Tuesday, July 02, 2013

தூக்கமிழந்த திருதராஷ்டிரன் - ஆதிபர்வம் பகுதி 141

Dhritarashtra lost his sleep | Adi Parva - Section 141 | Mahabharata In Tamil

(சம்பவ பர்வம் - 77)

பதிவின் சுருக்கம் : இளவரசனாகப் பட்டமேற்றுக் கொண்ட யுதிஷ்டிரன்; பலராமனிடம் கதாயுத்தம் பயின்ற பீமசேனன்; அர்ஜுனனுக்குப் பிரம்மசிரஸ் என்ற ஆயுதத்தைக் கொடுத்த துரோணர்; திக்விஜயம் செய்த பீமார்ஜுனர்கள்; பாண்டவர்களின் வளர்ச்சியைக் கண்டு தூக்கமிழந்த திருதராஷ்டிரன்...

Dhritarashtra lost his sleep 
Adi Parva - Section 141
Mahabharata In Tamil
வைசம்பாயனர் தொடர்ந்தார், “ஓ! மன்னா {ஜனமேஜயா}, ஒரு வருடம் சென்றதும், திருதராஷ்டிரன், மக்கள் மீது அன்பு கொண்டு, பாண்டுவின் மகனான யுதிஷ்டிரனை, அவனது உறுதிக்காகவும், மேலும், மனோபலம், பொறுமை, கருணை, வெளிப்படைத்தன்மை, மற்றும் நேர்மையான இதயம் ஆகியவற்றுக்காகவும் தன் அரசின் இளவரசனாக நிறுவினான்.(1,2) குறுகிய காலத்திற்குள், அந்தக் குந்தி மைந்தன் யுதிஷ்டிரன் தனது நன்னடத்தையாலும், நல்ல குணங்களாலும், கடமையில் கண்ணும் கருத்துமாக இருந்ததாலும், பாண்டுவின் செயற்கரிய செயல்களை மறையச் செய்தான்.(3) இரண்டாவது பாண்டவனான விருகோதரன் {பீமன்}, சங்கர்ஷனரிடம் (பலராமனிடம்) வாட்போரிலும், கதாயுத்தத்திலும், தேர்ப்போரிலும் தொடர்ந்து பாடங்களைக் கற்றுக் கொண்டிருந்தான்[1].(4) பீமனின் பயிற்சிக் காலம் முடிந்ததும், தியுமத்சேனனைப் போன்ற பலம் பெற்றுத் தொடர்ந்து தனது சகோதரர்களுடன் ஒற்றுமையாக வாழ்ந்து, தனது வீரத்தைப் பெருக்கத் தொடங்கினான்.(5)
[1] பாண்டவர்களுக்கு பலராமனும், கிருஷ்ணனும் ஏற்கனேவே அறிமுகமாகிவிட்டனர் என்பது இங்கே தெரிகிறது.

அர்ஜுனன், தனது (ஆயுதங்களின் மீதான) உறுதியான பிடியாலும், நகர்வதில் உள்ள நளினத்தாலும், குறியில் கச்சிதத்தாலும், க்ஷுரம், நாராசம், பல்லம், விபாதை போன்ற நேரான, வளைந்த மற்றும் கனமான ஆயுதங்களில் திறமை பெற்றிருந்ததாலும், பெரிதும் கொண்டாடப்பட்டான். துரோணர், "அர்ஜுனனுக்கு நிகராகக் கரங்களின் நளினமும், நிபுணத்துவமும் கொண்ட ஒருவனும் உலகத்தில் இல்லை" என்று உறுதிகூறினார்.(6,7)

ஒரு நாள், துரோணர் கூடியிருந்த கௌரவ இளவரசர்களின் முன்னிலையில் அர்ஜுனனிடம், "அகஸ்தியருக்கு, அக்னிவேசர் என்ற பெயரில் ஆயுத அறிவியல் பயிலும் சீடர் ஒருவர் இருந்தார். அவர் எனக்குக் குருவாகவும், நான் அவருக்குச் சீடனாகவும் இருந்தோம்.  எனது ஆன்மத் தகுதியால், நான் அவரிடமிருந்து, இடியைப் போன்ற, முழு உலகத்தையும் உட்கொள்ளும் சக்தி கொண்ட, பொய்க்காத ஆயுதமான பிரம்மசிரஸ் என்ற ஆயுதத்தை அடைந்தேன். அந்த ஆயுதமானது, ஓ! பாரதா {அர்ஜுனா}, எனது {நான் இப்போது செய்யப்போகும்} இந்தச் செயலால், இப்போதிருந்து, சீடனுக்குச் சீடன் பெயர்ந்து கொண்டே இருக்கும்.(8-10) அதை எனக்குக் கொடுக்கும்போது எனது குரு என்னிடம், “ஓ! பரத்வாஜரின் மகனே {துரோணா}, இந்த ஆயுதத்தை எப்போதுமே நீ மனிதர்கள் மீது ஏவக்கூடாது. குறிப்பாக சக்தி குறைந்தவர்கள் மீது ஏவவே கூடாது" என்று சொன்னார்.(11) ஓ! வீரனே {அர்ஜுனா}, நீ யாரும் பெறமுடியாத இந்தத் தெய்வீக ஆயுதத்தை இப்போது அடைந்திருக்கிறாய். ஆனால் முனிவரின் (அக்னிவேசரின்) கட்டளைக்குக் கீழ்ப்படிந்து நடப்பாயாக.(12) இங்கே பார் அர்ஜுனா, இப்போது உனது சகோதரர்கள் மற்றும் உறவினர்கள் முன்னிலையில் நீ உனது ஆசாரியனுக்குரிய கூலியைக் (தட்சணையைக்) கொடுப்பாயாக" என்றார். இதைக்கேட்ட அர்ஜுனன், தனது குரு என்ன கேட்டாலும் தருவதாக வாக்களித்தான்.(13)

