Monday, December 30, 2013

வஞ்சகரை வஞ்சகத்தால் கொல்லலாம் - வனபர்வம் பகுதி 52அ

The deceitful may be killed decieitfully | Vana Parva - Section 52a | Mahabharata In Tamil

(நளோபாக்யான பர்வம்)-(Nalopakhyana Parva)

யுதிஷ்டிரனும் பீமனும் பேசிக்கொண்டிருக்கும்போது வந்த பிருகதஸ்வர் என்ற முனிவர் யுதிஷ்டிரனுக்கு நளன் கதையை சொல்ல ஆரம்பித்தது...

ஜனமேஜயன் சொன்னான், "உயர் ஆன்மா கொண்ட பார்த்தன் {அர்ஜுனன்} ஆயுதங்களைப் பெறுவதற்காக இந்திரலோகம் சென்ற பிறகு, யுதிஷ்டிரனும், பாண்டுவின் மற்ற மகன்களும் என்ன செய்தனர்?"

வைசம்பாயனர் சொன்னார், "உயர் ஆன்மா கொண்ட பார்த்தன் {அர்ஜுனன்} ஆயுதங்களைப் பெறுவதற்காக இந்திரலோகம் சென்ற பிறகு, அந்த பாரதக் காளைகள் கிருஷ்ணையுடன் {திரௌபதியுடன்} தொடர்ந்து காம்யக வனத்திலேயே வசித்தனர். ஒருநாள், துயரத்தில் ஆழ்ந்து, அந்த பாரதர்களில் முதன்மையானவர்கள் கிருஷ்ணையுடன் {திரௌபதியுடன்} சுத்தமான தனித்த பசுமையான புல்வெளியில் அமர்ந்திருந்தனர். தனஞ்சயனுக்காக {அர்ஜுனனுக்காக} வருந்தி, துயரத்தில் மூழ்கி, அழுகையால் அவர்களின் {பாண்டவர்களின்} குரல் தடைப்பட்டு வெளிவந்தது. தனஞ்சயனின் பிரிவு அவர்களை {பாண்டவர்களைச்} சித்திரவதை செய்த அதே அளவு துன்பமும் அவர்களை வாட்டியது. அர்ஜுனன் பிரிவாலும், நாட்டை இழந்ததாலும் துன்புற்றிருந்த பெரும் பலம்வாய்ந்த கரங்கள் கொண்ட பீமன் யுதிஷ்டிரனிடம், "ஓ பெரும் மன்னா {யுதிஷ்டிரரே}, பாண்டு மகன்களின் உயிர்கள் யாரை நம்பியிருக்கிறதோ, யார் இறந்தால் நம்மைப் போன்றும் நமது பிள்ளைகளைப் போன்றும் பாஞ்சாலர்களும், சாத்யகியும், வாசுதேவரும் {கிருஷ்ணரும்} நிச்சயம் இறந்து போவார்களோ அந்த பாரதக்குலக் காளையான அர்ஜுனன், உமது கட்டளையின் பேரில் சென்றுவிட்டான். உமது கட்டளையின் பேரில், அவனது பல துயரங்களை நினைத்துக் கொண்டு அந்த அறம் சார்ந்த பீபத்சு {பீபத்சு} {அர்ஜுனன்} சென்றுவிட்டான் என்பதைவிட சோகம் நிறைந்தது எது இருக்கிறது? அந்த சிறப்பு மிக்க வீரனுடைய {அர்ஜுனனுடைய} கரங்களின் பலத்தை நம்பியே, நாம் நமது எதிரிகளைப் போர்க்களத்தில் ஏற்கனவே தோற்கடித்தவிட்டோம் என்றும், முழு உலகத்தையும் அடைந்துவிட்டோம் என்றும் கருதி வருகிறோம்.

