Sunday, August 18, 2013

ஒளிந்திருந்தான் திருஷ்டத்யும்னன்! - ஆதிபர்வம் பகுதி 194

Dhrishtadyumna Concealed! | Adi Parva - Section 194 | Mahabharata In Tamil

(சுயம்வர பர்வம் - 09)

பதிவின் சுருக்கம் : பாண்டவர்கள் வசிக்கும் குயவன் வீட்டில் ஒளிந்திருந்த திருஷ்டத்யும்னன்; பாண்டவர்கள் கொண்டு வந்த பிச்சையை குந்தியின் வழிகாட்டுதல்படி பிரித்துக் கொடுத்துப் பரிமாறிய திரௌபதி; காரியத்தை அறிந்து கொண்டு துருபதனிடம் திரும்பிய திருஷ்டத்யும்னன்; துயரத்துடன் பிதற்றிய துருபதன்...

வைசம்பாயனர் சொன்னார், "குருகுல இளவரசர்கள் (பீமனும், அர்ஜுனனும்) குயவனின் வசிப்பிடத்தை நோக்கி நடந்து செல்கையில், பாஞ்சால இளவரசனான திருஷ்டத்யும்னனும் அவர்களைப் பின் தொடர்ந்து சென்றான்.(1)  தனது பணியாட்கள் அனைவரையும் அனுப்பிவிட்டு, அந்தக் குயவனின் இல்லத்திற்கு அருகில் ஏதோ ஒரு பகுதியில் பாண்டவர்களுக்குத் தெரியாமல் ஒளிந்து கொண்டான்.(2) பிறகு, எதிரிகளை அழிப்பவர்களான பீமனும், அர்ஜுனனும், சிறப்புமிகுந்த இரட்டையர்களும், மாலை நேர பிச்சையை முடித்துக் கொண்டு திரும்பி, அனைத்தையும் மகிழ்ச்சியுடன் யுதிஷ்டிரனிடம் கொடுத்தனர்.(3) அப்போது, அன்பான இதயம் கொண்ட குந்தி, துருபதனின் மகளிடம் {திரௌபதியிடம்}, "ஓ இனிமையானவளே, நீ ஒரு பகுதியை முதலில் இதிலிருந்து எடுத்து, தேவர்களுக்கு அர்ப்பணித்து, பிராமணர்களுக்குக் கொடுத்துவிடுவாயாக.(4) உண்ண விரும்புபவர்களுக்கு உண்ணக் கொடுப்பாயாக, நமது விருந்தினர்களாக வருபவர்களுக்குக் கொடுப்பாயாக. மீதத்தை இரு பங்காகப் பிரித்து, ஒரு பங்கை பீமனுக்குக் கொடுப்பாயாக. ஓ இனிமையானவளே, இந்த அழகான நிறம் கொண்ட இளைஞன் {பீமன்} யானைகளின் மன்னனுக்கு நிகராக பெரும் தீனி தின்பவனாவான். மறு பாதியை ஆறு பங்குகளாக இட்டு, இந்த நான்கு இளைஞர்களுக்கும், ஒன்றை எனக்கும் கொடுத்துவிட்டு, ஒன்றை உனக்கும் எடுத்துக் கொள்வாயாக" என்றாள்.(5,6)

அப்போது, தனது மாமியாரின் இந்த அறிவுரைகளைக் கேட்டுக் கொண்ட அந்த இளவரசி, அவள் வழிகாட்டியபடி அனைத்தையும் மகிழ்ச்சியுடன் செய்தாள். அந்த வீரர்கள் அனைவரும் கிருஷ்ணையால் {திரௌபதியால்} தயாரிக்கப்பட்ட {சமைக்கப்பட்ட} உணவை உண்டனர்.(7) பெரும் செயல்புரிபவனான மாத்ரியின் மகன் சகாதேவன், தரையில் குசப் புல்லினால் {தர்ப்பைப் புல்லினால்} படுக்கை அமைத்து, அதில் படுத்துக் கொண்டான். மற்றவீரர்கள் அங்கிருந்த மான் தோலில் தங்களைக் கிடத்திக் கொண்டு உறங்கினர்.(8) குரு இளவரசர்களில் முதன்மையானவர்கள் தங்கள் தலைகளைத் தெற்கே வைத்து படுத்திருந்தனர்.குந்தி அவர்களின் தலைமாட்டில் படுத்துக் கொண்டாள். கிருஷ்ணை {திரௌபதி} அவர்களது கால்மாட்டில் படுத்துக் கொண்டாள்.(9) கிருஷ்ணை, பாண்டுவின் மகன்களுடன் குசப் புல்லில் {தர்ப்பைப் புல்லில்} அவர்களின் கால் மாட்டில் தலையணையில்லாமல் படுத்துக் கிடந்தாலும் அவளது இதயத்தில் துயர் கொள்ளவில்லை. அந்தக் குருகுலக் காளைகளைக் குறித்து மரியாதைக் குறைவாக எண்ணவுமில்லை. (10)

