Showing posts with label சுயம்வர பர்வம். Show all posts
Showing posts with label சுயம்வர பர்வம். Show all posts

Sunday, August 18, 2013

ஒளிந்திருந்தான் திருஷ்டத்யும்னன்! - ஆதிபர்வம் பகுதி 194

Dhrishtadyumna Concealed! | Adi Parva - Section 194 | Mahabharata In Tamil

(சுயம்வர பர்வம் - 09)

பதிவின் சுருக்கம் : பாண்டவர்கள் வசிக்கும் குயவன் வீட்டில் ஒளிந்திருந்த திருஷ்டத்யும்னன்; பாண்டவர்கள் கொண்டு வந்த பிச்சையை குந்தியின் வழிகாட்டுதல்படி பிரித்துக் கொடுத்துப் பரிமாறிய திரௌபதி; காரியத்தை அறிந்து கொண்டு துருபதனிடம் திரும்பிய திருஷ்டத்யும்னன்; துயரத்துடன் பிதற்றிய துருபதன்...

வைசம்பாயனர் சொன்னார், "குருகுல இளவரசர்கள் (பீமனும், அர்ஜுனனும்) குயவனின் வசிப்பிடத்தை நோக்கி நடந்து செல்கையில், பாஞ்சால இளவரசனான திருஷ்டத்யும்னனும் அவர்களைப் பின் தொடர்ந்து சென்றான்.(1)  தனது பணியாட்கள் அனைவரையும் அனுப்பிவிட்டு, அந்தக் குயவனின் இல்லத்திற்கு அருகில் ஏதோ ஒரு பகுதியில் பாண்டவர்களுக்குத் தெரியாமல் ஒளிந்து கொண்டான்.(2) பிறகு, எதிரிகளை அழிப்பவர்களான பீமனும், அர்ஜுனனும், சிறப்புமிகுந்த இரட்டையர்களும், மாலை நேர பிச்சையை முடித்துக் கொண்டு திரும்பி, அனைத்தையும் மகிழ்ச்சியுடன் யுதிஷ்டிரனிடம் கொடுத்தனர்.(3) அப்போது, அன்பான இதயம் கொண்ட குந்தி, துருபதனின் மகளிடம் {திரௌபதியிடம்}, "ஓ இனிமையானவளே, நீ ஒரு பகுதியை முதலில் இதிலிருந்து எடுத்து, தேவர்களுக்கு அர்ப்பணித்து, பிராமணர்களுக்குக் கொடுத்துவிடுவாயாக.(4) உண்ண விரும்புபவர்களுக்கு உண்ணக் கொடுப்பாயாக, நமது விருந்தினர்களாக வருபவர்களுக்குக் கொடுப்பாயாக. மீதத்தை இரு பங்காகப் பிரித்து, ஒரு பங்கை பீமனுக்குக் கொடுப்பாயாக. ஓ இனிமையானவளே, இந்த அழகான நிறம் கொண்ட இளைஞன் {பீமன்} யானைகளின் மன்னனுக்கு நிகராக பெரும் தீனி தின்பவனாவான். மறு பாதியை ஆறு பங்குகளாக இட்டு, இந்த நான்கு இளைஞர்களுக்கும், ஒன்றை எனக்கும் கொடுத்துவிட்டு, ஒன்றை உனக்கும் எடுத்துக் கொள்வாயாக" என்றாள்.(5,6)

Saturday, August 17, 2013

அம்மா பிச்சை கொண்டு வந்தோம்! - ஆதிபர்வம் பகுதி 193

Ma! We have brought alms! | Adi Parva - Section 193 | Mahabharata In Tamil

(சுயம்வர பர்வம் - 08)

பதிவின் சுருக்கம் : 'பிச்சை கொண்டு வந்தோம்' என்று சொல்லிய பீமன் மற்றும் அர்ஜுனனின் வார்த்தைகளைக் கேட்ட குந்தி 'அனைவரும் சேர்ந்து அனுபவியுங்கள்' என்று சொன்னது; யுதிஷ்டிரனும், அர்ஜுனனும் திரௌபதியைக் குறித்து பேசிக் கொண்டது; வியாசர் சொன்னதை நினைவு கூர்ந்து, சகோதரர்கள் அனைவருக்கும் திரௌபதி பொது மனைவி என்று யுதிஷ்டிரன் தீர்மானித்தது; குயவன் வீட்டிற்கு வந்தது கிருஷ்ணன்...