அந்த வீரன் {அர்ஜுனன்} சொன்னதன் நிமித்தமாகவே சபையின் நடுவே கூடியிருந்த சுபலர்களையும் திருதராஷ்டிரர்களையும் கொல்வதில் இருந்து பின்வாங்கினேன். பலம்வாய்ந்த கரங்களைக் கொடையாகக் கொண்டும், வாசுதேவனால் {கிருஷ்ணனால்} தாங்கப்பட்டும், நீரே எங்களது கோபத்திற்கான வேர்க்காரணம் என்பதால் எங்கள் கோபங்களைக் கட்டுப்படுத்த வேண்டியுள்ளது. உண்மையில் கிருஷ்ணனின் உதவியுடன், கர்ணனின் தலைமையில் இருக்கும் நம் எதிரிகளைக் கொன்று, இந்த முழு உலகத்தையும் நம் கரங்களின் பலத்தால் அடையலாம். ஆண்மையுடன் கூடியவர்களாக இருந்தும், சூதாட்டத்தால் பேரிடரில் மூழ்கி இருக்கிறோம். அதே நேரம் வெற்று முட்டாள்களான திருதராஷ்டிரர்கள் (அவர்களை நம்பியிருக்கும் மன்னர்கள் கொடுக்கும்) காணிக்கைகளால் வளர்ந்து வருகின்றனர்.

ஓ பலம்வாய்ந்த ஏகாதிபதி {யுதிஷ்டிரரே}, க்ஷத்திரியக் கடமைகளை மனதில் நிறுத்துவதே உமக்குத் தகும். ஓ பெரும் மன்னா, கானகத்தில் வாழ்வது க்ஷத்திரியக் கடமையல்ல {க்ஷத்திரிய தர்மம் அல்ல}. ஓ மன்னா, க்ஷத்திரிய அறநெறிகளை அறிந்தவர் நீர். ஆள்வதே க்ஷத்திரியர்களின் முதல் கடமை என்று ஞானமுள்ள விவேகிகள் கருதுகின்றனர். ஆகையால், கடமையின் பாதையில் இருந்து பிறழாதீர். ஓ மன்னா {யுதிஷ்டிரரே}, உடனே நாம் இக்கானகத்தில் இருந்து கிளம்பி, பார்த்தனையும் {அர்ஜுனனையும்}, ஜனார்த்தனனையும் {கிருஷ்ணனையும்} வரவழைத்து, பனிரெண்டு வருடங்கள் கழியுமுன்பே திருதராஷ்டிரர் மகன்களைக் கொன்றுவிடலாம்.

ஓ சிறப்பு வாய்ந்த ஏகாதிபதி {யுதிஷ்டிரரே}, ஓ மன்னர் மன்னா, அந்த திருதராஷ்டிரர்கள் வரிசையாக நிற்கும் பல போர்வீரர்களால் சூழப்பட்டிருந்தாலும், நான் தனியாளாக, எனது வலிமை மூலம் மட்டும் அவர்களை வேறு உலகத்திற்கு அனுப்பி வைப்பேன். நான் திருதராஷ்டிரன் மகன்கள் அத்தனை பேரையும் சுபலர்களுடன் சேர்த்து, துரியோதனன், கர்ணன் மற்றும் யாரெல்லாம் என்னோடு சண்டையிடுவார்களோ அத்தனை பேரையும் நிச்சயம் கொல்வேன். நான் அனைத்து எதிரிகளையும் கொன்ற பிறகு, நீர் கானகத்திற்கு திரும்பி வரலாம். இப்படிச் செயல்படுவதால், ஓ மன்னா, (அந்தப் போரால் ஏற்படும் பாவங்களால்) எந்த களங்கமும் உம் மேல் கற்பிக்கப்படாது. ஓ எதிரிகளை ஒடுக்குபவரே {யுதிஷ்டிரரே}, ஓ பலம்வாய்ந்த ஏகாதிபதியே, ஓ தந்தையே, பலவகையான வேள்விகளால் அவற்றைக் {பாவங்களைக்} கழுவி நாம் மேன்மையான சொர்க்கத்தை அடையலாம். அத்தகைய முழுமை எங்கள் மன்னர் {யுதிஷ்டிரன்}, விகேமற்றவராக இருந்தாலோ அல்லது காலந்தாழ்த்துபவராக இருந்தாலோ நம்மைக் கடந்து வரக்கூடும். ஆனால் நீரோ அறம்சார்ந்தவராக இருக்கிறீர். வஞ்சகர்களை நிச்சயம் வஞ்சகத்தாலேயே கொல்ல வேண்டும். வஞ்சகர்களை வஞ்சகத்தால் கொல்வது பாவமாகக் கருதப்படுவதில்லை.

