Sunday, June 09, 2013

கிந்தமரிடம் சாபம் பெற்ற பாண்டு! - ஆதிபர்வம் பகுதி 118

Pandu cursed by Kindama! | Adi Parva - Section 118 | Mahabharata In Tamil

(சம்பவ பர்வம் - 54)

பதிவின் சுருக்கம் : காட்டில் மான் வேட்டையாடிய பாண்டு; மானின் வடிவில் இருந்த கிந்தம முனிவர் பாண்டுவைச் சபித்தது விட்டு மாண்டது...

ஜனமேஜயன், "ஓ பிரம்மத்தை உச்சரிப்பவரே, முனிவரின் அருளால் மனிதர்களில் இயல்பற்ற முறையில் பிறந்த திருதராஷ்டிரன் மகன்களைப் பற்றி வரிசையாகச் சொல்லிவிட்டீர்.(1) பிறப்பின் வரிசையில் அவர்களது பெயர்களையும் சொல்லிவிட்டீர். ஓ பிராமணரே! இவை அனைத்தையும் நான் உம்மிடம் இருந்து அறிந்து கொண்டேன். இப்போது பாண்டவர்களைக் குறித்துச் சொல்வீராக.(2) தேவர்கள், அசுரர்கள் மற்றும் மற்றவகையினரின் அவதாரங்களைச் சொல்லும்போது, பாண்டவர்கள் அனைவரும் தேவர்களின் ஆற்றலுடன் அவர்களது அவதாரமாகவே பிறந்தனர் என்று சொன்னீர்.(3) எனவே, இயல்புக்குமிக்க அவர்களது சாதனைகளை அவர்களது பிறப்பு முதல் கேட்க விரும்புகிறேன். ஓ வைசம்பாயனரே, அவர்களது சாதனைகளை உரைப்பீராக" என்று கேட்டான்.(4)



வைசம்பாயனர், "ஓ மன்னா! ஒரு நாள் மான்களும், காட்டு விலங்குகளும் நிறைந்த கானகத்தில் பாண்டு உலவிக் கொண்டிருக்கும்போது (இமயத்தின் தெற்குச் சாரலில்) ஒரு மான் கூட்டத்திற்குத் தலைமையான பெரிய மான் ஒன்று தனது துணையுடன் இணைந்திருப்பதை {புணர்ந்து கொண்டிருப்பதைக்} கண்டான்.(5) அந்த விலங்குங்களைக் கண்ட அந்த ஏகாதிபதி {பாண்டு}, கூர்மையானவையும், வேகமானவையும் தங்க இறகுகளைக் கொண்டவையுமான ஐந்து கணைகளால் அவ்விரு மான்களையும் துளைத்தான்.(6) ஓ ஏகாதிபதியே, அவன் அடித்தது மானையல்ல, அஃது ஒரு முனிவரின் மகன். மானின் வடிவத்தில் தனது துணையுடன் உல்லாசமாக இருக்கும்போது,(7) பாண்டுவால் துளைக்கப்பட்டுத் தரையில் விழுந்து, மனித குரலில் கதறி அழுதார் அந்த முனிவரின் மகன்.(8)

அந்த மான் பாண்டுவிடம், "ஓ மன்னா! காமத்திற்கும் கோபத்திற்கும் அடிமையாகி, காரணங்களை ஆராயாமல், எப்போதும் பாவம் செய்யும் மனிதர்கள்கூட இது போன்ற ஒரு கொடும் செயலைச் செய்ய மாட்டார்கள்.(9) தனிப்பட்ட நீதியால் விதியை விஞ்ச முடியாது. ஆனால் விதியாலேயே தனிப்பட்ட நீதியை விஞ்சி நிற்க முடியும். விதியுடன் முரண்பட்டு நிற்கும் எதையும் ஞானியர் ஏற்றுக் கொள்வதில்லை.(10) ஓ பாரதா, நீ அறம் சார்ந்த குலத்தில் பிறந்தவன். இருப்பினும், ஆசை மற்றும் கோபத்தால் வெல்லப்பட்டு நீ எவ்வாறு உனது மதியை இழந்தாய்?" என்று கேட்டது.(11)

