Wednesday, December 18, 2013

இன்றே ஹஸ்தினாபுரம் செல்வீர்! - வனபர்வம் பகுதி 33ஆ

Go today itself to Hastinapur | Vana Parva - Section 33a | Mahabharata In Tamil

(அர்ஜுனாபிகமன பர்வத் தொடர்ச்சி)

தனது அண்ணனான யுதிஷ்டிரனிடம் பீமன் அறம், பொருள், இன்பம் ஆகியவற்றை விவரித்து, ஹஸ்தினாபுரத்தின் மீது போர் தொடுக்க ஆலோசனை கூறுதல்….

பீமன் தொடர்ந்தான், "ஓ குரு குலத்தின் மகனே {யுதிஷ்டிரரே}, இவை மூன்றையும் {அறம், பொருள், இன்பம் ஆகியவற்றை} விடுப்பதோ அல்லது மேற்கொள்வதோ, மகிழ்ச்சியை விரும்புவோருக்கு எது சிறந்ததோ அதை நீர் கவனமாக ஆராய்ந்து நிர்ணயிக்க வேண்டும். ஓ மன்னா {யுதிஷ்டிரரே}, அதன்பிறகு சற்றும் தாமதிக்காமல் அவற்றை அடைவதையோ அல்லது கைவிடுவதையோ செய்ய வேண்டும். இவ்விரண்டிலும் முடிவு எடுக்க முடியாமல் சலனத்துடன் இருப்பவன் இழிந்த வாழ்வை மேற்கொள்கிறான். உமது நடத்தை எப்போதும் அறம் சார்ந்தே இருக்கிறது என்பது நன்கு அறியப்பட்டதே.


இந்த உமது நண்பர்களின் ஆலோசனைகளைக் கேட்டு நீர் செயல்பட வேண்டும். பரிசு, வேள்வி, அறிவுள்ளோரை மதித்தல், வேத கல்வி, நேர்மை ஆகியவை, ஓ மன்னா, இவ்வுலகிலும் மறு உலகிலும் பயனளிக்கக்கூடிய உயர்ந்த அறங்களாகும். ஓ மனிதர்களில் புலி போன்றவரே {யுதிஷ்டிரரே}, இருப்பினும் ஒருவன் கணக்கிலடங்கா மற்ற பல சாதனைகளைச் செய்திருந்தாலும் செல்வமற்று இருந்தால் அவனால் இவ்வறங்களை அடைய முடியாது. ஓ மன்னா {யுதிஷ்டிரரே}, இந்த முழு அண்டமே அறத்தை நம்பியுள்ளது. அறத்தை விட உயர்ந்தது எதுவும் கிடையாது.

ஓ மன்னா {யுதிஷ்டிரரே}, பெரும் செல்வம் வைத்திருப்பவனாலேயே அறத்தை அடைய முடிகிறது. பிச்சைக்கார வாழ்வு வாழ்வதாலோ, அயர்ந்து போன வாழ்வு வாழ்வதாலோ செல்வம் சம்பாதிக்க முடியாது. அறத்தால் வழிகாட்டப்பட்ட புத்தியைக் கொண்டே செல்வம் சம்பாதிக்க முடியும். உமது காரியத்தில், ஓ மன்னா {யுதிஷ்டிரரே}, அந்தணர்களுக்கு சாத்தியமான பிச்சையெடுத்தல் விலக்கப்பட்டிருக்கிறது. ஆகையால், ஓ மனிதர்களில் காளையே {யுதிஷ்டிரரே}, உமது பலம் மற்றும் சக்தியைக் கொண்டு செல்வத்தைப் பெற முயற்சி செய்யும். பிச்சையெடுத்து வாழ்தலோ, சூத்திரரின் வாழ்வு முறையோ உமக்கு ஏற்றதல்ல. பலமும் சக்தியும் க்ஷத்திரியர்களைப் பொறுத்தவரை அறம். ஆகையால், உமது வகைக்கு ஏற்ற அறத்தை மேற்கொண்டு உமது எதிரிகளை நீர் கொல்ல வேண்டும். ஓ பிருதையின் {குந்தியின்} மகனே {யுதிஷ்டிரரே}, எனது பலத்தையும், அர்ஜுனனின் பலத்தையும் துணையாகக் கொண்டு திருதராஷ்டிரர் மகன்களின் பலத்தை அழித்துவிடும்.