ஓ பாரதரே {யுதிஷ்டிரரே}, அறநெறிகளை நன்கு உணர்ந்தவர்களால், ஓ பெரும் இளவரசே {யுதிஷ்டிரரே}, ஒரு பகலும் ஒரு இரவும் சேர்ந்து ஒரு வருடத்திற்கு சமம் என்று சொல்லப்படுகிறது. மேன்மையானவரே, கடுமையான விரதங்கள் இருந்து கழிக்கப்படும் ஒரு நாள் ஒரு வருடத்திற்கு சமானம் என்று வேத வார்த்தைகளிலும் கேட்கப்படுகிறது. ஓ மங்காப் புகழ் கொண்டவரே {யுதிஷ்டிரரே}, வேதங்களின் அதிகாரத்தை நீர் ஏற்கிறீர் என்றால், ஒரு நாளையும், அதைவிட அதிகமாகவும் ஒரு காலத்தைத் தேர்ந்தெடுத்து அதை பதிமூன்று {13} வருடங்களுக்கு சமமாக கருதிக்கொள்ளும். ஓ எதிரிகளை ஒடுக்குபவரே, துரியோதனனையும் அவனைத் தொடர்பவர்களையும் கொல்வதற்கு இதுவே சமயமாகும். அல்லது, ஓ மன்னா, குறித்த காலத்திற்கு முன்னரே, அவன் அனைத்து உலகத்தையுத் தனது ஆளுகைக்குள் கொண்டு வந்துவிடுவான். ஓ ஏகாதிபதிகளில் முதன்மையானவரே, இவையனைத்தும் நீர் சூதுக்கடிமையாக இருந்ததால் விளைந்த காரியங்களே.

ஒரு வருடம் யாரும் அறியாமல் தலைமறைவாக வாழ்வதாக நீர் உறுதி அளித்திருப்பதன் தொடர்ச்சியாக, நாம் ஏற்கனவே அழிவின் ஆரம்பத்தில் இருக்கிறோம். தீய மனம் கொண்ட துரியோதனன், தனது ஒற்றர்களைக் கொண்டு கண்டுபிடிக்க முடியாத எந்த நாட்டையும நான் காணவில்லை. அந்த இழிந்தவன் நம்மைக் கண்டுபிடித்து, மீண்டும் வஞ்சகமாக நாடு கடத்துவான். அந்தப் பாவியால் குறித்த காலத்திற்குள் நம்மைக் கண்டுபிடிக்க இயவில்லை என்றாலும், ஓ பெரும் மன்னா {யுதிஷ்டிரரே}, உம்மை மீண்டும் பகடைக்கு அழைப்பான். மீண்டும் விளையாட்டு நடக்கும். மீண்டும் நீர் அழைக்கப்பட்டால், மீண்டும் பகடையாடி நீரே உம்மை துடைத்தழித்துக்கொள்வீர்.

நீர் பகடையில் திறம்படைத்தவர் அல்ல. அதை விளையாட ஆரம்பித்தால், நீர் உமது உணர்வுகளை இழந்துவிடுவீர். ஆகையால், ஓ பெரும் பலம் வாய்ந்த மன்னா, நீர் மீண்டும் கானக வாழ்க்கையையே ஏற்க வேண்டி வரும். ஓ பெரும்பலம் வாய்ந்த மன்னா, வேதங்களின் விதிகளை முழுமையாக கடைபிடியும். இழிந்த வாழ்வை ஏற்பது உமக்குத் தகாது. வஞ்சகர்கள் கொல்லப்பட வேண்டும். உமது கட்டளையின் பேரில் நான் (ஹஸ்தினாபுரம்) சென்றால், புற்குவியலின் மேல் நெருப்பு விழுவது போல, எனது பலம் அனைத்தையும் செலுத்தி துரியோதனனைக் கொல்வேன். ஆகையால், எனக்கு அனுமதி கொடுப்பதே உமக்குத் தகும்" என்றான் {பீமன்}.


இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!


மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்