Monday, December 02, 2013

சால்வனுடன் கிருஷ்ணன் புரிந்த போர் - வனபர்வம் பகுதி 20

Krishna's war against Salwa | Vana Parva - Section 20 | Mahabharata In Tamil

(அர்ஜுனாபிகமன பர்வத் தொடர்ச்சி)

துவாரகை திரும்பிய கிருஷ்ணன் சால்வனைத் தேடி பல நாடுகளைக் கடந்து சென்று அவனைக் கண்டடைந்து அவனுடன் யுத்தம் புரிந்தது;

வாசுதேவன் {கிருஷ்ணன்} சொன்னான், "சால்வன் அனர்த்தர்களின் நகரத்தைவிட்டு சென்ற பிறகு, உமது பெரும் ராஜசூய வேள்வியை முடித்ததும் நான் அங்கு சென்றேன்! அங்கே சென்றதும் துவாரகை தனது ஓளியை இழந்திருப்பதைக் கண்டேன். பெரும் ஏகாதிபதியே {யுதிஷ்டிரரே}, அங்கே வேத உச்சரிப்புகள் மற்றும் வேள்வி ஆகியவற்றின் ஒலி கேட்கவில்லை. அற்புதமான மங்கையர் தங்கள் ஆபரணங்களை இழந்திருந்தனர். தோட்டங்கள் அழகிழந்து இருந்தன. இக்காட்சிகளால் அச்சமுற்ற நான், ஹிருதிகனின் மகனிடம் {கிருதவர்மனிடம்}, "மனிதர்களில் புலி போன்றவனே, விருஷ்ணிகளின் நகரத்தில் இருக்கும் ஆண்களும் பெண்களும் துயருற்று இருக்கின்றனர்?" என்று கேட்டேன். மன்னர்களில் சிறந்தவரே {யுதிஷ்டிரரே}, இப்படிக் கேட்கப்பட்ட ஹிருத்திகனின் மகன் (கிருதவர்மன்), நகரத்தின் மீதான சால்வனின் படையெடுப்பையும், அவன் திரும்பிச் சென்றதையும் விவரமாகத் தெரிவித்தான்.


பாரதர்களில் முதன்மையானவரே {யுதிஷ்டிரரே}, இவை அனைத்தையும் கேட்ட நான், சால்வனைக் கொல்ல எனது மனதில் தீர்மானித்தேன். பாரதர்களில் சிறந்தவரே, குடிமக்களை ஊக்கப்படுத்தி, மன்னர் ஆஹுகரிடமும், அனகதுந்துபியிடமும், விருஷ்ணி குலத்தின் தலைமை வீரர்களிடமும், "யாதவர்களில் காளைகளே, நான் சால்வனைக் கொல்லப் போகிறேன் என்பதை அறிந்து, நீங்கள் அனைவரும் விழிப்புடன் இந்த நகரத்திலேயே இருங்கள். அவனை {சால்வனைக்} கொல்லாமல் நான் துவாராவதி நகரத்திற்குத் திரும்பமாட்டேன். சால்வனுக்கும், விலையுயர்ந்த உலோகங்களால் ஆன அவனது தேருக்கும் அழிவை ஏற்படுத்திவிட்டு நான் உங்களிடம் வருகிறேன். பகைவருக்கு அச்சத்தை ஏற்படுத்தும் இந்த துந்துபி {போர் இசை வாத்தியம்}, கூர்மை, நடுத்தர மற்றும் சம சுவரங்களில் அடிக்கப்படட்டும்", என்று சொன்னேன்.

பாரத குலத்தின் காளையே {யுதிஷ்டிரரே}, என்னால் இப்படித் தொடர்ந்து ஊக்கப்படுத்தப்பட்ட அந்த வீரர்கள் மகிழ்ச்சியாக என்னிடம், "சென்று பகைவர்களைக் கொல்லுங்கள்" என்றனர். இப்படி மகிழ்ச்சி நிறைந்த அந்த வீரர்களிடம் இருந்து வாழ்த்துகளைப் பெற்று, அந்தணர்களை அதிர்ஷ்டமான வார்த்தைகளைக் கூற வைத்து, மறுபிறப்பாளர்களில் {அந்தணர்களில்} சிறந்தவர்களையும் சிவனையும் வணங்கி, சைப்பியம், சுக்ரீவம் என்ற குதிரைகளை எனது தேரில் பூட்டி, தேர்ச்சக்கரங்களின் ஒலியால் அந்த இடத்தையே நிறைத்து, சங்குகளில் சிறந்த சங்கான பாஞ்சஜன்யத்தை ஊதிக்கொண்டு வெளியே சென்றேன்.

