Thursday, August 15, 2013

சுயம்வர அரங்கிற்கு வந்தாள் திரௌபதி! - ஆதிபர்வம் பகுதி 187

Draupadi entered the amphitheatre! | Adi Parva - Section 187 | Mahabharata In Tamil

(சுயம்வர பர்வம் - 02)

பதிவின் சுருக்கம் : பாண்டவர்கள் பாஞ்சாலம் செல்கையில் நடுவில் வியாசரைச்சந்திப்பது; பாஞ்சாலம் சென்று இரந்துண்டு வாழ்ந்து ஒரு குயவன் வீட்டில்வசிப்பது; திரௌபதியின் சுயம்வரத்தை துருபதன் அறிவிப்பது; திரௌபதி மங்கள நீராடி சுயம்வர மண்டபத்திற்கு வருவது; குறியை அடிப்பவர்கள் திரௌபதியின் கரம் பற்றலாம் என்று திருஷ்டத்யும்னன் அறிவிப்பது...


வைசம்பாயனர் சொன்னார், "ஓ ஜனமேஜயா, பிராமணர்களால் இப்படிச் சொல்லப்பட்ட பாண்டவர்கள், மன்னன் துருபதனால் ஆளப்படும் தென்பாஞ்சாலத்தைநோக்கி முன்னேறினர்.(1) அப்படி அவர்கள் {பாண்டவர்கள்} செல்லும் வழியில் பாவங்களற்ற, சுத்தமானஆன்மாவைக் கொண்ட சிறப்பு மிகுந்த துவைபாயன முனிவரைக் {வியாசரைக்} கண்டனர்.(2) முனிவரை {வியாசரை} முறையாக வணங்கி, அவரால் {வியாசரால்} பதிலுக்கு வணங்கப்பட்ட அவர்கள், அவரது ஆணையின் பேரில் துருபதனின் வசிப்பிடத்திற்கு {அரண்மனைக்கு} முன்னேறிச் சென்றனர்.(3) அந்தப் வலிமைமிக்கத் தேர்வீரர்கள் வழியில் அழகான வனங்களையும், தடாகங்களையும் கண்டு அங்கே சிறிது காலம் தங்கி, மெதுவாகப் படிப்படியாக முன்னேறினச் சென்றர்.(4) கல்விக்குத் தங்களை அர்ப்பணித்தவர்களும், செயல்களில் தூய்மையானவர்களும், இனிமையானவர்களும், இன்சொல் பேசுகிறவர்களுமான பாண்டவர்கள், இறுதியாகப் பாஞ்சாலர்களின் நாட்டில் நுழைந்தனர்.(5)

அவர்கள், தலைநகரையும் {தலைநகர் காம்பில்யத்தையும்}, கோட்டையையும் கண்டபிறகு, ஒரு குயவனின் {பானை செய்பவர்} வீட்டில் வசித்தனர்.(6) அவர்கள், இரந்துண்டு வாழும் வாழ்வு முறையை நோற்று, பிராமணத் தொழிலைக் கைக்கொண்டனர். அந்த துருபதனின் தலைநகரில் {காம்பில்யத்தில்} யாரும் அந்த வீரர்களை அடையாளம் காணவில்லை.(7) யக்ஞசேனன் {துருபதன்}, தனது மகளை {திரௌபதியைப்} பாண்டுவின் மகனான கிரீடிக்கு {அர்ஜுனனுக்குக்} கொடுப்பதென்ற ஆசையை மனத்தில் வைத்திருந்தான். ஆனால் அதுகுறித்து அவன் {துருபதன்} யாரிடமும் பேசவில்லை.(8) ஓ ஜனமேஜயா! பாஞ்சால மன்னன் {துருபதன்}, அர்ஜுனனை மனத்தில் கொண்டு, அர்ஜுனனைத்தவிர வேறு யாராலும் நாணேற்ற முடியாத ஓர் உறுதியான வில்லை உண்டாக்கினான்.(9)  மன்னன் {துருபதன்} வானத்தில் ஓர் இயந்திரத்தைச் செய்து, அதில் ஒரு குறியையும் இணைத்தான்.(10)

அப்போது துருபதன், "இந்த வில்லில் நாணேற்றி, நன்கு அலங்கரிக்கப்பட்ட இந்தக் கணைகளைக் கொண்டு, மேலே இந்த இயந்திரத்தில் இருக்கும் குறியை அடிப்பவனே எனது மகளை {திரௌபதியைப்} பெறுவான்" என்று சொன்னான் {துருபதன்}".(11)

