Saturday, August 17, 2013

அம்மா பிச்சை கொண்டு வந்தோம்! - ஆதிபர்வம் பகுதி 193

Ma! We have brought alms! | Adi Parva - Section 193 | Mahabharata In Tamil

(சுயம்வர பர்வம் - 08)

பதிவின் சுருக்கம் : 'பிச்சை கொண்டு வந்தோம்' என்று சொல்லிய பீமன் மற்றும் அர்ஜுனனின் வார்த்தைகளைக் கேட்ட குந்தி 'அனைவரும் சேர்ந்து அனுபவியுங்கள்' என்று சொன்னது; யுதிஷ்டிரனும், அர்ஜுனனும் திரௌபதியைக் குறித்து பேசிக் கொண்டது; வியாசர் சொன்னதை நினைவு கூர்ந்து, சகோதரர்கள் அனைவருக்கும் திரௌபதி பொது மனைவி என்று யுதிஷ்டிரன் தீர்மானித்தது; குயவன் வீட்டிற்கு வந்தது கிருஷ்ணன்...


வைசம்பாயனர் சொன்னார், "பிருதையின் {குந்தியின்} அந்தச் சிறப்புவாய்ந்த மகன்கள், குயவனின் வசிப்பிடத்திற்குத் திரும்பியதும், தங்கள் தாயை அணுகினர். மனிதர்களில் முதன்மையான அவர்கள், தங்கள் தாயிடம் யக்ஞசேனியை {திரௌபதியை} அன்று தாங்கள் அடைந்த பிச்சை என்று கூறினர்.(1) அறையின் உள்ளே இருந்த குந்தி, தனது மகன்களைப் பாராமல், "(நீங்கள் அடைந்ததை) அனைவரும் சேர்ந்து அனுபவியுங்கள்" என்றாள். சிறிது நேரம் கழித்துக் கிருஷ்ணையைக் {திரௌபதியைக்} கண்டு, "அய்யோ, நான் என்ன சொல்லிவிட்டேன்?" என்று பாவம் குறித்த அச்சத்தால் துயர்கொண்டாள் {குந்தி}.(2) அச்சூழ்நிலையில் இருந்து ஒவ்வொருவரையும் விடுவிப்பது எப்படி என்று நினைத்து, மகிழ்ச்சியுடன் இருந்த யக்ஞசேனியின் {திரௌபதியின்} கரங்களைப் பற்றி, யுதிஷ்டிரனை அணுகி,(3) "மன்னன் யக்ஞசேனனின் {துருபதனின்} மகளை {திரௌபதியை} உனது தம்பிகள், "பிச்சை கொண்டு வந்தோம்" என்று அறியாமையால் என்னிடம் சொன்னார்கள். ஓ மன்னா {யுதிஷ்டிரா}, நான் அதற்குச் சரியாக, 'நீங்கள் கொண்டு வந்ததை அனைவரும் சேர்ந்து அனுபவியுங்கள்' என்றும் சொல்லிவிட்டேன்.(4) ஓ குருகுலத்தின் காளையே {யுதிஷ்டிரனே}, எனது பேச்சு எதனாலும் பொய்யாகாது {எனது சொல் பொய்யாகக்கூடாது} என்பதையும், பாஞ்சால மன்னனின் மகள் எதைச் செய்தால் அவளைப் பாவம் அணுகாது என்பதையும், அவள் எப்படி அமைதியற்ற நிலையை அடையாமல் இருப்பாள் என்பதையும் எனக்குச் சொல்வாயாக" என்றாள் {குந்தி}".(5)

வைசம்பாயனர் தொடர்ந்தார், இப்படித் தனது தாயால் கேட்கப்பட்டவனும், மனிதர்களில் வீரனும், குருகுலக் கொழுந்துகளில் முதன்மையானவனும், புத்திக்கூர்மை உடையவனுமான மன்னன் (யுதிஷ்டிரன்), சிறிது நேரம் சிந்தித்து, குந்தியைத் தேற்றி, தனஞ்சயனிடம் {அர்ஜுனனிடம்},(6) "ஓ பல்குனா {அர்ஜுனா}, உன்னால் யக்ஞசேனி {திரௌபதி} வெல்லப்பட்டாள். எனவே, நீ அவளைத் திருமணம் செய்து கொள்வதே முறையாகும். ஓ எதிரிகளை நிலைத்து எதிர்ப்பவனே, புனித நெருப்பை மூட்டி, முறையான சடங்குகளுடன் அவளது கரத்தைப் பற்றுவாயாக" என்றான் {யுதிஷ்டிரன்}.(7)

