Sunday, December 08, 2013

கோபப்பட மாட்டீரா? மன்னா! - வனபர்வம் பகுதி 27

Why doth not thy anger, O king, blaze up | Vana Parva - Section 27 | Mahabharata In Tamil

(அர்ஜுனாபிகமன பர்வத் தொடர்ச்சி)

ஒவ்வொருவருக்கும் நேர்ந்த அநியாயங்களையும், உண்மையில் அவர்களது மதிப்புகளையும் எடுத்துக் கூறி, உமக்கு ஏன் கோபம் வரவில்லை என்று யுதிஷ்டிரனிடம் கேள்வி கேட்கிறாள் திரௌபதி.

வைசம்பாயனர் சொன்னார், "கானகத்திற்கு நாடு கடத்தப்பட்ட பிருதையின் {குந்தியின்} மகன்கள், மாலைப்பொழுதில் கிருஷ்ணையுடன் {திரௌபதியுடன்} அமர்ந்து, துயரத்துடன் ஒருவருக்கொருவர் பேசிக் கொண்டனர். கற்றறிந்தவளும், பார்ப்பதற்கு அழகானவளும், தனது தலைவர்களுக்கு அன்பானவளும், அவர்களுக்குத் தன்னை அர்ப்பணித்தவளுமான கிருஷ்ணை {திரௌபதி} யுதிஷ்டிரனிடம் "பாவியும், கடுமை நிறைந்தவனும், தீய மனதுடையவனுமான திருதராஷ்டிரன் மகன் {துரியோதனன்} நிச்சயம் நமக்காக வருந்தமாட்டான். ஓ மன்னா {யுதிஷ்டிரரே}, அந்தத் தீய இதயம் கொண்ட இழிந்தவன் உம்மையும் என்னையும் மான் தோலுடுத்தி கானகத்திற்கு அனுப்பியும் கூட வருத்தப்படவில்லை. அந்த நேரத்தில் அறம் சார்ந்த தனது அண்ணனிடம் {உம்மிடம்} கடும் மொழிகள் பேசிய தீய செயல்கள் புரியும் அந்த இழிந்தவனின் {துரியோதனனின்} இதயம் இரும்பாலானது. அனைத்து இன்பங்களையும் அனுபவிக்கும் தகுதியுள்ள உமக்கு இந்த துக்கம் தகாது. உம்மை இப்படிப்பட்ட துன்பத்துக்கு தள்ளிய அந்த தீய மனம் படைத்த இழிந்த பாவி {துரியோதனன்}, தனது நண்பர்களுடன் மகிழ்ச்சியாக இருக்கிறான்.


ஓ பாரதரே {யுதிஷ்டிரரே}, மான் தோலுடுத்தி நீர் கானகத்திற்குச் செல்லும்போது, ஓ ஏகாதிபதியே {யுதிஷ்டிரரே}, துரியோதனன், கர்ணன், தீய மனம் கொண்ட சகுனி, துரியோதனின் தீய தம்பியான துச்சாசனன் ஆகிய நால்வர் {4} மட்டுமே கண்ணீர் சிந்தவில்லை! இவர்களைத் தவிர்த்து, ஓ குருக்களில் {குருகுலத்தில்} சிறந்தவரே {யுதிஷ்டிரரே}, மற்ற குருக்கள் {குருகுலத்தினர்} அனைவரும் துயரத்தில் மூழ்கி கண்களில் நீரை வார்த்தனர்! இப்போதிருக்கும் உமது படுக்கையைக் கண்டு, முன்பு நீர் கொண்டிருந்த படுக்கையை நினைத்து நான் துயருறுகிறேன். ஓ மன்னா {யுதிஷ்டிரரே}, துன்பம் அனுபவிக்கத் தகாத நீர், எல்லா ஆடம்பரங்களுடனேயே வளர்ந்தீர்! உமது சபையில் இருந்த தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டு தந்தத்தால் ஆன ஆசனத்தை மனதில் நினைத்து, இப்போது குசப்புல்லாலான {வெட்டிவேராலான} உமது ஆசனத்தைக் கண்டதால் துயரம் என்னை எரிக்கிறது.

ஓ மன்னா {யுதிஷ்டிரரே}, உமது சபையில் மன்னர்களால் சூழப்பட்ட உம்மைக் கண்டேன்! அப்படி இப்போது உம்மைக் காண முடியாத நிலையில், என் மனம் எப்படி அமைதியுடன் இருக்கும்? சந்தனம்பூசி சூரியனைப் போன்ற பிரகாசத்துடன் இருந்த உமது மேனியைக் கண்டேன்! ஐயோ, அழுக்கும் மண்ணும் பூசிய உமது மேனியை நான் இப்போது காண்பதால் துயரத்தால் எனது உணர்வுகளை இழக்கிறேன்! ஓ மன்னா {யுதிஷ்டிரரே}, சுத்தமான வெள்ளை நிறம் கொண்ட பட்டாடை உடுத்திய உம்மையே முன்பு நான் கண்டிருக்கிறேன்! ஆனால், இப்போது கிழிசல்களை உடுத்தியிருக்கும் உம்மைக் காண்கிறேன்.

