Friday, August 16, 2013

காட்சியில் வந்த நாயகன் {கிருஷ்ணன்}! - ஆதிபர்வம் பகுதி 189

Hero Enter! | Adi Parva - Section 189 | Mahabharata In Tamil

(சுயம்வர பர்வம் - 04)

பதிவின் சுருக்கம் : பாண்டவர்கள், பிராமணர்களுக்கு மத்தியில் இருப்பதை அறிந்த கிருஷ்ணன், பலராமருக்கு அதைச் சுட்டிக் காட்டியது; வில்லைப் பார்த்து சில அரசர்களின் ஆசை ஒழிந்தது; பல அரசர்கள் வில்லில் நாணேற்ற முடியாமல் பங்கமடைந்ததும்; அர்ஜுனன் வில்லில் நாணேற்ற எழுந்தது...

வைசம்பாயனர் சொன்னார், "பிறகு காதுகுண்டலங்களால் அலங்கரிக்கப்பட்டவர்களான அந்த இளமையான இளவரசர்கள், ஒருவயொருவர் விஞ்சும் வகையில் தங்களை, ஆயுதச் சாதனைச் செய்தவர்களாகவும், பெரும் பலத்தைக் கொடையாகக் கொண்டிருப்பவர்களாகவும் நினைத்துக் கொண்டு, தங்கள் ஆயுதங்கள் பளபளக்க எழுந்தனர்.(1) அவர்கள் தங்கள் அழகிலும், ஆற்றலிலும், குலவழியிலும் {பிறப்பிலும்}, அறிவிலும், செல்வத்திலும், இளமையிலும் செருக்கு கொண்டவர்களாக, இமயத்தின் மதம் பிடித்த யானைகளைப் போல இருந்தனர். ஒருவரையொருவர் பொறாமையுடன் பார்த்துக்கொண்டு, காமதேவனின் வசப்பட்டு, "கிருஷ்ணை {திரௌபதி} எனதே" என்று சொல்லிக்கொண்டு தங்கள் அரச ஆசனங்களில் இருந்து திடீரென எழுந்தனர்.(2,3) க்ஷத்திரியர்கள் ஒவ்வொருவரும் துருபதனின் மகளை {திரௌபதியை} வெல்லும் விருப்பத்தோடு, மலையரசனின் {இமவானின்} மகளான உமையைச் சூழ்ந்து நிற்கும் தேவர்கள் போல அந்த அரங்கத்தில் கூடியிருந்தனர்.(4) மலர்களால் ஆன வில்லைக் கொண்டிருக்கும் தேவனின் {மன்மதனின்} கணைகளால் தாக்கப்பட்டு, கிருஷ்ணையின் {திரௌபதியின்} நினைவால் இதயத்தைத் தொலைத்த அந்த அரங்கத்திலிருந்த இளவரசர்கள், அந்தப் பாஞ்சால மங்கையை {திரௌபதியை} வெல்வதற்காகத் தங்கள் சிறந்த நண்பர்களைக் கூடப் பொறாமையுடன் கண்டனர்.(5)

ருத்ரர்கள், ஆதித்தியர்கள், வசுக்கள், அசுவினி இரட்டையர்கள், ஸ்வாதாக்கள் {சத்தியஸ்கள்}, மருத்துக்கள் கூடி வர; குபேரனும், யமனும் முன்னணியில் நடக்க, தேவர்கள் தங்கள் தேர்களில் அந்த இடத்திற்கு வந்தனர்.(6) தைத்தியர்கள், சுபர்ணர்கள், நாகர்கள், தெய்வீக முனிவர்கள், குஹ்யர்கள், சாரணர்கள், விஸ்வாவசு, நாரதர், பர்வதர், அப்சரஸ்களுடன் கூடிய முக்கியக் கந்தர்வர்களும் அங்கே வந்தனர்.(7)