வைசம்பாயனர் சொன்னார், "பிருதையின் {குந்தியின்} அந்தச் சிறப்புவாய்ந்த மகன்கள், குயவனின் வசிப்பிடத்திற்குத் திரும்பியதும், தங்கள் தாயை அணுகினர். மனிதர்களில் முதன்மையான அவர்கள், தங்கள் தாயிடம் யக்ஞசேனியை {திரௌபதியை} அன்று தாங்கள் அடைந்த பிச்சை என்று கூறினர்.(1) அறையின் உள்ளே இருந்த குந்தி, தனது மகன்களைப் பாராமல், "(நீங்கள் அடைந்ததை) அனைவரும் சேர்ந்து அனுபவியுங்கள்" என்றாள். சிறிது நேரம் கழித்துக் கிருஷ்ணையைக் {திரௌபதியைக்} கண்டு, "அய்யோ, நான் என்ன சொல்லிவிட்டேன்?" என்று பாவம் குறித்த அச்சத்தால் துயர்கொண்டாள் {குந்தி}.(2) அச்சூழ்நிலையில் இருந்து ஒவ்வொருவரையும் விடுவிப்பது எப்படி என்று நினைத்து, மகிழ்ச்சியுடன் இருந்த யக்ஞசேனியின் {திரௌபதியின்} கரங்களைப் பற்றி, யுதிஷ்டிரனை அணுகி,(3) "மன்னன் யக்ஞசேனனின் {துருபதனின்} மகளை {திரௌபதியை} உனது தம்பிகள், "பிச்சை கொண்டு வந்தோம்" என்று அறியாமையால் என்னிடம் சொன்னார்கள். ஓ மன்னா {யுதிஷ்டிரா}, நான் அதற்குச் சரியாக, 'நீங்கள் கொண்டு வந்ததை அனைவரும் சேர்ந்து அனுபவியுங்கள்' என்றும் சொல்லிவிட்டேன்.(4) ஓ குருகுலத்தின் காளையே {யுதிஷ்டிரனே}, எனது பேச்சு எதனாலும் பொய்யாகாது {எனது சொல் பொய்யாகக்கூடாது} என்பதையும், பாஞ்சால மன்னனின் மகள் எதைச் செய்தால் அவளைப் பாவம் அணுகாது என்பதையும், அவள் எப்படி அமைதியற்ற நிலையை அடையாமல் இருப்பாள் என்பதையும் எனக்குச் சொல்வாயாக" என்றாள் {குந்தி}".(5)

அர்ஜுனனுடன் போர் புரிவதிலிருந்து விலகினான் கர்ணன்! - ஆதிபர்வம் பகுதி 192

Karna desisted the fight from Arjuna! | Adi Parva - Section 192 | Mahabharata In Tamil

(சுயம்வர பர்வம் - 07)

பதிவின் சுருக்கம் : கர்ணனைப் பின்வாங்கச் செய்த அர்ஜுனன்; பீமன் சல்லியனை வென்றத பீமன்; துரியோதனாதிகள் தோற்றதும்; மீண்டும் யுத்தத்துக்குத் தயாரான ஏகாதிபதிகள் கிருஷ்ணனின் வார்த்தைகளைக் கேட்டு அவரவர் இருப்பிடம் திரும்பியது; திரௌபதியுடன் பீமனும், அர்ஜுனனும் தாங்கள் தங்கியிருந்த குயவனின் வீட்டுக்குச் சென்றது...

