Friday, May 24, 2013

சத்தியவதி பீஷ்மருக்கிட்ட கட்டளை! | ஆதிபர்வம் - பகுதி 103

The command of Satyavati to Bhisma! | Adi Parva - Section 103 | Mahabharata In Tamil

(சம்பவ பர்வம் - 39)

பதிவின் சுருக்கம் : பீஷ்மரிடம் பேசிய சத்தியவதி; தன் பிரம்மச்சர்ய விரதத்தை சத்தியவதிக்கு நினைவூட்டிய பீஷ்மர்...

வைசம்பாயனர் சொன்னார், "பேறற்றவளும், அவல நிலையில் இருந்தவளுமான சத்தியவதி தனது மகனை நினைத்துத் துக்கத்தில் ஆழ்ந்தாள். தனது மருமகள்களுடன் சேர்ந்து, இறந்து போன தனது மகனின் ஈமக்கடன்களை முடித்து, அழுது கொண்டிருக்கும் மருமகள்களையும், ஆயுதம் பயன்படுத்துபவர்களில் முதன்மையான பீஷ்மரையும் தன்னால் இயன்ற அளவு தேற்றினாள். தனது பார்வையை அறத்தின் கண் திருப்பி, தனது தந்தை வழி மற்றும் தாய்வழிகளையும் ஆராய்ந்து பீஷ்மரிடம்,(1,2) "பிண்டதானம், சாதனைகள் மற்றும் குரு வழி வந்த சந்தனுவின் பரம்பரைத் தொடர்ச்சி ஆகியன இப்போது உன் கைகளிலேயே இருக்கின்றன.(3) நற்செயல்களும் மோட்சமும் எப்படிப் பிரியாதனவோ, அப்படி இந்த நெடும் வாழ்க்கையில் உண்மையும் நம்பிக்கையும் பிரியாதன, அறம் உன்னிடம் இருந்து பிரியாததாக இருக்கிறது.(4) ஓ அறம் சார்ந்தவனே, அறத்தின் விதிகளை அதன் சுருதிகளுடனும், வேதங்களின் கிளைகளுடனும் நன்கறிந்தவன் நீ.(5) நீ அறத்தாலும், குடும்பச் சடங்குகளின் ஞானத்தாலும் சுக்கிரனுக்கும் அங்கீரசுக்கு நிகரானவன். உன்னால் கடுமையான சூழ்நிலைகளில் புதிய விதிகளைக் கண்டெடுக்க முடியும்.(6) எனவே, ஓ அறம் சார்ந்த மனிதர்களில் முதன்மையானவனே, உன்னையே நான் பெரிதும் நம்பியிருக்கிறேன். நான் உன்னிடம் ஒரு காரியத்தைப் பற்றிச் சொல்கிறேன். அதைக் கேட்டுவிட்டு அதன்படி நடப்பதா? வேண்டாமா? என்று நீ முடிவெடுத்துக் கொள்வாயாக.(7)



ஓ மனிதர்களில் காளையே, எனது மகனும், உன் அன்புக்குரிய தம்பியாக இருந்தவனுமான அந்த பெரும் சக்திகொண்டவன் {விசித்திரவீரியன்}, இளம் வயதிலேயே  பிள்ளையில்லாதவனாக சொர்க்கத்திற்குச் சென்றுவிட்டான். காசி மன்னனின் இனிமையான மகள்களான உனது தம்பியின் மனைவிமார், அழகும் இளமையும் கொண்டு பிள்ளைப் பேறில் விருப்பம் கொண்டுள்ளனர்.(8,9) எனவே, ஓ வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனே, எனது கட்டளையின் பேரிலும், நமது குலத்தின் விருத்திக்காகவும் அவர்களிடம் நமது சந்ததியை நீ உண்டாக்குவாயாக. அறமிழக்காமல், அதைக் காப்பதே உனக்குத் தகும்.(10) நீ அரியணையில் அமர்ந்து, பாரதர்களின் அரசாங்கத்தை ஆட்சி செய்வாயாக. ஒரு மனைவியை முறையாகத் திருமணம் செய்து கொள்வாயாக. உனது மூதாதையர்களை நரகத்திற்குள் அழுத்திவிடாதே" என்றாள்.(11)