அதற்குக் குரு, “ஓ! பாவங்களற்றவனே {அர்ஜுனா}, நான் உன்னுடன் போரிடும் போது, நீயும் என்னுடன் போரிட வேண்டும்" என்று கேட்டார். அந்தக் குரு இளவரசர்களில் காளை தனது வார்த்தைகளால் அதற்கு உறுதி கூறி,(14) துரோணரின் பாதத்தைத் தொட்டு, வடக்கு நோக்கிச் சென்றான். "ஆழி சூழ் உலகத்தில் அர்ஜுனனுக்கு நிகரான வில்லாளி இல்லை" என்ற சொல் உலகமெங்கும் எதிரொலித்தது {பரவியது}.(15)

நிச்சயமாகத் தனஞ்சயன் கதாயுத்தமாகட்டும், வாட்போராகட்டும், தேரிலிருந்து வில்லைப் பயன்படுத்துவதாகட்டும், எல்லாவற்றிலும் அற்புதமான திறமைபெற்றிருந்தான். சகாதேவன், கடமைகள் மற்றும் நீதிகளின் அறிவியலைத் தேவர்களின் ஆன்மிகத் தலைவனிடமிருந்து (பிருஹஸ்பதி) பெற்றுத் தொடர்ந்து தனது சகோதரர்களின் கட்டுப்பாட்டில் வாழ்ந்தான். தனது சகோதரர்களுக்கு அன்பான நகுலன், துரோணரால் பயிற்சி கொடுக்கப்பட்டு, சிறந்த வீரனாகவும், பெரும் தேர்வீரனாகவும் (அதிரதனாகவும்) இருந்தான். கந்தர்வர்களால் படையெடுக்கப்பட்டும், தொடர்ந்து மூன்று வருடங்கள் வேள்வி செய்த பெரும் சௌவீரனைக் கொல்லும் அளவுக்கு, அர்ஜுனனும் மற்றவர்களும் பெரும் பலசாலிகளாகினர். பாண்டுவாலேயே அடக்கமுடியாத அந்த யவனர்களின் {சௌவீர} அரசனை, அர்ஜுனன் அடக்கினான்.(16-21)


மறுபடியும், எப்போதும் குரு குலத்தவரை அவமதித்தே வந்த சௌவீரர்களின் [2] மன்னனான பெரும் வீரம் கொண்ட விபுலனைப் புத்திசாலியான அர்ஜுனன் {தனது} பலத்தின் எல்லையை உணர வைத்தான் {அவனைக் கொன்றான்}. அர்ஜுனன், திடமாகப் போரிட்ட தத்தாமித்ரன் என்று அழைக்கப்பட்ட சௌவீர மன்னன் சுமித்திரனைத் (அவனது தற்பெருமையைத்) தனது கணைகளால் நொறுக்கினான். பீமனுடைய துணையைக் கொண்டு, தனித் தேரில் சென்ற அந்த மூன்றாவது பாண்டவன் {அர்ஜுனன்}, பத்தாயிரம் தேர்களுடன் இருந்த கிழக்கு நாடுகளின் மன்னர்களை அடக்கினான்.(22,23) தனஞ்சயன் {அர்ஜுனன்}, அதே போலவே தனித் தேரில் சென்று தெற்கு நாடுகளையும் குரு குலத்தவரின் அரசுக்கு பெரும் கப்பம் கட்ட வைத்தான்.(24) இப்படியே அந்த மனிதர்களில் முதன்மையானவர்களான சிறப்புமிக்கப் பாண்டவர்கள், மற்ற மன்னர்களின் பகுதிகளை வெற்றிக் கொண்டு, தங்கள் நாட்டின் {ஹஸ்தினாபுரத்தின்} எல்லைகளை விரிவுபடுத்தினர். அந்தப் பெரும்பலம்வாய்ந்த வில்லாளிகளின் பெரும் ஆற்றலையும், பலத்தையும் கண்ட மன்னன் திருதராஷ்டிரனுக்குப் பாண்டவர்கள் மீது வைத்திருந்த நல்லெண்ணம் விஷமாகி, அன்றிலிருந்து அவர்களைக் குறித்துக் கவலை கொண்டு, தூக்கமின்றி இருந்தான்" (என்றார் வைசம்பாயனர்}.(25-27)
[2] சௌவீரம் என்ற பெயரில் 12 இளவரசர்களால் ஆளப்பட்ட 12 நாடுகள் சிந்து நதிக்கரையோரம் இருந்தன. சௌவீரம் என்றால் நூறு வீரர்களின் அரசு என்று பொருள். ஜெயத்ரதன் அவர்களுக்கெல்லாம் தலைவனாக இருந்தான். வனபர்வத்தின் பகுதி 263ல் ஜெயத்தரன் திரௌபதியிடம் அவர்களின் பெயர்களை வரிசையாகக் கூறுகின்றான். வலைத்தளத்தில் http://mahabharatham.arasan.info/2014/08/Mahabharatha-Vanaparva-Section263.html என்ற சுட்டியில் அதைக் காணலாம்.

ஆதிபர்வம் பகுதி 141ல் உள்ள சுலோகங்கள் : 27
ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்