வைசம்பாயனர் சொன்னார், "பிராமணக் காளையரில் சிலர் தங்கள் மான் தோலையும், தேங்காய் ஓட்டினாலான நீர்க் கமண்டலங்களையும் ஆட்டிக் கொண்டு, "அஞ்சாதீர், எதிரிகளிடம் நாங்கள் போரிடுவோம்" என்றனர்.(1) இதைக் கேட்ட அர்ஜுனன், அப்படிச் சொன்ன அந்த பிராமணர்களைப் பார்த்துப் புன்னகைத்து, "சற்று ஓரமாக நின்று (இப்போரைப்) பார்வையாளர்களாக இருந்து பாருங்கள்.(2) கூர்முனை கொண்டவையும், நேரானவையுமான எனது நூற்றுக்கணக்கான கணைகளை மழையெனப் பொழிந்து, சீறும் பாம்புகளை அடக்கும் மந்திரத்தைப் போல அந்தக் கோபக்கார ஏகாதிபதிகளைத் தடுப்பேன்" என்றான்.(3)

பாண்டவர்களை அடையாளம் காட்டிய கிருஷ்ணன்! - ஆதிபர்வம் பகுதி 191

Krishna traced Pandavas | Adi Parva - Section 191 | Mahabharata In Tamil

(சுயம்வர பர்வம் - 06)

பதிவின் சுருக்கம் : மன்னர்கள் கோபம் கொண்டு துருபதனைக் கொல்லத் துணிவதும்; பீமனும், அர்ஜுனனும் போருக்குத் துணிந்து நிற்பதை அறிந்து, கிருஷ்ணனும் பலராமனும் பேசிக் கொள்வதும்...

வைசம்பாயனர் சொன்னார், "(குறியை அடித்த) பிராமணனுக்குத் தனது மகளை அளிப்பதற்கு மன்னன் (துருபதன்) தன் விருப்பத்தை வெளியிட்ட போது, அந்தச் சுயம்வரத்திற்கு அழைக்கப்பட்ட ஏகாதிபதிகள் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு, பெரும் கோபம் நிறைந்தனர்.(1)

Friday, August 16, 2013

குறியை அடித்த அர்ஜுனன்! - ஆதிபர்வம் பகுதி 190

Arjuna hit the mark! | Adi Parva - Section 190 | Mahabharata In Tamil

(சுயம்வர பர்வம் - 05)

பதிவின் சுருக்கம் : வில்லில் நாண் பொருத்த அர்ஜுனன் எழுந்தது பற்றி பிராமணர்கள் விவாதித்ததும்; அர்ஜுனன் வில்லில் நாணேற்றி குறியை அடித்ததும்; திரௌபதி அர்ஜுனனுக்கு மாலையிட்டதும்...

வைசம்பாயனர் தொடர்ந்தார், "ஏகாதிபதிகள் அனைவரும் நாணேற்றுவதைக் கைவிட்டதும், அந்தச் சபையில் பிராமணர்கள் கூட்டமாக அமர்ந்திருந்த இடத்திலிருந்து உயர் ஆன்ம ஜிஷ்ணு {அர்ஜுனன்} எழுந்தான்.(1) இந்திரனின் கொடி போன்ற நிறத்தைக் கொண்ட பார்த்தன் {அர்ஜுனன்} வில்லை நோக்கி முன்னேறுவதைக் கண்ட முக்கியமான பிராமணர்கள், தங்கள் மான் தோல்களை உயர்த்தி ஆட்டியபடி, சத்தமாக ஆர்ப்பரித்தனர்.(2) சிலர் இதை விரும்பவில்லை எனினும், வேறு சிலர் இதை மிகவும் விரும்பினார்கள்.

காட்சியில் வந்த நாயகன் {கிருஷ்ணன்}! - ஆதிபர்வம் பகுதி 189

Hero Enter! | Adi Parva - Section 189 | Mahabharata In Tamil

(சுயம்வர பர்வம் - 04)

பதிவின் சுருக்கம் : பாண்டவர்கள், பிராமணர்களுக்கு மத்தியில் இருப்பதை அறிந்த கிருஷ்ணன், பலராமருக்கு அதைச் சுட்டிக் காட்டியது; வில்லைப் பார்த்து சில அரசர்களின் ஆசை ஒழிந்தது; பல அரசர்கள் வில்லில் நாணேற்ற முடியாமல் பங்கமடைந்ததும்; அர்ஜுனன் வில்லில் நாணேற்ற எழுந்தது...

