Thursday, August 15, 2013

சுயம்வரத்திற்கு வந்த மன்னர்கள் யார்? - ஆதிபர்வம் பகுதி 188

Who were the Kings that attended the Swayamvara! | Adi Parva - Section 188 | Mahabharata In Tamil

(சுயம்வர பர்வம் - 03)

பதிவின் சுருக்கம் : சுயம்வரத்திற்கு வந்த மன்னர்களின் பெயர்களை திரௌபதிக்கு சொன்ன திருஷ்டத்யும்னன்


திருஷ்டத்யும்னன் {திரௌபதியிடம்} சொன்னான், "துரியோதனன், துர்விஷகன், துர்முகன், துஷ்பிரதர்ஷனன், விவிம்சதி, விகர்ணன், ஸஹன், துச்சாசனன்,(1) யுயுத்சு, வாயுவேகன், பீமவேகரவன், உக்கிராயுதன், பலாகி, கனகாயு, விரோசனன்,(2) சுகுந்தலன், சித்ரசேனன், சுவர்ச்சஸ், கனகத்வஜன், நந்தகன், பாஹுசலி, துகுண்டன், விகடன் ஆகிய இவர்களும்,(3) ஓ! தங்கையே {திரௌபதியே}, மேலும் கர்ணனுடன் கூடிய திருதராஷ்டிரனின் வலிமைமிக்க மகன்கள் பலரும் உனது கரங்களுக்காக இங்கே வந்திருக்கின்றனர்.(4)

க்ஷத்திரியர்களில் காளையான கணக்கிலடங்கா மற்றச் சிறப்பு மிகுந்த ஏகாதிபதிகளும் உனக்காக வந்திருக்கின்றனர். சகுனி, சௌபலன், விருஷகன், பிருஹத்பலன்(5) ஆகிய காந்தார மன்னரின் மகன்களும் வந்திருக்கிறார்கள். ஆயுதம் தாங்கியவர்களில் முதன்மையானவர்களான சிறப்பு மிகுந்த அஸ்வத்தாமன் மற்றும் போஜன் ஆகியோர்(6) தங்களை நன்கு அலங்கரித்துக் கொண்டு இங்கு வந்திருக்கின்றனர்.

பிருஹந்தன், மணிமான், தண்டதாரன்,(7) சகதேவன், ஜயத்சேனன், மேகசந்தி ஆகியோரும், சங்கன் மற்றும் உத்தரன் ஆகிய தனது இரு மகன்களுடன் விராடனும்,(8) வர்த்தக்ஷேமி {விருத்தக்ஷேமன்}, சுசர்மன்[1], சேனாபிந்து ஆகியோரும், சுநாமன் மற்றும் சுவர்ச்சஸ் ஆகிய தனது இரு மகன்களுடன் கூடிய சுகேதுவும்,(9) சுசித்ரன், சுகுமாரன், விருகன், சத்யத்ருதி, சூர்யத்வஜன், ரோசமானன், நீலன், சித்ராயுதன்,(10) அம்சுமான், சேகிதானன், பெரும் பலம் வாய்ந்த ஸ்ரேணிமான், சமுத்ரசேனனின் பெரும் பலம் பொருந்திய மகன் சந்திரசேனன்,(11) ஜராசந்தன் {ஜலசந்தன்}[2], தந்தையும் மகனுமான விதண்டனும் தண்டனும், பௌண்டரகவாசுதேவன், பெரும் சக்தி வாய்ந்த பகதத்தன் ஆகியோரும்,(12)

[1] திரிகர்த்த நாட்டரசன். சம்சப்தகர்களின் தலைவன். குருக்ஷேத்திரப்போரில் அர்ஜுனன் தனது பெரும்பங்கு நேரத்தை சம்சப்தகர்களை அழிப்பதிலேயே செலவிட்டான். கும்பகோணம் பதிப்பில் இந்த இடத்தில் இவன், "விருத்தக்ஷேமன் புத்ரனான சுசர்மன்" என்று குறிப்பிடப்படுகிறான்.