வைசம்பாயனர் தொடர்ந்தார், "இவ்வார்த்தைகளைச் சொல்லியே, துருபதன் அந்தச் சுயம்வரத்தை அறிவித்தான். ஓ பாரதா {ஜனமேஜயா}, இதைக்கேட்ட பிற நாடுகளின் மன்னர்கள் அவனது {துருபதனது} தலைநகரத்திற்கு {காம்பில்யத்திற்கு} வந்தனர்.(12) அங்கே பல சிறப்பு மிகுந்த முனிவர்களும் அந்தச் சுயம்வரத்தைக் காண வந்தனர். ஓ மன்னா {ஜனமேஜயா}, துரியோதனனும், குருக்களும் கர்ணனைத் துணையாகக் கொண்டு அங்கே வந்தனர்.(13) அங்கே பல மேன்மைமிகு பிராமணர்கள் பல்வேறு நாடுகளில் இருந்தும் வந்திருந்தனர். அங்கு வந்திருந்த ஏகாதிபதிகள் அனைவரும் சிறப்பு மிகுந்த துருபதனால் முறையாக வணங்கி வரவேற்கப்பட்டனர்.(14) சுயம்வரத்தைக் காண விரும்பிய குடிமக்கள், கடல் என ஆர்ப்பரித்து, அந்த அரைவட்ட அரங்கத்தில் கட்டப்பட்டிருந்த மேடைகளில் அமர்ந்தனர்.(15)

அந்த ஏகாதிபதி {துருபதன்}, அந்தப் பெரிய அரங்கினுள் வடகிழக்கு வாயில் வழியாக வந்தான். பல அழகிய அறைகளுடன் இருந்த அந்த அரங்கமே துருபதன் தலைநகரத்திற்கு {காம்பில்யத்திற்கு} வடகிழக்கில், சமதளமான தரை கொண்ட மங்கலமான இடத்தைத் தேர்ந்தெடுத்து அமைக்கப்பட்டது. அந்த அரங்கத்தின் அனைத்துப் புறங்களும் உயர்ந்த சுவர்களுடன், சுற்றிலும் அகழியுடன், ஆங்காங்கே அலங்கார வளைவுகள் கொண்ட வாயில்களுடனும் இருந்தது. பலநிறத் துணிகள் ஆங்காங்கே அலங்காரமாகச் சுவர்களில் தொங்கவிடப்பட்டிருந்தன.(16,17) எக்காளத்தின் ஓசையும், கருப்புக் கற்றாழையின் நறுமணமும் அரங்கத்தை நிரப்பியது. ஆங்காங்கே சந்தனம்தெளிக்கப்பட்டு, மலர் அலங்காரங்கள் செய்யப்பட்டிருந்தன.(18)  உயர்ந்த அறைகளால் சூழப்பட்ட அந்த அரங்கம் முழுவதும் வெண்மையாகக் கைலாச மலையை முட்டி நிற்கும் மேகத்தின் நிறத்தைக் கொண்டிருந்தது.(19) அந்த அரங்கத்தின் சாளரங்களில் {ஜன்னல்களில்}, தங்க இழைகளின் வலைகள் பின்னப்பட்டிருந்தன; சுவர்களில் வைரமும், விலை மதிப்பில்லாக் கம்பளங்களும், துணிகளும் பதிக்கப்பட்டிருந்தன. அதிலிருந்த அனைத்து படிக்கட்டுகளும் மலர் வளையங்களுடனும், மலர் மாலைகளுடனும், அற்புதமான கற்றாழைகளின் நறுமணத்துடன் முழுவதும் வெண்ணிறமாக ஒருகறையும் இல்லாமல் அன்னத்தின் கழுத்தைப் போல இருந்தன. அங்கே வீசிய நறுமணம் ஒரு யோஜனை (எட்டு மைல்கள்) தூரத்திற்கு நுகர முடிந்தது.(20,21)

அந்த அறைகள் ஒவ்வொன்றும் பெரும் கூட்டத்தை உள்ளே அனுமதிக்கும் வகையில் நூறு கதவுகளுடன் இருந்தன. அவை விலைமதிப்பில்லா படுக்கைகளுடனும், கம்பளங்களுடனும், பல உலோகங்களாலும் அலங்கரிக்கப்பட்டு, இமயத்தின் முகடுகளைப் போல இருந்தன.(22) அங்கே இருந்த ஏழு அடுக்கு வீடுகளில், துருபதனால் அழைக்கப்பட்டிருந்தவர்களும், தங்கள் மேனியில் பல்வேறு ஆபரணங்களை அணிந்திருந்தவர்களும், ஒருவரை ஒருவர் அழகில் விஞ்சியவர்களுமான பல ஏகாதிபதிகள் அங்கே தங்கினர். அந்த அரங்க மேடையில் அமர்ந்ததவர்களும், அந்த நகரத்திலும், நாட்டிலும் வசிப்பவர்களுமான குடிமக்கள், கிருஷ்ணையைக் {திரௌபதியைக்} காண அங்கே குழுமிய மன்னர்கள், சிங்கங்கள் போன்று பெரும் சக்தி கொண்டு பெரும் ஆன்மாவுடன் அந்த அறைகளில் இருப்பதைக் கண்டனர். ஆட்சி உரிமை பெற்ற உயர்ந்தவர்களான அவர்கள் அனைவரும் கருங்கற்றாழையின் நறுமணக் குழம்பைப் பூசி மணத்துடன் இருந்தனர். பெரும் சுதந்திரத்துடன் அவர்கள் அனைவரும் பிரம்மனை வழிபட்டுத் தங்கள் நாடுகளை அனைத்து எதிரிகளிடம் இருந்தும் காத்தனர். தங்கள் தங்கள் நற்செயல்களின் மூலம் அவர்கள் முழு உலகத்தாலும் விரும்பப்பட்டார்கள்.(23-26)