வைசம்பாயனர் சொன்னார், "பிறகு காதுகுண்டலங்களால் அலங்கரிக்கப்பட்டவர்களான அந்த இளமையான இளவரசர்கள், ஒருவயொருவர் விஞ்சும் வகையில் தங்களை, ஆயுதச் சாதனைச் செய்தவர்களாகவும், பெரும் பலத்தைக் கொடையாகக் கொண்டிருப்பவர்களாகவும் நினைத்துக் கொண்டு, தங்கள் ஆயுதங்கள் பளபளக்க எழுந்தனர்.(1) அவர்கள் தங்கள் அழகிலும், ஆற்றலிலும், குலவழியிலும் {பிறப்பிலும்}, அறிவிலும், செல்வத்திலும், இளமையிலும் செருக்கு கொண்டவர்களாக, இமயத்தின் மதம் பிடித்த யானைகளைப் போல இருந்தனர். ஒருவரையொருவர் பொறாமையுடன் பார்த்துக்கொண்டு, காமதேவனின் வசப்பட்டு, "கிருஷ்ணை {திரௌபதி} எனதே" என்று சொல்லிக்கொண்டு தங்கள் அரச ஆசனங்களில் இருந்து திடீரென எழுந்தனர்.(2,3) க்ஷத்திரியர்கள் ஒவ்வொருவரும் துருபதனின் மகளை {திரௌபதியை} வெல்லும் விருப்பத்தோடு, மலையரசனின் {இமவானின்} மகளான உமையைச் சூழ்ந்து நிற்கும் தேவர்கள் போல அந்த அரங்கத்தில் கூடியிருந்தனர்.(4) மலர்களால் ஆன வில்லைக் கொண்டிருக்கும் தேவனின் {மன்மதனின்} கணைகளால் தாக்கப்பட்டு, கிருஷ்ணையின் {திரௌபதியின்} நினைவால் இதயத்தைத் தொலைத்த அந்த அரங்கத்திலிருந்த இளவரசர்கள், அந்தப் பாஞ்சால மங்கையை {திரௌபதியை} வெல்வதற்காகத் தங்கள் சிறந்த நண்பர்களைக் கூடப் பொறாமையுடன் கண்டனர்.(5)

Thursday, August 15, 2013

சுயம்வரத்திற்கு வந்த மன்னர்கள் யார்? - ஆதிபர்வம் பகுதி 188

Who were the Kings that attended the Swayamvara! | Adi Parva - Section 188 | Mahabharata In Tamil

(சுயம்வர பர்வம் - 03)

பதிவின் சுருக்கம் : சுயம்வரத்திற்கு வந்த மன்னர்களின் பெயர்களை திரௌபதிக்கு சொன்ன திருஷ்டத்யும்னன்


திருஷ்டத்யும்னன் {திரௌபதியிடம்} சொன்னான், "துரியோதனன், துர்விஷகன், துர்முகன், துஷ்பிரதர்ஷனன், விவிம்சதி, விகர்ணன், ஸஹன், துச்சாசனன்,(1) யுயுத்சு, வாயுவேகன், பீமவேகரவன், உக்கிராயுதன், பலாகி, கனகாயு, விரோசனன்,(2) சுகுந்தலன், சித்ரசேனன், சுவர்ச்சஸ், கனகத்வஜன், நந்தகன், பாஹுசலி, துகுண்டன், விகடன் ஆகிய இவர்களும்,(3) ஓ! தங்கையே {திரௌபதியே}, மேலும் கர்ணனுடன் கூடிய திருதராஷ்டிரனின் வலிமைமிக்க மகன்கள் பலரும் உனது கரங்களுக்காக இங்கே வந்திருக்கின்றனர்.(4)

சுயம்வர அரங்கிற்கு வந்தாள் திரௌபதி! - ஆதிபர்வம் பகுதி 187

Draupadi entered the amphitheatre! | Adi Parva - Section 187 | Mahabharata In Tamil

