Sunday, December 08, 2013

பணிவே சாதிக்கும்! - வனபர்வம் பகுதி 28

Humility accomplishes | Vana Parva - Section 28 | Mahabharata In Tamil

(அர்ஜுனாபிகமன பர்வத் தொடர்ச்சி)

பலிச்சக்கரவர்த்தி, தனது பாட்டனான பிரகலாதனிடத்தில், கோபம் குறித்தும், கோபமடையாமல் இருப்பது குறித்தும் தனது சந்தேகங்களைக் கேட்பது; பிரகலாதன் தனது பேரனுக்கு, அவனது சந்தேகங்களுக்கு விளக்கம் கொடுப்பது; இக்கதையை திரௌபதி யுதிஷ்டிரனுக்குச் சொல்வது...

திரௌபதி தொடர்ந்தாள், "இவ்விஷயத்தில், பிரகலாதனுக்கும், விரோசனனின் மகனான பலிக்கும் {பலிசக்கரவர்த்திக்கும்} இடையே பழங்காலத்தில் நடந்த உரையாடல் உதாரணமாகச் சொல்லப்படுகிறது. ஒரு நாள் பலி {பலிச்சக்கரவர்த்தி}, அசுரர் மற்றும் தானவர்களின் தலைவனும், பெரும் ஞானம் கொண்டவனும், கடமை குறித்த அறிவியலின் புதிர்களை நன்கு அறிந்தவனுமான தனது பாட்டன் பிரகாலதனிடம், "ஓ தாத்தா, மன்னிக்கும் தன்மை மெச்சத்தகுந்ததா? அல்லது பலமும் சக்தியும் மெச்சத்தகுந்ததா? இது குறித்து எனக்குப் புதிராக இருக்கிறது. ஓ தாத்தா, உம்மிடம் கேட்கும் எனக்கு இது குறித்துத் தெளிவுபடுத்தும்! ஓ அனைத்துக் கடமைகளையும் அறிந்தவரே, உண்மையில் எது மெச்சத்தகுந்தது என்பதை எனக்குச் சொல்லும்! உமது கட்டளை எதுவானாலும் நான் அதைக் கட்டாயம் ஏற்றுக் கொள்வேன்!" என்றான் {பலி-பலிச்சக்கரவர்த்தி}.


இப்படிக் கேட்கப்பட்ட ஞானம்கொண்ட அவனது {பலியின்) பாட்டனான {பிரகலாதன்}, அவ்விஷயத்தில் தன்னிடம் சந்தேகம் கேட்ட தனது பேரனுக்கு {பலிக்கு} முழுமையாகச் சொன்னான். பிரகலாதன், "ஓ குழந்தாய், பலமும் எப்போதும் மெச்சத்தகுந்ததில்லை. மன்னிப்பும் எப்போதும் மெச்சத்தகுந்ததில்லை. நிச்சயமான இந்த இரண்டு உண்மைகளையும் நீ அறிந்து கொள்! எப்போதும் மன்னிப்பவன் பல தீங்குகளுக்கு ஆளாகிறான். பணியாட்களும், அந்நியர்களும், எதிரிகளும் அவனை எப்போதும் அவமதிப்பர். எந்த உயிரும் அவனுக்கு அடிபணியாது. ஆகையால், ஓ குழந்தாய், எப்போதும் மன்னிக்கும் குணம் கொண்டவர்களை கற்றவர்கள் மெச்சுவதில்லை! எப்போதும் மன்னிக்கும் மனிதனை அவனது பணியாட்கள் அவமதித்து எப்போதும் ஏதாவது குறை சொல்பவர்களாகவே இருப்பார்கள். அற்ப புத்தியுள்ள மனிதர்கள் அவனை {மன்னிப்பவனை} ஏமாற்றி அவனது செல்வத்தைக் கவர்வார்கள். இழிந்த ஆன்மா கொண்ட பணியாட்கள் அவனது {மன்னிப்பவனது} வாகனங்கள், துணிகள், ஆபரணங்கள், ஆடைகள், படுக்கைகள், ஆசனங்கள், உணவுகள், பானங்கள் மற்றும் பிற பொருட்களை தாங்கள் விரும்பியபடி எடுத்துப் பயன்படுத்துவார்கள். தங்கள் தலைவன் மற்றவர்களுக்குக் கொடுக்கக் கட்டளையிடும் பொருட்களைக் கொடுக்கமாட்டார்கள். தங்கள் தலைவனுக்கு உரிய மரியாதையும் கொடுக்க மாட்டார்கள். அவனை வழிபடமாட்டார்கள். இவ்வுலகத்தில் அவமதிப்பு என்பது மரணத்தைவிட மோசமானது.