அப்போது, அந்த வீரர்கள் தங்களுக்குள் பேசத் தொடங்கினர். ஒரு படையைத் தலைமை தாங்கும் தகுதியுடன் இருந்த ஒவ்வொருவரும், தேவலோக தேர்களைக் குறித்தும், ஆயுதங்களைக் குறித்தும், யானைகள், வாட்கள், கணைகள், போர்க்கோடரிகள் ஆகியவற்றைக் குறித்தும் மிகவும் உற்சாகமாகப் பேசிக் கொண்டனர்.(11) பாஞ்சால மன்னனின் மகன் (தனது மறைவிடத்திலிருந்து) அவர்கள் பேசிய அனைத்தையும் கேட்டான். அவனுடன் இருந்த அனைவரும், கிருஷ்ணையை {திரௌபதியை} அந்த நிலையிலேயே கண்டனர்.(12) காலை வந்ததும், இளவரசன் திருஷ்டத்யும்னன் தனது மறைவிடத்திலிருந்து வெளிப்பட்டுக் குயவனின் வசிப்பிடத்தில் நடந்தது குறித்தும், இரவில் அந்த வீரர்கள் பேசிக் கொண்டதைக் குறித்தும் துருபதனிடம் விரிவாகத் தெரிவிக்க மிக விரைவாகச் சென்றான்.(13) பாண்டவர்கள்தான் தனது மகளை அடைந்தனர் என்பதை அறியாத பாஞ்சால மன்னன் மிகவும் துயருற்று இருந்தான்.

திருஷ்டத்யும்னன் திரும்பியதும் அந்தச் சிறப்புமிகுந்த ஏகாதிபதி {துருபதன்}, "எனது கிருஷ்ணை எங்கே சென்றாள்? யார் அவளைத் தூக்கிச் சென்றது?(14) ஒரு சூத்திரனோ, இழிந்த பிறவியோ,  கப்பம் கட்டும் வைசியனோ எனது மகளைத் தூக்கிச் சென்று, தனது அழுக்கான பாதத்தை எனது தலையில் வைத்துவிட்டனரா? ஓ மகனே, சுடுகாட்டில் பூக்குவியல் இறைக்கப்பட்டதா?(15) உயர்ந்த குல க்ஷத்திரியனோ அல்லது அதனினும் உயர்ந்த குலத்தானோ {பிராமணனோ} எனது மகளை அடைந்தானா? இழிந்த குலத்தைச் சேர்ந்த எவனும் கிருஷ்ணையை {திரௌபதியை} வென்று அவனது இடது காலை எனது தலையில் வைத்துவிட்டானா?(16) ஓ மகனே, மனிதர்களில் முதன்மையான பார்த்தனிடம் என் மகள் சேர்ந்திருந்தாள் என்றால் நான் நிச்சயம் மகிழ்வேன், துயருற மாட்டேன். ஓ உயர்ந்தவனே, உண்மையைச் சொல், இன்று எனது மகளை வென்றவன் எவன்?(17) குருக்களில் முதன்மையான விசித்திரவீரியனின் மகனின் {பாண்டுவின்} மகன்கள் உயிருடன் தான் இருக்கிறார்களா? வில்லை எடுத்துக் குறியை அடித்தவன் பார்த்தனா {அர்ஜுனனா?}" என்று கேட்டான் {துருபதன்}”.(18)


ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்