வைசம்பாயனர் தொடர்ந்தார், "இப்படித் தனது தாயாலும், நண்பர்களாலும், உறவினர்களாலும் சொல்லப்பட்ட அந்த எதிரிகளை ஒடுக்கும் அறம் சார்ந்த பீஷ்மர், அறத்தின் விதிகளுக்குட்பட்டே பதிலுரைத்தார்,(12) "ஓ தாயே, நீ சொல்வது அறத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்டதே. ஆனால், புத்திரப்பேறு குறித்த எனது சபதத்தையும் நீ கவனத்தில் கொள்ள வேண்டும்.(13) உன் திருமணக் காலத்தில் நடந்த அத்தனையும் உனக்குத் தெரியும். ஓ சத்தியவதி, நான் ஏற்ற உறுதிமொழியை மறுபடியும் சொல்கிறேன்.(14) நான் மூன்று உலகத்தையும், சொர்க்கத்தின் அரசாங்கத்தையும், அல்லது அதையும் விட மேன்மையானது என்று எது இருந்தாலும் அத்தனையும் துறப்பேன். ஆனால், உண்மையை {சத்தியத்தைத்} துறக்க மாட்டேன்.(15) பூமி தனது மணத்தைத் துறக்கலாம், நீர் அதன் நீர்மையைத் துறக்கலாம், ஒளி அதன் ஒளிரும் தன்மையைத் துறக்கலாம், காற்று அதன் தொடு உணர்வைத் துறக்கலாம்,(16) சூரியன் அதன் நெருப்பையும் வெப்பத்தையும் துறக்கலாம், சந்திரன் குளிர்ந்த கதிர்களைத் துறக்கலாம், வெளி {வானம்} அதன் ஒலி எழுப்பும் தன்மையைத் துறக்கலாம்,(17) இந்திரன் தனது ஆற்றலைத் துறக்கலாம், தர்மன் தர்மத்தைத் துறக்கலாம், ஆனால் என்னால் உண்மையைத் துறக்க முடியாது" என்றார்.(18)

சக்தியைச் செல்வமாகக் கொண்ட தனது மகன் இப்படிச் சொல்லவும், சத்தியவதி பீஷ்மரிடம்,(19) "ஓ உண்மையை உன் பலமாகக் கொண்டவனே, சத்தியத்தில் உனக்கு இருக்கும் அர்ப்பணிப்பை நான் அறிவேன். நீ நினைத்தால், உனது சக்திகொண்டு, புதிதாக இன்னும் மூன்று உலகங்களை உருவாக்க முடியும்.(20) எனது காரியத்தில் உனது ஆணை என்ன என்பது எனக்குத் தெரியும். ஆனால் இந்த அவசர காலத்தைக் கருத்தில் கொண்டு, உனது முன்னோர்களுக்குச் செய்யும் கடமையாக நினைத்து இந்தச் சுமையை நீ சுமக்க வேண்டும்.(21) ஓ எதிரிகளைத் தண்டிப்பவனே, நண்பர்களும் உறவினர்களும் துயரடையாதிருக்க, நமது குலத் தொடர்ச்சி அறுந்துவிடாமல் இருக்க, என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்வாயாக" என்றாள்.(22)

பிள்ளையை இழந்ததால் அறத்திற்கு இணக்கமாகப் பேசமுடியாமல் இப்படி அழுது கொண்டு பரிதாபகரமாக இருக்கும் சத்தியவதியால் தூண்டப்பட்ட பீஷ்மர், அவளிடம்,(23) "ஓ அரசியே, அறத்திலிருந்து உனது பார்வையை விலக்காதே. ஓ! இப்படிச் சொல்லி எங்களை நீ அழித்துவிடாதே. ஒரு க்ஷத்திரியனால் உண்மை மீறப்படுவதை அறத்தின் விதிகள் ஏற்றுக் கொள்வதில்லை.(24) ஓ அரசியே, குலம் அழிந்துவிடாமல் இருக்க க்ஷத்திரியர்கள் இதுவரை என்ன செய்திருக்கிறார்கள்.  நாம் என்ன செய்யலாம் என்று உனக்குக் கூடிய விரைவில் சொல்கிறேன்.  சந்தனுவின் குலம் பூமியில் அழிந்துவிடாமல் காக்கத் தக்க நடவடிக்கையைச் சொல்கிறேன்.(25) நான் சொல்வதைக் கேட்டுவிட்டு, கற்ற புரோகிதர்களிடமும், சாதாரண நேரங்களில் கைக்கொள்ளக்கூடாத சமூக நடத்தையை மீறி, ஆபத்துக் காலத்தில் மட்டும் செய்யப்படும் செயல்களில் நன்கு பரிச்சயமுள்ளவர்களிடமும் ஆலோசனை செய்து, மேற்படி நடக்க வேண்டியதைக் குறித்து முடிவெடுத்துக் கொள்" என்றார் {பீஷ்மர்}.(26)


ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்