முன்பு, அனைத்து வகையான சுத்தமான உணவுகளைக் கொண்ட தங்கத் தட்டுகள் உமது வீட்டில் இருந்து ஆயிரக்கணக்கான அந்தணர்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டன. ஓ மன்னா, வீடில்லாதவர்களும், இல்லறவாசிகளுமான தவசிகளுக்கு உணவில் சிறந்த வகையை நீர் கொடுத்தீர்! முன்பு, உலர் மாளிகையில் வாழ்ந்து கொண்டு, ஆயிரக்கணக்கான தட்டுகளில் உணவை நிரப்பி, அந்தணர்களின் அனைத்து விருப்பங்களையும் நிறைவேற்றிக் கொடுத்தீர்! ஓ மன்னா {யுதிஷ்டிரரே}, {இப்போது} இதையெல்லாம் காணும் எனது இதயம் எப்படி அமைதி பெறும்? ஓ பெரும் மன்னா {யுதிஷ்டிரரே}, காதுகுண்டலங்களுடன் இளமையாக இருக்கும் இந்த உமது தம்பிகள், இனிமையான உணவுகளைப் புசித்து, நிபுணத்துவத்துடன் உடுத்தியவர்கள் ஆயிற்றே! ஐயோ, ஓ மன்னா, துன்பமடையத் தகாத அவர்கள் கானகத்தில் வாழ்ந்து, கானகத்தில் கிடைப்பதை உண்பதை நான் காண்கிறேன். எனது இதயம், ஓ மன்னா {யுதிஷ்டிரரே}, அமைதியை அறியவில்லை.

இந்த பீமசேனர், கானகத்தில் துயரத்துடன் வாழ்வதைக் கண்டு, காலம் கடந்துவிட்டாலும் உமக்குக் கோபம் வரவில்லையா? ஓ மன்னா {யுதிஷ்டிரரே}, எந்த உதவியும் இல்லாமல் அனைத்தையும் செய்யும் சிறப்புமிக்க பீமசேனர், அனைத்து இன்பங்களையும் அனுபவிக்கும் தகுதி கொண்ட அவர் {பீமசேனர்}, இப்படித் துயரத்தில் வீழ்ந்து கிடப்பதைக் கண்டும் உமக்கு ஏன் கோபம் வரவில்லை? ஓ மன்னா, எண்ணற்ற வாகனங்களால் சூழப்பட்டு, விலையுயர்ந்த ஆடைகள் உடுத்தும் பீமசேனர், இப்படி கானகத்தில் வாழ நேர்ந்ததை நினைத்து ஏன் உமக்குக் கோபம் வரவில்லை?, இந்த மேன்மை மிக்க மனிதர் {பீமர்}, போர்க்களத்தில் அனைத்து குருக்களையும் கொல்லத் தயாராய் இருக்கிறார். இருப்பினும், நீர் செய்த சத்தியத்தை நிறைவேற்றுவதற்காக காத்திருந்து, இந்த அனைத்துத் துன்பங்களையும் தாங்கிக் கொள்கிறார்.

