Monday, June 10, 2013

வானப்பிரஸ்தம் ஏற்ற பாண்டு! - ஆதிபர்வம் பகுதி 119

Pandu entered vanaprastha mode of life! | Adi Parva - Section 119 | Mahabharata In Tamil

(சம்பவ பர்வம் - 55)

பதிவின் சுருக்கம் : தனக்குக் கிடைத்த சாபத்தைத் தன் மனைவியரிடம் சொன்ன பாண்டு; தன் மனைவியரை நகருக்குத் திரும்புமாறு சொன்ன பாண்டு; மறுத்த அவனது மனைவியர்; வானப்பிரஸ்த வாழ்வு முறையை ஏற்றது; தன் பணியாட்களை ஹஸ்தினாபுரத்திற்குத் திருப்பியனுப்பியது; கவலையடைந்த திருதராஷ்டிரன்; சதசிருங்க மலையை அடைந்த பாண்டு...

வைசம்பாயனர் சொன்னார், "மானின் இறப்புக்குப் பிறகு, மன்னன் பாண்டு தனது மனைவியரிடம் {குந்தி மற்றும் மாத்ரியிடம்} மிகவும் துயரப்பட்டுப் பெரிதும் அழுதான்.(1)

அவன் {பாண்டு}, "தீயவர்கள், அறம்சார்ந்த குடும்பங்களில் பிறந்தாலும், ஆசையினால் உந்தப்பட்டு, அவர்களின் செயல்களின் கனியாக பேரிடரை வரவழைத்துக் கொள்கின்றனர்.(2) அறம் சார்ந்த சந்தனுவுக்குப் பிறந்திருந்தாலும், எனது தந்தை {விசித்திரவீரியன்}, காமத்திற்கு அடிமையானதாலேயே இளமையிலேயே இறந்து போனதாக நான் கேள்விப்பட்டிருக்கிறேன்.(3) அந்தக் காமாந்தக மன்னனின் நிலத்தில் {அம்பிகை, அம்பாலிகை என்ற அவரது மனைவியரிடம்}, உண்மையையே பேச்சாகக் கொண்ட சிறப்புவாய்ந்த முனிவர் கிருஷ்ண துவைபாணர் {வியாசர்} என்னைப் பெற்றார்.(4) அப்படிப்பட்ட ஒருவரின் மகனான நான், இதயத்தில் தீய எண்ணம் கொண்டு, கானகத்தில் மான்களைத் துரத்திக் கொண்டு வாழ்ந்து வருகிறேன். ஓ! தேவர்கள் என்னைக் கைவிட்டனரே!(5)

நான் இனி முக்திக்கு வழி தேட வேண்டும். பிள்ளைகள் பெற வேண்டும் என்ற ஆசையும், மற்றும் உலகம் சம்பந்தமான பொருட்களுமே முக்திக்கான பெரும் இடையூறு. எனது தந்தையின் அழிவற்ற உதாரணத்தால் இனி நான் பிரம்மசரிய வாழ்க்கைமுறையை ஏற்று வாழப்போகிறேன்.(6) நான் நிச்சயமாக எனது உணர்ச்சிகளை எனது முழுக்கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து, கடுமையான தவங்கள் செய்யப் போகிறேன். எனது மனைவிகள் {குந்தியையும் மாத்ரியும்} மற்றும் மற்ற உறவினர்களைக் கைவிட்டு, எனது சிரத்தை மழித்து, என்னைத் தாங்கிக் கொள்ள இங்கே நின்று கொண்டிருக்கும் மரங்களிடம் இரந்து, தனியாக உலகம் முழுவதும் சுற்றப் போகிறேன்.(7) அன்பு, வெறுப்பு ஆகியவற்றைக் கைவிட்டு, புழுதியால் எனது உடலை மறைத்து, மரத்தின் கீழோ, கைவிடப்பட்ட வீடுகளையோ எனது வசிப்பிடமாக்கிக் கொண்டு வாழப் போகிறேன்.(8) இன்பம், துன்பம் ஆகியவற்றின் விளைவுகளைப்பற்றிக் கருதாமல், அவதூறையும் புகழ்ச்சியையும் ஒன்றாகக் கருதுவேன். நான் வாழ்த்து கூறவோ பெறவோ மாட்டேன். நான் எல்லோருடனும் அமைதியாக இருந்து, பரிசுகளை ஏற்காமல் இருப்பேன்.(9) நான் எவரையும் ஏமாற்றாமல், ஒருவரிடமும் புருவம் சுருக்காமல் இருப்பேன். ஆனால், எப்போதும் மகிழ்ச்சியுடன் இருந்து, எல்லா உயிரினத்தின் நன்மைக்கும் என்னை அர்ப்பணிப்பேன்.(10)

