Tuesday, December 17, 2013

அறம்பயில்பவன் ஏன் துன்புறுகிறான்? - வனபர்வம் பகுதி 33அ

Why do virtuous get afflicted? | Vana Parva - Section 33a | Mahabharata In Tamil

(அர்ஜுனாபிகமன பர்வத் தொடர்ச்சி)

அறம், பொருள், இன்பம் குறித்து பீமன் யுதிஷ்டிரனிடம் பேசுவது

வைசம்பாயனர் சொன்னார், "யக்ஞ்சேனியின் {திரௌபதியின்} இவ்வார்த்தைகளைக் கேட்ட பீமசேனன், கோபத்தால் பெருமூச்சுவிட்டபடி, மன்னனை {யுதிஷ்டிரனை} அணுகி, அவனிடம், "ஓ ஏகாதிபதி {அண்ணா யுதிஷ்டிரரே}, (உமக்கு முன்பாக) நாடுகள் சம்பந்தமான காரியங்களில் நல்ல மனிதர்கள் வழக்கமாகச் செல்லும் பாதையில் நடந்து செல்லும். இப்படி அறம், இன்பம் மற்றும் பொருளை இழந்து, தவசிகளின் ஆசிரம வாழ்க்கை வாழ்வதால் நமக்கு என்ன லாபம்? அறத்தாலோ நேர்மையாலோ, பலத்தாலோ துரியோதனன் நம்மிடம் இருந்து நாட்டைப் பறிக்கவில்லை. அவன் நியாயமற்ற பகடையாட்டம் மூலம் பறித்தான். கழிவுகளை உண்ணும் பலவீனமான குள்ளநரி, சிங்கத்திடம் இருந்து அதன் இரையைப் பறிப்பது போல, அவன் நமது நாட்டை நம்மிடம் இருந்து பறித்தான்.

ஓ ஏகாதிபதி {யுதிஷ்டிரரே}, சத்தியத்துடன் ஒட்டிக் கொள்ளும் வெற்றுத் தகுதிக்குக் {அறத்திற்குக்} கீழ்ப்படிந்து, துன்பத்தினை அனுபவித்து, அறம் மற்றும் இன்பத்திற்கு ஊற்றுக்கண்ணான செல்வத்தை ஏன் கைவிட வேண்டும். ஓ மன்னா {யுதிஷ்டிரரே}, காண்டீவத்தைத் தாங்குபவனால் {அர்ஜுனனால்} காக்கப்பட்டதால் இந்திரனாலும் கைப்பற்ற முடியாதிருந்த நமது நாடு, உமது பொறுப்பிலாத் தன்மையாலேயே நம் கண் எதிரிலேயே நம்மிடம் இருந்து பறிக்கப்பட்டது. ஓ ஏகாதிபதி {யுதிஷ்டிரரே}, நாம் உயிருடன் இருக்கும்போதே, கையாலாகாதவனிடம் இருந்து பறிக்கப்பட்ட கனி போல அல்லது நொண்டியிடம் இருந்து பறிக்கப்பட்ட பசுக்களைப் போல, நமது செல்வம் நம்மிடம் இருந்து பறிக்கப்பட்டது.

நீர் அறத்தைக் கைக்கொள்வதில் உண்மையுடன் {விசுவாசத்துடன்} இருக்கிறீர். ஓ பாரதரே {யுதிஷ்டிரரே}, உம்மைத் திருப்திப்படுத்தவே நாங்கள் இந்தக் கொடிய பேரிடரில் மூழ்கியுள்ளோம். ஓ பாரதகுலத்தின் காளையே {யுதிஷ்டிரரே}, நாங்கள் உமது கட்டுப்பாட்டுக்குள் இருப்பதாலேயே, நமது நண்பர்களின் இதயத்தைக் கிழித்து, எதிரிகளின் இதயங்களைத் திருப்திப்படுத்துகிறோம். உமக்குக் கீழ்ப்படிந்து, திருதராஷ்டிரன் மகன்களைக் கொல்லாது வந்த முட்டாள்த்தனமான நமது செயல் என்னை வருந்த வைக்கிறது.

ஓ மன்னா {யுதிஷ்டிரரே}, வனவிலங்கைப் போன்ற உமது கானக வாழ்க்கை என்பதை பலவீனமாவன் மட்டுமே ஏற்பான். நிச்சயமாக, பலவானான எந்த மனிதனும் இப்படிப்பட்ட வாழ்க்கையை மேற்கொள்ள மாட்டான். இந்த உமது வாழ்க்கை முறையை கிருஷ்ணனோ, பீபத்சு {பீபத்சு}வோ {அர்ஜுனனோ}, அபிமன்யுவோ, ஸ்ருஞ்சயரோ, நானோ, மாத்ரியின் மகன்களோ ஏற்கவில்லை. நோன்புகளால் பாதிக்கப்பட்டு நீர், அறம்! அறம்! என்று கதறுகிறீர்.