மன்னா {யுதிஷ்டிரரே}, மனிதர்களில் புலியே, சந்தேகத்திற்கிடமில்லாது வெற்றியடையும் எனது நால்வகைப் படையுடன் நான் கிளம்பினேன். மரங்களால் கிரீடம் சூட்டப்பட்டு, நீர்த்தேக்கங்களாலும், ஓடைகளாலும் நிரம்பிய பல நாடுகளையும் மலைகளையும் கடந்து, கடைசியாக மார்திகாவர்தம் என்ற நாட்டை அடைந்தேன். அங்கே, மனிதர்களில் புலி போன்றவரே {யுதிஷ்டிரரே}, விலையுயர்ந்த உலோகங்களால் ஆன தனது தேருடன் சால்வன் சமுத்திரத்தின் அருகில் சென்று கொண்டிருந்ததாகக் கேள்விப் பட்டு அவனைத் தொடர்ந்து சென்றேன்.

எதிரிகளைக் கொல்பவரே {யுதிஷ்டிரரே}, அலைகள் கொண்ட ஆழமான கடலுக்கு மத்தியில் சால்வன் விலையுயர்ந்த உலோகங்களால் ஆன தனது தேருடன் இருந்தான். யுதிஷ்டிரரே, தூரத்தில் இருந்தே என்னைக் கண்ட அந்தத் தீய ஆன்மா, என்னைத் தொடர்ந்து போருக்கு அழைத்துக் கொண்டிருந்தான். எனது வில்லில் இருந்து புறப்பட்ட வேகமாக சென்று துளைக்கக்கூடய எனது கணைகள் அவனது தேரை அடையவில்லை. இதனால் நான் மிகுந்த கோபமடைந்தேன்.

மன்னா, தைத்தியனின் மகனும் பாவியுமான அந்த கட்டுப்படுத்த முடியாத சக்தி கொண்டவன் {சால்வன்}, அவனது பங்குக்கு ஆயிரக்கணக்கான கணைகளை ஊற்று போல என்னை நோக்கி அடித்துக் கொண்டிருந்தான். பாரதரே, எனது வீரர்கள் மீதும், எனது தேரோட்டி மீதும், எனது குதிரைகள் மீதும் கணைகளை மழையெனப் பொழிந்தான். அந்தக் கணைகளைக் குறித்துக் கருதிப் பாராமல் நாங்கள் தொடர்ந்து போரிட்டோம். பிறகு சால்வனைத் தொடரும் வீரர்கள் என்னை நோக்கி நேரடியாக ஆயிரம் கணைகளை அடித்தனர். அசுரர்கள், எனது குதிரைகளையும், எனது தேரையும், தாருகனையும் உயிரைத் துளைத்துப் பறிக்கவல்ல கணைகளால் மூடினர்.

குந்தியின் மகனே {யுதிஷ்டிரரே}, ஆயுதங்களில் மனித சக்திக்கு அப்பாற்பட்ட நிபுணத்துவத்தைப் பெற்ற நானும் பத்தாயிரக்கணக்கான கணைகளை மந்திரங்களை உச்சரித்து அடித்தேன்! விலையுயர்ந்த உலோகங்களால் ஆன அந்த தேர் வானத்தில் இரண்டு மைல்களுக்கு அப்பால் இருந்த போது, அதை எனது துருப்புகளால் காண முடியவில்லை. ஆகையால் அவர்கள் என்னை தங்கள் கர்ஜனைகளால் ஊக்கப்படுத்தியும் கைத்தட்டிக் கொண்டும் வெறும் பார்வையாளர்களாக மட்டுமே இருக்க முடிந்தது. எனது கை நுனியால் விடப்பட்ட கணைகள் அனைத்தும் தானவர்களின் உடலில் பூச்சிகளைப் போல ஊடுருவின.