இதைக் கேட்ட அர்ஜுனன், "ஓ மன்னா, பாவத்தில் என்னைப் பங்குகொள்ள வைக்காதீர். உமது விருப்பம் அறவிதிகளுக்கு ஏற்புடையதாக இல்லை. அது பாவிகள் பின்பற்றும் வழியாகும். முதலில் நீரும், அதன்பிறகு செயற்கரிய சாதனைகள் செய்பவரான பலம் வாய்ந்த கரங்களும் கொண்ட பீமரும் திருமணம் செய்ய வேண்டும்.(8) அதன்பிறகே நான் செய்து கொள்ள வேண்டும். அதன்பிறகு, நகுலனும், இறுதியாகப் பெரும் செயல் புரியும் சகாதேவனும் திருமணம் செய்து கொள்ள வேண்டும். ஓ ஏகாதிபதியே {யுதிஷ்டிரனே}, விருகோதரரும் {பீமரும்}, நானும், இரட்டையர்களும், ஏன் இந்தக் கன்னிகையும் கூட உமுது கட்டளைக்காக என்றும் காத்திருப்போம்.(9) நிலைமை இப்படி இருக்கும் போது, எதையும் சிந்தித்த பிறகு செய்தல் நலம். நாங்கள் அனைவரும் உமக்குக் கீழ்ப்படிபவர்களே. நீர் விரும்பியவாறு எங்களுக்குக் கட்டளையிடுவீராக" என்றான் {அர்ஜுனன்}".(10)

வைசம்பாயனர் தொடர்ந்தார், "மரியாதையும், பாசமும் நிறைந்த ஜிஷ்ணுவின் {அர்ஜுனனின்} இவ்வார்த்தைகளைக் கேட்ட பாண்டவர்கள் அனைவரும், பாஞ்சால இளவரசியின் மீது தங்கள் பார்வையைச் செலுத்தினர்.(11) அந்தப் பாஞ்சால இளவரசியும் அவர்கள் அனைவரையும் கண்டாள். அந்த இளவரசர்கள் அனைவரும் அந்தச் சிறப்பு மிகுந்த கிருஷ்ணையைப் {திரௌபதியைப்} பார்த்த பிறகு, தங்கள் ஒவ்வொருவரையும் பார்த்துக் கொண்டனர். பிறகு அனைவரும் அமர்ந்து திரௌபதியை மட்டுமே நினைத்துக் கொண்டிருந்தனர்.(12) உண்மையில், அளவில்லாச் சக்தி கொண்ட அந்த இளவரசர்கள் அனைவரும் திரௌபதியைப் பார்த்த போது, காமதேவன் அவர்களது இதயத்தின் மேல் படையெடுத்து, அவர்களது உணர்வுகளைக் கலங்கடித்தான்.(13) பகட்டான அழகைக் கொண்டவளான அந்தப் பாஞ்சாலியைப் பூமியில் உள்ள அனைத்து பெண்களுக்கும் மேலாகப் படைப்புக் கடவுள் வடித்திருந்தான். அவளது அழகு அனைத்து உயிர்களையும் கொள்ளையடித்தது.(14) குந்தியின் மகனான யுதிஷ்டிரன், தனது தம்பிகளைக் கண்டு, அவர்களின் மனத்தில் என்ன ஓடுகிறது என்பதைப் புரிந்து கொண்டான். அந்த மனிதக் காளை கிருஷ்ண துவைபாயனரின் {வியாசரின்} வார்த்தைகளையும் நினைவுகூர்ந்தான்.(15) அப்போது அந்த மன்னன் {யுதிஷ்டிரன்}, தம்பிகளுக்கு மத்தியில் ஏற்படும் பிரிவை எண்ணி அஞ்சி, அவர்களிடம், "இந்த அதிர்ஷ்டம் கொண்ட திரௌபதி, நம் அனைவருக்கும் பொது மனைவியாக இருப்பாள்" என்றான் {யுதிஷ்டிரன்}".(16)

