Friday, August 16, 2013

குறியை அடித்த அர்ஜுனன்! - ஆதிபர்வம் பகுதி 190

Arjuna hit the mark! | Adi Parva - Section 190 | Mahabharata In Tamil

(சுயம்வர பர்வம் - 05)

பதிவின் சுருக்கம் : வில்லில் நாண் பொருத்த அர்ஜுனன் எழுந்தது பற்றி பிராமணர்கள் விவாதித்ததும்; அர்ஜுனன் வில்லில் நாணேற்றி குறியை அடித்ததும்; திரௌபதி அர்ஜுனனுக்கு மாலையிட்டதும்...

வைசம்பாயனர் தொடர்ந்தார், "ஏகாதிபதிகள் அனைவரும் நாணேற்றுவதைக் கைவிட்டதும், அந்தச் சபையில் பிராமணர்கள் கூட்டமாக அமர்ந்திருந்த இடத்திலிருந்து உயர் ஆன்ம ஜிஷ்ணு {அர்ஜுனன்} எழுந்தான்.(1) இந்திரனின் கொடி போன்ற நிறத்தைக் கொண்ட பார்த்தன் {அர்ஜுனன்} வில்லை நோக்கி முன்னேறுவதைக் கண்ட முக்கியமான பிராமணர்கள், தங்கள் மான் தோல்களை உயர்த்தி ஆட்டியபடி, சத்தமாக ஆர்ப்பரித்தனர்.(2) சிலர் இதை விரும்பவில்லை எனினும், வேறு சிலர் இதை மிகவும் விரும்பினார்கள்.

புத்திசாலித்தனமும், முன்யோசனையும் கொண்ட இன்னும் சிலர், ஒருவருக்கொருவர்,(3) "பிராமணர்களே, வலிமைகொண்டவர்களும், ஆயுத அறிவியலிலும், பயிற்சியிலும் சாதித்தவர்களுமான சல்லியன் மற்றும் பிறரைப் போன்ற கொண்டாடப்படும் க்ஷத்திரியர்களாலேயே அந்த வில்லில் நாணேற்ற முடியவில்லையென்றால், ஆயுதப் பயிற்சியில்லாதவனும், பலவீனனும், சிறுவனுமான ஒரு பிராமணனால் எவ்வாறு முடியும்?(4,5) உறுதியற்ற குழந்தைத்தனமான ஊக்கத்தால் இன்னும் முயற்சிக்கப்படாத இப்பணியில் ஈடுபடும் இவன் வெற்றியடையவில்லையென்றால், இங்கே கூடியிருக்கும் ஏகாதிபதிகளின் கண்களுக்கு மொத்த பிராமணர்களும் ஏளனமாகக் காட்சியளிப்போம்.(6) எனவே, குழந்தைத்தனமான துணிவினாலோ, உறுதியற்ற நிலையாலோ, வெற்றுச் செருக்காலோ வில்லில் நாணேற்ற இந்தப் பிராமணன் செல்லாதவாறு இவனை நாம் தடுப்போமாக" என்றனர்.(7)

அதற்கு மற்றவர்கள், "நாம் கேலிப் பொருளாக்கப்படவும் மாட்டோம், எவரிடமும் அவமதிப்பையும் அடையமாட்டோம், அரசுகளின் வெறுப்புக்கும் ஆளாகமாட்டோம்" என்றனர்.(8)

வேறு சிலர், "ஒரு வலிமைமிக்க யானையின் துதிக்கையைப் போலத் தெரிபவனும், நன்றாகக் கட்டமைக்கப்பட்ட தோள்கள், கரங்கள், தொடைகள் ஆகியவற்றுடன் கூடியவனும், பொறுமையில் இமயத்தைப் போலத் தெரிபவனும், சிங்கத்தைப் போன்ற நடையைக் கொண்டவனும், மதங்கொண்ட யானையின் ஆற்றலுடன் காணப்படுபவனும், தீர்மானத்துடன் கூடியவனுமான இந்த அழகிய இளைஞன், இந்த அருஞ்செயலை நிறைவேற்றக் கூடும்.(9,10) அவனிடம் பலமும் உறுதியும் காணப்படுகின்றன. அவனுக்கு இவையில்லையென்றால், தானாக இக்காரியத்திற்குச் செல்லமாட்டான். மேலும், அழிவை அடையக்கூடிய மனிதர்களால் முடியாததைப் பிராமணர்களால் சாதிக்க முடியாது எனச் சொல்ல மூவுலகங்களிலும் எதுவும் இல்லை.(11)

