Saturday, August 17, 2013

பாண்டவர்களை அடையாளம் காட்டிய கிருஷ்ணன்! - ஆதிபர்வம் பகுதி 191

Krishna traced Pandavas | Adi Parva - Section 191 | Mahabharata In Tamil

(சுயம்வர பர்வம் - 06)

பதிவின் சுருக்கம் : மன்னர்கள் கோபம் கொண்டு துருபதனைக் கொல்லத் துணிவதும்; பீமனும், அர்ஜுனனும் போருக்குத் துணிந்து நிற்பதை அறிந்து, கிருஷ்ணனும் பலராமனும் பேசிக் கொள்வதும்...

வைசம்பாயனர் சொன்னார், "(குறியை அடித்த) பிராமணனுக்குத் தனது மகளை அளிப்பதற்கு மன்னன் (துருபதன்) தன் விருப்பத்தை வெளியிட்ட போது, அந்தச் சுயம்வரத்திற்கு அழைக்கப்பட்ட ஏகாதிபதிகள் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு, பெரும் கோபம் நிறைந்தனர்.(1)



அவர்கள் {அம்மன்னர்கள்}, "நம்மைக் கடந்து, நம் கூட்டத்தைப் புல்லென மதித்துப் பெண்களில் முதன்மையானவளான அவனது மகளை {திரௌபதியை} இந்த பிராமணனுக்கு அளிக்க விரும்புகிறான் இந்தத் துருபதன்.(2) ஒரு மரத்தை நட்டு வைத்து, அது கனி கொடுக்கும் சமயத்தில் அதை வெட்டுகிறான். இந்தப் பாவி நம்மை மதிக்கவில்லை; எனவே நாம் இவனைக் கொல்வோம்.(3) அவனது வயதின் காரணமாக நாம் கொடுக்கும் பெரு மதிப்பையோ, வணக்கத்தையோ பெறும் தகுதி இவனுக்கில்லை. இப்படிப்பட்ட தீய குணங்களுக்காக, அனைத்து மன்னர்களையும் அவமதித்த இந்தப் பாவியை, அவனுடைய மகனுடன் சேர்த்துக் கொல்வோம்.(4) அனைத்து ஏகாதிபதிகளையும் அழைத்து, அவர்களுக்கு அற்புதமான உணவு கொடுத்து உபசரித்துவிட்டு, இறுதியாக நம்மை மதிக்க மறுக்கிறான்.(5)

தேவ சபை போன்ற இந்த மன்னர்கள் கூட்டத்தில், தனக்கு இணையான ஏகாதிபதியாக ஒருவனைக் கூடவா இவன் காணவில்லை?(6) சுயம்வரம் க்ஷத்திரியர்களுக்கானது என்ற வேதத்தின் முடிவு நன்கு அறியப்பட்டது. ஒரு க்ஷத்திரியப் பெண்ணால் கணவனாகத் தேர்ந்தெடுக்கப்பட பிராமணனுக்கு எந்த உரிமையும் இல்லை.(7) மன்னர்களே, இந்தக் கன்னிகை நம்மில் ஒருவனைத் தேர்ந்தெடுக்க விரும்பவில்லை எனில், இவளை நெருப்பில் தூக்கிப் போட்டுவிட்டு தத்தமது நாடுகளுக்கு நாம் திரும்புவோம்.(8) இந்த பிராமணனைப் பொறுத்தவரை, இவன் விரும்பாமலோ, பேராசையாலோ {விரும்பியோ விரும்பாமலோ} ஏகாதிபதிகளான நமக்குக் காயத்தை ஏற்படுத்திவிட்டான். இருப்பினும் இவனைக் கொல்லக்கூடாது.(9) நமது நாட்டின் உயிர்கள், செல்வங்கள், மகன்கள், பேரன்கள் இன்னும் என்னென்ன செல்வமெல்லாம் உண்டோ அவை அனைத்தும் இந்த பிராமணர்களுக்காகவே இருக்கின்றன.(10) இருப்பினும் (இவனுக்கு) ஏதாவது செய்தாக வேண்டும். பழிக்கு அஞ்சியோ, ஒவ்வொரு வர்ணத்திற்கும் தனிப்பட்டவையான சிலவற்றைச் சரியாகப் பராமரிக்க எண்ணியோ, இனி நடக்கப் போகும் சுயம்வரங்களில் இது போன்ற முடிவு ஏற்படக் கூடாது" என்றனர்.(11)

ஒருவருக்கு ஒருவர் இப்படிச் சொல்லிக் கொண்ட அந்த ஏகாதிபதிகளில் புலிகள், துருபதனைக் கொல்ல விரும்பி, இரும்புக் கதாயுதங்கள் போன்ற பெரும் ஆயுதங்களுடன் அவனை நோக்கி அங்கும், இங்குமாக விரைந்தனர்.(12) கோபத்துடன் கூடியவர்களான அந்த ஏகாதிபதிகள் அனைவரும், விற்கள் மற்றும் கணைகளுடன் தன்னை நோக்கி வருவதைக் கண்ட துருபதன், அச்சமடைந்தவனாக பிராமணர்களிடம் {அர்ஜுனன் மற்றும் பீமனிடம்} பாதுகாப்பை வேண்டினான்.(13)  ஆனால், எதிரிகளைத் தண்டிக்கவல்லவர்களும், பெரும் வில்லாளிகளுமான அந்தப் பாண்டவர்கள் (பீமனும், அர்ஜுனனும்), விரைந்து வரும் அந்த ஏகாதிபதிகளை நோக்கி மதங்கொண்ட மூர்க்கமான யானைகளைப் போல முன்னேறிச் சென்றனர்.(14) விரல்களுக்குக் கையுறை அணிந்த ஏகாதிபதிகள், அந்தக் குரு வம்ச இளவரசர்களிடம் பெரும் கோபம் கொண்டு, பீமனையும், அர்ஜுனனையும் கொல்லத் தங்கள் ஆயுதங்களை உயர்த்திக் கொண்டு விரைந்து சென்றனர்.(15)