நம்பிக்கையின்மையால் நீர் உமது ஆண்மையை இழந்துவிட்டீரா? தங்கள் செழிப்பை மீட்க முடியாத கோழைகள் மட்டுமே, கனியற்ற, அழிவை ஏற்படுத்தக்கூடிய நம்பிக்கையின்மையைப் பேணிக் காப்பர். உமக்கு திறனும் கண்களும் இருக்கின்றன. நம்மிடம் ஆண்மை இருப்பதை நீர் காண்கிறீர். நீர் அமைதியான வாழ்க்கை மேற்கொள்வதாலேயே உமக்கு இந்தத் துயரம் தெரியவில்லை. மன்னிக்கும் இயல்பு கொண்ட நம்மை இந்த திருதராஷ்டிரர்கள் திறமையற்றவர்களாகவே உண்மையில் கருதுகிறார்கள். ஓ மன்னா {யுதிஷ்டிரரே}, இந்தத் துயரம் போர்க்களத்தில் நேரும் மரணத்தைவிட எனக்குத் துன்பமாக இருக்கிறது. எதிரிகளுக்குப் புறமுதுகிடாமல் நியாயமான முறையில் போரிட்டு மடிவது, இந்த வனவாசத்தைவிட சிறந்ததே. அப்படிச் செய்தால் மறு உலகத்தில் நாம் பேரானந்தம் உள்ள பகுதிகளை அடையலாம். அப்படி இல்லையென்றால், ஓ பாரத குலத்தின் காளையே {யுதிஷ்டிரரே}, அவர்கள் அனைவரையும் கொன்ற பிறகு, நாம் முழு உலகத்தையும் செழிப்பையும் அடைவோம்.

பெரும் சாதனைகளைச் செய்ய விரும்பி, நமது வகைக்குண்டான முறைகளை அனுசரிப்பவர்கள், நமது தீமைக்காக பழிவாங்க விரும்புபவர்கள், இதையே தங்கள் கடமையாக ஏற்றுக் கொள்ள வேண்டும். நமது நாடு நம்மிடம் இருந்து பறிக்கப்பட்டதால், நாம் போரில் ஈடுபட்டால், நமது செயலைக் காணும் உலகம் நமக்குப் புகழையே தரும், இழிவைத் தராது. ஓ மன்னா {யுதிஷ்டிரரே}, ஒருவனுடைய சுயத்தையும், நண்பர்களையும் சித்திரவதை செய்யும் அறம் உண்மையில் அறமே ஆகாது. மறுபுறம் பேரிடர்களை உற்பத்தி செய்யும் அது தீமையானது. சில நேரங்களில் அறமே மனிதனுடைய பலவீனமாகிறது. அப்படிப்பட்ட மனிதன் அறம்பயின்றாலும், இறந்த மனிதனைக் கைவிடும் இன்பத்தையும் வலியையும் போல, அறமும் பொருளும் அவனைக் கைவிடும்.

அறத்திற்காகவே அறம்பயில்பவன் எப்போதும் துன்பப்படுகிறான். சூரிய ஒளியைக் காண இயலாத குருடனைப் போல அறத்தின் காரண காரியங்களை அறியாத அவனை ஞானி {அறிவுள்ளவன்} என்று அழைக்கமுடியாது. செல்வத்தை தனக்கு மட்டுமே என்று கருதுபவன், செல்வத்தின் காரண காரியங்களை அறிய மாட்டான். உண்மையில் அவன், கானகத்தில் மாடு மேய்க்கும் பணியாளைப் போன்றவன். அறத்தையும், இன்பங்களையும் தவிர்த்து, எவன் தொடர்ந்து செல்வத்தை மட்டுமே அதிகமாகக் கொள்கிறானோ, அவன் எல்லோராலும் தண்டிக்கப்படவும் கொல்லப்படவும் தக்கவன். அறமும் செல்வமும் அற்று, தான்தோன்றித் தனமாக இன்பத்தை மட்டுமே நுகர்பவன், காய்ந்த குளத்தில் சாகும் மீனைப் போல, தனது காலம் முடியும் போது சாவான். இந்தக் காரணங்களுக்காகவே, ஞானமுள்ளவர்கள் எப்போதும் அறம் மற்றும் பொருள் சம்பந்தமாக விழிப்புணர்வுடன் இருக்கிறார்கள். நெருப்புக்கு எரிபொருளைப் போல, அறமும் பொருளுமே இன்பத்திற்கான முக்கியத் தேவை.