இந்த அர்ஜுனர், ஓ மன்னா {யுதிஷ்டிரரே}, இரு கரங்களைக் கொண்டிருந்தாலும், இலகுவாக கணையடிக்கும் திறமைக்காக, ஆயிரம் {1000} கரம் கொண்ட அர்ஜுனனுக்குச் (கார்த்தவீர்யார்ஜுனனுக்கு) சமமானவரே! இவர் {அர்ஜுனர்} (எதிரிகளுக்கு) யுகத்தின் முடிவில் நிற்கும் யமனைப் போன்றவர்! அவரது {அர்ஜுனரது} ஆயுதங்களின் பராக்கிரமத்தாலேயே பூமியின் அனைத்து மன்னர்களும் உமது வேள்வியில் அந்தணர்களுக்காக காத்து நின்றார்கள். மனிதர்களில் புலி போன்ற அர்ஜுனர், தேவர்களாலும் தானவர்களாலும் ஆர்வத்துடன் வணங்கப்படுகிறார். அவர் இந்த நிலையில் இருப்பதைக் கண்டும் உமக்கு ஏன் கோப உணர்ச்சி வரவில்லை? ஓ பாரதரே {யுதிஷ்டிரரே}, ஆடம்பரத்துடன் வளர்ந்து, துயரடையத் தகாத பிருதையின் {குந்தியின்} மகன் {அர்ஜுனர்} நாடு கடத்தப்பட்டு இந்நிலையில் இருப்பதைக் கண்டும் உமக்குக் கோபம் வராததைக் கண்டு நான் துயருறுகிறேன். ஒரே தேரில் நின்று கொண்டு, தேவர்களையும், மனிதர்களையும், நாகர்களையும் வீழ்த்திய அர்ஜுனர் நாடு கடத்தப்பட்டு இப்படி இருப்பதைக் கண்டும் உமக்கு ஏன் கோபம் வரவில்லை? ஓ மன்னா, முன்பு தேர்களையும், பல உருவம் கொண்ட வாகனங்களையும், குதிரைகளையும், யானைகளையும் கொடையாகப் பெற்றும், பூமியின் மன்னர்களிடம் இருந்து அவர்களது செல்வத்தைப் பிடுங்கி வந்தும் எதிரிகளைத் தண்டிப்பவராகவும், ஒரே முயற்சியில் ஐநூறு கணைகளை வீசும் திறமை பெற்றவராகவும் உள்ள அர்ஜுனர் நாடு கடத்தப்பட்டு, இந்நிலையில் இருக்கும் போதும் உமக்கு ஏன் கோபம் வரவில்லை?

ஓ மன்னா {யுதிஷ்டிரரே}, அழகு நிறமும் கட்டுடல் கொண்டவரும், இளமையானவரும், வாள்வீசுபவர்களில் முதன்மையானவரும் ஆன நகுலர் நாடு கடத்தப்பட்டு இந்நிலையை அடைந்ததைக் கண்டும், உமக்கு ஏன் கோபம் வரவில்லை? ஓ மன்னா, ஓ யுதிஷ்டிரரே, அழகிய உருவம் கொண்டவரும், வீரம் கொண்டவரும், மாத்ரியின் மகனுமான சகாதேவர் நாடுகடத்தப்பட்டு இந்நிலையில் இருப்பதைக் கண்டும் எதிரிகளை நீர் ஏன் மன்னிக்கிறீர்? ஓ மன்னா, துயரடையத்தகாத நகுலரும் சகாதேவரும் துயரத்தில் இருக்கும் காட்சியைக் கண்டும் உமக்கு ஏன் கோபம் வரவில்லை? ஓ மன்னா {யுதிஷ்டிரரே}, துருபதரின் குலத்தில் பிறந்து, திருஷ்டத்யும்னன் தங்கையாகவும், சிறப்புமிகுந்த பாண்டுவின் மருமகளாகவும், வீரர்களுக்கு அர்ப்பணிப்புடன் இருக்கும் மனைவியாகவும் உள்ள நான் நாடுகடத்தப்பட்டு இந்நிலையில் இருக்கும்போதும், நீர் ஏன் எதிரிகளை மன்னிக்கிறீர்?

ஓ பாரதர்களில் சிறந்தவரே {யுதிஷ்டிரரே}, உண்மையில் உமக்கு கோபம் என்பதே இல்லை. இல்லாவிட்டால், உமது தம்பிகள் மற்றும் எனது (துன்ப) நிலையைக் கண்டும், உமது மனம் ஏன் அசையவில்லை? கோபமற்ற ஒரு க்ஷத்திரியன் கூட இந்த உலகத்தில் கிடையாது என்று சொல்லப்படுகிறது. பழமொழிகள் மாறுபடுவதை இப்போது நான் உம்மிடம் காண்கிறேன். ஓ பிருதையின் {குந்தியின்} மகனே {யுதிஷ்டிரரே}, வாய்ப்பு வரும்போது தனது சக்தியை உணராத க்ஷத்திரியன், அனைத்து உயிர்களாலும் அவமதிக்கப்படுகிறான்! ஆகையால், ஓ மன்னா {யுதிஷ்டிரா}, எதிரிகளை மன்னிக்கும் உமது குணத்தை நீர் நீட்டித்து வரக்கூடாது. உண்மையில், உமது சக்தியைக் கொண்டு, நீர் அவர்களனைவரையும் சந்தேகமற கொன்றுவிடலாம்! ஓ மன்னா {யுதிஷ்டிரரே}, அதே போல, மன்னிக்கும் நேரம் வரும்போதும் சமாதானமடையாத க்ஷத்திரியன், அனைத்து உயிர்களிடத்தும் செல்வாக்கற்றுபோய், இம்மையிலும் மறுமையில் அழிவடைவான்."  {என்று யுதிஷ்டிரனிடம் கூறுகிறாள் திரௌபதி}

இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!


மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்