கல்வி கற்ற ஞானமுள்ளவர்கள் ஆட்சியுரிமையே அறம் என்கின்றனர். ஆகையால் ஆட்சியுரிமையை அடையும். தாழ்மையான நிலையில் வாழ்வது உமக்குத் தகாது. ஓ மன்னா {யுதிஷ்டிரரே}, விழித்தெழும், (உமது க்ஷத்திரிய வகைக்கான) நித்தியமான அறங்களைப் புரிந்து கொள்ளும். பிறப்பிலேயே மனிதர்களுக்கு வலியை உண்டாக்கும் கொடூரமான செயல்கள் புரியும் வகையைச் சேர்ந்திருக்கிறீர். உமது குடிமக்களைப் பேணிக்காத்து, கனிகளை அறுவடை செய்யும். அப்படிச் செய்தால் நிந்திக்கப்பட மாட்டீர். ஓ மன்னா {யுதிஷ்டிரரே}, இந்த அறத்தை உமது வகைக்கு விதித்தது கடவுளே ஆகும். இதிலிருந்து நீர் விலகிக்கொண்டால், உம்மை நீரே கேலிக்குரியவர் ஆக்கிக் கொள்வீர். சுய வகைக்கு {சொந்த வர்ணத்துக்கு} உரிய அறங்களில் இருந்து விலகுதல் எப்போதுமே மெச்சப்படுவதில்லை. ஆகையால், ஓ குரு குலத்தவரே {யுதிஷ்டிரரே}, உமது வகைக்கு {க்ஷத்திரிய வகைக்கு} உகந்தவாறு உமது இதயம் எப்படி இருக்க வேண்டுமோ அப்படி ஆக்கி, அயர்ச்சியான வாழ்வைத் தூக்கி எறிந்து, சக்தியை அடைந்து ஆண்மையுடன் உமது சுமையை நீர் சுமக்க வேண்டும்.

ஓ ஏகாதிபதி {யுதிஷ்டிரரே}, எந்த மன்னனும் அறத்தின் வழிகளை மட்டுமே கொண்டு, உலகின் ஆட்சி உரிமையையோ, செழிப்பையோ அல்லது செல்வாக்கையோ அடைய முடியாது. வேடன், பெரும் கும்பலுக்கு {விலங்குகள் அல்லது பறவைகளுக்கு} கவர்ச்சிகரமான உணவைப் பார்வைக்கு வைத்து ஆசை காட்டி, தனது உணவை அடைவது போல, புத்திசாலியானவன், தாழ்ந்தவர்களும் பேராசை கொண்டவர்களுமான எதிரிகளுக்கு இலஞ்சம் கொடுத்து நாட்டைப் பெறுவான். மன்னர்களில் காளையே {யுதிஷ்டிரரே}, பல அசுரர்கள், தங்கள் அண்ணன்கள் பதவியும் செல்வாக்குடனும் இருக்கும்போதே, யுக்தியைக் கொண்ட தேவர்களால் அழிக்கப்பட்டனர். ஓ மன்னா {யுதிஷ்டிரரே}, இப்படியே அனைத்தும் பலவான்களுக்கு உடையதாகிறது.

ஓ பலம்வாய்ந்த கரங்கள் கொண்டவரே {யுதிஷ்டிரரே}, யுக்திகளைக் கைக்கொண்டு எதிரிகளைக் கொல்லும். போர்க்களத்தில் வில் தாங்குபவர்களில் அர்ஜுனனுக்கு ஈடானவர் யாருமில்லை. அதே போல கதாயுதம் தாங்குவதில் எனக்கு நிகர் யாருமில்லை. ஓ ஏகாதிபதி {யுதிஷ்டிரரே}, பலவான்கள், எதிரிகளின் திட்டங்களை ஒற்றர்கள் மூலம் உளவு கொண்டு படைகளின் எண்ணிக்கையை வைத்து போர் புரிவதில்லை. மாறாக, தங்கள் பலத்தை நம்பியே போர் புரிகின்றனர். ஆகையால், ஓ பாண்டுவின் மகனே {யுதிஷ்டிரரே}, உமது பலத்தை வெளிக்காட்டும். பலமே செல்வத்தின் வேர். வேர் என்று சொல்லப்படும் மற்றவையெல்லாம் உண்மையில் அதன் வேர் அல்ல. குளிர் காலத்தில் மரத்தின் நிழலால் உண்டாவது எதுவும் இல்லை. அதே போல, பலமில்லாத அனைத்தும் கனியற்றதாகவே ஆகிவிடும்.