ஓ குழந்தாய் {பேரன் பலியே}, மகன்களும், பணியாட்களும், உபசரிக்கிறவர்களும், ஏன் அந்நியர்களும் கூட எப்போதும் மன்னிப்பவனிடம் கடுஞ்சொற்கள் பேசுவார்கள். எப்போதும் மன்னிக்கும் குணம் கொண்டவனை அவமதிக்கும் மனிதர்கள், அவனது மனைவியைக் கூட விரும்புவார்கள். அவனது மனைவியும் தான் விரும்பியபடி செயல்படத் தயாராவாள். எப்போதும் இன்பத்தை விரும்பும் பணியாட்கள், தங்கள் தலைவனிடம் இருந்து சிறு தண்டனைகூட கிடைக்காவிட்டால், எல்லா தீமைகளையும் செய்வார்கள். அதிலும் தீயவர்கள் தங்கள் தலைவனுக்குக் காயம் ஏற்படுத்தவும் விளைவார்கள். இதுவும் மேலும் சிலவும் எப்போதும் மன்னிக்கும் குணம் கொண்டவனின் குறைகளாகும்.

விரோசனனின் மகனே {பலியே}, எப்போதும் மன்னிக்காதவர்களின் குறைகளை இப்போது கேள்! கோபம் கொண்ட மனிதன், இருளால் சூழப்பட்டு, தனது சக்தியாலே, பலதரப்பட்ட தண்டனைகளை மனிதர்களுக்குக் கொடுத்து, அந்த மனிதர்கள் அந்தத் தண்டனைக்குத் தகுந்தவர்கள் தானா என்பதைப் பாராமல் இருந்து, அதன் காரணமாகவே தங்கள் நண்பர்களிடம் இருந்து பிரிவார்கள். அப்படிப்பட்ட மனிதன், தனது உறவினர்களாலும், அந்நியர்களாலும்கூட வெறுக்கப்படுவான். அப்படிப்பட்ட {எப்போதும் கோபமடையும்} மனிதன், மற்றவர்களை அவமதிப்பதால், செல்வத்தை இழப்பதும், அவமதிப்பை அடைவதும், சோகம், வெறுப்பு, குழப்பம், எதிரிகள் ஆகியவற்றையும் சம்பாதித்துக் கொள்கிறான். கோபம் கொண்ட மனிதன், தனது கடுஞ்சினத்தின் காரணமாக மனிதர்களுக்குத் தண்டனை கொடுத்து, (பதிலுக்கு) கடுஞ்சொற்களைப் பெறுகிறான். அப்படிப்பட்டவன், விரைவில் தனது செழிப்பை இழந்து, நண்பர்களையும் உறவினர்களையும் இழக்கிறான். ஏன் உயிரைக் கூட இழக்கிறான்.

தனக்கு உதவுபவர்களிடமும், எதிரிகளிடமும் தனது பலத்தைப் பயன்படுத்தும் மனிதன், உலகத்துக்கே அச்சுறுத்தலாக இருந்து, வீட்டில் வசிக்கும் பாம்பு போல அந்தக் குடும்பத்தாருக்குத் தெரிகிறான். உலகத்துக்கே அச்சுறுத்தலாக இருப்பவன் என்ன செழிப்பை அடைந்து விட முடியும்? சமயம் வாய்க்கும்போது மக்கள் அவனைக் காயப்படுத்தத் தயங்கமாட்டார்கள். ஆகையால், எல்லா சந்தர்ப்பங்களிலும் மனிதர்கள் பலத்தையோ மன்னிப்பையோ அதிகம் வெளிக்காட்டக்கூடாது. ஒருவன் தனது பலத்தையும், மன்னிக்கும் குணத்தையும் சரியான சமயங்களில் பயன்படுத்த வேண்டும். சரியான நேரங்களில் மன்னிப்பு, கடுமை, பலம் ஆகியவற்றைக் காட்டுபவன், இவ்வுலகிலும் மறு உலகிலும் இன்பத்தை அடைகிறான்.