ஹலாயுதன் (பலதேவன் {பலராமன்}), ஜனார்த்தனன் {கிருஷ்ணன்} மற்றும் பிற விருஷ்ணி குலத் {யாதவக் குலத்} தலைவர்கள், அந்தகர்கள் மற்றும் கிருஷ்ணனின் தலைமையை ஏற்ற மற்ற யாதவக் குடிகளும் அந்தக் காட்சியைக் கண்டு அங்கே நின்றிருந்தனர்.(8) யதுகுல வீரர்களில் முதன்மையானவனான கிருஷ்ணன், தாமரைகள் நிறைந்த தடாகங்களை நோக்கும் வலிமைமிக்க யானைகளைப் போலவோ, சாம்பலால் மூடப்பட்ட நெருப்பைப் போலவோ திரௌபதியை நோக்கி ஈர்க்கப்பட்ட மதங்கொண்ட யானைகளான அந்த (பாண்டவர்கள்) ஐவரையும் கண்டு சிந்திக்கத் தொடங்கினான்.(9)  பிறகு அவன், ராமனிடம் {பலராமனிடம்}, "அது யுதிஷ்டிரர், அது பீமர், அது ஜிஷ்ணு (அர்ஜுனன்); அஃது அந்த இரட்டையர்கள் {நகுலனும், சகாதேவனும்}" என்று சொன்னான். ராமன் {பலராமன்} மெதுவாக அவர்கள் ஒவ்வொவரையும் ஆய்ந்து, மனநிறைவான கண்ணோட்டத்துடன் கிருஷ்ணனைக் கண்டான்.(10)

பிற மன்னர்களின் மகன்களும், பேரன்களும், கோபத்தில் தங்கள் உதடுகளைக் கடித்துக் கொண்டு, கண்களும், இதயங்களும், நினைவுகளும் கிருஷ்ணையின் {திரௌபதியின்} மேல் நிலைத்திருக்க, தங்கள் கண்களை அகல விரித்துத் திரௌபதியை மட்டுமே பார்த்துக் கொண்டு, அங்கிருந்த பாண்டவர்களைக் கவனியாதிருந்தனர்.(11) வலிய கரங்களைக் கொண்டவர்களான பிருதையின் மகன்களும் {யுதிஷ்டிரன், பீமன், அர்ஜுனன்}, அந்தச் சிறப்பு மிகுந்த வீர இரட்டையர்களும் {நகுலன், சகாதேவனும்} திரௌபதியைக் கண்டு, காமனின் கணையால் தைக்கப்பட்டிருந்தனர்.(12) தெய்வீக முனிவர்கள், கந்தர்வர்கள், சுபர்ணர்கள், நாகர்கள், அசுரர்கள், சித்தர்கள் கூடியிருக்கத் தெய்வீக மலர்கள் தூவி, தெய்வீக நறுமணம் வீச, துந்துபிகளின் ஓலியும், கணக்கற்ற மனிதக் குரல்களும் ஒலிக்கப் புல்லாங்குழலின் அமைதியான இசை எதிரொலிக்க, வீணை மற்றும் சிறு முரசின் இசை அந்தச் சுற்றுவட்டாரத்தையே நிரப்ப அங்கே தேவர்களின் தேர்கள் உள்ளே நுழைவதற்கு இடமில்லாமல் இருந்தது.(13,14)