ஓ குந்தியின் மகனே {யுதிஷ்டிரரே}, தனது செல்வத்தைப் பெருக்க எண்ணும் ஒருவன், நிலத்தில் விதைகளைத் தூவுவதைப் போல செல்வத்தை செலவு செய்ய வேண்டும். இது குறித்து உமது மனதில் சந்தேகம் இல்லாதிருக்கட்டும். எனினும், செலவு செய்யும் செல்வம், வரவாக வரப்போகும் செல்வத்துக்கு சமமாகவோ அல்லது குறைவாகவோ ஆகும் என்றால், செல்வத்தைச் செலவு செய்யக்கூடாது. ஏனெனில், செல்வ முதலீடு கழுதையைப் போன்றது, சொறியும்போது முதலில் இன்பமாக இருக்கும். ஆனால் அதுவே பின்பு வலியாகிப் போகும்.

ஓ மனிதர்களின் மன்னா {யுதிஷ்டிரரே}, ஒரு மனிதன் விதைகளைத் தூவுவதைப் போல, பெரும் அறத்தைப் பெறுவதற்காக தன்னிடம் இருந்து சிறு அறத்தைத் தூவினால், அவன் அறிவுள்ளவன் என்று கருதப்படுகிறான். நான் சொல்லும் இது சந்தேகத்திற்கு அப்பாற்ப்பட்டது. ஞானமுள்ளவர்கள் தங்கள் எதிரியின் நண்பர்களை அவனிடம் இருந்து பிரித்து, அவனை {அந்த எதிரியை} பலவீனமாக்கி, தனக்குக் கீழ்ப்படிய வைக்கிறார்கள். பலவான்கள் கூட, தங்கள் தைரியத்தை நம்பியே போர்புரிகிறார்கள். {தைரியமற்ற} தொடர்ந்த முயற்சிகளாலோ, சமரசக்கலைகளாலோ ஒருவன் எப்போதும் நாட்டை அடைய முடியாது.

தேனைக் கவர வருபவனை, எண்ணற்ற தேனீக்கள் பல சேர்ந்து கொல்வது போல, சில நேரங்களில், ஓ மன்னா {யுதிஷ்டிரரே}, பலவீனமான மனிதர்கள் பலர் கூடி எண்ணிக்கையில் அதிகமாகி, பலவானான எதிரியைக்கூட கொன்றுவிடுகிறார்கள். அனைத்தையும் காக்கும் சூரியன், தனது கதிர்களால் கொல்லவும் செய்கிறான். அது போல, நீர் சூரியனின் வழிகளைப் பின்பற்ற வேண்டும். ஓ மன்னா {யுதிஷ்டிரரே}, தனது நாட்டைக் காத்துக் கொள்ளவதும், மக்களைப் பேணிக்காப்பதும் வேதங்களில் சொல்லப்பட்ட தவ வாழ்க்கையாகும். உமது முன்னோர்கள் அத்தகு தவ வாழ்க்கையைக் கைக்கொண்டிருக்கின்றனர். ஓ மன்னா {யுதிஷ்டிரரே}, ஒரு க்ஷத்திரியன் தவத்தால் அருள் உலகை அடைய மாட்டான். மாறாக, நியாயமாகப் போரிட்டு வென்றாலோ அல்லது தோல்வியுற்றாலோ கூட அவ்வுலகை {அருள்  உலகை} அடைகிறான். ஓ மன்னா {யுதிஷ்டிரரே}, இந்த உமது துயரத்தைக் கண்டு, ஒளி சூரியனைக் கைவிடும் என்றும், அருள் {grace = கருணை / மென்மை} சந்திரனைக் கைவிடும் என்றும் உலகம் தீர்மானித்திருக்கிறது.

ஓ மன்னா {யுதிஷ்டிரரே}, நல்ல மனிதர்கள் தனியாகவோ அல்லது கூட்டு சேர்ந்து, ஒருவருடன் ஒருவர் உரையாடி, உம்மை பாராட்டவும் பழிக்கவும் செய்கிறார்கள். ஓ ஏகாதிபதி {யுதிஷ்டிரரே}, குருக்களும் அந்தணர்களும் ஒன்று கூடி அறியாமையாலோ, காரியவாதத்தாலோ, பேராசையாலோ அல்லது பயத்தாலோ ஒரு பொய்யும் உரைக்கமாட்டீர் என்று விவாதித்தும், உமது உறுதியான சத்தியப்பற்றைக் குறித்து மகிழ்ச்சியாகவும் பேசுகின்றனர். ஓ ஏகாதிபதி {யுதிஷ்டிரரே}, நாட்டை அடைவதற்காக ஒரு மன்னனால் செய்யப்படும் பாவங்கள் அனைத்தும், அவன் அந்நாட்டை அடைந்த பிறகு, செய்யப்படும் வேள்விகளாலும் தானங்களாலும் கரைந்து போகிறது. அந்தணர்களுக்கு கிராமங்களைக் கொடுப்பதாலும், ஆயிரக்கணக்கான பசுக்களைக் கொடுப்பதாலும், மேகத்திலிருந்து வெளிப்படும் சந்திரனைப் போல, ஒரு மன்னன் பாவத்திலிருந்து விடுபடுகிறான்.

