Tuesday, December 24, 2013

அப்சரஸ்களின் நடனம்! - வனபர்வம் பகுதி 43

Apsaras dance | Vana Parva - Section 43 | Mahabharata In Tamil

(இந்திரலோகாபிகமன பர்வத் தொடர்ச்சி)

அர்ஜுனனைப் பலர் புகழ்தல்; இந்திரன் தனது மகனை கண்கொட்டாமல் பார்த்து ரசிப்பது; இந்திரனின் சபையில் அப்சரஸ்களின் நடனம்.

வைசம்பாயனர் சொன்னார், "அர்ஜுனன் கண்ட இந்திரனின் நகரம் {அமராவதி நகரம்} மகிழ்ச்சிகரமானதாகவும், சித்தர்களும் சாரணர்களும் ஓய்வெடுக்கும் இடமாகவும் இருந்தது. அங்கே அனைத்து காலங்களுக்கும் உரிய மலர்களும், அனைத்து விதமான புனித மரங்களும் இருந்தன. அப்சரஸ்களுக்கு ஓய்வெடுக்கப் பிடித்தமான இடமான நந்தனம் என்று அழைக்கப்பட்ட தெய்வீகச் சோலையையும் கண்டான். நறுமணம் கொண்ட காற்றும், இனிய மணம் கொண்ட மலர்களும், தெய்வீக அரும்புகள் கொண்ட மரங்களும் அதன் தலைவனும் அவனை வரவேற்க நிற்பது போலத் தெரிந்தது. தவம் செய்யாத எவரும், அக்னியில் நெய் விடாத எவரும் அதைக் காணமுடியாத படி அந்தப் பகுதி இருந்தது. போர்க்களத்தில் புறமுதுகிட்டவர்களுக்கானது அல்லாமல், அறம்சார்ந்தவர்களுக்கு மட்டுமே ஆன பகுதியாக அது இருந்தது.


வேள்விகளோ, கடும் நோன்புகளோ, வேத அறிவு இல்லாதவர்களோ, புண்ணிய நீர்களில் நீராடதவர்களோ, வேள்விகளிலும் தானங்களிலும் விலக்கப்பட்டவர்களோ அந்தப் பகுதியைக் காணமுடியாது. வேள்விகளைத் தடை செய்பவர்களோ, தாழ்ந்தவர்களோ, போதைதரும் மதுவைக் குடிப்பவர்களோ, குருவின் படுக்கையைக் களங்கப்படுத்தியவர்களோ, (பரிசுத்தமற்ற) புலால் உண்பவர்களோ, தீயவர்களோ அதைக் காண முடியாது. தெய்வீக இசையால் நிறைந்த அந்தத் தெய்வீக சோலையைக் கண்ட பலம்வாய்ந்த கரம் கொண்ட பாண்டுவின் மகன் {அர்ஜுனன்}, இந்திரனுக்குப் பிடித்தமான நகரத்துக்குள் {அமராவதிக்குள்} நுழைந்தான். நினைத்த இடத்திற்குச் செல்லவல்ல ஆயிரக்கணக்கான தெய்வீகத் தேர்கள் சரியான இடங்களில் நிறுத்தப்பட்டிருப்பதை அவன் கண்டான். அனைத்து திக்குகளிலும் பத்தாயிரக்கணக்கான அவ்வகை தேர்கள் நகர்ந்து கொண்டிருப்பதையும் கண்டான். மலர்களின் நறுமணத்துடன் கூடிய வாசனையான தென்றலால் வருடப்பட்ட பாண்டுவின் மகன் {அர்ஜுனன்}, அப்சரஸ்களாலும் கந்தர்வர்களாலும் புகழப்பட்டான்.

கந்தர்வர்கள், சித்தர்கள், பெரும் முனிவர்கள் ஆகியோருடன் இருந்த தேவர்கள், நற்செயல்கள் புரிந்த பிருதையின் {குந்தியின்} மகனை {அர்ஜுனனை} மகிழ்ச்சியுடன் மதித்து நடந்தனர். தெய்வீக இசை முழக்கத்துடன், ஆசீர்வாதங்கள் அவன் மீது பொழியப்பட்டன. பிறகு, வலுத்த கரங்கள் கொண்ட பிருதையின் மகன் {அர்ஜுனன்}, தன்னைச் சுற்றி சங்குகள் மற்றும் பேரிகைகளின் இசையைக் கேட்டான். சுற்றி நின்ற அனைவராலும் புகழப்பட்ட பிருதையின் மகன் {குந்தியின் மகன் அர்ஜுனன்}, பிறகு இந்திரனின் கட்டளையின் பேரில், சுரவீதி என்று அழைக்கப்பட்ட பெரிதான அகன்ற நட்சத்திரப் பாதையில் சென்றான். பிறகு அவன், சத்யஸ்கள், விசுவஸ்கள், மருதர்கள், அசுவினி இரட்டையர்கள், ஆதித்தியர்கள், வசுக்கள், ருத்திரர்கள், பெரும் பிரகாசமுடைய பிரம்மரிஷிகள், திலீபனைத் தலைமையாகக் கொண்ட எண்ணிலடங்கா அரசமுனிகள், தும்புரு, நாரதர், ஹாஹா மற்றும் ஹூஹூ என்று அழைக்கப்பட்ட கந்தர்வ இரட்டையர்கள் ஆகியோரைச் சந்தித்தான்.

