Thursday, January 09, 2014

தமயந்தியிடம் அரசத்தாயின் கருணை! - வனபர்வம் பகுதி 65ஆ

Queen Mother's grace | Vana Parva - Section 65b | Mahabharata In Tamil

(நளோபாக்யான பர்வத் தொடர்ச்சி)

வணிகர்களிடம் இருந்து பிரிந்த தமயந்தி சேதி நாட்டை அடைந்து, மன்னனுடைய தாயின் கண்ணில் படுவது; அந்த மன்னனின் தாய் தமயந்தியை அழைத்து, தனது மகளுக்குத் தோழியாகச் செய்வது…

பிறகு, விதரப்ப்பத்தின் இளவரசி {தமயந்தி} புலம்பத் தொடங்கினாள், "ஐயோ, என்ன தீச்செயலை நான் நிகழ்த்திவிட்டேன்! இந்தத் தனிமையான கானகத்தில் நான் பெற்ற மனிதர்கள் கூட்டம், யானைக்கூட்டத்தால் அழிவுற்றதே, இது எனது துரதிர்ஷ்டத்தின் தொடர்ச்சியாகவே நடைபெற்றுள்ளது. சந்தேகமற நீண்ட காலத்திற்கு நான் இந்தப் பேரிடரைத் தாங்கிக் கொள்ள வேண்டும் போலிருக்கிறதே. காலம் வராமல் எந்த மனிதனும் இறக்க மாட்டான் என்ற பெரியோரின் சொற்களை நான் கேட்டிருக்கிறேன்.



அதனால்தான் துக்கத்தில் இருக்கும் நான் இப்போது யானைக்கூட்டத்திடம் மிதிபட்டு கொல்லப்படாமலிருக்கிறேன். மனிதர்களுக்கு நேரும் எதுவும் விதியால் கிடைப்பதன்றி வேறு எதுவுமில்லை. எனது குழந்தைப் பருவத்தில் இருந்தே நான் நினைவாலோ, வார்த்தையாலோ, செயலாலோ எந்தப் பாவமும் செய்யாதிருக்கையில் இந்தப் பேரிடர் எனக்கு எவ்வாறு நேர்ந்தது? எனது கணவரால் எனக்கு நேர்ந்த இந்தத் துன்பம், அந்தத் தேவர்களான லோகபாலர்களால் நிகழ்கிறது என்றே நினைக்கிறேன். சுயம்வரத்திற்காக வந்த அவர்களை நளருக்காக நான் அவமதித்தேன்" என்று புலம்பினாள் {தமயந்தி}.

ஓ மன்னர்களில் புலியே {யுதிஷ்டிரா}, இப்படி அழுதுகொண்டிருந்த அற்புத மங்கையும், கணவனுக்குத் தன்னை அர்ப்பணித்தவளுமான தமயந்தி, அந்தப் படுகொலையிலும் பிழைத்த வேதமறிந்த அந்தணர்களுடன், துயரத்தால் ஒடுக்கப்பட்டு, இலையுதிர் காலத்துச் சந்திரன் போல ஆனாள் {நிறம் மங்கினாள்}. பிறகு அங்கிருந்து விரைவாக வெளியேறி, மாலை நேரத்தில் அந்த மங்கை {தமயந்தி} சேதிகளின் மன்னனான உண்மை பேசும் சுவாஹுவின் பெரும் பலம் பொருந்திய நகரத்திற்கு வந்து சேர்ந்தாள். அவள் {தமயந்தி} அந்த அற்புதமான நகரத்திற்குள் அரை ஆடையுடனேயே நுழைந்தாள். அப்படி அவள் பயத்தில் மூழ்கி, மெலிந்து, துயரமுற்று, கூந்தல் கலைந்து, உடலெல்லாம் மண்புழுதியுடன் ஒரு பைத்தியக்காரியைப் போலச் செல்வதை அங்கிருந்த குடிமக்கள் கண்டனர். அப்படி அவள் சேதி மன்னனின் நகரத்திற்குள் நுழைந்தபோது, அந்த நகரத்தின் சிறுவர்கள் ஆர்வ மிகுதியால் அவளைப் பின்தொடர்ந்தனர்.