நான் நான்கு வகைப்பட்ட உயிரனங்களுக்கு (முட்டையிடும் இனம், முட்டையிடாமல் குஞ்சு ஈனும் இனம், புழுக்கள் மற்றும் தாவரங்கள்) எந்தத் தீங்கும் செய்ய மாட்டேன்.  மாறாக அனைத்து உயிர்களையும் எனது பிள்ளைகளைப் போல எண்ணி அவற்றைச் சமமாக நடந்து கொள்வேன்.(11) ஒரு நாளைக்கு ஒரு முறை ஐந்திலிருந்து பத்துக் குடும்பங்களிடம் பிச்சை கேட்பேன். அவற்றில் எனக்கு எதுவும் கிடைக்கவில்லை என்றால் அன்று முழுதும் உணவில்லாமல் இருப்பேன். ஒருமுறைக்கு மேல் ஒருவரிடமும் பிச்சை கேட்க மாட்டேன்.(12) நான் ஏழு அல்லது பத்து வீடுகள் வலம் வந்தும் எனக்கு எதுவும் கிடைக்கவில்லை என்றாலும், பேராசையினால் உந்தப்பட்டு எனது வலத்தை {பிச்சைக்கேட்டுத் திரிவதை} நீட்ட மாட்டேன். எனக்குப் பிச்சை கிடைத்தாலும், கிடைக்காவிட்டாலும், சலனப்படாமல் பெருந்துறவியைப் போல இருப்பேன்.(13) ஒருவன் எனது கரத்தில் ஒன்றைக் கோடரியால் வெட்டினாலும், மற்றொருவன் எனது மற்றொரு கரத்தில் சந்தனக்குழம்பைப் பூசினாலும், நான் அவ்விருவரையும் சமமாகவே மதிப்பேன். ஒருவருக்கு வளமையையும் மற்றவருக்குப் பெருந்துன்பத்தையும் விரும்பமாட்டேன்.(14) வாழ்வில் மகிழ்வோ, மரணத்தில் துயரோ அடைய மாட்டேன். வாழ்வோ, சாவோ எதையும் நான் விரும்ப மாட்டேன்.(15)

எனது இதயத்திலிருக்கும் எனது பாவங்களைக் கழுவி, மகிழ்ச்சியைத் தரவல்ல புனிதமான கடமைகளை நல்ல நேரத்தில், நாளில், காலத்தில் அளவு கடந்து செய்வேன். மேலும் அறம், பொருள், மற்றும் புலனுணர்வுகள் ஆகியவற்றைத் தரும் அனைத்துச் செயல்களையும் துறந்திருப்பேன். உலகின் அனைத்துப் பாவங்கள் மற்றும் பழிகளிலிருந்து விடுபட்டு, காற்றைப் போல யாருக்கும் கட்டுப்படாமல் இருப்பேன்.(16-18) இவ்வழியிலேயே எப்போதும் செயல்பட்டு அச்சமற்ற பாதையில் பயணித்து, இறுதியாக எனது வாழ்வை முடித்துக் கொள்வேன்.(19) பிள்ளைகளைப் பெறும் சக்தியை இழந்த நான், துன்பம் நிறைந்த இவ்வுலகின் தீய பாதையில் செல்வதற்காக என் கடமையில் இருந்து நிச்சயம் பிறழ மாட்டேன்.(20) உலகத்தால் மதிக்கப்பட்டாலும், மதிக்கப்படாவிட்டாலும், எந்த மனிதன் பேராசையால் பிறரிடம் பிச்சையெடுப்பதைப் போலப் பார்க்கிறானோ, அவன் நிச்சயம் ஒரு நாயைப் போலவே நடந்து கொள்வான். (படைப்புசக்தியற்ற நான், பிள்ளை பெறும் விருப்பத்தால், எனக்குப் பிள்ளைகளைக் கொடுக்கும்படி பிறரிடம் நிச்சயம் வேண்டக்கூடாது)" என்றான் {பாண்டு}."(21)