விலையுயர்ந்த உலோகங்களால் ஆன அந்தத் தேரில் இருந்து ஓலம் எழுந்தது. கூரிய கணைகளால் தாக்குண்டவர்கள் அந்தப் பெரும் சமுத்திரத்தின் நீருக்குள் விழுந்தனர். தங்கள் கரங்களையும் இழந்தவர்களும், கழுத்துகளை இழந்து தலையில்லாத முண்டங்களின் வடிவத்தில் இருந்தவர்களும் பெரும் ஓலமிட்டு விழுந்தனர். அப்படி அவர்கள் விழும்போதே, அந்தச் சமுத்திரத்தின் நீரில் வாழ்ந்த விலங்குகளால் விழுங்கப்பட்டனர். பிறகு நான் நீரில் இருந்து பெற்றதும், தாமரைத் தண்டு போல அருள்நிறைந்ததும், பால் போன்ற வெண்மை கொண்டதும், மகரந்த மலரைப் {Kunda Flower} போலவும், நிலவைப் போலவும், வெள்ளியைப் போலவும் இருந்த பாஞ்சஜன்யத்தை பலமாக ஊதினேன்.

விலையுயர்ந்த உலோகங்களால் ஆன தேரையுடைய சால்வன், தனது வீரர்கள் விழுவதைக் கண்டு, மாயையின் உதவியுடன் போர்புரியத் தொடங்கினான். அவன் தொடர்ச்சியாக என்னை நோக்கி கதாயுதங்களையும், கலப்பைகளையும், இறகு கொண்ட கணைகளையும், ஈட்டிகளையும், போர்க்கோடரிகளையும், வாட்களையும், ஈட்டிகைளப் போன்ற கணைகளையும், இடிகளையும், சுருக்கு கயிறுகளையும், அகலமான வாட்களையும், பீப்பாய்களில் இருந்து தோட்டாக்களையும் {bullets from barrels}, தண்டங்களையும், ஏவுகணைகளையும் அடித்தான். என்னை நோக்கி அவர்களை வரவைத்த நான், வெகுவிரைவாக அவர்களை பதில் மாயையால் அழித்தேன். தனது மாயைகள் பலனற்றுப் போவதைக் கண்ட அவன் {சால்வன்}, மலைச்சிகரங்களை எடுத்துப் போர்புரிய ஆரம்பித்தான்.

பாரதரே {யுதிஷ்டிரரே}, அங்கே இருளும் ஒளியும் மாறி மாறி வந்தன. திடீரென நாள் இருண்டதாகவும் அழகானதாகவும் இருந்தது. திடீரென வெப்பமாகவும், திடீரென குளிர்ச்சியாகவும் இருந்தது. அங்கே நிலக்கரி, சாம்பல் மற்றும் கணைகளின் மழை பொழிந்தன. இப்படி ஒரு மாயையை உண்டாக்கிய அந்த எதிரி என்னுடன் போரிட்டுக் கொண்டிருந்தான். அதை உறுதி செய்த நான், பதில் மாயையால் முன் வந்த மாயையை அழித்தேன். சரியான நேரத்தில் சுற்றிலும் நான் கணைகளின் மழையைப் பொழிந்தேன். வலிமைமிக்க மன்னா {யுதிஷ்டிரரே}, பிறகு வானத்தின் மாடம் நூறு சூரியன்களை உடையது போலவும், நூறு சந்திரன்கள் உடையது போலவும், ஆயிரம் பத்தாயிரிம் நட்சத்திரங்களை உடையது போலவும் காட்சியளித்தது. அது இரவா அல்லது பகலா என்பதை யாராலும் நிர்ணயம் செய்ய முடியவில்லை. கலக்கமடைந்த நான், எனது வில்லின் நாணில் பிரஜ்ஞாயுதத்தைப் {பிரஜ்ஞாஸ்திரத்தைப்} பொருத்தினேன். குந்தியின் மகனே {யுதிஷ்டிரரே}, அந்த ஆயுதம், பருத்திச் செதில்களாக மாறி காற்றால் இழுத்துச் செல்லப்பட்டது! முடிவில் ஒருவரின் உடல் மட்டும் மீண்டிருப்பதற்காகக் கணக்கிட்டது போல அங்கே பெரும் போர் நடந்தது. ஏகாதிபதிகளில் சிறந்தவரே {யுதிஷ்டிரரே}, ஒளி மீண்டதும், மீண்டும் நான் எதிரியுடன் போரிட்டேன்.

இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!


மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்