வைசம்பாயனர் தொடர்ந்தார், "பாண்டுவின் மகன்கள், தங்கள் அண்ணன் சொன்ன வார்த்தைகளைக் கேட்டு அவற்றை மனத்தில் போட்டுச் சுழற்றி பெரும் மகிழ்ச்சியை அடைந்தனர்.(17) (கிருஷ்ணன், தான் சுயம்வரத்தில் கண்ட ஐவரும் குரு குல வீரர்களாக இல்லாமல் இருக்க முடியாது என ஐயம் கொண்ட) விருஷ்ணி குலத் தலைவன், ரோஹிணியின் மகனுடன் (பலதேவனுடன் {பலராமனுடன்}) அந்தமனிதர்களில் முதன்மையானவர்கள் வசித்திருக்கும் குயவனின் இல்லத்திற்கு வந்தான்.(18) கிருஷ்ணனும், பலதேவனும் அங்கே அந்தக் குயவனின் இல்லத்திற்கு வந்ததும், நல்ல உடற்கட்டும், நீண்ட கரங்களும் கொண்ட அஜாதசத்ருவை (யுதிஷ்டிரனைச்) சுற்றி அவனது தம்பிகள் நெருப்பின் பிரகாசத்தோடு அமர்ந்திருப்பதைக் கண்டனர்.(19)

அப்போது, வாசுதேவன் {கிருஷ்ணன்} அறம் சார்ந்த மனிதர்களில் முதன்மையான, அஜமீட குலத்தில் வந்த குந்தி மைந்தனின் {யுதிஷ்டிரனின்} பாதங்களைத் தொட்டு, "நான் கிருஷ்ணன்" என்றான்.(20) யுதிஷ்டிரனை அணுகிய ரோஹிணியின் மகனும் {பலராமனும்} அதையே செய்தான் {பாதம் பணிந்தான்}. கிருஷ்ணனையும், பலதேவனையும் கண்ட பாண்டவர்கள் பெரும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.(21) ஓ பாரதக் குலத்தில் முதன்மையானவனே {ஜனமேஜயா}, அதன்பிறகு, அந்த யது குலத் தலைவர்கள், தங்கள் தந்தையின் சகோதரியான குந்தியின் பாதத்தையும் தொட்டனர்.(22) குருகுலத்தின் முதன்மையான அஜாதசத்ரு {யுதிஷ்டிரன்}, கிருஷ்ணனைக் கண்டு நலம் விசாரித்த பிறகு, "ஓ வாசுதேவா {கிருஷ்ணா}, மாற்றுருவில் வாழ்ந்து வரும் எங்களை நீ எவ்வாறு கண்டுபிடித்தாய்?" என்று கேட்டான்.(23)

அதற்கு வாசுதவேன் {கிருஷ்ணன்} சிரித்துக் கொண்டே, "ஓ மன்னா, நெருப்பை மறைத்தாலும், அஃதை எளிதில் அறிய முடியும். பாண்டவர்களைத் தவிர இத்தகு வலிமையை வேறு எவரால் வெளிப்படுத்த முடியும்?(24) எதிரிகள் அனைவரையும் தாக்குப்பிடிப்பவர்களே, பாண்டுவின் மகன்களே, உங்களது நற்பேறால் மட்டுமே நீங்கள் அந்தக் கடும் நெருப்பிலிருந்து தப்பினீர்கள். உங்களது நற்பேறால் மட்டுமே திருதராஷ்டிரனின் தீய மகனும், அவனது ஆலோசகர்களும், அக்காரியத்தில் வெற்றியடைய முடியவில்லை.(25) அருளப்பட்டிருப்பீராக! குகையில் இருக்கும் நெருப்பானது படிப்படியாக வளர்ந்து, சுற்றிலும் பரவுவது போல வளமையைப் பெருக்கிக்கொள்வீராக. எந்த ஏகாதிபதியும் உம்மை அடையாளம் காணாதபடி, நாங்கள் எங்கள் முகாமுக்குச் செல்கிறோம்" என்று சொல்லி, யுதிஷ்டிரனிடம் விடைபெற்று, குன்றாத வளமையுள்ள கிருஷ்ணன், தன்னுடன் பலதேவனையும் அழைத்துக் கொண்டு, குயவனின் வசிப்பிடத்தில் இருந்து விரைவாக வெளியேறினான்" {என்றார் வைசம்பாயனர்}.(26)


ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்