வைசம்பாயனர் தொடர்ந்தார், "அந்த மன்னன் {பாண்டு} தனது மனைவியரான குந்தி மற்றும் மாத்ரி ஆகிய இருவரிடம் துயரத்துடன் அழுதபடியே,(22) "நம்மை நம்பி இருக்கும் கோசல இளவரசிகள் {பாண்டுவின் தாய்மாரான அம்பிகை மற்றும் அம்பாலிகை}, விதுரன், நமது நண்பர்களுடன் கூடிய மன்னர் {திருதராஷ்டிரன்}, பெரிதும் மதிக்கப்படும் சத்யவதி, பீஷ்மர், நமது குடும்பப் புரோகிதர்கள், சோம பானம் குடித்துக் கடும் தவம் இருக்கும் சிறப்புமிகு பிராமணர்கள் மற்றும் மூத்த குடிமக்கள் ஆகியோருக்குப் பாண்டு துறவு வாழ்வு வாழக் கானகத்திற்குள் புகுந்தான் என்று தெரிவிப்பீர்களாக" என்றான்.(23,24)

துறவு வாழ்க்கை வாழ எண்ணும் தங்கள் தலைவனின் {பாண்டுவின்} வார்த்தைகளைக் கேட்ட குந்தியும், மாத்ரியும் சரியான வார்த்தைகளால் அவனை {பாண்டுவை} அணுகி,(25) "ஓ பாரதக் குலத்தின் காளையே, நீர் துறவு வாழ்க்கை வாழ, உங்களால் மணந்து கொள்ளப்பட்ட மனைவியருடன் கைக்கொள்ளக்கூடிய பல வாழ்க்கை முறைகள் இருக்கின்றன.(26) அவற்றால் உமது உடல் வீடுபேற்றை அடைந்து, நீரும் வெகுமதியாக சொர்க்கத்தை அடைவீர். (உமது செயலின்) பெருங்கனியாக நீர் நிச்சயம் சொர்க்கத்தின் தலைவராவீர்.(27) நாங்களும், எங்கள் தலைவனின் {பாண்டுவின்} துணையோடு, உணர்ச்சிகளை அடக்கி, ஆடம்பரத்தை விட்டு, கடும் நோன்புகள் இருந்து, அந்த நன்மையைப் பெறுவோம்.(28) ஓ மன்னா {பாண்டு}, ஓ பெரும் ஞானம் கொண்டவரே! நீர் எங்களைக் கைவிட்டால், நாங்கள் இந்த நாளிலேயே இந்த உலகத்தை விட்டகல்வோம்" என்றனர்.(29)

பாண்டு, "இந்த முடிவு உங்கள் அறத்தின் தன்மையால் ஏற்பட்டது. எனவே, நான் உங்கள் இருவருடனும் என் தந்தையின் அழிவற்ற பாதையில் பயணிப்பேன்.(30) நாடு நகரங்களின் ஆடம்பரங்களைக் கைவிட்டு, மரப்பட்டைகளை ஆடைகளாக {மரவுரிகளை} அணிந்து, பழங்களையும் கிழங்குகளையும் உண்டு, ஆழ்ந்த கானகத்திற்குள் தீவிரத் தவங்கள் இயற்றுவேன்.(31) காலையும் மாலையும் குளித்து ஹோமம் செய்வேன். குறைவாக உண்டு எனது உடலைக் குறைத்து, மரப்பட்டைகளையும், தோலாடைகளையும் அணிந்து, எனது தலையில் சடாமுடி தரிப்பேன்.(32) வெப்பத்திற்கும், குளிர்ச்சிக்கும் என் உடலை வெளிப்படுத்தி, பசியையும், தாகத்தையும் அலட்சியம் செய்து, எனது உடலைக் குறைத்துக் கடும் தவம் இயற்றுவேன்.(33) தனிமையில் வாழ்ந்து, தியானத்திற்கு என்னை அர்ப்பணித்துக் கனிந்த கனிகளை மட்டும் உண்டு, பித்ருகளுக்கும், தேவர்களுக்கும் வாக்காலும், நீராலும், பழங்களாலும் படையல் செய்வேன் {அவர்களை வழிபடுவேன்}.(34) எனது உடல் வீழும் வரை, நான் எனது உறவினர்களையோ அல்லது கானகத்தின் மனிதர்களையும், நகரங்களில் வசிப்பவர்களையோ சந்திக்க மாட்டேன்.(35) வானப்பிரஸ்த வாழ்வு முறையில் என்னவெல்லாம் விதிகள் உள்ளனவோ, அவை கடுமையாக இருப்பினும் அனைத்தையும் நான் கடைப்பிடிப்பேன்" என்றான் {பாண்டு}".(36)

