பீராக.(23) தன் தந்தைக்குக் கீழ்ப்படியாதவன் மகனாகமாட்டான் என்பது ஞானமுள்ளோர் வாக்கு.(24) தனது பெற்றோர்கள் சொல்வதை ஏற்று நடந்து, அவர்களின் நன்மையில் ஆர்வம் கொண்டு, அவர்களால் எல்லா வகையிலும் ஏற்றுக் கொள்ளப்பட்டவர்களே சிறந்த மைந்தர்களாவர்.(25) யதுவாலும், ஏன் துர்வசுவாலும் நான் அலட்சியம் செய்யப்பட்டேன். திருஹ்யு மற்றும் அனுவாலும் நான் அலட்சியமே செய்யப்பட்டேன்.(26) பூரு ஒருவனே எனது வார்த்தைக்குக் கீழ்ப்படிந்தான். அவனாலேயே நான் பெரிதும் மதிக்கப்பட்டேன். எனவே, அனைவருக்கும் இளையவனே எனது வாரிசாவான். அவன் எனது பலவீனத்தை ஏற்றுக் கொண்டான்.(27) நிச்சயமாகப் பூருவே எனது நண்பனாவான். என்னால் பெரிதும் ஏற்றுக் கொள்ளும் செயலை அவன் செய்தான். எனக்குக் கீழ்ப்படிந்து நடக்கும் எனது மகனே எனக்கு அடுத்த மன்னனாகி, இந்த முழு உலகத்தையும் தன் கட்டுக்குள் கொண்டு வருவான் என்பது கவியின் மகனான சுக்ரனின் கட்டளையும் ஆகும்.(28) எனவே, நான் உங்களை வேண்டிக் கொள்வதெல்லாம், பூரு இந்த அரியணையை அலங்கரிக்கட்டும் என்பதுதான்" என்றான்.(29)

அதன் பிறகு அந்த மக்கள், "அஃது உண்மைதான். ஓ மன்னா! பெற்றோரின் நன்மையில் விருப்பம் உள்ள மகனே, அவன் இளையவனாக இருந்தாலும் வளமாக இருக்க அருகதையுள்ளவன்.(30) எனவே, உமக்கு நன்மையைச் செய்த பூரு உமது முடியைத் தாங்கத் தகுதி வாய்ந்தவனே. சுக்ரனே இக்காரியத்தில் கட்டளையிட்டிருப்பதால், நாங்கள் சொல்வதற்கு வேறு எதுவும் இல்லை" என்றனர்."(31)

வைசம்பாயனர் தொடர்ந்தார், "மக்களால் இப்படிச் சொல்லப்பட்ட நகுஷ மைந்தன் {யயாதி}, அரியணையில் பூருவை அமர்த்தினான்.(32) உரிய சடங்குகளுடன் அரசாங்கத்தைப் பூருவுக்கு அளித்த அந்த ஏகாதிபதி, தனது தலைநகரை விட்டு பிராமணர்களுடனும், துறவிகளுடனும் கானகமேகினான்.(33) யதுவின் மைந்தர்கள் யாதவர்கள் என்ற பெயரில் அழைக்கப்பட்டார்கள்; துர்வசுவின் மைந்தர்கள் யவனர்கள் என்று அழைக்கப்பட்டார்கள்; திருஹ்யுவின் மைந்தர்கள் போஜர்கள் என்று அழைக்கப்பட்டார்கள், அனுவின் மைந்தர்கள் மிலேச்சர்களாக இருந்தார்கள்.(34) பூருவின் வம்சம், பௌரவர்கள் என்று அழைக்கப்பட்டனர். ஓ ஏகாதிபதி {ஜனமேஜயா}! நீ அந்த வழியிலேயே (பௌரவர்கள்) ஆயிரம் வருடங்கள் உனது உணர்ச்சிகளைக் கட்டுக்குள் வைத்து அரசாளப் பிறந்திருக்கிறாய்" என்றார்.(35)


ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்