கர்ணன், துரியோதனன், சால்வன், சல்லியன், அஸ்வத்தாமன், கிராதன், சுனிதன், வக்ரன், கலிங்க மன்னன், பங்கன், பாண்டியன் {பாண்டிய மன்னன்}, பௌண்டரன், விதேக ஆட்சியாளன், யவனர்கள் தலைவன், மற்றும் பிற மன்னர்களின் மகன்களும், பேரன்களும், தாமரைக் கண்களைக் கொண்டவர்களும், அரசுரிமை பெற்றவர்களுமான அந்த இளவரசர்கள், ஒருவர் பின் ஒருவராக, அந்த ஒப்பற்ற அழகுடைய கன்னிகையை அடையத் தங்கள் ஆற்றலை வெளிப்படுத்தத்தொடங்கினர்.(15,16) மகுடங்களாலும், மாலைகளாலும், கை வளைகளாலும், பிற ஆபரணங்களாலும், அலங்கரிக்கப்பட்டுப் பெரும் பலத்துடனும், பெரும் ஆற்றலுடனும் இருந்த அந்த இளவரசர்கள், தங்கள் பலமும், சக்தியும் வெடித்துச் சிதற முயற்சித்தாலும், அந்த இயல்புக்குமீறிய உறுதியுன் கூடிய வில்லுக்கு கற்பனையாலும் நாணேற்ற முடியவில்லை.(17) அந்த மன்னர்களில் சிலர், தங்கள் பலம், கல்வி, திறன், சக்தி ஆகியவற்றை பயன்ப்படுத்தித் தங்கள் உதடுகள் வீங்க அந்த வில்லுக்கு நாணேற்ற முயன்றனர். ஆனால், அப்படிச் செய்த அவர்கள் தரையில் தூக்கி வீசப்பட்டுச் சிறிது நேரம் அசைவற்றுக் கிடந்தனர்.(18) தங்கள் சக்தி வீணானதால், தங்கள் மகுடங்களும், மாலைகளும் நழுவப் பெரு மூச்சு வாங்கியபடியே, இனியும் தங்களால் அந்த அழகான கன்னிகையை வெல்ல முடியாது என்று அமைதியடைந்தனர்.(19)  அந்தக் கடினமான வில்லால் தூக்கி வீசப்பட்டு, மாலைகளும், கை வளையங்களும் கலைந்து அவர்கள் பெரும் துயர் கொண்டனர். அங்கே கூடியிருந்த ஏகாதிபதிகள் கிருஷ்ணையை {திரௌபதியை} அடையும் நம்பிக்கை இல்லாமல், துக்கத்துடன் இருந்தனர்.(20)

வில் தரிக்கும் அனைவரிலும் முதன்மையானவனான கர்ணன், அந்த ஏகாதிபதிகளின் துயரைக் கண்டு, அந்த வில்லிருக்கும் இடத்திற்குச் சென்றான். அவ்வில்லை விரைவாகத் தூக்கி உயர்த்தி, அதற்கு நாணேற்றி, அந்த நாண் கயிற்றில் கணைகளைப் பொருத்தினான்.(21) சூத இனத்தைச் சேர்ந்தவனும், சூரியனின் மகனுமான கர்ணன், நெருப்பையோ, சோமனையோ, சூரியனையோ போல, இலக்கை {குறியை} அடிக்கத் தீர்மானித்ததைக் கண்ட வில்லாளிகளில் முதன்மையான அந்தப் பாண்டுவின் மகன்கள், அந்தக் குறி ஏற்கனவே அடிக்கப்பட்டு, தரையில் வீழ்த்தப்பட்டுவிட்டதாக் கருதினர்.(22)  ஆனால், கர்ணனைக் கண்ட திரௌபதி, "ஒரு சூதனை என் தலைவனாக நான் கொள்ள மாட்டேன்" என்று உரக்கச் சொன்னாள்.  அப்போது, கர்ணன், எரிச்சலுடன் சிரித்து, சூரியன் மீது தன் பார்வையைச் செலுத்தி, ஏற்கனவே வட்டமாக வளைக்கப்பட்டிருந்த அந்த வில்லை வீசியெறிந்தான்[1].(23)