வைசம்பாயனர் தொடர்ந்தார், "அந்தக் குரு மன்னன் {பாண்டு}, தனது இரு மனைவியரிடமும் {குந்தி மற்றும் மாத்ரியிடம்} அப்படிச் சொல்லிவிட்டுத் தனது தலையில் இருந்த பெரிய ஆபரணத்தையும், விலைமதிப்பில்லா தங்கத்திலான தனது ஆரத்தையும், கைக்காப்புகளையும், காது குண்டலங்களையும், தனது மனைவிகளின் விலைமதிப்பற்ற ஆடைகளையும் ஆபரணங்களையும் பிராமணர்களுக்குக் கொடுத்துவிட்டான்.(37,38)

பிறகு அவர்களைக் கவனித்துக் கொண்டவர்களிடம் {பணியாட்களிடம்}, "நீங்கள் ஹஸ்தினாபுரம் திரும்பிப் பாண்டுவும் அவனது மனைவியரும் செல்வம், ஆசை, மகிழ்ச்சி மற்றும் காம இச்சை ஆகியவற்றைத் துறந்து கானகத்திற்குள் சென்றுவிட்டனர் என்று தெரிவியுங்கள்" என்றான் {பாண்டு}. அப்போது அந்தப் பணியாட்கள் இதையும் மற்றும் அந்த மன்னன் பேசிய அன்பான வார்த்தைகளையும் கேட்டு,(39,40) "ஓ! நாங்கள் தொலைந்தோம்!" என்று சொல்லி,(41) வெப்பக்கண்ணீருடன் தங்கள் ஏகாதிபதியை {பாண்டுவை} அங்கேயே விட்டுப் பாண்டு கொடுத்த செல்வங்களுடன் (அனைவருக்கும் தானத்தில் பிரித்துக் கொடுக்க) வேகமாக ஹஸ்தினாபுரம் சென்றனர்.(42)

{நகரத்திற்குச் சென்ற அவர்கள் அந்தச் சிறப்புமிக்க மன்னனிடம் {திருதராஷ்டிரனிடம்}, நடந்ததனைத்தையும் சொல்லி, அவனிடம் செல்வமனைத்தையும் கொடுத்தனர்.}[1](43) மனிதர்களில் முதன்மையான திருதராஷ்டிரன், கானகத்தில் நடந்த அனைத்தையும் கேள்விப்பட்டுத் தனது தம்பிக்காக {பாண்டுவுக்காக) அழுதான்.(44) தனது தம்பியிடம் உள்ள அன்பால், படுக்கையின் சுகத்தையும், நல்ல ஆசனத்தையும், நல்ல உணவையும் சில நாள் தவிர்த்தான்.  தன் தம்பியின் இழப்பால் பீடிக்கப்பட்ட அவன் தொடர்ந்து அவனையே நினைத்துக் கொண்டிருந்தான்.(45)


[1] இந்தச் சுலோகம் கங்குலியின் பதிப்பில் இல்லை. மன்மதநாததத்தரின் பதிப்பில் இருந்து எடுத்துக் கையாண்டிருக்கிறேன்.

அதே நேரத்தில், குரு இளவரசன் பாண்டு தனது இரு மனைவியருடன் {குந்தி, மாத்ரியுடன்}, பழங்களும் கிழங்குகளும் உண்டு, நாகசதம் என்ற மலைக்குச் சென்றான்.(46) பின்னர்ச் சித்ரரதம் சென்று, அங்கிருந்து காலகூடம் சென்று, அங்கிருந்து இமயத்தில் இருக்கும் கந்தமாதன மலைக்குச் சென்றான்.(47) ஓ மன்னா! பாண்டு, மஹாபூதங்களாலும், சித்தர்களாலும், பெரும் முனிவர்களாலும் காக்கப்பட்டுச் சில காலங்கள் சமவெளியிலும், சில காலங்களில் மலைச்சாரல்களிலும் வசித்தான்.(48) அதன்பிறகு இந்திரத்தியும்னம் என்ற ஏரிக்குப் பயணப்பட்டான். அதன்பிறகு, ஹம்ஸகூடம் என்ற மலையைக் கடந்து, நூறு சிகரங்களுடைய சதசிருங்கம் என்ற மலைக்குச் சென்று அங்கே கடும் தவப்பயிற்சி செய்தான்" {என்றார் வைசம்பாயனர்}.(49)


ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்