Thursday, August 15, 2013

பாஞ்சாலம் செல்கையில்! - ஆதிபர்வம் பகுதி 186

On the way to Panchala! | Adi Parva - Section 186 | Mahabharata In Tamil

(சுயம்வர பர்வம் - 01)

பதிவின் சுருக்கம் : பாஞ்சால நாட்டிற்குச் செல்லும் வழியில் பாண்டவர்கள் பிராமணர்களைச் சந்திப்பதும், அவர்களுடன் சேர்ந்து செல்ல உடன்படுவதும்...

வைசம்பாயனர் சொன்னார், "அந்த ஐந்து சகோதரர்கள், அந்த மனிதப் புலிகளான ஐந்து பாண்டவர்கள், பாஞ்சால நாட்டையும், திரௌபதியையும், (அவளது திருமணத்தை ஒட்டி) அங்கு நடக்கப் போகும் விழாக்களையும் காண அந்நாட்டுக்குப் புறப்பட்டனர்.(1) எதிரிகளை ஒடுக்குபவர்களான அந்த மனிதப் புலிகள், தங்கள் தாயுடன் செல்லும்போது, வழியில் எண்ணற்ற பிராமணர்கள் தங்கள் வழியில் ஒன்றாகச் சேர்ந்து வருவதைக் கண்டனர்.(2) ஓ மன்னா {ஜனமேஜயா}, பிரம்மச்சாரிகளான அந்த பிராமணர்கள் பாண்டவர்களைக் கண்டு, "நீங்கள் எங்கே செல்கிறீர்கள்? எங்கிருந்து வருகிறீர்கள்?" என்று கேட்டனர்.(3)



அதற்கு யுதிஷ்டிரன், "பிராமணக் காளைகளே, நாங்கள் எங்கள் தாயுடன் செல்லும் உடன்பிறந்த சகோதரர்கள் என்பதை அறிந்து கொள்வீராக. நாங்கள் ஏகச்சக்கர நகரத்தில் இருந்து வருகிறோம்" என்றான்.(4)

அதற்கு அந்த பிராமணர்கள், "பாஞ்சால நாட்டிலுள்ள துருபதனின் வசிப்பிடத்திற்குச் செல்வீராக. அங்கே ஒரு பெரும் சுயம்வரம் நடக்கிறது. அச்சுயம்வரத்திற்காகப் பெரும் செல்வம் செலவழிக்கப்படுகிறது.(5) நாங்கள் அங்கேதான் செல்கிறோம். நாமனைவரும் ஒன்றாகச் செல்லலாம். இயல்புக்குமிக்க விழாக்கள் அங்கு (துருபதனின் வசிப்பிடத்தில்) நடைபெறும்.(6) துருபதன் என்று அழைக்கப்படும் அந்தச் சிறப்புமிகுந்த யக்ஞசேனன், வேள்விப்பீடத்தின் மத்தியில் இருந்து ஒரு மகளை எழுப்பியிருக்கிறான்.(7) தாமரை இதழ்களைப் போன்ற கண்களையும், களங்கமற்ற தன்மைகளையும், இளமையையும், நுண்ணறிவையும் கொண்ட அவள் பேரழகியாக இருக்கிறாள். முற்றிலும் களங்கமற்ற தன்மைகள் அனைத்தையும் கொண்டவளும், முழுமையாக இரண்டு மைல்கள் தொலைவிற்கு நீலத்தாமரையின் {கருநெய்தலின்} நறுமணத்தைப் பரப்புபவளுமான அந்தக் கொடியிடை திரௌபதியானவள்,  வலிமையான கரங்களைக் கொண்டவனும், பேராற்றலைக் கொடையாகக் கொண்டவனும், கவசம், வாள், வில் மற்றும் கணைகளுடன் சுடர்மிக்க நெருப்பில் இருந்து பிறந்தவனும், துரோணரைக் கொல்லப் போகிறவனும், இரண்டாம் நெருப்பையே போலிருப்பவனுமான திருஷ்டத்யும்னனின் தங்கையாவாள்.(8-10)

