Sunday, November 10, 2013

துயருற்றோரை ஆதரிப்பர் அறவோர்! - வனபர்வம் பகுதி 6

The Virtuous support the distressed | Vana Parva - Section 6 | Mahabharata In Tamil

(ஆரண்யக பர்வத் தொடர்ச்சி)

இப்பதிவின் காணொலி புத்தகத்தை யூடியூபில் காண




விதுரன் பாண்டவர்களிடம் சென்றதும் திருதராஷ்டிரன் தனது தம்பியை நினைத்து வருந்தல்; சஞ்சயனை அனுப்பி விதுரனை அழுத்துவரச் சொல்லல்; சஞ்சயன் விதுரனை திரும்ப அழைத்து வரல்; சகோதரர்கள் இருவரும் ஒருவருக்கொருவர் மன்னிப்பு கோரி மகிழ்ந்திருத்தல்

வைசம்பாயனர் சொன்னார், "ஓ மன்னா {ஜனமேஜயா}, விதுரன் பாண்டவர்களின் இருப்பிடம் சென்றதும், ஓ பாரதா {ஜனமேஜயா}, திருதராஷ்டிரன், ஆழமான விவேகத்துடன் தனது செயலுக்காக வருந்தினான். போர் மற்றும் அமைதியில் விதுரனுக்கு இருக்கும் பெரும் புத்திசாலித்தனத்தையும், பிற்காலத்தில் பாண்டவர்களுக்கு ஏற்படப்போகும் பெரும் செல்வாக்கையும் நினைத்துப் பார்த்தான். விதுரனை நினைத்து வலி கொண்ட திருதராஷ்டிரன் சபையின் வாயிலை அணுகப்போய் (காத்திருக்கும்) மற்ற ஏகாதிபதிகளின் முன்னிலையில் உணர்வற்று கீழே விழுந்தான். 


மீண்டும் நினைவை அடைந்த மன்னன் {திருதராஷ்டிரன்}, தரையில் இருந்து எழுந்து சஞ்சயனிடம், "எனக்கு நண்பனாக இருந்த எனது தம்பி {விதுரன்} அறதேவனைப் {தர்ம தேவனைப்} போன்றவன்! அவனை நினைத்துப் பார்த்த எனது இதயம் துயரத்தால் பற்றி எரிகிறது! செல், தாமதமில்லாமல் அறநெறிய அறிந்த எனது தம்பியை {விதுரனை} என்னிடம் அழைத்துவா!" என்றான். அதைச் சொன்ன பிறகு, அந்த ஏகாதிபதி {திருதராஷ்டிரன்} கதறி அழுதான். 

விதுரனை நினைத்து, வருத்தமடைந்து உள்ளம் கொதித்து, சகோதர பாசத்தால் துயரம் மேலிட்டு, சஞ்சயனிடம், "ஓ சஞ்சயா, பாவியான என்னால் கோபத்தில் துரத்தப்பட்ட எனது தம்பி {விதுரன்} இன்னும் உயிருடன் இருக்கிறானா என்பதை முதலில் உறுதி செய்! எனது ஞானமுள்ள தம்பி {விதுரன்}, அளவற்ற புத்திசாலித்தனம் கொண்ட அவன் {விதுரன்} சிறிதும் வரம்பு மீறி செயல்பட்ட குற்றவாளி கிடையாது. ஆனால், மறுபுறம், எனது கையால் செய்யப்பட்ட பெரும் தவறுகளுக்காகவே {சுட்டிக்காட்ட} வந்தான்! ஓ ஞானமுள்ளவனே {சஞ்ஜயனே}, அவனைக் கண்டுபிடித்து இங்கே கொண்டுவா. அல்லது, ஓ சஞ்சயா நான் எனது உயிரை விடுவேன்!" என்றான் {திருதராஷ்டிரன்}.

வைசம்பாயனர் தொடர்ந்தார், "மன்னனின் {திருதராஷ்டிரனின்} இந்த வார்த்தைகளைக் கேட்ட சஞ்சயன், தனது பாராட்டை உணர்த்தி, "அப்படியே ஆகட்டும்" என்று சொல்லி காம்யக வனம் இருக்கும் திக்கில் சென்றான். நேரத்தைக் கடத்தாமல் பாண்டுவின் மகன்கள் வசித்த வனத்தை அடைந்து மான் தோல் உடுத்தியிருந்த யுதிஷ்டிரன், தனது தம்பிகளின் பாதுகாப்பில் ஆயிரக்கணக்கான அந்தணர்களுக்கு மத்தியில் விதுரனுடன் அமர்ந்து தேவர்களுக்கு மத்தியில் இருக்கும் புரந்தரன் {இந்திரன்} போல இருப்பதைக் கண்டான். 