அவர்களால் {சிறுவர்களால்} சூழப்பட்ட அவள் {தமயந்தி}, மன்னனின் {சேதிநாட்டு மன்னன் சுவாஹுவின்} அரண்மனை முன்பு வந்தாள்.  அந்த மாளிகையின் மேல்தளத்தில் இருந்த மன்னனின் தாய், கூட்டத்தால் சூழப்பட்ட அவளைக் {தமயந்தியைக்) கண்டாள். அவள் தனது செவிலியிடம், "போய் அந்தப் பெண்ணை என் முன்னால் கொண்டு வா. கதியற்ற அவள் இந்தக் கூட்டத்தால் எரிச்சலடைந்திருக்கிறாள். துயரத்தில் இருக்கும் அவள் உதவி நாடி நிற்கிறாள். அவளது அழகு எனது இல்லத்தைப் பிரகாசிக்க வைப்பதை நான் காண்கிறேன். பைத்தியக்காரியைப் போல இருந்தாலும், அந்த அழகானவள் {தமயந்தி}, அகன்ற கண்களுடன் ஸ்ரீயைப் {லட்சுமியைப்} போல இருக்கிறாள்" என்றாள். இப்படி கட்டளையிடப்பட்ட அந்த செவிலி வெளியே சென்று, அக்கூட்டத்தை விரட்டி தமயந்தியை அருள் நிறைந்த அந்த உப்பரிகைக்குக் கொண்டு வந்தாள்.

ஓ மன்னா {யுதிஷ்டிரா}, அப்படி அவளைக் கூட்டி வந்த செவிலி ஆச்சரியத்துடன் அவளிடம் {தமயந்தியிடம்}, இப்படிப்பட்ட துயர நிலையில் இருந்தாலும், நீ அழகான உருவைக் கொண்டிருக்கிறாய். நீ மேகத்திற்கு மத்தியில் இருக்கும் மின்னலைப் போல மிளிர்கிறாய். நீ யார் என்பதையும், யாருடையவள் என்பதையும் என்னிடம் சொல். ஓ தெய்வீக அழகைப் பெற்றவளே, ஆபரணங்களற்று இருந்தாலும், உனது அழகு மானுடப்பிறவியைச் சார்ந்ததாக இல்லை. ஆதரவற்று இருந்தாலும், இந்த மனிதர்களின் சீற்றத்திற்கு முன்னால் அசைந்து கொடுப்பவளாகத் தெரியவில்லை" என்று கேட்டாள். செவிலியின் இந்த வார்த்தைகளைக் கேட்ட பீமனின் மகள் {தமயந்தி}, நான் எனது கணவருக்கு என்னை அர்ப்பணித்திருக்கும், மனித குலத்தைச் சார்ந்த ஒரு பெண் என்பதை அறிந்து கொள். நான் நல்ல பரம்பரையில் பிறந்த பணிப்பெண். நான் விரும்பிய இடத்தில், கனிகளையும் கிழங்குகளையும் உண்டு, தனியாக வாழ்ந்து, மாலைப்பொழுது ஏற்படும் இடத்தில் தங்குகிறேன். எனது கணவர் எண்ணற்ற அறங்களைக் கொண்டு எப்போதும் தன்னை எனக்கு அர்ப்பணித்தவர் ஆவார்.

நானும், எனது பங்குக்கு அவருடன் ஆழ்ந்த பிடிப்புடன், அவரை நிழலெனப் பின்தொடர்ந்தேன். அவர் தீவிரமாக பகடையில் ஈடுபடும் சூழ்நிலை அமைந்தது. பகடையில் தோல்வியுற்று, அவர் கானகத்திற்கு வந்தார். நானும் எனது கணவருடன் சேர்ந்து துயரத்துடன் ஒற்றையாடையுடன் பைத்தியக்காரியைப் போல கானகத்திற்கு வந்தேன். ஒரு சந்தர்ப்பத்தில் ஏதோ காரணத்திற்காக, அந்த வீரர், பசியாலும், தாகத்தாலும் துன்பப்பட்டு, தனது ஒரே ஆடையையும் இழக்க அந்தக் கானகத்தில் உந்தப்பட்டார். ஆடையிழந்து, உணர்வையும் இழந்து பைத்தியக்காரர் போல இருந்த அவரை, நானும் எனது ஒற்றையாடையுடன் பின்தொடர்ந்தேன். அவரைத் தொடர்ந்த நான், அவருடன் சேர்ந்து பல இரவுகள் தூங்காமல் இருந்தேன். இப்படியே பல நாட்கள் கடந்தன. ஒரு நாள் நான் தூங்கிக் கொண்டிருந்த போது, எனது ஒற்றையாடையில் பாதியை வெட்டி எடுத்துக் கொண்டு, எந்தத் தவறும் செய்யாத என்னை அவர் கைவிட்டுச் சென்றுவிட்டார். தாமரையின் நிறம் கொண்ட எனது கணவரை நான் தேடிக் கொண்டிருக்கிறேன். எனது இதயத்துக்குச் சொந்தக்காரரான தேவர்களைப் போன்ற எனது அன்புக் கணவரை எனது கண்கள் இன்னும் காணவில்லை. அதனால் நான் இரவும் பகலும் துக்கத்தில் கழிக்கிறேன்" என்றாள்.

