Saturday, December 07, 2013

மார்க்கண்டேயர் உபதேசம் - வனபர்வம் பகுதி 25

Markandeya's sermon | Vana Parva - Section 24 | Mahabharata In Tamil

(அர்ஜுனாபிகமன பர்வத் தொடர்ச்சி)

பாண்டவர்களின் விருந்தாளியாக வந்த முனிவர் மார்க்கண்டேயர் சில உபதேசங்களைச் செய்வது;

வைசம்பாயனர் சொன்னார், "துன்பத்தில் வீழ்ந்திருந்த அந்த இளவரசர்கள் {பாண்டவர்கள்} கடைசியாக அந்தக் கானகத்தில் ஒரு இனிமையான வசிப்பிடத்தை அடைந்தனர். சரஸ்வதி நதியால் சுத்தப்படுத்தப்பட்ட சால மரங்கள் நிறைந்த அந்த வனத்தில், இந்திரர்களைப் போன்ற அவர்கள் விளையாடத் தொடங்கினர். அந்தச் சிறப்புமிக்க மன்னன் {யுதிஷ்டிரன்}, அந்தக் குரு குலத்தின் காளை, அக்கானகத்தில் இருந்த யதிகளையும், முனிவர்களையும், முக்கியமான அந்தணர்களையும், அற்புதமான பழங்கள் மற்றும் கிழங்குகள் கொடுத்து திருப்தி செய்தான்.


பெரும் சக்தி படைத்தவரும், அந்த இளவரசர்களுக்குத் தந்தை போன்றவரும், அவர்களது புரோகிதருமான தௌமியர் அந்தப் பெரும் கானகத்தில் வசிக்கப்போகும் பாண்டவர்களுக்காக இஷ்டி மற்றும் பைத்ரேயம் என்ற வேள்விச் சடங்குகளைச் செய்ய ஆரம்பித்தார். தங்கள் நாட்டைத் தொலைத்து, கானகத்தில் வாழும் பாண்டவர்களின் வசிப்பிடத்திற்கு விருந்தாளியாக முதிர்ந்தவரான ஆழ்ந்த அளவற்ற ஆற்றல் பெற்ற முனிவர் மார்க்கண்டேயர் வந்தார்.

குரு குலத்தின் காளையும் உயர்ந்த ஆன்மா கொண்டவனும், ஒப்பற்ற பலமும் சக்தியும் கொண்டவனுமான யுதிஷ்டிரன், தேவர்களாலும், மனிதர்களில் முனிவர்களாலும் மதிக்கப்பட்டு, சுடர்விட்டெரியும் நெருப்புக்குச் சமமான பிரகாசத்துடன் இருந்த அந்தப் பெரும் முனிவருக்குத் {மார்க்கண்டேயருக்கு} தனது வணக்கத்தைத் தெரிவித்தான். அனைத்தையும் அறிந்த ஒப்பற்ற சக்தி கொண்ட அந்தச் சிறப்பு வாய்ந்த முனிவர், திரௌபதி, யுதிஷ்டிரன், பீமன், அர்ஜுனன் ஆகியோரை தவசிகளுக்கு மத்தியில் கண்டு புன்னகைத்து, மனதில் இராமனைக் குறித்து நினைத்துப் பார்த்தார். இதனால் வெளிப்படையாக வருத்தமுற்ற நீதிமானான யுதிஷ்டிரன் அவரிடம், "இந்தத் தவசிகள் அனைவரும் நான் இங்கிருப்பதைக் கண்டு வருத்தமுறுகின்றனர். ஆனால் நீர் மட்டும் மகிழ்ச்சியாக இருப்பது போல இவர்களுக்கு மத்தியில் இருந்து கொண்டு தனியாக சிரித்துக் கொண்டிருக்கிறீரே! ஏன்?" என்று கேட்டான்.

மார்க்கண்டேயர் மறுமொழியாக, "ஓ குழந்தாய்! நானும் வருந்துகிறேன். நான் மகிழ்ச்சியால் சிரிக்கவில்லை. மகிழ்ச்சியினால் உண்டாகும் கர்வமும் எனது இதயத்துக்குக் கிடையாது! இன்று இந்தப் பேரிடரைக் கண்ட நான், உண்மைக்குத் தன்னை அர்ப்பணித்திருந்த தசரத மைந்தன் ராமனை நினைத்துப் பார்க்கிறேன்! அந்த ராமன் கூட தந்தையின் கட்டளைக்கிணங்க லட்சுமணனுடன் கானகத்தில் வசித்தான். ஓ பிருதையின் {குந்தியின்} மகனே {யுதிஷ்டிரா}, பழங்காலத்தில் வில்லுடன் ரிஷ்யமுக மலைகளில் அலைந்து திரிந்த அவனை {ராமனை} நான் கண்டிருக்கிறேன். அந்தச் சிறப்பு மிகுந்த ராமன், நமுச்சியைக் கொன்றவனும் யமனுக்குத் தலைவனுமான இந்திரனைப் போன்றவன். இருப்பினும் அந்தப் பாவமற்றவன் கூட {ராமனும் கூட} தந்தையின்  {தசரதனின்} கட்டளையை தன் கடமையாக ஏற்று, கானகத்தில் வசிக்க வேண்டியிருந்தது. சிறப்பு மிகுந்த ராமன் பராக்கிரமத்தில் சக்ரனுக்குச் {இந்திரனுக்குச்} சமமானவன். போர்க்களத்தில் ஒப்பற்றவன். இருப்பினும் அவன் {ராமன்} அனைத்து இன்பங்களையும் துறந்து கானகத்தில் திரிய வேண்டியிருந்தது. ஆகையால், நான் பலவான் என்று சொல்லி யாரும் அநியாயம் செய்யக் கூடாது!