யுதிஷ்டிரனை அணுகிய சஞ்சயன் அவனை முறைப்படி வணங்கினான். பீமன், அர்ஜுனன் மற்றும் இரட்டையர்கள் {நகுல சகாதேவர்கள்} அவனை {சஞ்சயனை} உரிய மரியாதையுடன் வரவேற்றனர். அவன் {சஞ்சயன்} வசதியாக அமர்ந்த பிறகு, யுதிஷ்டிரன் அவனிடம் {சஞ்சயனிடம்} சில வழக்கமான விசாரிப்புகளை விசாரித்து அவனுடைய {சஞ்சயனுடைய} நன்னிலை குறித்து கேட்டான். பிறகு அவன் வந்த காரணத்தைக் குறித்தும் கேட்டான். சஞ்சயன் "அம்பிகையின் மகனான திருதராஷ்டிரர், ஓ க்ஷத்தா {விதுரா}, உம்மை நினைவு கூர்ந்தார். நேரத்தைக் கடத்தாமல் வந்து மன்னனை {திருதராஷ்டிரனே} காப்பாற்றும். ஓ மனிதர்களில் சிறந்தவரே {விதுரரே}, மனிதர்களில் முதன்மையான இந்தக் குரு இளவரசர்களின் {பாண்டவர்களின்} அனுமதியுடன், மன்னர்களில் சிங்கம்போன்றவரின் {திருதராஷ்டிரரின்} கட்டளையை ஏற்று, அவரிடம் திரும்பி வருவதே உமக்குத் தகும்!" என்றான்.

வைசம்பாயனர் தொடர்ந்தார், "சஞ்சயனால் இப்படிச் சொல்லப்பட்ட உறவினர்களுடன் நெருக்கமாக இருக்கும் புத்திசாலியான விதுரன், யுதிஷ்டிரனின் அனுமதியுடன் யானையின் பெயர் கொண்ட நகரத்திற்குத் {ஹஸ்தினாபுரத்திற்குத்} திரும்பிச் சென்றான். அவன் {விதுரன்} மன்னனை {திருதராஷ்டினை} அடைந்ததும், அம்பிகையின் மகனான பெரும் சக்தி கொண்ட திருதராஷ்டிரன், அவனிடம் {விதுரனிடம்}, "எனது நற்பேறாலேயே, ஓ விதுரா, பாவங்களற்ற நீ, அறநெறிகள் அறிந்த நீ என்னை நினைவுகூர்ந்து என்னிடம் வந்திருக்கிறாய்! மேலும், ஓ பாரத குலத்தின் காளையே {விதுரனே}, நீ இல்லாத நிலையில், இரவும் பகலும் தூக்கமற்று, பூமியில் தொலைந்து போனவனாகத் தான் நான் இருந்தேன்" என்றான் {திருதராஷ்டிரன்}. 

பிறகு மன்னன் {திருதராஷ்டிரன்} விதுரனைத் தனது மடியில் அமர்த்தி, அவனது {விதுரனது} தலையை முகர்ந்து பார்த்து, "நான் உச்சரித்த வார்த்தைகளுக்காக என்னை  நீ மன்னித்துவிடு, ஓ பாவங்களற்றவனே" என்றான். விதுரன், "ஓ மன்னா {திருதராஷ்டிரா}, நான் உம்மை மன்னித்துவிட்டேன். நீர் எனக்கு மூத்தவர், எனது உயர்ந்த மரியாதைக்குரியவர்! நான் உம்மைக் காணும் விருப்பத்திலேயே திரும்பி வந்தேன். அனைத்து அறம்சார்ந்த மனிதர்களும், ஓ மனிதர்களில் புலியே, (உள்ளுணர்வால்) துயரத்தில் இருப்பவர்களுக்குச் சாதகமாகவே நடந்து கொள்வார்கள். ஓ மன்னா {திருதராஷ்டிரா}, இது  அரிதான கருத்துகளின் விளைவே! (பாண்டவர்களுக்குச் சாதகமான எனது பாகுபாடு இந்தக் காரணத்தினாலேயே உண்டானது). ஓ பாரதா {திருதராஷ்டிரா}, உமது மகன்களும், பாண்டுவின் மகன்களைப் போல எனக்கு அன்பானவர்களே. ஆனால் பின்னவர்கள் {பாண்டவர்கள்} இப்போது துயரத்தில் இருக்கின்றனர். ஆகையால் எனது இதயம் அவர்களையே விரும்புகிறது" என்றான் {விதுரன்}.

வைசம்பாயனர் தொடர்ந்தார், "அந்த இரு சிறப்புமிக்க சகோதரர்களான விதுரனும், திருதராஷ்டிரனும் ஒருவருக்கு ஒருவர் மன்னிப்பு கோரும் பேச்சைப் பேசி, தங்களை பெரும் மகிழ்ச்சியுடன் இருப்பதாக உணர்ந்தனர்.


மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்