(சுயம்வர பர்வம் - 02)

பதிவின் சுருக்கம் : பாண்டவர்கள் பாஞ்சாலம் செல்கையில் நடுவில் வியாசரைச்சந்திப்பது; பாஞ்சாலம் சென்று இரந்துண்டு வாழ்ந்து ஒரு குயவன் வீட்டில்வசிப்பது; திரௌபதியின் சுயம்வரத்தை துருபதன் அறிவிப்பது; திரௌபதி மங்கள நீராடி சுயம்வர மண்டபத்திற்கு வருவது; குறியை அடிப்பவர்கள் திரௌபதியின் கரம் பற்றலாம் என்று திருஷ்டத்யும்னன் அறிவிப்பது...


வைசம்பாயனர் சொன்னார், "ஓ ஜனமேஜயா, பிராமணர்களால் இப்படிச் சொல்லப்பட்ட பாண்டவர்கள், மன்னன் துருபதனால் ஆளப்படும் தென்பாஞ்சாலத்தைநோக்கி முன்னேறினர்.(1) அப்படி அவர்கள் {பாண்டவர்கள்} செல்லும் வழியில் பாவங்களற்ற, சுத்தமானஆன்மாவைக் கொண்ட சிறப்பு மிகுந்த துவைபாயன முனிவரைக் {வியாசரைக்} கண்டனர்.(2) முனிவரை {வியாசரை} முறையாக வணங்கி, அவரால் {வியாசரால்} பதிலுக்கு வணங்கப்பட்ட அவர்கள், அவரது ஆணையின் பேரில் துருபதனின் வசிப்பிடத்திற்கு {அரண்மனைக்கு} முன்னேறிச் சென்றனர்.(3) அந்தப் வலிமைமிக்கத் தேர்வீரர்கள் வழியில் அழகான வனங்களையும், தடாகங்களையும் கண்டு அங்கே சிறிது காலம் தங்கி, மெதுவாகப் படிப்படியாக முன்னேறினச் சென்றர்.(4) கல்விக்குத் தங்களை அர்ப்பணித்தவர்களும், செயல்களில் தூய்மையானவர்களும், இனிமையானவர்களும், இன்சொல் பேசுகிறவர்களுமான பாண்டவர்கள், இறுதியாகப் பாஞ்சாலர்களின் நாட்டில் நுழைந்தனர்.(5)

பாஞ்சாலம் செல்கையில்! - ஆதிபர்வம் பகுதி 186

On the way to Panchala! | Adi Parva - Section 186 | Mahabharata In Tamil

(சுயம்வர பர்வம் - 01)

பதிவின் சுருக்கம் : பாஞ்சால நாட்டிற்குச் செல்லும் வழியில் பாண்டவர்கள் பிராமணர்களைச் சந்திப்பதும், அவர்களுடன் சேர்ந்து செல்ல உடன்படுவதும்...

வைசம்பாயனர் சொன்னார், "அந்த ஐந்து சகோதரர்கள், அந்த மனிதப் புலிகளான ஐந்து பாண்டவர்கள், பாஞ்சால நாட்டையும், திரௌபதியையும், (அவளது திருமணத்தை ஒட்டி) அங்கு நடக்கப் போகும் விழாக்களையும் காண அந்நாட்டுக்குப் புறப்பட்டனர்.(1) எதிரிகளை ஒடுக்குபவர்களான அந்த மனிதப் புலிகள், தங்கள் தாயுடன் செல்லும்போது, வழியில் எண்ணற்ற பிராமணர்கள் தங்கள் வழியில் ஒன்றாகச் சேர்ந்து வருவதைக் கண்டனர்.(2) ஓ மன்னா {ஜனமேஜயா}, பிரம்மச்சாரிகளான அந்த பிராமணர்கள் பாண்டவர்களைக் கண்டு, "நீங்கள் எங்கே செல்கிறீர்கள்? எங்கிருந்து வருகிறீர்கள்?" என்று கேட்டனர்.(3)

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்