Sunday, December 08, 2013

முனிவர் பகன் உபதேசம் - வனபர்வம் பகுதி 26

Sage Vaka's sermon | Vana Parva - Section 26 | Mahabharata In Tamil

(அர்ஜுனாபிகமன பர்வத் தொடர்ச்சி)

அந்தணர்களின் முக்கியத்துவத்தை யுதிஷ்டிரனுக்கு முனிவர் பகன் எடுத்துரைத்தல்...

வைசம்பாயனர் சொன்னார், "பாண்டுவின் சிறப்புமிக்க மகன் {யுதிஷ்டிரன்}, தொடர்ந்து துவைத வனத்தில் வசித்த போது, அந்தப் பெரும் கானகமே அந்தணர்களால் நிரம்பியது. அக்கானகத்தில் இருந்த தடாகமே இரண்டாவது பிரம்மலோகம் போல, அங்கு எப்போதும் வேத ஒலிகள் கேட்டுக் கொண்டிருந்தது. யஜுர், ரிக், சாமத்தின் ஒலிகள் மற்றும் அந்தணர்களின் உச்சரித்த வார்த்தைகள் கேட்பதற்கு காதுக்கினியனவாக இருந்தது. அந்தணர்களின் வேத ஒலியும், பிருதை {குந்தி} மைந்தர்களின் {பாண்டவர்களின்} வில்லொலியுடன் சேர்ந்து அந்தண க்ஷத்திரிய முறைகள் கலந்த ஒரு அழகான முறையாக இருந்தது.


ஒரு நாள் மாலைப் பொழுதில் தால்பிய குடும்பத்தைச் சேர்ந்த பகன் என்ற முனிவர், மற்ற முனிவர்களுக்கு மத்தியில் இருந்த குந்தியின் மகன் யுதிஷ்டிரனிடம், "ஓ குருக்களின் தலைவா, ஓ பிருதையின் {குந்தியின்} மகனே, தவக்கடமைகள் கொண்ட அந்தணர்களின் ஹோமத்திற்கான நேரம் வந்துவிட்டதைக் கவனி. இது (வேள்வி) நெருப்பு மூட்டப்படும் நேரமாகும்! கடும் நோன்புகள் நோற்ற இவர்கள், உன்னால் பாதுகாக்கப்பட்டு, இந்தப் புனிதமான பகுதியில் அறச்சடங்குகளை {rites of religion} செய்கிறார்கள். பிருகு, அங்கிரஸ் வழித்தோன்றல்களும், வசிஷ்டர், காசியபர் வழித்தோன்றல்களும், அகத்தியரின் மகன்களும், அற்புதமான நோன்புகள் கொண்ட அத்ரியின் வாரிசுகளும் சேர்ந்து உண்மையில் அந்தணர்களில் முதன்மையானவர்களான அனைவரும் உன்னிடம் சேர்ந்திருக்கின்றனர்!

ஓ குந்தியிடம் பிறந்த குரு குலத்தின் மகனே {யுதிஷ்டிரனே}, உனது தம்பிகளுடன் சேர்ந்து நான் சொல்லும் வார்த்தைகளைக் கேள்! காற்றுடன் சேர்ந்த நெருப்பு கானகத்தை உட்கொள்வதைப் போல, பிரம்ம சக்தி க்ஷத்திரிய சக்தியுடன் இணைந்தும், க்ஷத்திரிய வலிமை, அந்தண பலத்துடன் இணைந்தும், சேரும் சக்தி அனைத்து எதிரிகளையும் உட்கொண்டுவிடும்! ஓ குழந்தாய், இவ்வுலகத்தையும், மறு உலகத்தையும் நீண்ட நாட்களுக்கு அடக்கி வைக்க எண்ணும் ஒருவன் தன்னுடன் அந்தணர்கள் இல்லாமல் இருக்க விரும்பக்கூடாது. உண்மையில், ஒரு மன்னன் அறம் மற்றும் உலக நடப்புகளை அறிந்து, ஆசைகளையும் அறியாமையையும் துறந்து இருக்கும் அந்தணரை அடைந்த மன்னனே தனது எதிரிகளை வீழ்த்த முடியும்!