மன்னர்களான நாபாகனும், பகீரதனும், மற்றவர்களும் கடல் சூழ்ந்த இந்த உலகத்தை உண்மையால் {சத்தியத்தால்} வெற்றிகொண்டு, ஓ குழந்தாய் {யுதிஷ்டிரா, (கடைசியாக) அதன்பிறகு அனைத்து உலகங்களையும் அடைந்தார்கள். ஆகையால், நான் பலவான் என்று சொல்லி யாரும் அநியாயம் செய்யக் கூடாது!

ஓ மனிதர்களில் மேன்மையானவனே, அறமும் உண்மையும் கொண்ட காசி மன்னனும், கருஷனும் தனது நாட்டையும், செல்வங்களையும் துறந்தபோது பைத்தியக்கார நாய் என்று அழைக்கப்பட்டார்கள் { king of Kasi and Karusha was called a mad dog for having renounced his territories and riches!}. ஆகையால், நான் பலவான் என்று சொல்லி யாரும் அநியாயம் செய்யக் கூடாது!

ஓ மனிதர்களில் சிறந்தவனே, ஓ பிருதையின் {குந்தியின்} மகனே {யுதிஷ்டிரா}, படைப்பாளரால் {பிரம்மனால்} வேதங்களில் விதிக்கப்பட்டதை ஏற்றுக்கொண்டு, நீதி தவறாத ஏழு முனிவர்கள் வானத்தில் சுடர்விட்டுக் கொண்டு இருக்கிறார்கள். ஆகையால், நான் பலவான் என்று சொல்லி யாரும் அநியாயம் செய்யக் கூடாது!

ஓ மன்னா {யுதிஷ்டிரா}, தந்தங்களுடன் கூடிய மலைமுகடுகளைப் போன்ற பெரும் யானைகளைப் பார். ஓ மனிதர்களில் மேன்மையானவனே அவர் படைப்பாளரின் {பிரம்மனின்} விதிகளை மீறுவதில்லை. ஆகையால், வலிமை எனதே என்று சொல்லி யாரும் அநியாயம் செய்யக் கூடாது!

ஓ ஏகாதிபதிகளில் முதன்மையானவனே {யுதிஷ்டிரனே}, அனைத்து உயிர்களும் தங்கள் தங்கள் வகைக்கு ஏற்ப படைப்பாளரின் விதிப்படி நடப்பதைப் பார். ஆகையால், வலிமை எனதே என்று சொல்லி யாரும் அநியாயம் செய்யக் கூடாது!

ஓ பிருதையின் மகனே {யுதிஷ்டிரனே}, உண்மையில், அறத்தில், நன்னடத்தையில், அடக்கத்தில், நீ அனைத்து உயிர்களிலும் விஞ்சி நிற்கிறாய். உனது புகழும், சக்தியும், நெருப்பையோ அல்லது சூரியனையோ போல பிரகாசமாக இருக்கின்றன. உனது சத்தியங்களில் உறுதியாக இருக்கும், ஓ சிறப்பானவனே, வலி நிறைந்த வனவாசத்தைக் கழித்து, ஓ மன்னா, உனது சக்தியால், நீ மீண்டும், கௌரவர்களிடம் இருந்து வளமையைப் பறிப்பாய்!" என்றார் {மார்க்கண்டேயர்}.

வைசம்பாயனர் தொடர்ந்தார், "நண்பர்களுக்கும் தவசிகளுக்கும் மத்தியில் (அமர்ந்து) இருந்த யுதிஷ்டிரனிடம் இந்த வார்த்தைகளைச் சொன்ன அந்தப் பெரும் முனிவர் {மார்க்கண்டேயர்}, தௌமியரையும், பாண்டவர்களையும் வணங்கிய பிறகு வடக்கு திசை நோக்கிச் சென்றார்!"



இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!


மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்