அந்த எதிரிகளைத் தண்டிக்கும் குரு இளவரசன் கடைசியாக நூறு வேள்விகளைச் செய்த தேவனான, தேவர்கள் தலைவனைச் {இந்திரனைச்} சந்தித்து அவனை முறைப்படி வணங்கினான். பிறகு அந்த வலுத்த கரம் கொண்ட பிருதையின் மகன் {அர்ஜுனன்}, தேரில் இருந்து இறங்கி பகனைத் தண்டித்தவனான தேவர்கள் தலைவனை {இந்திரனை} அணுகினான். தேவர்கள் தலைவனின் {இந்திரனின்} தலைக்கு மேல், தங்கப்பிடி கொண்ட அழகான வெண்குடை பிடிக்கப்பட்டிருந்தது. தெய்வீக வாசனைத்திரவியங்களைக் கொண்டு நறுமணமாக்கப்பட்ட சாமரம் அவனுக்கு வீசப்பட்டது. விசுவவசுவைத் தலைமையாகக் கொண்ட கந்தர்வர்களாலும், பாணர்களாலும், பாடகர்களாலும், ரிக், யஜுர் வேதங்களை உச்சரிக்கும் அந்தணர்களில் முதன்மையானவர்களாலும், மற்றவர்களாலும் அவன் புகழப்பட்டான்.

பிறகு, குந்தியின் பலம் பொருந்திய மகன் {அர்ஜுனன்} இந்திரனை அணுகி, தனது தலையைத் தரையில் பதித்து அவனை வணங்கினான். அதன்பிறகு, இந்திரன் தனது உருண்டு பருத்த கரங்களால் அவனை {அர்ஜுனனை} அணைத்துக் கொண்டான். பிறகு அவனது கரத்தைப் பற்றிய சக்ரன் {இந்திரன்}, தேவர்களாலும் முனிவர்களாலும் வழிபடப்படும், புனிதமான தனது ஆசனத்திலேயே ஒரு பகுதியைக் கொடுத்து அவனை உட்காரச் செய்தான். ஆயிரம் கண்ணுடைய தேவனின் {இந்திரனின்} கட்டளைக்கிணங்கி, சக்ரனின் {இந்திரனின்} ஆசனத்தில் அமர்ந்த, அளவிடமுடியாத சக்தி படைத்த பிருதையின் மகன் {அர்ஜுனன்}, இரண்டாவது இந்திரனைப் போல ஒளிர்ந்தான்.

பாசத்தால் உந்தப்பட்ட விரித்திரனைக் கொன்றவன் {இந்திரன்}, அர்ஜுனனைச் சமாதானம் செய்து, தனது நறுமணமிக்க கரங்களால் அவனது {அர்ஜுனனின்} அழகான முகத்தைத் தொட்டுப் பார்த்தான். பிறகு, விரித்திரனைக் கொன்ற ஆயிரம் கண்களையுடையவன் {இந்திரன்}, வஜ்ராயுதம் பிடித்து வடுபட்ட தனது கரத்தால், வில்லின் நாணிழுத்து கடினமாகி தங்கத்தூண்களைப் போல இருந்த அர்ஜுனனின் பெரும் கரங்களைத் தட்டிக் கொடுத்தும், தேய்த்தும் பார்த்தான். சூரியனையும் சந்திரனையும் போல தனது மகன் தனது சபையை அழகூட்டியதைக் கண்ட ஆயிரம் கண்ணுள்ள தேவன் {இந்திரன்}, சுருண்ட முடி கொண்ட {குடாகேசன்}, தனது மகனை {அர்ஜுனனை} மீண்டும் கண்டு, புன்னகைத்து, மகிழ்ச்சியால் கண்களை அக விரித்து திருப்தியடையாமல் இருந்தான். அவனை {அர்ஜுனனை} அதிகமாகப் பார்க்க பார்க்க, மேலும் அவனை அதிகமாகப் பார்க்க ஆசைப்பட்டான்.

தேய்பிறையின் பதினான்காவது நாள் {சதுர்த்தசியில்} சூரியனும் சந்திரனும் வானத்தை அழகூட்டுவது போல, ஒரே இருக்கையில் அமர்ந்த தந்தையும் மகனும், அந்தச் சபையின் அழகை மேலும் கூட்டினர். புனிதமான மற்றும் புனிதமற்ற இசையில் நிபுணனான தும்புருவின் தலைமையிலான கந்தர்வ இசைக்குழு, இனிமையான பாடல்களைப் பாடினர். தாமரை இதழ்களைப் போன்ற கண்களையுடைய கிரிடச்சி {கிருதாசி}, மேனகை, ரம்பை, பூர்வசித்தி, சுவயம்பிரபா, ஊர்வசி, மிஸ்ரகேசி, தண்டகௌரி, வரூதினி, கோபாலி, சஹஜன்யா, கும்பயோணி, பிரஜாகரை, சித்திரசேனா, சித்திரலேகா, சஹை, மதுரஸ்வனா ஆகியவர்களும், ஆயிரக்கணக்கன மற்றவர்களும், கடுந்தவம் பயின்ற மனிதர்களின் இதயங்களை மகிழ்விக்கும் பணியில் ஈடுபட்டு நடனமாடிக் கொண்டிருந்தனர். மெலிந்த இடைகளும், பெருத்த அழகான இடைகளும் கொண்டு, பல பரிமாணங்கள் காட்டி, தங்கள் பருத்த மார்புகளை அசைத்து, தங்கள் பார்வைகளைச் சுழலவிட்டு, பார்வையாளர்களின் இதயங்களையும், எண்ணங்களையும், மனங்களையும் கொள்ளை கொள்ளும் கவர்ச்சியை வெளிப்படுத்தினார்கள்.



இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!


மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்