தனது குடிமக்களை நன்றாகப் பேணிப் பாதுகாத்து முக்திக்கு வழிவகுக்கும் கடமைகளைச் செய்த மன்னன் பலி {பலிச்சக்கரவர்த்தி}, அதற்குக் காரணமாக அந்தணர்களைத் தவிர வேறு எந்தக் காரணத்தையும் காணவில்லை. இதன் காரணமாகவே, விரோசனனின் மகனான அந்த அசுரன் {பலிச்சக்கரவர்த்தி}, எப்போதும் திருப்தியுடனும், அள்ள அள்ள குறையாத செல்வத்தையும் அடைந்தான். அந்தணர்களின் உதவியால் முழு உலகத்தையும் அடைந்த பிறகு, அவர்களுக்கு {அந்தணர்களுக்குத்} தீங்கு செய்ததாலேயே அவன் {பலிச் சக்கரவர்த்தி} அழிவைச் சந்தித்தான்.

செல்வங்கள் நிறைந்த இந்தப் பூமி, அந்தணனுடன் இல்லாத க்ஷத்திரியனை ஒரு போதும் கொண்டாடாது. அந்தணரின் ஆளுகைக்கு உட்பட்டு, தனது கடமைகளை அவரிடம் இருந்து கற்றவனையே கடலால் சூழப்பட்ட இந்தப் பூமி வணங்குகிறது. போர்க்களத்தில் உள்ள பாகன் இல்லாத யானை போன்று அந்தணர்கள் இல்லாத க்ஷத்திரியன் பலம் குறைந்து பலவீனனாவான். அந்தணனின் பார்வை ஒப்பற்றது. க்ஷத்திரியனின் பலமும் இணையற்றதே. இந்த இரண்டும் சேரும் போது, இப்படிப்பட்ட சேர்கை முழு உலகத்திற்கும் மகிழ்ச்சியை விளைவிக்கும். காற்றுடன் சேர்ந்த நெருப்பு பலம் பெற்று, வைக்கோலையும், மரங்களையும் உட்கொள்வது போல, அந்தணர்களுடன் சேர்ந்த மன்னர்கள் எதிரிகள் அனைவரையும் உட்கொள்வார்கள். ஆகையால், ஓ குந்தியின் மகனே, ஓ யுதிஷ்டிரா! அடையாததை அடையவும், இருப்பதை அதிகரித்துக் கொள்ளவும், சரியான பொருளுக்கும் மனிதர்களுக்கும் செலவு செய்யவும், ஞானமும் அனுபவமும் உள்ள வேதமறிந்த மரியாதைக்குரிய அந்தணர் ஒருவரை உன்னிடம் வைத்துக் கொள். நீ எப்போதும் அந்தணர்களை உயர்வாகவே மதித்திருக்கிறாய். இதன் காரணமாகவே உனது புகழ் பெரிதாக மூன்று உலகங்களிலும் சுடர்விட்டு எரிகிறது." என்றார்.

வைசம்பாயனர் தொடர்ந்தார், "பிறகு, யுதிஷ்டிரனைப் புகழ்ந்து பேசிய தால்பிய குலத்தைச் சேர்ந்த {முனிவர்} பகனிடம் திருப்தி கொண்ட, யுதிஷ்டிரனுடன் இருந்த அனைத்து அந்தணர்களும் அவரை வழிபட்டனர். துவைபாயனர், நாரதர், ஜமதக்னேயர், பிருதுஸ்ரவஸ், இந்திரத்யும்னர், பாலகி, கிரிதசேதஸ், சகஸ்ரபத், கர்ணஸ்ரவஸ், முஞ்சர், லவணாஸ்வர், காசியபர், ஹாரிதர், ஸ்தூலகர்ணர், அக்னிவேஸ்யர், சௌனகர், கிருதவாகர், சுபாகனர், பிருஹதஸ்வர், விபாவசு, ஊர்தரேதஸ், விருஷாமித்ரர், சுஹோத்ரர், ஹோத்ரவாஹணர் ஆகியோரும், கடும் நோன்புகள் நோற்ற பல அந்தணர்களும் சேர்ந்து, சொர்க்கத்தில் இருக்கும் புரந்தரனைக் கொண்டாடும் முனிவர்கள்போல யுதிஷ்டிரனைக் கொண்டாடினர்.



இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!


மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்