செயற்கரிய சாதனைகள் புரிந்தவனும், பலம் வாய்ந்தவனுமான பீமன், வஜ்ரத்தைப் போன்ற பலத்துடன் கூடியவனாகப் பெரும் யானையொன்றைப் போல, அருகிலிருந்த ஒரு மரத்தைப் பிடுங்கி, அதன் இலைகளை உதிர்த்தான்.(16)

வலிய கரங்களைக் கொண்டவனும், எதிரிகளைக் கலங்கடிப்பவனும், பிருதையின் மகனுமான அந்தப் பீமன், கதாயுததாரியான யமனே தனது கடுந்தண்டத்துடன் நிற்பதைப் போல, அம்மரத்துடன், மனிதர்களில் காளையான அர்ஜுனனின் அருகில் நின்றான்.(17) நினைத்துப்பார்க்க முடியாத சாதனைகளைச் செய்தவனும், இயல்புக்குமீறிய நுண்ணறிவைக் கொண்டவனுமான ஜிஷ்ணு, தனது அண்ணனின் அருஞ்செயலைக் கண்டு மிகவும் வியந்தான். இந்திரனுக்கு நிகரான சாதனைகளைச் செய்த அவன், அச்சமனைத்தையும் உதிர்த்துவிட்டு, தங்களைத் தாக்குபவர்களைத் எதிர்கொள்ளத் தயாராக வில்லுடன் நின்றான்.(18)

தெய்வீகப் புத்திக்கூர்மையும், புத்திக்கெட்டாத அருஞ்செயல்களையும் செய்த தாமோதரன் (கிருஷ்ணன்}, ஜிஷ்ணு {அர்ஜுனன்} மற்றும் அவனது அண்ணன் {பீமன்} ஆகியோரின் அருஞ்செயலைக் கண்டு, தனது அண்ணனான பெரும் சக்தி கொண்ட ஹலாயுதனிடம் (பலதேவனிடம் {பலராமனிடம்}},(19) "பெரும்பலம் வாய்ந்த சிங்கத்தின் நடையைக் கொண்டு, கையில் முழுமையாக நான்கு முழ நீளத்திற்குப் பெரும் வில்லை வைத்திருக்கும் அந்த வீரனே அர்ஜுனன். ஓ சங்கர்ஷணரே {பலராமரே} நான் வாசுதேவனாக {வசுதேவரின் மகனாக} இருந்தால், இந்த எனது கணிப்பில் ஐயமேதுமில்லை.(20) வேகமாக மரத்தைப் பிடுங்கி ஏகாதிபதிகளை விரட்டத் தயாராயிருக்கும் மற்றொரு வீரரே விருகோதரர் {பீமர்}. இன்று, இவ்வுலகில் விருகோதரரைத் தவிர வேறு யாரும் போரில் இது போன்ற அருஞ்செயலைச் செய்ய முடியாது.(21) முழுமையாக நான்கு முழ உயரமும், சிங்க நடையும், அடக்கமான நடத்தையும், அழகான நிறமும், பளபளக்கும் நீண்ட மூக்கும் கொண்டு, தாமரை இதழ்களைப் போன்ற கண்களை உடைய அந்த மற்றொரு இளைஞர், சற்று நேரத்திற்கு முன் அரங்கத்தை விட்டுச் சென்றாரே, அவர் தான் தர்மனின் மகன் {யுதிஷ்டிரர்}.(22) கார்த்திகேயனைப் {முருகனைப்} போன்று இருந்த மற்ற இளைஞர்கள் இருவரும் அஸ்வினி இரட்டையர்களின் மகன்கள் என்று நினைக்கிறேன். பாண்டுவின் மகன்கள் தங்கள் தாய் பிருதையுடன் {குந்தியுடன்}, அந்த அரக்கு மாளிகையில் இருந்து தப்பி விட்டார்கள் என்று நான் கேள்விப்பட்டேன்" என்றான்.(23)

பின்பு, நீரில்லா மேகம் போன்ற {வெண்மையான} நிறம் கொண்ட ஹலாயுதன் {பலராமன்}, தனது தம்பியிடம் {கிருஷ்ணனிடம்}, "இதைக் கேட்டு நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். எனக்குக் கிட்டிய நற்பேறினாலேயே, நமது தந்தையின் {வசுதேவரின்} சகோதரியான பிருதை {குந்தி},இந்தக் கௌரவ இளவரசர்களில் முதன்மையானவர்களுடன் (மரணத்திலிருந்து) தப்பினாள்" என்றான் {பலராமன்}.(24)


ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்