இன்பம் அறத்தையே தனது வேராகக் கொண்டிருக்கிறது. அறமும் இன்பத்துடன் சேர்ந்தே இருக்கிறது. ஓ ஏகாதிபதி {யுதிஷ்டிரரே}, கடல் மேகங்களை உற்பத்தி செய்வதும், மேகங்கள் கடலை நிரப்புவதும் போல அவை இரண்டும் ஒன்றை ஒன்று சார்ந்தே இருக்கின்றன. ஒரு பொருளைத் தொடுவதாலோ, செல்வத்தை அடைவதாலோ ஏற்படும் மகிழ்ச்சியானது இன்பம் எனப்படுகிறது. கண்களுக்குப் புலப்படாத உடலற்ற அது {இன்பம்} மனதிலேயே இருக்கிறது. செல்வத்தை (அடைய) விரும்புபவன், தனது வெற்றிக்காக பெரும் அறப்பங்கு {அறத்தில் ஈடுபட்டு அதில் பெரும் பங்கைப்) பெற முயற்சிக்கிறான். இன்பத்தை விரும்புபவன், (தனது விருப்பம் உணரப்பட வேண்டும் என்பதற்காக) செல்வத்தைத் தேடுகிறான். எனினும், இன்பம் தனது பங்குக்கு எதையும் தருவதில்லை. ஒரு இன்பம் மற்றொரு இன்பத்திற்கு வழிகாட்டும். விறகில் இருந்து சாம்பலைப் பெறலாம். ஆனால் சாம்பலில் இருந்து எதுவும் கிடைக்காது.

ஓ மன்னா {யுதிஷ்டிரரே}, நாம் காணும் பறவைகளை வேடன் கொல்கிறான். அதைப் போலவே பாவங்கள் இந்த உலகின் உயிரினங்களைக் கொல்கின்றன. ஆகவே, இன்பத்தாலோ பேராசையாலோ தவறாக வழிநடத்தப்பட்டவன், அறத்தின் இயல்பைக் காணாமல், அனைவராலும் கொல்லப்படத்தக்கவனாக இருந்து, இங்கும் {இவ்வுலகத்திலும்} அங்கும் {மறு உலகத்திலும்} இழிந்த நிலையை அடைகிறான். ஓ மன்னா {யுதிஷ்டிரரே}, இன்பத்திற்கான பல பொருட்களை {செல்வத்தை} அடையும்போது இன்பத்தையும் அடையலாம் என்பதை நீர் அறிவீர். அவற்றின் {செல்வத்தின்} சாதாரண நிலைகளையும், அவற்றின் பெரும் மாற்றங்களையும் நீர் நன்கு அறிவீர். அதை {செல்வத்தைத்} தொலைப்பதால் இயலாமையும் மரணமும் வருகிறது. துன்பமும் வருகிறது. ஓ மன்னா {யுதிஷ்டிரரே}, அந்தத் துயரம் இப்போது நம்மை மூழ்கடிக்கிறது. ஐம்புலன்கள், அறிவாற்றல், இதயம் போன்றவற்றில் இருந்து எழும் மகிழ்ச்சி, அதற்கான பொருளை நோக்கி நம்மை வழிநடத்தும். அதுவே இன்பம் எனப்படுகிறது. ஓ மன்னா {யுதிஷ்டிரரே}, அந்த இன்பமே, நமது செயல்களுக்கான சிறந்த கனிகள் என நான் நினைக்கிறேன்.

ஓ ஏகாதிபதி {யுதிஷ்டிரரே}, இப்படியே ஒருவன் அறம், பொருள் மற்றும் இன்பத்தை ஒன்றன் பின் ஒன்றாகக் கருத வேண்டும். ஒருவன் தன்னை அறத்திற்கு மட்டுமே அர்ப்பணித்துக் கொள்ளக்கூடாது. அதே போல விருப்பங்களை நிறைவேற்றும் செல்வத்தை {பொருளை} மட்டுமே என்றும், இன்பத்தை மட்டுமே என்றும் பயிலக்கூடாது. இவை மூன்றையும் எப்போதும் பயில வேண்டும். ஒருவன் காலையில் அறத்தையும், மதிய வேளையில் செல்வத்தையும், மாலையில் இன்பத்தையும் தேட வேண்டும் என்று சாத்திரங்கள் சொல்கின்றன. ஒருவன் வாழ்வின் முன் பகுதியில் இன்பத்தையும், இரண்டாவதாக செல்வத்தையும் கடைசியாக அறத்தையும் பயில வேண்டும் என்றும் சாத்திரங்கள் சொல்கின்றன. ஓ பேச்சாளர்களில் முதன்மையானவரே {யுதிஷ்டிரரே}, நேரத்தைச் சரியாகப் பயன்படுத்தும் ஞானமுள்ளவர்கள், அறம், பொருள், இன்பம் ஆகிய மூன்றையும் சரியான நேரத்தில் சரியானபடி செய்கிறார்கள்.



இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!


மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்