பாண்டு, "ஓ மானே, மன்னர்கள் எப்போதும் உன்னைப் போன்ற விலங்குகளை எதிரிகளைக் கொல்வதைப் போலவே கொன்று வருகின்றனர். எனவே, அறியாமையால் நீ என்னை வசைபாடலாகாது.(12) உனது வகை விலங்குகள் நேரடியாகவும், மறைமுகமாகவும் கொல்லப்பட்டே வருகின்றன. இது மன்னர்களின் வழக்கமே. இருப்பினும் நீ ஏன் என்னை வசைபாடுகிறாய்?(13) முன்பொரு காலத்தில் அகத்திய முனிவர், பெரும் வேள்வியை நடத்திக் கொண்டிருக்கும்போது, மான்களைத் துரத்தி, அந்தக் கானகத்தில் இருந்த அனைத்து மான்களையும் தேவர்களுக்கு அர்ப்பணித்தார். அதைப் போன்ற முன்னோடிக் கதைகளின் ஒப்புதல்படியே நீயும் கொல்லப்பட்டாய். அப்படியிருந்தும் நீ என்னை வசைபாடுவாயா? அகத்தியர், அந்தக் குறிப்பிட்ட வேள்வியில், மான்களின் கொழுப்பை வைத்தே ஹோமத்தை நடத்தினார்" என்றான்.(14,15)

அதற்கு அந்த மான், "ஓ மன்னா! தங்கள் எதிரிகள் ஆயத்தமாக இல்லாதபோது மனிதர்கள் கணைகளைப் பறக்க விட மாட்டார்கள். அதைச் செய்ய ஒரு நேரம் இருக்கிறது (பகை முடிவு அறிவிக்கப்பட்ட பிறகு). இந்த மாதிரி நேரத்தில் கொல்லுவது தகாது" என்றது.(16)

பாண்டு, "ஒரு மானைக் கொல்வதற்கு முன், மனிதர்கள் அது கவனமாக இருக்கிறதா? இல்லையா என்று கருதாமல் பலதரப்பட்ட வகைகளில் அவற்றைக் கொல்வது நன்கறியப்பட்டது. எனவே, ஓ மானே, என்னை ஏன் நீ வசைபாடுகிறாய்?" என்றான்.(17)

அதற்கு அந்த மான், "ஓ மன்னா! ஒரு மானைக் கொன்று விட்டாயே என்றோ, எனக்குக் காயமேற்படுத்திவிட்டாய் என்றோ நான் உன்னைப் பழிகூறவில்லை. ஆனால், இப்படிக் கொடும் செயல் செய்வதற்குப் பதில், எனது கலவி முடியும் வரை நீ காத்திருந்திருக்க வேண்டும்.(18) ஒரு மான் இதுபோன்ற காரியத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும்போது எந்த ஞானமுள்ள அறம்சார்ந்த மனிதன்தான் அதைக் கொல்வான்? கலவியின் காலம் எல்லா உயிரனங்களுக்கும் ஏற்புடையதும், அனைவருக்கும் நன்மை செய்வதுமே ஆகும்.(19) ஓ மன்னா! இந்த எனது துணையுடன், நான் எனது காம வேட்கையைத் தணித்துக் கொண்டிருந்தேன். ஆனால் எனது முயற்சி உன்னால் பலனற்றதாகிவிட்டது.(20) ஓ குருக்களின் மன்னா! அறம் சார்ந்த செயல்களுக்காக அறியப்பட்ட பௌரவர்களின் (பூருவின் வம்சம்) குலத்தில் பிறந்தும் நீ இப்படிப்பட்ட ஒரு காரியத்தைச் செய்திருக்கிறாய்.(21) ஓ பாரதா, உலகளாவிய முழு வெறுப்புக்குகந்ததும், புகழைக்கெடுக்கக்கூடியதும் பெரும்பாவகரமானதுமான இச்செயல் மிகக் கொடூரமானதாகக் கருதப்பட வேண்டும். இது நிச்சயம் நரகத்திற்கு இட்டுச் செல்லும் தன்மை கொண்டது.(22) கலவியின் இன்பத்தை நீ அறிந்திருக்கிறாய்.  அறப்படிப்பினைகள் மற்றும் கடமைகளின் விதிகளையும் நீ அறிந்திருக்கிறாய். தேவர்களைப் போன்ற நீ, இப்படி நரகத்திற்கு இட்டுச்செல்லக்கூடிய செயலைச் செய்திருக்கக்கூடாது.(23)