அந்த யக்ஞசேனனின் மகள், அங்கு அழைக்கப்பட்ட இளவரசர்களிலிருந்து தனது கணவனைத் தேர்ந்தெடுப்பாள். அவளைக் காணவும், வானுலகில் நடக்கும் திருவிழாவைப் போல அங்கு நடக்கி இருக்கும் விழாக்களைக் காணவும் நாங்கள் அங்குச் செல்கிறோம்.(11) அச்சுயம்வரத்திற்குப் பல நிலங்களிலிருந்து {நாடுகளிலிருந்து} மன்னர்களும், இளவரசர்களும் வருவார்கள். அவர்களனைவரும் பெரும் வேள்விகளை நடத்தி பிராமணர்களுக்குப் பெரும் செல்வத்தைப் பரிசாக அளித்தவர்களாக, கல்விக்குத் தங்களை அர்ப்பணித்தவர்களாக, சிறப்பு வாய்ந்தவர்களாக, கடும் தவம் கொண்டவர்களாக, இளமையும் அழகும் கொண்டவர்களாக, பெரும் தேர் வீரர்களாக, கரங்களின் சாதனைக்குச் சொந்தக்காரர்களாகவும் இருப்பார்கள்.(12,13) அந்தக் கன்னிகையை (அவளது கரங்களை) வெல்ல விரும்பி வந்திருக்கும் ஏகாதிபதிகள், அங்கே பெரும் செல்வத்தையும், பசுக்களையும், உணவையும் இன்னும் மகிழ்ச்சியூட்டும் பல பொருட்களையும் தானமாகத் தருவார்கள். அவர்கள் கொடுப்பதைப் பெற்றுக் கொண்டும், சுயம்வரத்திற்குச் சாட்சியாக இருந்தும், விழாக்களைக் கண்டு மகிழ்ந்து, அதன்பிறகு நாம் எங்கு செல்ல நினைக்கிறோமோ அங்கு செல்லலாம்.(14,15)

அந்தச் சுயம்வரத்திற்குப் பல நாடுகளைச் சேர்ந்த நடிகர்களும், பாடகர்களும், ஆடற்கலைஞர்களும், புராணங்களையும் பழங்கதைகளையும் உரைப்பவர்களும், பெரும் விளையாட்டு வீரர்களும் வருவார்கள்.(16) இவை அனைத்தையும் கண்டு, அங்கு நமக்குத் தரப்படும் பொருட்களைப் பெற்று, எங்களுடனே நீங்களும் திரும்பி வாருங்கள்.(17) நீங்கள் அனைவரும் தேவர்களைப் போல அழகாக இருக்கிறீர்கள். ஒருவேளை, கிருஷ்ணை {திரௌபதி} உங்களைக் கண்டு, உங்களில் மேன்மையான ஒருவரை வரிக்கலாம்.(18) பல போர்களில் ஈடுபட்டு, பெரும்பலம் வாய்ந்த கரங்களுடன் அழகாக இருக்கும் இந்த உனது தம்பி {பீமன்}, (விளையாட்டுப்) போட்டிகளில் {மற்போரில்} ஈடுபட்டால், ஒருவேளை பெருஞ்செல்வம் கிடைக்கலாம்" என்றனர் {அந்தப் பிராமணர்கள்}.(19)

பிராமணர்களின் இவ்வார்த்தைகளைக் கேட்ட யுதிஷ்டிரன், "பிராமணர்களே, நாங்களும் உங்களுடன் வருகிறோம். நாம் அனைவரும் ஒன்றாகச் சேர்ந்து அக்கன்னிகையின் சுயம்வரத்தையும், அந்த அற்புதமான விழாவையும் காணலாம்" என்றான்.(20)


ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்