கண்ணீர் நிறைந்த கண்களுடனும், துயரத்தால் தடைபட்டக் குரலுடனும் இப்படிப் புலம்பிக் கொண்டிருந்த பீமனின் மகளிடம் {தமயந்தியிடம்}, மன்னனின் தாய், "ஓ அருளப்பட்ட மங்கையே, நீ என்னுடனேயே வசித்து வா. நான் உன்னிடம் மிகவும் திருப்தி கொண்டிருக்கிறேன். ஓ அழகான மங்கையே, எனது ஆட்கள் உனது கணவனைத் தேடுவார்கள். அல்லது அவனே கூட தனது அலைச்சலினூடே தானாக இங்கு வர வாய்ப்பு இருக்கிறது. ஓ அழகான மங்கேயே, நீ இங்கேயே தங்கினால் (தொலைந்த) உனது தலைவனை மீட்கலாம்" என்றாள். மன்னனின் தாயால் சொல்லப்பட்ட இந்த வார்த்தைகளைக் கேட்ட தமயந்தி, "ஓ வீரர்களின் அன்னையே, சில நிபந்தனைகளின் பேரில் நான் உம்முடன் தங்குவேன். நான் எஞ்சிய உணவை உண்ண மாட்டேன். யாருடைய காலையும் நான் கழுவ மாட்டேன். எந்த ஆடவருடனும் நான் பேச மாட்டேன். யாரேனும் என்னை (மனைவியாக்கிக் கொள்ளவோ வைப்பாட்டியாக்கிக் கொள்ளவோ) நாடினால், அவன் உமது கரங்களால் தண்டனை பெற வேண்டும். அதன் பிறகும் அவன் மீண்டும் மீண்டும் வேண்டினால், அந்தத் தீயவனுக்கு மரண தண்டனை அளிக்க வேண்டும். இதுவே நான் செய்திருக்கும் சபதமாகும். நான் எனது கணவரை வெளியே தேடுவதற்காக, அந்தணர்களின் ஆலோசனையைக் கேட்க உத்தேசித்துள்ளேன். இவையனைத்தையும் உம்மால் செய்ய முடியும் என்றால், நான் நிச்சயம் உம்முடன் வாழ்வேன். இல்லாவிட்டால், நான் உம்முடன் வசிப்பதற்கான வழியை எனது இதயத்தில் நான் காணவில்லை." என்றாள். அதற்கு அந்த மன்னனின் அன்னை, மகிழ்ச்சி நிறைந்த இதயத்துடன், "இவையனைத்தையும் நான் செய்வேன். இவ்வித சபதத்தை மேற்கொண்டிருப்பது உனக்கு நன்மையே" என்றாள்.

பிருகதஸ்வர் {Vrihadaswa} தொடர்ந்தார், "ஓ மன்னா {யுதிஷ்டிரா}, பீமனின் மகளிடம் {தமயந்தியிடம்}, இப்படிப் பேசிய அந்த மன்னனின் அன்னை, ஓ பாரதா {யுதிஷ்டிரா}, சுநந்தை {Sunanda} என்று அழைக்கப்பட்ட தனது மகளிடம், "ஓ சுநந்தா {Sunanda}, தேவதை போல இருக்கும் இந்த மங்கையை சைரந்திரி {Sairindhri} என ஏற்றுக் கொள்! இவளும் உனது வயதை உடையவளாக இருப்பதால், இவள் உனது தோழியாக இருக்கட்டும். இவளுடன் சேர்ந்து கவலையற்று மகிழ்ச்சியாக விளையாடிக் கொண்டிரு" என்றாள். சுநந்தையும் மகிழ்ச்சியாக தமயந்தியை ஏற்று, தனது தோழியருடன் சேர்ந்து அவளை {தமயந்தியை} தனது அறைக்கு இட்டுச் சென்றாள். அங்கே மரியாதையுடன் நடத்தப்பட்ட தமயந்தி, மிகவும் திருப்தியடைந்து, துயரைவிட்டு தொடர்ச்சியாக அங்கு வசிக்க ஆரம்பித்தாள். அங்கே அவளின் {தமயந்தியின்} விருப்பங்கள் அனைத்தும் முறையாக செய்து கொடுக்கப்பட்டன.


இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!


மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்