[1] கங்குலியின் பதிப்பிலும், மன்மதநாததத்தரின் பதிப்பிலும் கர்ணனின் நாணேற்றும் முயற்சியும், திரௌபதி அவனை மறுத்த குறிப்பும் மேற்கண்டவாறே இருக்கின்றன. ஆனால் கும்பகோணம் பதிப்பிலோ, மிக வித்தியாசமாக {நான் இதுவரை கேள்விப்பட்டதில்லை}, வில்லில் நாணேற்றுவதில் கர்ணனின் முயற்சி குறித்து பின்வருமாறு இருக்கிறது: "ஸூர்யபுத்திரனும், ஸூதபுத்திரனும், ஸ்ரேஷ்டனுமான கர்ணன், வில்லினிடம் வந்து அதைத் தூக்கினான். அவனாலும் ஏறிடப்பட்ட அந்த வில் மயிரிழையளவில் திரும்பியடித்தது {கர்ணனை அந்த வில் தூக்கியெறிகிறது}. மூன்று லோகங்களையும் ஜயிக்கத்தக்கவனும், பலத்தினால் மூன்று லோகங்களிலும் பெயர் பெற்றவனுமான அந்தக் கர்ணனும் அந்த வில்லினால் தோல்வியடைந்தானென்றதனால், எல்லோரும் அந்த வில்லினிடம் பயமுற்றனர். கர்ணனும் அந்த வில்லினால் இவ்வாறு தோற்கச் செய்யப்பட்டுப் போகவே, ராஜஸ்ரேஷ்டர்கள் தாமரை மலர் போன்ற முகங்கள் கவிழ்ந்து கண்ணெடுத்துப் பார்க்கவில்லை. கர்ணன் தோல்வியுற்றதைப் பார்த்து, உலகத்தில் வீரர்களான ராஜஸ்ரேஷ்டர்கள் வில்லெடுப்பதிலும், திரௌபதியை அடைவதிலும் ஆசையற்றவராயினர்" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில் இன்னும் ஆச்சரியமாக, கர்ணன் நாண்பூட்ட முயற்சிப்பதோ, திரௌபதி அவனை நிராகரிப்பதோ சொல்லப்படவே இல்லை. இதற்குப் பிறகு, சிசுபாலன், ஜராசந்தன், சல்லியன் ஆகியோர் நாண்பூட்ட முயற்சி செய்து தோல்வியுறுவதும் சொல்லப்படவில்லை. பொதுவாக மன்னர்கள் அனைவரும் தோல்வியுற்றனர் என்றே சொல்லப்பட்டுள்ளது. Sacred texts வலைத்தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள சம்ஸ்க்ருத மஹாபாரத மூலத்தைக் கண்டால், http://sacred-texts.com/hin/mbs/mbs01178.htm என்ற சுட்டியில் வில்லில் நாணேற்றி இலக்கை அடிக்கும் போட்டி விவரிக்கப்படுகிறது. இந்தப் பகுதியில் கர்ணனின் பெயர் குறிப்பிடப்படவில்லை என்றே அனுமானிக்கிறேன். ஆனால், அடுத்த பகுதியில் (http://sacred-texts.com/hin/mbs/mbs01179.htm) yat karṇa śalya pramukhaiḥ pārthivair lokaviśrutaiḥ nānṛtaṃ balavadbhir hi dhanurvedā parāyaṇaiḥ tat kathaṃ tv akṛtāstreṇa prāṇato durbalīyasā baṭu mātreṇa śakyaṃ hi sajyaṃ kartuṃ dhanur dvijāḥ avahāsyā bhaviṣyanti brāhmaṇāḥ sarvarājasu karmaṇy asminn asaṃsiddhe cāpalād aparīkṣiteஎன்ற இந்த வரிகளை பிபேக்திப்ராயின் மொழிபெயர்ப்பில் கண்டால் "உலகப்புகழ் பெற்றவர்களும், பெரும் பலம் கொண்டவர்களும், தனுர்வேதத்தை நன்கறிந்த க்ஷத்திரியர்களான கர்ணன் மற்றும் சல்லியனைப் போன்றோராலேயே இந்த வில்லுக்கு நாணேற்ற முடியவில்லையென்றால் ஆயுதங்களில் ஞானமில்லாத பலவீனனான இந்தப் பிராமணனால் எவ்வாறு வெல்ல முடியும்?" என்று சொல்லப்படுவதாகத் தெரிகிறது.