நான் இப்போது, எச்சந்தர்ப்பங்களில் மன்னிக்கலாம் என்று கற்றவர்களால் விதிக்கப்பட்டதை விளக்கமாகவும், எது எப்போதும் பின்பற்றத்தக்கது என்பதையும் சொல்கிறேன். நான் சொல்லும்போது கவனமாகக் கேட்டுக் கொள்! உனக்கு ஒரு சேவையைச் செய்தவன், உனக்குப் பெரும் தீங்கிழைத்திருந்தாலும், அவனது முந்தைய சேவையை நினைத்துப் பார்த்து, அந்தக் குற்றவாளியை மன்னிக்கலாம். கல்வியையும் ஞானத்தையும் மனிதர்களால் எளிமையாக அடைய முடியாது. ஆகையால், அறியாமையாலும், முட்டாள்தனத்தாலும் குற்றமிழைத்தவர்களை மன்னிக்கலாம். தெரிந்தே குற்றமிழைத்துவிட்டு, தெரியாமல் செய்துவிட்டேன் என்று கெஞ்சுபவர்களை, அவர்களது குற்றம் அற்பமானதாக இருந்தாலும் தண்டிக்க வேண்டும். அத்தகு நேர்மையற்ற மனிதர்கள் மன்னிக்கப்படக்கூடாது.

எல்லா உயிரினங்களின் முதல் குற்றமும் மன்னிக்கப்பட வேண்டும். இருப்பினும், இரண்டாவது குற்றம் அற்பமானதாக இருந்தாலும் கூட தண்டிக்க வேண்டும். ஒரு மனிதன் விரும்பாமல் குற்றமிழைத்திருப்பின், அவனது கோரிக்கையை ஆராய்ந்து, சீரான நீதி விசாரணை செய்து, அவனை மன்னிக்க வேண்டும். பணிவு பலத்தை வெற்றி கொள்ளும், பணிவு பலவீனத்தையும் வெற்றி கொள்ளும். பணிவால் சாதிக்க முடியாதது எதுவும் இல்லை. ஆகையால், பணிவே (நம் பார்வைக்குத் தெரிவதைவிட) உண்மையாக கடுமையானது. ஒருவன் இடம், நேரம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டும், தனது பலத்தையும் பலவீனத்தையும் குறித்துக் கொண்டும் செயல்பட வேண்டும். இடத்தையும் நேரத்தையும் கணக்கில் கொள்ளாமல் செய்யப்படும் எந்தச் செயலும் வெற்றியடையாது. ஆகையால், நீ எப்போதும் இடத்திற்காகவும், நேரத்திற்காகவும் காத்திருக்க வேண்டும்! சில நேரங்களில் மக்களுக்கு அஞ்சி குற்றவாளிகள் மன்னிக்கப்பட வேண்டும். இவையே மன்னிக்கும் நேரங்கள் என்று தீர்மானிக்கப்பட்டிருக்கிறது. இந்தச் சந்தர்ப்பங்களைத் தவிர மற்ற நேரங்களில் மீறுபவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்றே சொல்லப்படுகிறது" என்றான் { பலியின் பாட்டன் பிரகலாதன்}.

திரௌபதி தொடர்ந்தாள், "ஆகையால், ஓ மன்னா, நீர் பலத்தைப் பிரயோகிக்கும் நேரம் வந்துவிட்டதாகவே நான் கருதுகிறேன்! நம்மை எப்போதும் காயப்படுத்தும் குருக்களையும், திருதராஷ்டிரனின் பேராசைக்கார மகன்களையும் மன்னிக்கும் நேரம் இது கிடையாது! நீர் இப்போது பலத்தை உபயோகிப்பதே தகும். எளிமையாகவும், மன்னிப்பவனாகவும் இருக்கும் மனிதன் அவமதிக்கப்படுகிறான். கடுமையாக இருப்பவர்கள் மற்றவர்களை துன்புறுத்துகிறார்கள். உண்மையில், அது அதற்கு தகுந்த நேரத்தில் இரண்டிற்கும் {கோபமடைவதும் கோபமடையாதிருப்பதும்) தஞ்சம் கொடுப்பவனே மன்னனாவான்" என்றாள்.



இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!


மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்