[2) இது ஜலசந்தன்; மகதமன்னன் ஜராசந்தன் அல்ல. ஜராசந்தன் இதே பகுதியில் பின்னர் குறிப்பிடப்படுகிறான். கும்பகோணம் பதிப்பு, மன்மதநாததத்தர் மற்றும் பிபேக்திப்ராய் ஆகியோரின் பதிப்புகளிலும் இங்கே ஜலசந்தன் என்றே இருக்கிறது.

கலிங்கன், தாம்ரலிப்தன், பத்தனையின் மன்னன் {பத்தனாதிபதி} ஆகியோரும், வீரனான ருக்மாங்கதன் என்ற தனது மகனுடன் வந்திருப்பவனும், பெரும் தேர்வீரனுமான மத்ர மன்னன் சல்லியன், ருக்மரதன் ஆகியோரும், பெரும் தேர் வீரர்களான பூரி, பூரிஸ்ரவஸ் மற்றும் சலன் என்ற தனது மகன்களுடன் குரு குலத்தோனான சோமதத்தனும், சுதக்ஷேனன், பூரு குலத்தைச் சேர்ந்த காம்போஜன், பிருஹத்பலன், {திருடதன்வா},(12-15) சுஷேணன், உசீநரனின் மகனான சிபி, காரூஷ மன்னன் பட்சரணிஹந்தன்[3] ஆகியோரும்,(16) சங்கர்ஷணன் (பலதேவன்{பலராமன்}), வாசுதேவன் (கிருஷ்ணன்), ருக்மிணியின் பலம் பொருந்திய மகன் சாம்பன், கதனோடு கூடிய பிரத்யும்னனின் மகன் சாருதேஷ்ணன்,(17) அக்ரூரன், சாத்யகி, உயர் ஆன்ம உத்தவர், ஹிருதிகனின் மகனான கிருதவர்மன், பிருது, விப்ருது,(18) விதூரதன், கங்கன், சங்குவுடன் கூடிய கவேஷணன், ஆசாவஹன், அனிருத்தன், சமீகன், சாரிமேஜயன் ஆகியோரும்,(19) வீரர்களான வாதாபி {வாதபதி}, ஜில்லி, பிண்டாரகன், பலம்வாய்ந்த உசீநரன் ஆகிய விருஷ்ணி குலத்தைச் சேர்ந்தோரும்,(20)

[3] கும்பகோணம் பதிப்பில் இந்த இடத்தில், "காம்போஜ தேசத்தரசனாகிய ஸுதக்ஷிணன், பூருவம்சத்தவனான த்ருடதன்வா, ப்ருஹத்பலன், ஸுஷேணன், உசீநர புத்திரனான சிபி, திருடர்களை ஒழிப்பவனாகிய காருஷ தேசத்தரசன்" என்றிருக்கிறது.

பகீரதன், பிருஹத்க்ஷத்ரன், சிந்துவின் மகனான ஜெயத்ரதன், பிருஹத்ரதன், பாஹ்லீகன், பலம்பொருந்திய தேர் வீரனான ஸ்ரூதாயு,(21) உலூகன்[4], கைதவன், சித்ராங்கதன், சுபாங்கதன், மிகப் புத்திசாலியான வத்ஸராஜன், கோசல மன்னன்,(22) சிசுபாலன் மற்றும் பலம்பொருந்திய ஜராசந்தன்[5] ஆகியோரும், மேலும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பெரும் மன்னர்கள் பலரும்,(23) உலகம் முழுவதும் கொண்டாடப்படும் க்ஷத்திரியர்களும், ஓ அருளப்பட்டவளே, உனக்காக வந்திருக்கிறார்கள். ஆற்றலைக் கொண்டவர்களான இவர்கள் அந்தக் குறியை அடிக்கப் போகிறார்கள்.  அந்தக் குறியை இவர்களில் எவர் அடிக்கிறாரோ {அடிக்கிறார்களோ} அவரை {அவர்களில் ஒருவரை} நீ உனது கணவராகத் தேர்ந்தெடுக்கலாம்" என்று சொன்னான் {திருஷ்டத்யும்னன்}.(24)

[4] இவன் சகுனியின் மகன் என்ற குறிப்பு பீஷ்ம பர்வம் பகுதி 72ல் வருகிறது.

[5] மகத மன்னன் ஜராசந்தன்


ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்