பிறகு பல க்ஷத்திரியர்களும் அந்தச் சாதனையைக் கைவிட்ட பிறகு, யமனைப் போன்று வலிமைமிக்கவனும், சிறப்புமிக்கவனும், தீர்மானத்துடன் கூடியவனும், தமகோஷனின் மகனுமான சிசுபாலன், அந்த வில்லுக்கு நாணேற்ற முயற்சித்து, முழங்கால் மடிந்து தரையில் விழுந்தான்.(24,25) பெரும் பலமும், சக்தியும் கொண்ட மன்னன் ஜராசந்தன், அந்த வில்லை அணுகி அசைவற்ற மலையைப் போன்ற உறுதியுடன் அங்கே சிறிது நேரம் நின்றான்.(26) அவனும் அந்த வில்லால் தூக்கியெறியப்பட்டு, முழங்கால் மடிந்து தரையில் விழுந்தான். அப்படி விழுந்த அவன், விரைவாக எழுந்து அந்த அரங்கத்தை விட்டு வெளியேறித் தனது நாட்டுக்குப் புறப்பட்டான்[2].(27) பிறகு, பெரும் வீரனும், பெரும் பலத்தைக் கொண்டவனுமான மத்ர மன்னன் சல்லியன், அந்த வில்லுக்கு நாண்பூட்டும் முயற்சியில் முழங்கால் மடிந்து தரையில் விழுந்தான்[3].(28)

[2] கங்குலியில் ஜராசந்தன் புறப்பட்டான் என்று முடிந்தாலும், கும்பகோணம் பதிப்பில், "பிறகு, "இந்த உயர்ந்த வில்லை இப்போது எந்த அரசன்தான் நாணேறிடுவான்" என்று மனத்தில் நிச்சயஞ்செய்து கொண்டு மறுபடியும் நின்றான். அவனுக்குப் பிறகு துரியோதனராஜன் எழுந்தான்" என்றிருக்கிறது.

[3] கும்பகோணம் பதிப்பில், இங்கே சிசுபாலன் வில்லை வளைக்க முற்பட்டு, அதற்கு நாண்பூட்ட உளுந்தளவு மிச்சமிருக்கையில் முழங்கால் மடிந்து கீழே விழுந்தது, மலைபோன்ற அரசன் ஜராசந்தன் நாண்பொருத்தக் கடுகளவு இருந்தபோது, அந்த வில் திருப்பியடித்தது, சல்லியனும் திரும்பியடிக்கப்பட்டது, துரியோதனன் அந்த வில்லை எடுத்தது; ஏறிடப்பட்ட அந்த வில் இன்னும் எள்ளளவிருக்கையில் திருப்பியடித்து அவன் அண்ணாந்து விழுந்தது ஆகியவை விரிவாக விளக்கப்பட்டிருக்கின்றன.  குறிப்பாக துரியோதனனின் முயற்சியைச் சொல்லுமிடத்தில், "அகங்காரமுள்ளவனும், அஸ்திரங்களில் நிச்சயமான ஞானமுள்ளவனும், ராஜலக்ஷணங்களெல்லாம் பொருந்தினவனும், மஹாபலசாலியும், சூரனும், திருதராஷ்டிர புத்திரனுமான துரியோதனராஜன் அங்கே ஸஹோதரர்களின் நடுவில் விரைவாக எழுந்தான்; திரௌபதியைக் கண்டு களிப்புற்று வில்லினருகில் வந்தான். அவன் வில்லை எடுத்துக் கொண்ட பிறகு, வில்லைத் தரித்த இந்திரனைப் போல் விளங்கினான். அவன் தனுஸை நாணேறிடத் தொடங்கினான். ஏறிடப்பட்ட அந்தவில் இன்னும் எள்ளளவிருக்கையில் திரும்பியடித்தது. அப்போது, துரியோதனராஜன் கைவிற்பிடியை விட்டதனால் வன்முயுள்ள அந்த வில்லினால் அடிக்கப்பட்டு அண்ணாந்து விழுந்தான். வில்லினால் அடிக்கப்பட்ட அந்த அரசன் வெட்கத்துடன் சென்றான்" என்றிருக்கிறது.

இறுதியாக, உயர்ந்த மதிப்பிற்குரிய மக்கள் கூடியிருந்த அந்த சபையில், ஏகாதிபதிகள் அனைவரும் ஏளனப் பேச்சுக்கு உட்பட்ட போது, வீரர்களில் முதன்மையானவனும், குந்தியின் மகனுமான ஜிஷ்ணு {அர்ஜுனன்}, அந்த வில்லுக்கு நாணேற்ற விரும்பி, நாண்கயிற்றில் கணைகளைப் பொருத்தினான்" {என்றார் வைசம்பாயனர்}.(29)


ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்