ஓ குரு குலத்தின் மகனே, ஓ யுதிஷ்டிரரே, நமது நாட்டின் இளைஞர்களும் முதியவர்களும் ஆக அனைத்துக் குடிமக்களும் உம்மைப் புகழ்கிறார்கள். ஓ பாரதரே {யுதிஷ்டிரரே}, நாய் உணவருந்தும் பாத்திரத்தில் பால் இருப்பது போல, சூத்திரர்களிடம் வேதம் இருப்பது போல, திருடர்களிடம் உண்மை இருப்பது போல, மாதர்களிடம் பலம் இருப்பது போல, துரியோதனனிடம் அரசுரிமை இருக்கிறது என்று அனைத்து மக்களும் தங்களுக்குள் பேசிக் கொள்கிறார்கள். பாடத்தை மனப்பாடம் செய்வது போல, மாதர்களும் குழந்தைகளும் திரும்பத் திரும்ப இதையே சொல்கின்றனர். ஓ எதிரிகளை ஒடுக்குபவரே {யுதிஷ்டிரரே}, எங்களுடன் சேர்த்து நீரும் இத்தகு தாழ் நிலைக்கு வீழ்ந்துவிட்டீர்.

ஐயோ, உம்முடன் சேர்ந்து நாங்கள் அனைவரும் உமது துயரத்தில் தொலைந்து போனோம். ஆகையால், அனைத்து கருவிகளும் பொருத்தப்பட்ட உமது தேரில் ஏறி, மேன்மையான அந்தணர்களை நல்வார்த்தைகள் சொல்லச்சொல்லி, இன்றே விரைந்து ஹஸ்தினாபுரம் சென்றால், அங்கே {ஹஸ்தினாபுரத்தினை} வென்று அதில் கிடைக்கும் பொருட்களை நீர் அந்தணர்களுக்கு கொடுக்கலாம். வில்தாங்குவதில் உறுதியான உமது தம்பிகளாலும், ஆயுதங்களில் நிபுணத்துவம் கொண்டவர்களாலும் சூழப்பட்டு, கடும் விஷம் கொண்ட பாம்புகளைப் போல, மருதர்களால் சூழப்பட்ட, விரித்திரனைக் கொன்றவனைப் {இந்திரனைப்} போல இங்கிருந்து வெளியேறும்.

ஓ குந்தியின் மகனே {யுதிஷ்டிரரே}, நீர் பலசாலி ஆகையால், இந்திரன் அசுரர்களை வாட்டியது போல உமது பலத்தைக் கொண்டு பலவீனமான எதிரிகளை வாட்டி, திருதராஷ்டிரன் மகன்கள் அனுபவிக்கும் செல்வங்களை அவர்களிடமிருந்துப் பறியும். காண்டீவத்தில் இருந்து புறப்படும், கடும் விஷம் கொண்ட பாம்புகளைப் போன்றவையும், கழுகு இறகுகளால் அலங்கரிக்கப்பட்டவையுமான கணைகளை எந்த மனிதனாலும் தாங்க முடியாது. ஓ பாரதரே {யுதிஷ்டிரரே}, நான் கோபத்துடன் போர்க்களத்தில் இருக்கும்போது, எனது கதாயுதத்தின் தூண்டுதலைத் தாங்கிக் கொள்ளக்கூடிய வீரனோ, யானையோ, குதிரையோ எதுவும் கிடையாது.

ஓ குந்தியின் மகனே {யுதிஷ்டிரரே}, ஸ்ரீன்ஜயர்கள், கைகேயர்கள் மற்றும் விருஷ்ணி குல காளையரின் துணை கொண்டு போரிட்டு, நாம் ஏன் நமது நாட்டை அடையக்கூடாது? ஓ மன்னா {யுதிஷ்டிரரே}, நமது எதிரியின் கையில் இருக்கும் இந்த பூமியை, பெரும் படைகளின் துணை கொண்டும், நமது முயற்சியாலும் வெற்றி கொள்ள முடியாதா?



இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!


மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்