அந்த அரைவட்ட அரங்கினுள் பாண்டவர்களும் நுழைந்தனர். அவர்கள் பிராமணர்களுடன் அமர்ந்து பாஞ்சால மன்னனின் {துருபதனின்} ஒப்பற்ற செழுமையைக் கண்டனர்.(27) அங்கே கூடியிருந்த இளவரசர்கள், பிராமணர்கள் மற்றும் பிற மனிதர்களின் கூட்டம் மிகவும் மகிழ்ச்சியுடன், நாடக நடிகர்கள் மற்றும் ஆடல் கலைஞர்களின் திறமைகளைக் காட்டும் நிகழ்ச்சிகளைக் கண்டு (தொடர்ச்சியாக அனைத்துவகைச் செல்வங்களையும் பெரும் பரிசாகப் பெற்றதால்) நாளுக்கு நாள் பருக்கத் {குண்டாகத்} தொடங்கினர்.(28) ஓ மன்னா {ஜனமேஜயா}, அது பல நாட்களுக்குத் தொடர்ந்தது. பதினாறாவது நாளில் நிறைந்தது. ஓ பாரதகுலத்தின் காளையே {ஜனமேஜயா}, துருபதனின் மகள் {திரௌபதி}, தன்னைத் தூய்மைப்படுத்திக் கொண்டு, அந்த அரைவட்ட அரங்கினுள் நுழைந்தாள். அவள் விலைமதிப்பற்ற ஆடைகளும், அனைத்து ஆபரணங்களும்பூண்டிருந்தாள். தனது கரங்களில் ஒரு தங்கத் தட்டையும், மலர் மாலையையும் வைத்திருந்தாள்.(29,30)

அப்போது, அந்தச் சந்திர குலத்தின் புரோகிதரும், மந்திரங்கள் அறிந்தவருமான ஒரு புனிதமான பிராமணர், வேள்வி நெருப்பை மூட்டி, தூய்மையாக்கப்பட்ட நெய்யை ஊற்றினார்.(31) அப்படி நெய்யை ஊற்றிய அவர் {பிராமணர்}, அக்னியை நிறைவு கொள்ளச் செய்து, மற்ற பிராமணர்களை மங்கலச் சூத்திரங்களை {மந்திரங்களை} உச்சரிக்க வைத்துச் சுற்றிலும் இசைக்கப்பட்ட இசை வாத்தியங்களை அமைத்தார்.(32) ஓ ஏகாதிபதியே {ஜனமேஜயனே}, அந்த அரங்கமே அசைவற்று அமைதியானது. மேகத்தைப் போன்றோ, பேரிகையைப் போன்ற ஆழ்ந்த குரலுடைய திருஷ்டத்யும்னன், தனது தங்கையின் {திரௌபதியின்} கரம் பற்றி அந்தக் கூட்டத்திற்கு நடுவில் நின்றான். அப்படி நின்று ஓங்கிய குரலில், மேகத்தின் முழக்கத்தைப் போல, அழகானவார்த்தைகளில் சிறந்த முறையில் பேசினான்.(33,34)

அவன் {திருஷ்டத்யும்னன்}, "கூடியிருக்கும் மன்னர்களே, கேட்பீர்களாக. இதுதான் வில், இதுதான் குறி, இவைதாம் கணைகள். கூரியவையான இந்த ஐந்து கணைகளால், அதோ அந்த இயந்திரத்தில் இருக்கும் துளையின் வழியாக, அதற்கு அப்பால் இருக்கும் குறியை நீங்கள் அடிக்க வேண்டும்.(35) உண்மையாகச் சொல்கிறேன்; நல்ல குலத்தில் பிறந்தவரும், அழகுடன் கூடியவரும் பலம் கொண்டவருமான எவரும், இன்று இந்த அருஞ்செயலைச் சாதித்து, எனது தங்கை கிருஷ்ணையை {திரௌபதியை} தனது மனைவியாக அடையலாம்" என்றான் {திருஷ்டத்யும்னன்}.(36) அங்கே கூடியிருந்த ஏகாதிபதிகளிடம் இப்படிச் சொன்ன அந்தத் துருபதனின் மகன் {திருஷ்டத்யும்னன்}, தனது தங்கையிடம் {திரௌபதியிடம்}, அங்கே கூடியிருந்த பூமியின் {நாடுகளின்} தலைவர்களின் பெயர், குலம் மற்றும் சாதனைகளைச் சொல்லத் தொடங்கினான்" {என்றார் வைசம்பாயனர்}.(37)


ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்