உணவைத் துறந்து, வெறும் காற்றையோ அல்லது வெறும் பழங்களையோ உண்டு, தங்கள் தவத்தைச் செய்து, இளைத்துப் போய்ப் பலவீனமாக இருக்கும் பிராமணர்கள், தங்கள் சக்தியைப் பொருத்தமட்டில் மிகப் பலவான்களே ஆவர். ஒரு பிராமணன் செய்யும் செயலை இது சரி, இது தவறு என்றும், இந்தப் பெரும் காரியத்தை இவனால் செய்ய முடியாது என்றும், இஃது அருளுடையது, இஃது அருளற்றது என்றும் ஒருபோதும் குறைத்து மதிக்கக் கூடாது. ஜமதக்னியின் மகன் ராமன் {பரசுராமர்}, போரில் அனைத்து க்ஷத்திரியர்களையும் தோல்வியுறச் செய்திருக்கிறார்.(12-14) அகத்தியர் தனது பிரம்மசக்தியின் மூலம் அடியற்ற கடலை முழுவதுமாகக் குடித்திருக்கிறார். எனவே, 'இந்த இளைஞன் அந்த வில்லை வளைத்து, எளிதாக நாண் ஏற்றட்டும்' என்று சொல்வீராக" என்றனர். (அதற்குப் பலர்), "அப்படியே ஆகட்டும்" என்றனர். பிறகும் அந்த பிராமணர்கள் இதையும், இன்னும் பிற வார்த்தைகளையும் தொடர்ந்து ஒருவருக்கொருவர் பேசிக் கொண்டே இருந்தனர்.(15,16)

பிறகு, அர்ஜுனன் அந்த வில்லை அணுகி, அந்த இடத்தில் ஒரு மலையைப் போல நின்றான். அந்த வில்லை வலம் வந்து, வரங்களைக் கொடுப்பவனான ஈசானனை வணங்கி, மனத்தில் கிருஷ்ணனையும் நினைத்துக் கொண்டு வில்லைக் கையிலெடுத்தான்.(17,18)  ஆயுதங்களின் அறிவியலிலும், பயிற்சியிலும் சாதித்தவர்களான, ருக்மன், சுநீதன், வக்ரன், ராதையின் மகன் {கர்ணன்},[1] துரியோதனன், சல்லியன் மற்றும் இன்னும் பிற மன்னர்கள், பெருமுயற்சி செய்தும் நாணேற்ற முடியாத அந்த வில்லில், இந்திரனின் மகனும், மனிதர்கள் அனைவரிலும் முதன்மையானவனும், வலிமையில் இந்திரனின் தம்பியை {விஷ்ணுவைப்} போன்றவனுமான அந்த அர்ஜுனன், கண் இமைப்பதற்குள் நாணேற்றினான்.(19,20) அங்கே இருந்த ஐந்து கணைகளையும் எடுத்துக் குறியை அடித்து, மேலே பொருத்தப்பட்டிருந்த இயந்திரத்தின் துளை வழியாக அக்குறியைத் தரையில் விழச் செய்தான்.(21)


[1] வில்லில் நாணேற்ற முயன்று தோல்வியுற்றோர் பட்டியலில் கர்ணனும் இருப்பது கவனத்திற்குரியது. மன்மதநாததத்தரின் பதிப்பிலும் 19ம் ஸ்லோகத்தில் கர்ணன் நாணேற்ற முடியாமல் தோல்வியுற்றோர் பட்டியலில் இருக்கிறான். முந்தைய பதிவின் [1]ம் அடிக்குறிப்பைக் காண்க.