ஓ மன்னர்களில் சிறந்தவனே, கொடூரச் செயல்கள் புரிபவர்களையும், பாவகரச் செயல்கள் புரிபவர்களையும், சாத்திரங்களில் விவரிக்கப்பட்டுள்ள அறம், பொருள், இன்பம் ஆகிவற்றைக் காற்றில் தூக்கி வீசுபவர்களையும் தண்டிப்பதே உனது கடமையாகும்.(24) ஓ மனிதர்களில் சிறந்தவனே, ஆனால் உனக்கு ஒரு குற்றமும் செய்யாத என்னைக் கொன்று, நீ என்ன செயலைச் செய்திருக்கிறாய்? ஓ மன்னா! மானுருவில் இருந்தாலும், நான் பழங்களும் கிழங்குகளும் உண்டு வாழும் முனிவன் ஆவேன்.(25) நான் இந்தக் கானகத்தில் எல்லோருடனும் சமாதானமாக அமைதியுடன் வாழ்ந்து வந்தேன்.இருப்பினும் நீ என்னைக் கொன்றுவிட்டாய். ஓ மன்னா! இதற்காக உன்னை நான் நிச்சயம் சபிப்பேன்.(26) ஆண், பெண் ஜோடியான எங்களிடம் கொடுமையாக நீ நடந்து கொண்டதால், உனக்குக் காமவேட்கையின் பாதிப்பு ஏற்படும்போது மரணம் உன்னை வந்தடையும்.(27) நான் கிந்தமன் என்ற பெயர் கொண்ட தவத் தகுதியுடைய முனிவனாவேன். மனித சமூகத்தில் எனது இப்படிப் பட்ட செயலைச் செய்ய நாணியதால், நான் இந்த மானுடன் காமக்கலவியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தேன்.(28) மானின் வடிவில் நான் பிற மான்களின் துணையுடன் ஆழ்ந்த கானகங்களில் திரிந்து கொண்டிருந்தேன். நான் பிராமணன் என்பதை அறியாமல், நீ என்னைக் கொன்றதால், உனக்கு பிராமணனைக் கொன்ற பாவம் சேராது.(29)

ஆனால் நீ உணர்விழந்த மனிதனாக, மானுருவில் இருந்த என்னை, இப்படிப்பட்ட நேரத்தில் கொன்றதால், உனது விதி நிச்சயமாக என்னைப் போலே இருக்கும்.(30) உனது மனைவியைக் காமத்துடன் நீ அணுகும்போது, நான் எனது துணையுடன் கலந்திருந்தது போலவே, நீயும் உனது மனைவியுடன் கலப்பாய். அந்த நிலையிலேயே நீ ஆவிகளின் {பித்ருக்களின்} உலகத்தை அடைவாய்.(31) உன்னுடன் கலவியில் இருந்த அந்த உனது மனைவியும், உனது இறப்பைத் தொடர்ந்து அன்பாலும், மரியாதையாலும், மரணதேவனின் இடத்திற்கு உன்னைத் தொடர்ந்து வருவாள்.(32) நான் மகிழ்ச்சியாக இருக்கும்போது நீ எனக்குத் துயரைக் கொண்டு வந்தாய். அதே போல, நீ மகிழும்போது துயர் உன்னை வந்தடையும்" என்று சபித்தது {அந்த மான் வடிவில் இருந்த கிந்தமர் சபித்தார்}."(33)

வைசம்பாயனர் தொடர்ந்தார், "இதைச் சொல்லிவிட்டு, அந்த மான், துயரத்துடன் தனது ஆவியை விட்டது. அந்தக் காட்சியைக் கண்ட பாண்டு சோகத்தில் மூழ்கினான்."(34)


ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்