அப்போது ஆகாயத்தில் பேரராவராம் எழுந்தது, அந்த அரங்கமும் பெருங்கூச்சலை எதிரொலித்தது.(22) தேவர்கள், எதிரிகளை அழிப்பவனான அந்தப் பார்த்தனின் {அர்ஜுனனின்} தலையில் தெய்வீக மலர்களைப் பொழிந்தனர். ஆயிரக்கணக்கான பிராமணர்கள் தங்கள் மேலாடையை எடுத்து மகிழ்ச்சியுடன் அசைக்கத் தொடங்கினர்.(23) சுற்றிலும் இருந்தவர்களும், வெற்றியடையாதவர்களுமான ஏகாதிபதிகள் துன்பத்துடனும், தளர்ச்சியுடனும் சோகமாகப் பேசினர். வானிலிருந்து அந்த அரங்கமெங்கிலும் மலர்மாரி பொழிந்தது.(24)

இசைக்கலைஞர்கள் தங்கள் இசைக்கருவிகளை ஒலிக்கத் தொடங்கினர். (சாதனை செய்தவனான அந்த வீரனை) சூதர்களும், மாகதர்களும் இனிய குரலில் வாழ்த்தினார்கள்.(25) எதிரிகளைக் கொல்பவனான துருபதன், அர்ஜுனனைக் கண்டு பெரும் மகிழ்ச்சியில் நிறைந்தான். அந்த ஏகாதிபதி, சந்தர்ப்பம் நேர்ந்தால், அந்த வீரனுக்குத் தன் படைகளின் உதவியைக் கொடுக்க விரும்பினான்.(26)

ஆரவாரம் அதன் உச்சத்தில் இருந்தபோது, அறவோர் அனைவரிலும் முதன்மையான யுதிஷ்டிரன், மனிதர்களில் முதன்மையான இரட்டையர்கள் துணையுடன் தன் தற்காலிக இலத்திற்குத் திரும்ப அந்த அரங்கத்தை விட்டகன்றான்.(27) கிருஷ்ணை {திரௌபதி}, குறி அடிக்கப்பட்டதையும், அக்குறியை அடித்தவனான, இந்திரனைப் போன்ற பார்த்தனையும் கண்டு, மகிழ்ச்சியால் நிறைந்து, வெள்ளுடையுடனும், மலர்மாலையுடனும் அந்தக் குந்தியின் மகனை {அர்ஜுனனை} அணுகினாள்.(28) அரங்கத்தில் அடைந்த வெற்றியால், திரௌபதியை வென்று, செயற்கரிய அருஞ்செயலைச் செய்த அர்ஜுனன், பிராமணர்கள் அனைவராலும் மரியாதையுடன் வணங்கப்பட்டான். அந்த அரங்கத்தை விட்டு அகன்ற அவன், இவ்வாறு தனக்கு மனைவியானவளால் பின்தொடரப்பட்டான்" {என்றார் வைசம்பாயனர்}[2].(29)

[2] கும்பகோணம் பதிப்பில், "அடிக்கப்பட்ட லக்ஷியத்தையும், இந்திரனுக்கொப்பான பார்த்தனையும் பார்த்த கன்னிகையாகிய கிருஷ்ணை, எப்போதும் வழக்கமாகப் பார்ப்பவர்களுக்குப் புதியவள் போலிருந்தாள். நகைக்காமலிருக்கும்போதே நகைப்பவள் போலவும், மதுமதமிலாமலே ஸ்ருங்கார விலாஸங்களினால் மயங்கினவள் போலவும் வாக்கினாலல்லாமல் பார்வையினாலேயே பேசுகிறவள் போலவும் வெண்மையான உயர்ந்த புஷ்ப மாலையையெடுத்துக் கொண்டு புன்னகையுடன் அர்ஜுனனிடம் சென்றாள். க்ஷத்திரிய வீரர்களின் மத்தியிலிருந்த கிருஷ்ணை, அச்சமின்ற அவர்களுக்குப் பின்னே சென்று பிராம்மணக் கூட்டத்தின் மத்தியிலிருக்கும் அர்ஜுனனது மார்பில் மாலையை அணிந்து, தேவேந்திரனை இந்திராணி போலவும், அக்கினியை ஸ்வாகாதேவி போலவும், விஷ்ணுவை லக்ஷ்மி போலவும், ஸூர்யனை உஷையென்னும் காலைஸந்தி போலவும், மன்மதனை ரதிதேவி போலவும், மஹேஸ்வரனைப் பார்வதி போலவும் வரனாக வரித்தாள். நினைத்தற்கரிய செய்கையுள்ள அந்த அர்ஜுனன் ஸபாமண்டபத்தில் ஜயித்து அந்தப் பிராம்மணர்களால் கொண்டாடப் பெற்று அந்தத் தன் மனைவியை அழைத்துக் கொண்டு, அவளால் பின்தொடரப்பெற்று ஸ்வயம்வர மண்டபத்தினின்றும் புறப்பட்டான்" என்றிருக்கிறது.



ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்